search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியங்கா"

    இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சாதனையான வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திரா காந்தியின் அளப்பரிய சாதனைகளை நினைவுகூர்வோம்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் அன்றைய இந்திய பிரதமர் அன்னை இந்திரா காந்தி தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் ஆற்றிய பணிகள் வங்கதேச வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதவை. வங்கதேச அரசியலில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும், பழைய கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உறுதியான ஆதரவளித்த இந்திரா காந்தியை வங்கதேச மக்கள் எப்போதும் நேசித்து வந்துள்ளனர்.

    மேற்கு பாகிஸ்தானோடு நடைபெற்ற 13 நாள் போரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வங்கதேச விடுதலைக்கு வித்திட்டு மக்களின் பேராதரவு பெற்ற ஷேக் முஜிபூர் ரகுமான் அவர்களை பிரதமர் பொறுப்பில் அமர்த்தியவர் அன்னை இந்திரா காந்தி. அந்த காலகட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுத உதவியை மேற்கு பாகிஸ்தானுக்கு வழங்கின.

    அந்த நேரத்தில் உற்ற துணையாக இருந்து அனைத்து ராணுவ உதவிகளையும் செய்து, சோவியத் நாடு ஆற்றிய பங்கை எவரும் மறந்திட இயலாது. கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கடுமையான துன்பங்களுக்கு ஆளாகினர்.

    இதனால் ஒரு கோடி மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து அரவணைத்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. மேலும் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக 20 நாட்கள் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச விடுதலைக்கு ஆதரவாக கருத்தொற்றுமையை திரட்டியவர். அன்னை இந்திரா காந்தியின் தொலைநோக்குப் பார்வையும் இந்திய ராணுவத்தின் தெளிவான அணுகுமுறையும் வங்கதேச விடுதலைக்கு பெரும் உதவியாக இருந்தன. இத்தகைய சாதனைகளைப் புரிந்து வங்கதேசம் விடுதலையைப் பெற்ற 50-வது ஆண்டு பொன்விழாவை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பாக நாடு முழுவதும் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழா நாளை (22-ந்தேதி) காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில் நடைபெறுகிறது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் அமைப்பாளர் கேப்டன் பிரவீன் தவார் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னோடிகள் பலர் பங்கேற்கின்றனர்.

    இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சாதனையான வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திரா காந்தியின் அளப்பரிய சாதனைகளை நினைவுகூர்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிறது- தேர்தல் ஆணையம் ஏற்பாடு தீவிரம்

    ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பிரியங்கா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்கள்.

    அவர்கள் நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யும்படி கோரிக்கை எழுந்தது.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது, 2016-ம் ஆண்டு இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், 2018-ம் ஆண்டு தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

    அதன்பிறகு தமிழக அமைச்சரவையில் 7 பேர் விடுவிப்பு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், 7 பேர் விடுதலை சம்பந்தமாக கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே, 7 பேரையும் கவர்னர் விடுவிக்கும் முடிவை எடுக்க வேண்டும் என்று கவர்னரை பல்வேறு கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன.


    இது சம்பந்தமாக ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட முறையில் எனக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. வன்முறை மீது மேலும் வன்முறையை ஏவுவது சரியான பதிலாக இருக்க முடியாது. வன்முறைக்கு அகிம்சைதான் சரியான பதிலாக இருக்க முடியும்.

    இந்த விவகாரத்தை பொறுத்த வரை 2 விதமான வி‌ஷயங்கள் உள்ளன. ஒன்று எனது தனிப்பட்ட வி‌ஷயம் தொடர்பானது.

    அதாவது கொல்லப்பட்டவர் எனது தந்தை. அந்த வகையில் எனது கருத்துக்களை ஏற்கனவே பல முறை கூறி விட்டேன்.

    இந்த கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினியையும் நான் ஜெயிலுக்கு சென்று சந்தித்தேன். நளினியும் என் வேதனை தொடர்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். என்ன தான் வேதனை இருந்தாலும் நான் உறுதியாக இருந்தேன்.

    அடுத்ததாக எனது தந்தையின் கொலை அரசியல் தொடர்பானது. அது, முழுமையாக வேறுபட்டது. அரசியல் ரீதியாக பார்க்கும் போது, அவர் ஒரு முன்னாள் பிரதமர். அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட கொலை. பயங்கரவாதத்தின் செயலால் இந்த கொலை நடந்தது. அதில் மேலும் பலர் கொல்லப்பட்டனர்.

    எனவே, இந்த வி‌ஷயத்தில் மனிதாபிமான முறையில் மகளாகிய நான் எடுத்த முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    பிரியங்கா, நளினியை 2008-ம் ஆண்டு ஜெயிலில் சந்தித்து தனது தந்தை கொலை பற்றி பல வி‌ஷயங்களை கேட்டறிந்தார். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள்? என்பது வெளியே தெரியாமல் இருந்தது.

    8 வருடங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு சம்பந்தமாக நளினி தகவல் வெளியிட்டார். அதில், பிரியங்கா என்னிடம் பேசும்போது, என் தந்தை மிகவும் நல்லவர். மென்மை போக்கு உடையவர். அவரை ஏன் கொன்றார்கள்?

    என்ன ஒரு காரணம் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு இருக்கலாமே என்று கேட்டு அழுதார். அதைப்பார்த்து நானும் அழுது விட்டேன் என்று நளினி கூறியது குறிப்பிடத்தக்கது.

    மே 23-ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு தெரிந்துவிடும் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். #Duryodhana #Arjuna #Priyanka #AmitShah
    திஷ்னுபூர்:

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் திஷ்னுபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா இதுபற்றி கூறியதாவது:-



    பிரியங்கா வத்ரா பிரதமர் மோடியை துரியோதனன் என்று கூறியுள்ளார். பிரியங்கா, இது ஜனநாயகம். நீங்கள் சொல்லிவிட்டதாலேயே யாரும் துரியோதனன் ஆகிவிட முடியாது. மே 23-ந் தேதி யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பது நமக்கு தெரிந்துவிடும். ராஜீவ் காந்தி ஆட்சியில் நடைபெற்ற போபர்ஸ் வழக்கு பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.  #Duryodhana #Arjuna #Priyanka #AmitShah 
    தேர்தல் பிரசாரத்தில் தனது சாதியை பயன்படுத்தும் அளவுக்கு பிரதமர் மோடி கீழிறங்கி விட்டதாக பிரியங்கா குற்றம் சாட்டினார். #PriyankaGandhi #PMModi
    அமேதி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குட்பட்ட முன்ஷிகஞ்ச் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் குறைகளை கேட்க விரும்பாத நிலையில் பா.ஜனதாவினர் உள்ளனர். அவர்களின் தேசியவாதம் என்னவென்றே புரியவில்லை. விவசாயிகள் வெறும் காலுடன் உங்கள் வீட்டுக்கு வரும்போது, அவர்களின் குறைகளை கேட்க உங்களால் முடியவில்லை.



    வேலைவாய்ப்பு குறித்து இளைஞர்களுக்கு போலி வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி தனது சாதியை பயன்படுத்தி உள்ளார். அவர் என்ன சாதி என்று இப்போதுவரை எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் நாங்கள் விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள், தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்தாமல், வளர்ச்சி பற்றியே பேசுகிறார்கள். தனிப்பட்ட விமர்சனம் செய்வது இல்லை. ஆனால், சாதி என்பது முக்கியமானது என்று நினைக்கும் அளவுக்கு பிரதமரை மாற்றியது எது? அந்த அளவுக்கு அவர் கீழிறங்கி விட்டார்.

    அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 16 தடவைதான் அமேதிக்கு வந்துள்ளார். ஒவ்வொரு தடவை வரும்போதும், 4 மணி நேரம் மட்டுமே இருப்பார்.

    பத்திரிகையாளர்களை தன்னுடன் அழைத்து வந்து, மக்களுக்கு சேலை, காலணி உள்ளிட்ட பொருட்களை வழங்கி விட்டு செல்வார்.

    அமேதி மக்கள் சுயமரியாதை கொண்டவர்கள். தங்களை பிச்சைக்காரர்கள் என்று நினைப்பவர்களை அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும்.

    நான் எப்போது இங்கே வந்தாலும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே முயற்சிப்பேன். அமேதியை எங்கள் வீடாகவும், அமேதி மக்களை எங்கள் குடும்ப உறுப்பினர்களாகவுமே நாங்கள் நடத்துகிறோம்.

    இவ்வாறு பிரியங்கா பேசினார்.
    பிரசாரத்துக்கு செல்லும் வழியில் கான்பூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்காவும் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். #LokSabhaElection #RahulGandhi #Priyanka
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா ஆகியோர் தனித்தனியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ராகுலும், பிரியங்காவும் நேற்று உத்தரபிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இதில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் அவரது தாய் சோனியாவின் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இதைப்போல உன்னாவ் மற்றும் பாரபங்கி தொகுதிகளில் பிரியங்கா வாக்கு சேகரித்தார். இதற்காக அவர்கள் இருவரும் தனித்தனி ஹெலிகாப்டர்கள் மூலம் கான்பூர் விமான நிலையம் வந்து இறங்கினர்.

    பின்னர் அங்கிருந்து தங்கள் தொகுதிகளுக்கு செல்லுமுன் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது தனது சகோதரர் மீதான பாசத்தை கட்டுப்படுத்த முடியாத பிரியங்கா, ராகுல் காந்தியை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அத்துடன் ஒருவர் மீது ஒருவர் தோளில் கைபோட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    அப்போது கேமராவுக்கு அருகில் வந்து பேசிய ராகுல் காந்தி, ‘ஒரு நல்ல சகோதரன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை உங்களுக்கு சொல்கிறேன். மிக மிக நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் எனக்கு சிறிய ஹெலிகாப்டர்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் மிகவும் குறுகிய பயணத்தை மேற்கொள்ளும் பிரியங்காவோ பெரிய ஹெலிகாப்டர் பெற்றிருக்கிறார்’ என்று நகைச்சுவையாக கூறினார்.

    உடனே பிரியங்கா, ‘அது உண்மை இல்லை’ என சிரித்துக்கொண்டே சொன்னார். பின்னர் ராகுல் காந்தி, ‘ஆனால், நான் அவரை அன்பு செய்கிறேன்’ என்று குறிப்பிட்டார். இருவரின் சகோதர பாசத்தை பார்த்த விமான நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் நெகிழ்ந்தனர்.

    பின்னர் இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றி இருந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களின் பாராட்டையும் பெற்றது.  #LokSabhaElection #RahulGandhi #Priyanka
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான பிரியங்கா நாளை முதல் உத்தரபிரதேசத்தில் ரோட்ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். #PriyankaGandhi
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கிய பாராளுமன்ற தேர்தலின் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று 3வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு 5  கட்டங்களாக  ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பிரியங்கா, ரோட்ஷோ நடத்தி மக்களை நேரில் சந்தித்து பேசி வருகின்றார்.



    அந்த வகையில்  நாளை ககா மற்றும் காசிப்பூர் பகுதிகளில் நடைபெறவுள்ள பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றவுள்ளார்.

    இதனையடுத்து ஏப்ரல் 25 தேதி  ஜான்சி தொகுதியில் காலை 11 மணி அளவில் ரோட்ஷோ  நடத்திய பின்னர்  ஜலாவுன் தொகுதிக்கு உட்பட்ட குர்சராய் மற்றும் ஓராய் பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

    மேலும் ஏப்ரல் 26ம் தேதி  மதியம் 12.30 மணி அளவில் உன்னாவோ பகுதியில் வாகன அணிவகுப்பு நடத்தி, பின்னர் இஸ்ரவுளி மற்றும் தெவா ஷெரீப் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். #PriyankaGandhi

    பிரதமர் மோடி போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #PMModi #BJP #PriyankaGandhi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    இரு தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். வாரணாசி எம்.பி.யாக நீடித்தார்.

    இந்த தேர்தலில் அவர் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை.

    இறுதிக்கட்ட தேர்தல் மே 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான பெரும்பாலான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது.

    வாரணாசி தொகுதி தேர்தலும் 19-ந் தேதிதான் நடைபெறுகிறது. ஆனாலும், இதற்கான வேட்பாளரை மட்டும் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. நேற்று 18 தொகுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

    அதில், வாரணாசி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதிலும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

    காங்கிரஸ் ஏதோ ரகசிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும், இதனால் தான் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை வாரணாசி தொகுதியில் போட்டியிட வைக்க இருப்பதாகவும், கடைசி நேரத்தில் அவரை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

    பிரியங்கா இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாத நிலையில் திடீரென கடந்த மாதம் அவர் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி பொறுப்பும் வழங்கப்பட்டது.

    அங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள பிரியங்கா பம்பரமாக சுழன்று வருகிறார். இவரது வருகையால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    பிரியங்கா கங்கை நதியில் 3 நாள் தொடர்ந்து படகு பயணம் செய்து நதிக்கரை ஓரம் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். அந்த பயணத்தை இறுதியாக வாரணாசியில் முடித்தார்.

    அப்போது வாரணாசி தொகுதி எம்.பி.யாக இருக்கும் மோடியை கடுமையாக விமர்சித்தார். அயோத்தியில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா மோடியை பற்றி காரசாரமாக பேசினார்.

    வாரணாசியில் மோடி 5 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ளார். இந்த 5 ஆண்டில் ஏதேனும் ஒரு கிராமத்துக்கு அவர் வந்திருக்கிறாரா? அவருக்கு வெளிநாட்டுக்கு செல்லத்தான் நேரம் இருக்கிறது. கிராம மக்களை சந்திப்பதற்கு நேரம் இல்லை என்று கூறினார்.

    வாரணாசியை குறி வைத்து அவர் பிரசாரம் செய்ததே அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்று கூறப்படுகிறது.

    மேலும் அவர் கடந்த 28-ந் தேதி தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, நான் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டுமா? என்ற கேள்வியையும் கேட்டார்.

    ராகுல்காந்தியும் இது சம்பந்தமாக சூசகமாக தெரிவிக்கும் போது, பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது பற்றி அவரே முடிவு எடுத்து கொள்ளலாம் என்றார்.

    பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றால் அதை ராகுல்காந்தி உறுதியாக கூறி இருப்பார். ஆனால், இப்படி மழுப்பலாக சொல்லி இருப்பதால் பிரியங்கா போட்டியிடுவது உறுதி என்றே கூறப்படுகிறது.

    அவர் வாரணாசி வேட்பாளராக மனு தாக்கல் செய்யும் இறுதி நாள் அன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலாவிடம் கேட்ட போது, இதுபற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று கூறினார்.

    பாரதிய ஜனதா தலைவர் ஷா நவாஸ் உசேன் கூறும்போது, சில அனுமானமான வி‌ஷயங்கள் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. மோடியை எதிர்த்து போட்டியிட காங்கிரசுக்கு பொறுத்தமான வேட்பாளர் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார்.

    வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலில் மோடி போட்டியிட்ட போது 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டு 2-ம் இடம் பிடித்தார். #PMModi #BJP #PriyankaGandhi

    ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்த அமேதி எங்கள் தந்தையின் புண்ணியபூமி, எங்களது புனிதஸ்தலம் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். #Amethi #karmabhoomi #RajivGandhi #sacredland #Priyanka
    லக்னோ:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதே தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா மற்றும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அமேதி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.


    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில செயலாளர் பிரியங்கா காந்தி இந்த தொகுதிக்கும் தங்களது குடும்பத்துக்கும் இடையில் உள்ள நெருக்கமான பந்தம் தொடர்பாக குறிப்பிட்டார்.

    ’சில உறவுகள் இதயத்தோடு நெருக்கமாக உள்ளவையாகும். இந்த அமேதி தொகுதி எங்கள் தந்தையின் (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) புண்ணியபூமி, எனவே, இது எங்களது புனிதஸ்தலம். அதனால்தான், ராகுல் காந்தி வேட்புமனு தாக்கலுக்காக நாங்கள் இங்கே குடும்பமாக வந்திருக்கிறோம்’ என பிரியங்கா உணர்வுப்பூர்வமாகவும், உருக்கமாகவும் தெரிவித்தார். #Amethi #karmabhoomi  #RajivGandhi #sacredland #Priyanka
    “தாயும், மகளும் கஷ்டமான தருணங்களில் ரேபரேலிக்கு வருவதே இல்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர்” என ரேபரேலியில் பிரியங்காவை குறித்து சுவரொட்டியில் விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது. #PriyankaGandhi #RaeBareli
    ரேபரேலி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா, உத்தரபிரதேசத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று தனது தாயாரின் சொந்த தொகுதியான ரேபரேலிக்கு சென்றார்.அதே சமயத்தில், அவரை விமர்சித்து ஏராளமான சுவரொட்டிகள் ரேபரேலி நகரில் ஒட்டப்பட்டு இருந்தன. சில சுவரொட்டிகள், காங்கிரஸ் அலுவலகத்துக்கு அருகிலேயே காணப்பட்டன. அதில், சோனியா-பிரியங்கா ஆகிய இருவரின் புகைப்படங்களும் இருந்தன. ஒரு சுவரொட்டியில், “தாயும், மகளும் கஷ்டமான தருணங்களில் ரேபரேலிக்கு வருவதே இல்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர்” என்று கூறப்பட்டு இருந்தது.

    மேலும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டு இருந்த ஒரு சுவரொட்டியில், “5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏன் அமேதிக்கு வருகிறீர்கள்? எங்களை முட்டாள் ஆக்காதீர்கள்” என்று பிரியங்கா படம் போட்டு விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது.
    இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது என்று பாஜக மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் அனந்த் பகுதியில் மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை மிக கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    இந்திராகாந்தி போன்று பிரியங்காவுக்கும் மூக்கு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள். இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருந்து விட்டால் போதுமா?

    அந்த மூக்கை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும். பாட்டி மாதிரி ஒரே மாதிரி மூக்கு இருந்து விட்டால் அரசியலில் ஒரு போதும் வெற்றி பெற்று விட முடியாது. இதை பிரியங்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.


    சீனாவில் எல்லாரது முகமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அவர்கள் மூக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதற்காக வீடு தோறும் சீனா ஜனாதிபதி இருக்கிறார் என்று சொல்லி விட முடியுமா?

    ஆகையால் ஒரே மாதிரி மூக்கு என்று சொல்லிக் கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடலாம் என்று கனவு காணக்கூடாது. அரசியலில் மேன்மை பெற தனி தகுதி வேண்டும்.

    இவ்வாறு மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா பேசினார்.

    இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் பா.ஜனதா எம்.பி. ஹரிஸ்திவேதி பேசுகையில், “பிரியங்கா டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் போட்டுக் கொள்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் சேலை அணிகிறார். எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார்” என்று கேட்டு இருந்தார். இந்த பேச்சும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

    பிரியங்கா முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்று வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #priyanka #rahulgandhi #parliamentelection

    லக்னோ:

    நாட்டில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்த நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

    2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இந்த மாநிலத்தில் தனியாக நின்று ஓரளவு கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதேபோல இந்த தேர்தலிலும் கைப்பற்ற முடியும் என்று கருதுகிறது.

    இதற்காக பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்து உத்தரபிரதேசத்தில் பாதி பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமித்து உள்ளனர்.

    பிரியங்காவின் வருகை உத்தரபுபிரதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் இங்கு பல தொகுதியில் வெற்றி பெறும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

    இதுபற்றி தொகுதி வாக்காளர்கள் சிலரை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது.

    தக்காளி வியாபாரி சுந்தர் லால் என்பவர் கூறும்போது, “பிரியங்காவிடம் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. அவர் இந்திரா காந்தியின் பேத்தி. ஆனால் அவர் இந்திராகாந்தி அல்ல. மன்மோகன்சிங் ஆட்சியை 10 ஆண்டுகள் பார்த்தோம். ஆனால் எதுவும் செய்யவில்லை.


    பிரியங்காவோ, ராகுலோ பெரிதாக செய்ய வருகிறார்கள் என்று எதிர்பார்க்கவிலை. நான் வலுவான தேசம் அமைய ஓட்டு போடுவேன்” என்றார்.

    மற்றொரு வியாபாரி ராஜேந்திர யாதவிடம் கேட்டபோது, அகிலேஷ் யாதவுக்குதான் எனது ஓட்டு என்று கூறினார்.

    சுக்லா கஞ்சை சேர்ந்த ராஜுமிஸ்ரா என்பவர் கூறும்போது, “இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக உள்ள அன்னுதான்டன் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவருக்கு ஓட்டு போடுவேன்” என்றார்.

    முதல்முறை வாக்காளரான அனுகிருத்திசிங் கூறும்போது, “பிரியங்காவின் வசீகரம் என்னை ஈர்த்துள்ளது. ஆனாலும் போதிய நம்பிக்கை ஏற்படவில்லை” என்று கூறினார்.

    சவுத் அகமது என்பவர் கூறும்போது, “பிரியங்கா அரசியல் களம் இறங்கி இருப்பது சிறப்பானது. ஆனாலும் காலதாமதமாக அவர் வந்து இருக்கிறார். முன்கூட்டியே அவர் இறங்கி இருந்தால் நன்றாக அமைந்திருக்கும்” என்றார்.

    கான்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சொனகர் அக்தர் கூறும்போது, “பிரியங்கா வருகை கட்சியில் திருப்பு முனையை ஏற்படுத்தும். தேர்தல் முடிவில் இங்கு காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியை கண்டு அனைவரும் ஆச்சரியப்படப் போகிறார்கள்” என்றார். #priyanka #rahulgandhi #parliamentelection

    உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பிரியங்கா, லால் பகதூர் சாஸ்திரியை அவமதித்ததாக ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். #SmritiIrani #Priyanka
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, நாட்டின் அனைத்து கட்சியினரும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு நேற்று மரியாதை செலுத்தினார். சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவிக்கும் வீடியோவினை சுட்டிக்காட்டி, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியதாவது:



    பிரியங்காவின் அகந்தை இந்த வீடியோவில் அவர் செய்யும் செயலில் தெளிவாக தெரிகிறது. தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை எடுத்து, லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு தன் கைகளால் போடுகிறார். இதன்மூலம் பிரியங்கா, மரியாதை செய்வதாக கூறி அவரை அவ மரியாதை செய்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் மதிப்பு என்ன என்பதை இந்த செயல் தெளிவாக காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SmritiIrani #Priyanka
    ×