என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரியங்கா"
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவருமான தேவேகவுடா ஈடுபட்டு வருகிறார்.
இது சம்பந்தமாக அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-
கேள்வி:- எதிர்க்கட்சி கூட்டணி சம்பந்தமாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, வலுவான ஆட்சி வேண்டுமா? பலவீனமான அரசு வேண்டுமா? என்று கேட்டு இருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி அணியை சந்தர்ப்பவாத, நகைப்புக்குரிய அணி என்று கூறி இருக்கிறாரே?
பதில்:- எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினைகள் என்ன என்பதை உணர்ந்து தீர்வு ஏற்படுத்திக்கொண்டால் மோடி போன்றவர்கள் இது போன்ற விமர்சனங்களை செய்யும் நிலை ஏற்படாது.
இந்த நாட்டின் மக்கள் நிலையான அரசைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க் கட்சியினர் தங்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு நிலையான அரசை ஏற்படுத்துவது சம்பந்தமாக ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும்.
எப்படி அந்த அரசை 5 ஆண்டுகள் நீடிக்க செய்வோம் என்ற விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மதசார்பற்ற நிலைக்கும், ஜனநாயகத்துக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து விவாதித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இதில் தீர்வுகாண வேண்டும். அதை காங்கிரஸ் முன்னின்று செய்ய வேண்டும். ஆனால், காங்கிரசுக்கும், பிராந்திய கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் மோடி விமர்சிக்கிறார்.
நாட்டின் பாதுகாப்பு, அனைத்து அரசியல் சாசன அமைப்புகள் ஆகியவற்றை அழிக்கும் முயற்சியில் மோடி ஈடுபட்டு வருகிறார். அதை தடுப்பதற்கு எதிர்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம்.
கே:- எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் எது தடையாக உள்ளது?
ப:- மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி 10 இடங்களை தான் கேட்டார். ஆனால், அதைக்கூட காங்கிரஸ் விட்டு கொடுக்கவில்லை. பின்னர் அவர் தனித்து நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 6 இடங்களில் வென்றுள்ளார்.
அப்போதே காங்கிரஸ் விட்டு கொடுத்து இருந்தால் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருக்காது. இதன் காரணமாகத்தான் மாயாவதி உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் சேர்ந்து தனி கூட்டணியை ஏற்படுத்தி விட்டார்.
காங்கிரஸ் அங்கு தனியாக போட்டியிடும் நிலை உருவாகி இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலை உருவாகாமல் பார்த்து இருக்கலாம்.
இப்போதுகூட ஒன்றும் பிரச்சினை இல்லை. நினைத்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையலாம். குமாரசாமி பதவி ஏற்பு விழாவின்போது அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தேன். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவது நல்லது.
கே:- கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஒன்றிணைவதற்கு இப்போது வாய்ப்பு இருக்கிறதா?
ப:- நிச்சயமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் அணுகி ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். காங்கிரஸ் அதை முன்னெடுத்து சென்றால் அவர்களும் இறங்கி வருவார்கள். ஒரு சரியான உருவகத்தை ஏற்படுத்த முடியும்.
கே:- எதிர்க்கட்சி அணியில் யார் பிரதமர்? என்று பாரதிய ஜனதா கேள்வி விடுக்கிறது.
ப:- ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பது இயற்கையான ஒன்று. எங்களில் யாரும் அவருக்கு போட்டியாக இல்லை. அந்த வகையில் காங்கிரஸ் தனது செயல்பாட்டை முழுமையாக்கி கொள்ள வேண்டும்.
கே:- பிரியங்கா வருகையால் காங்கிரஸ் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?
ப:- ராகுல்காந்தியை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் என நான் கருதுகிறேன். அவருடைய தோற்றம், சில வகை நடவடிக்கைகள் அவரது பாட்டி இந்திராகாந்தி போலவே இருப்பதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள்.
பிரியங்காவின் வருகை நிச்சயம் கட்சிக்கு பெரிய உதவியாக இருக்கும். அவர் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #RahulGandhi
லக்னோ:
காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த 23-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது அரசியல் பிரவேசத்தை கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பிரியங்காவால் உத்தரபிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனால் அகிலேஷ் யாதவ் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார். நேற்று முதல் முறையாக பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன்” என்றார்.
அதே சமயம் ராகுல்காந்தி சமீபத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவை மதிக்கிறேன் என்று கூறியிருப்பதால் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்று அகிலேஷ் யாதவிடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
தொடர்ந்து அகிலேஷ் யாதவ் பதில் அளிக்கையில் பா.ஜனதாவை மட்டுமே விமர்சித்தார். காங்கிரஸ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தார். #akhilesh #rahulgandhi #Priyanka
சென்னை:
பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் இறங்குகிறார்.
இதையடுத்து பிரியங்கா குறித்து பா.ஜனதாவினர் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அளித்த பதில் வருமாறு:-
பிரியங்கா காந்தி எத்தனையோ ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். பல முறை தேர்தல் பிரசாரங்களும் செய்துள்ளார்.
எங்கள் கட்சியில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெண் முன்னேறி இருக்கிறார். அவரும் வரட்டுமே. பா.ஜனதாவினர் ஏன் பயப்பட வேண்டும்.
அவர்களுடைய விமர்சனத்தின் மூலமே, பிரியங்காவை கண்டு அவர்கள் பயந்து நடுங்குவது தெரிகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொறுப்பு மட்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில்தான் மோடி தொகுதியும், யோகி ஆதித்யநாத் தொகுதியும் வருகிறது. எங்கே நாம் தோற்று விடுவோமோ என்று பயந்து நடுங்குகிறார்கள். ஒரு மாநிலத்தின் பொறுப்புக்கு வந்ததும், நாடு முழுவதும் பா.ஜனதாவினர் பிரியங்காவை விமர்சிப்பது ஏன்?
குடும்ப அரசியல் என்கிறார்கள். பா.ஜனதாவில் குடும்ப அரசியல் இல்லையா. 44.4 சதவீதம் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், ஏதோ ஒரு வகையில் அரசியல் தலைவர்களின் பின்புலத்தில் வந்த வாரிசுகள் தான். எனவே பா.ஜனதாவினருக்கு குடும்ப அரசியல் பற்றி பேச தகுதி இல்லை.
தமிழக காங்கிரசில் நிலவும் குழப்பம் குறித்து டெல்லி மேலிடத்திடம் புகார் செய்வதற்காக எல்லோரும் சென்றதாக கூறுகிறார்கள். இது தவறு. ஒவ்வொரு வரும் தனிப்பட்ட அரசியல் பணிகளுக்காக எல்லோரும் ஒரே சமயத்தில் டெல்லி சென்று இருந்தோம். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
காங்கிரசை ராகுல் காந்தி கட்சி என்று சொல்ல மாட்டார். இயக்கம் என்றுதான் கூறுவார். அந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும் அவரது பாணியிலேயே செயல்பட வேண்டும். அதை விட்டு விட்டு நானே ராஜா, நானே மந்திரி என்பது போல் நடந்து கொள்ளக் கூடாது.
இவ்வாறு குஷ்பு கூறினார். #kushboo #bjp #congress #Priyanka
பிரியங்காவை பொருத்தவரை அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல தொடர்பில் இருப்பவர். அந்த இரு தொகுதிகளிலும் அவருக்கு அபரிதமான செல்வாக்கு இருக்கிறது.
சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி. ஆக உள்ளார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இந்த தடவை அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற பேச்சு நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் வெற்றி 100 சதவீதம் உறுதியானதாகும். அத்தகைய சூழ்நிலையில் அவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 40 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா 5 முறை எம்.பி. ஆக இருந்துள்ளார். அந்த 5 தடவையும் தேர்தல் பணி செய்தது பிரியங்காதான். எனவே ரேபரேலி தொகுதியின் சந்து பொந்துகள் கூட பிரியங்காவுக்கு தெரியும். இது பிரியங்காவின் மிகப்பெரிய பலமாகும்.
அதுமட்டுமின்றி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்போது “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்”என்ற கோஷத்தை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு வலிமை சேர்க்கும் வகையில் அயோத்தி ராமர் கோவில் உள்பட பல்வேறு இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்க ராகுலும், பிரியங்காவும் வியூகம் வகுத்துள்ளனர். எனவே தேர்தல் சமயத்தில் உத்தரபிரதேசம் ‘களை’ கட்டும். #Parliamentelection #PriyankaGandhi
காங்கிரஸ் கட்சி பிரியங்காவை களத்தில் இறக்கி இருப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியை நினைத்தும் அதன் தலைவரை பார்த்தும் அந்த கட்சி தொண்டர்கள்தான் பரிதாபப்பட வேண்டும். பிரியங்கா தேர்தல் களத்துக்கு வருவது இதுபுதிதல்ல. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் பிரசாரத்துக்கு களம் இறக்கி பரிசோதித்து பார்த்து தோல்வி கண்டவர்கள்தான்.
பிரியங்கா வருகையை கொண்டாடும் காங்கிரசார் ராகுலின் தோல்வியையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். ராகுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று பிரதமர் வேட்பாளராகவும் முன் நிறுத்தப்பட்டவர்.
ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் எடுபடப்போவதில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பமே இந்த நாட்டை ஆள முடியும் என்ற நிலை இருந்தது. சாமானியனும் ஆள முடியும் என்ற நம்பிக்கை இப்போதுதான் வந்துள்ளது. மோடியால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஒரு குடும்பத்தின் கைகளில் நாட்டை ஒப்படைக்க மக்கள் விரும்புவார்களா? காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா வருகையை கொண்டாடலாம். மக்கள் கொண்டாட மாட்டார்கள்.
பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுவதாக கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காக இருக்கும். மோடியை கண்டு பயந்து பிரியங்காவை கொண்டு வந்திருப்பவர்கள் மோடி பயந்துவிட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் மக்கள் ரசித்து பார்க்கும் சுவாரஸ்யங்களில் இதுவும் ஒன்று. இவர் அதற்கு சரிபட்டு வர மாட்டார் என்று கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டாளியும் ஏற்றுக்காள்ளவில்லை.
மீண்டும் இந்திரா வந்து விட்டதாக வாழ்த்துப்பாடும் தமிழக அரசியல் தலைவர்கள் மீண்டும் நெருக்கடி நிலை வரவேண்டும் என்று வரவேற்பார்களா? எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று அந்தர் பல்டி அடிக்கும் கட்சிகள் நடத்தும் காட்சிகளை மக்கள் பார்த்து சிரிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Modi #PriyankaGandhi
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி. ஆவார். அங்கு சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகள் பிரியங்காதான் கட்சி நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவர் தொகுதிக்கு செல்லவில்லை என தெரிகிறது.
சிறந்த வீரருக்கான விருது சங்கர் முத்துசாமிக்கும், சிறந்த வீராங்கனைக்கான விருது லட்சுமி பிரியங்காவுக்கும் வழங்கபட்டது. இருவரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். சங்கர் முத்துசாமியும், லட்சுமி பிரியங்காவும் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். ஹம்பர்க் நகரில் உள்ள புசிரியஸ் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு நிகழ்வில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனது பாட்டி, தந்தை ஆகியோரை பயங்கரவாதத்துக்கு பறிகொடுத்து இருக்கிறேன். இந்த வன்முறையை வெல்வதற்கும், அதை கடந்து வருவதற்கும் ஒரே வழி, மன்னிப்பு மட்டுமே. வன்முறைக்கு எதிர்வினை ஆற்றாமல் இருப்பதை பலவீனம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மன்னிப்புதான் வலிமையானது.
எனது தந்தை 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டார். எனது தந்தையின் சாவுக்கு காரணமானவரும் சில ஆண்டுகளுக்குப்பின் கொல்லப்பட்டார். உடனே எனது சகோதரிக்கு தொலைபேசியில் அழைத்து, ‘நம் தந்தையின் சாவுக்கு காரணமாக இருந்தவர் கொல்லப்பட்டு விட்டார். ஆனாலும் என் மனம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. என்னுடைய இதயம் ஒருவித பதற்றத்துடனே இருக்கிறது’ என்றேன்.
அதற்கு பிரியங்காவும், ‘சரியாக சொன்னாய், எனக்கும் மகிழ்ச்சி ஏற்படவில்லை’ என்றுதான் கூறினார். இவ்வாறு, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது நானும், பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை.
அதற்கு காரணம், பிரபாகரனின் குழந்தைகள் இருக்கும் இடத்தில் என்னை வைத்து பார்த்தேன். எனது தந்தையை இழந்தபோது நான் கதறி கண்ணீர் விட்டது போன்றுதான் அந்த குழந்தைகளும் கதறும் என்று உணர்ந்தேன். வன்முறையை எதிர்த்து போரிட அகிம்சையால் மட்டுமே முடியும்.
என்னை பற்றி பிரதமர் மோடி வெறுக்கத்தக்க கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் நான் அவரிடம் அன்பை மட்டுமே காட்டுகிறேன்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நான் அவரை கட்டிப்பிடித்ததை எனது கட்சியை சேர்ந்த சிலர்கூட விரும்பவில்லை. ஆனால் வெறுப்புக்கு பதிலாக வெறுப்பையே காட்டுவது முட்டாள்தனமானது. எந்த பிரச்சினைக்கும் இது தீர்வாகாது.
வேலையில்லா திண்டாட்டத்தை மிகப்பெரும் பிரச்சினையாக பார்க்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். இந்த பிரச்சினையை முதலில் உணர்ந்து கொண்டால்தான் அதற்கான தீர்வுகளை காண முடியும்.
தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களை வளர்ச்சி திட்டங்களில் இருந்து பா.ஜனதா அரசு புறக்கணித்து வருகிறது. இது மிகப்பெரும் ஆபத்தில் முடியும். 21-ம் நூற்றாண்டில் மக்களுக்கான பார்வையை மறுப்பது, அவர்களை ஒதுக்குவது என்பது விபரீதத்தை ஏற்படுத்தி விடும்.
உலகின் எந்த பகுதியிலும் பெருவாரியான மக்களை வளர்ச்சித்திட்டங்களில் இருந்து ஒதுக்கிய போது, கிளர்ச்சிக்குழுக்களே உருவாகி இருக்கின்றன. இதற்கு உதாரணம்தான் ஐ.எஸ். அமைப்பு.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பெண்கள் வாழ இந்தியா தகுதியற்ற நாடு என்னும் கருத்தை ஏற்கமாட்டேன். பெண்களை, ஆண்கள் சமமாக பார்க்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #Prabhakaran #RahulGandhi #Priyanka #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்