என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96418"
பாராளுமன்ற தேர்தலில் எங்களிடம் கூட்டணி அமைத்தால் அவர்களின் வெற்றிக்கு பாஜக உத்தரவாதம் அளிக்கும். அதேவேளையில் கூட்டணி அமையாவிட்டால் முன்னாள் கூட்டணி கட்சி என்றுகூட பார்க்க மாட்டோம். அவர்களையும் அடித்து வீழ்த்தி பாஜக வெற்றிபெறும் என சமீபத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு இன்று பதிலளித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எங்களை தோற்கடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மும்பை வோர்லி பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
பழைய கூட்டணி கட்சி என்றுகூட பார்க்காமல் அடித்து வீழ்த்துவோம் என்று யாரோ சிவசேனாவை குறிப்பிட்டு கூறியுள்ளனர். சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
தற்செயலாக பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் என்று பொருள்படும் ‘தி ஆக்சிடென்டல் பிரதம மந்திரி’ என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பா.ஜனதா ஆதரவாளரான அனுபம்கெர் மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் மன்மோகன்சிங் தற்செயலாக வந்த பிரதமர் அல்ல. வெற்றிகரமான பிரதமர் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா புகழாரம் சூட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளார். அவரை மக்கள் மதிக்கின்றனர். எனவே அவர் தற்செயலாக திடீரென பொறுப்புக்கு வந்த பிரதமர் அல்ல என்று நான் கருதுகிறேன்.
நரசிம்மராவுக்கு பின்னர் மன்மோகன்சிங் தான் வெற்றிகரமான பிரதமர் என்று தெரிவித்ததன் மூலம் மோடியை சிவசேனா சீண்டி பார்த்துள்ளது. #ShivSena #ManmohanSingh
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிலும், மராட்டிய மாநில அரசிலும் சிவசேனா அங்கம் வகிக்கிறது. எனினும் சிவசேனா எதிர்க்கட்சியான காங்கிரசை காட்டிலும் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. சமீபத்தில் பண்டர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். ஊழல் புகார்களில் சிக்கி உள்ள பா.ஜனதாவுடன் நாங்கள் ஏன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலை இரு கட்சிகளும் இணைந்தே சந்தித்தன. இந்த தடவை நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி நீடிக்குமா?. சட்டசபை தேர்தலை போல கூட்டணி முறியுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் அக்கட்சியின் மராட்டிய மாநில எம்.பி.க்களை சந்தித்து பேசினார்.
அப்போது, அவர் சிவசேனா கூட்டணிக்கு வரவில்லையென்றால் தனித்து போட்டியிட தயாராக இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களிடம் அறிவுறுத்தினார். மேலும் கூட்டணிக்காக சிவசேனா சொல்லுவதற்கு எல்லாம் நம்மால் ஆட முடியாது. வருகிற 31-ந்தேதிக்குள் அவர்கள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை தனித்து சந்திப்பது குறித்து நீங்கள் முடிவு எடுக்கலாம் என்று பா.ஜனதா எம்.பி.க்களிடம் அமித்ஷா கூறியதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கேட்டபோது, இந்த கெடுவை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அல்லது பா.ஜனதா தலைவர் அமித்ஷா எங்களுக்கு விதித்து உள்ளாரா?. அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவிக்கட்டும். அதன் பிறகு நாங்கள் பதில் அளிக்கிறோம், என்றார். #AmitShah #ShivSena
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அனுமன் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறினார். தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க.வினர் அனுமன் முஸ்லிம் என்றும், ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும், ஜெயின் சமூகத்தவர் என்றும் பலவாறு கூறிவருகின்றனர். இதற்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் இதுபற்றி எழுதியிருப்பதாவது:-
இந்த விவாதம் தேவையற்றது, அர்த்தமற்றது. உத்தரபிரதேச அரசு புதிய ராமாயணத்தை அதன் முக்கிய பாத்திரங்களுக்கு சாதி முத்திரையுடன் எழுத முயற்சிக்கிறது. அயோத்தியில் ராமர் கோவிலை இன்னும் கட்டவில்லை. ஆனால் விசுவாசம் மற்றும் பக்தியின் வடிவமான அனுமன் சாதி பற்றி பா.ஜனதா விவாதத்தை தொடங்கியுள்ளது. அனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனமானது. தங்களை இந்துக்களின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்பவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். முஸ்லிம்களோ, முற்போக்குவாதிகளோ இதை கூறினால் இந்துக்களின் பாதுகாவலர்கள் அமளியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது. #ShivSena #Ramayana
மும்பை:
மத்தியிலும், மராட்டிய மாநிலத்திலும் சிவசேனா கட்சி பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது.
ஆனால், பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் சமீப காலமாக சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படாமல் அதன் உறுப்பினர்கள் சபையை புறக்கணித்தனர்.
அந்த விவகாரத்தின் போது, ராகுல்காந்தி அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து பேசியதை சிவசேனா பாராட்டியது.
இதன் பிறகும் பாரதிய ஜனதாவை சிவசேனா ஒவ்வொரு விஷயத்திலும் விமர்சித்து வருகிறது. 3 மாநிலத்தில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததற்கு மோடியே காரணம் என்றும் சிவசேனா கூறி இருந்தது.
இந்த நிலையில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சிவசேனா பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
2014 பாராளுமன்ற தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று உறுதி அளித்தார்கள். அதனால்தான் ஆட்சிக்கும் வந்தார்கள்.
ஆனால், ஆட்சி இப்போது முடிய போகும் நிலையில் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஏராளமான வெற்று வாக்குறுதிகளை கொடுத்தது. அதேபோல்தான் ராமர் கோவில் கட்டுவோம் என்றும் வெற்று வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்.
இப்போது தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே ஏன் ராமர் கோவில் கட்டவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் ராமர் கோவில் பற்றி பாரதிய ஜனதா ஏதேதோ சொல்லி கொண்டு இருக்கிறது.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறும்போது, நிதானமாக இருப்போம், சரியான நேரத்தில் எல்லாம் நடக்கும் என்று கூறுகிறார்.
மத்திய மந்திரி நிதின் கட்காரி ராமர் கோவிலை அனைவருடைய ஒப்புதலோடும், ஒத்துழைப்போடும் கட்டுவோம் என்று கூறுகிறார்.
எப்போது கோவில் கட்டப்போகிறீர்கள்? ராமர் கிட்டத்திட்ட 25 ஆண்டுகள் காத்து இருந்து விட்டார். நீங்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தும் கட்ட முடியவில்லை.
எவ்வளவு காலம்தான் கும்பகர்ண தூக்கத்தில் இருக்க போகிறீர்கள்? 3 மாநிலத்தில் தோல்வி அடைந்து இருக்கிறீர்கள். இதற்கு பிறகும் நீங்கள் பாடம் கற்கவில்லை.
இதேநிலை நீடித்தால் பாராளுமன்ற தேர்தலிலும் அது தோல்வியை நோக்கி அழைத்து செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் அவசர சட்டம் கொண்டு வரவில்லை. இதுபற்றி கேட்டால் இந்த விஷயத்துக்கு அவசர சட்டம் கொண்டு வர முடியாது என கூறுகிறீர்கள்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பலர் சிக்கி உள்ள நிலையில் அந்த வழக்குகளை கூட அகற்றுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மூத்த தலைவர் அத்வானியை ஜனாதி பதியாகத்தான் உருவாக்க வில்லை. குறைந்த பட்சம் அவர் மீது உள்ள வழக்குகளையாவது நீக்குங்கள்.
இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது. #ShivSena
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்த தோல்வியை பா.ஜனதாவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கடுமையாக விமர்சித்துள்ளது.
அதுபற்றி கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சூளுரைத்தனர். ஆனால் தற்போது அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களிலேயே பா.ஜனதா இல்லாத காலத்தை அவர்கள் பார்க்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது.
தங்களை தவிர்த்து வேறு எந்த கட்சியும் அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியாது, மக்கள் தங்கள் ஆட்சியை விரும்புகிறார்கள் என்று பா.ஜனதாவினர் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை தேர்தல் முடிவுகளால் பொய்யாகி இருக்கிறது. வானத்தில் பறந்து கொண்டிருந்த அவர்களை, மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தரைக்கு இழுத்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகளால், பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
ராஜஸ்தானில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்கள்.
மத்திய பிரதேசத்தில் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கேட்ட விவசாயிகள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர். இதற்கு மக்கள் தேர்தலின் மூலம் பழிதீர்த்துக்கொண்டார்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. ஏராளமானோர் வேலை இழந்தனர். பணவீக்கம் அதிகரித்தது.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடியோ உலக அரசியலில் ஈடுபட விமானத்தில் பறந்துகொண்டு இருந்தார்.
விமானம் இந்தியாவில் தரை இறங்கியதும் நேராக தேர்தலுக்காக பிரசாரம் செய்ய கிளம்பினார். மோடியின் குழந்தைத்தனமான பேச்சுகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.
இன்றைக்கு நாடு சில தொழில் அதிபர்களால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்வகிக்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளின் நிர்வாகம் சிதைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionResult2018 #ShivSena
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சேனா பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை ஒவ்வொரு தேர்தலின் போதும் எழுகிறது. தேர்தல் முடிந்ததும் அது மறந்து போகிறது. மத்தியில் மோடி அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. 4½ ஆண்டுகளாக ராமர் கோவில் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் மூலம் மோடி அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதை உணர முடிகிறது. இந்த கும்பகர்ண தூக்கத்தில் இருந்து அரசை எழுப்ப எங்களது கட்சி சார்பில் போராடி வருகிறோம்.
இதன் அடுத்த கட்டமாக வருகிற 24-ந் தேதி பேரணி நடத்த உள்ளோம். இந்த பேரணி கோவில் நகரமான சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் நடக்கிறது.
பல்வேறு பிரச்சினைகளை அவசர சட்டம் கொண்டு வந்து மத்திய அரசு தீர்த்து வைத்துள்ளது. ஆனால் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் அதேபோல நடந்து கொள்ளாதது ஏன்?.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார். #Ayodhya #RamTemple #UdhavThakre
மும்பை பாந்திராவில் உள்ள மதோ இல்லத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை, பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கக்கோரி நான் ஏற்கனவே மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேசினேன்.
தற்போது சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து மசோதாவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். உத்தவ் தாக்கரே மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராத்தா இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் இந்த இடஒதுக்கீடு காரணமாக மற்ற சமுதாயத்தினர் பாதிக்கப்படக்கூடாது என்றும் இந்த சந்திப்பின்போது அரசை உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதேபோல் தங்கர் சமுதாய மக்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் படியும் அவர் வலியுறுத்தியதாக சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் நேற்று மேல்-சபையில் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், “ பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அளித்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இடஒதுக்கீடு மசோதா மீதும் விவாதம் நடத்த போதுமான கால அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் சட்டசபை கூட்டம் நீட்டிக்கப்படும்” என்றார். #UddhavThackeray #BJP
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், சிவசேனா கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜனதாவும் ராமர்கோவில் கட்டுவதில் ஆர்வமாக உள்ளது. அண்மையில் இதே கோரிக்கையை முன்வைத்து தனிப்பட்ட முறையில் சிவசேனா அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
இந்தநிலையில் கடந்த 4½ ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிவசேனா தனது கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கடுமையாக விமர்சித்து உள்ளது.
அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் இதுபற்றி கூறப்பட்டு இருப்பதாவது:-
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது ஒருவர்(மோடி) தனக்கு 56 அங்குல மார்பளவு இருப்பதாக கூறினார். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். இதனால் காங்கிரசை தேர்தலில் மக்களால் தூக்கி எறிந்துவிட்டு 56 அங்குல மார்பளவு கொண்ட மனிதரிடம் நிர்வாகத்தின் சாவியை ஒப்படைத்தனர்.
ஆனால் அவரிடம் அரசியல் திறமை இல்லை. இதனால்தான் ராமர் கோவில் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
விரைவில் நடக்கப்போகும் தேர்தலில் மக்கள் உங்களின் மார்பளவை மீண்டும் அளக்கப் போகிறார்கள். அப்போதும் ராமர் வனவாசத்தில் இருக்க நேர்ந்தால் உங்கள் அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ராமர் கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு காங்கிரஸ் மறைமுக நெருக்கடி அளிப்பதாக மோடி குற்றம்சாட்டி இருப்பதற்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
‘‘இந்திராகாந்தி குடும்பம் மற்றும் காங்கிரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். இதுபோன்று புகார்களை கூறுவதற்காக ஆட்சியை மக்கள் உங்களிடம் ஒப்படைக்கவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரசும், சமாஜ்வாடியும் முட்டுக்கட்டை போட்டதால்தான் அவற்றை அதிகாரத்தில் இருந்து மக்கள் அகற்றினர். எனவே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்.
இதில் ராகுல்காந்திக்கு முக்கியத்துவம் எதற்கு?... காங்கிரசுக்கு என்ன பலம் உள்ளது?... பிறகு ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். காங்கிரசை எதிர்ப்பதற்காக ராமர் கோவில் விவகாரத்தில் நாடகமாடினால் நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள். ராமர்கோவில் பா.ஜனதா அளித்த வாக்குறுதி’’ எனவும் சாம்னாவில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. #Ayodhyarally #Ramtemple #PMModi
சிவசேனா கட்சி எம்.பி.யும், அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ராவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கோ, உத்தரபிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கோ எந்த ஆர்வமும் இல்லை. அதற்கான அறிகுறியும் அவர்களிடம் தென்படவில்லை. எனவேதான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மோடி அரசு தாமதப்படுத்தி வருகிறது.
முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர முடியும் என்கிறபோது, அதே வழியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசால் ஏன் பிறப்பிக்க முடியாது?
அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் ஒருபோதும் தேர்தல் பிரசாரமாக வைக்கவில்லை. ஆனால் அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தவர்களிடம் கோவில் கட்டும் எண்ணம் இல்லை. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பெரிதும் உதவியது. எனவே அவசர சட்டம் பிறப்பிக்க தவறினால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆர்.எஸ்.எஸ். கவிழ்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ShivSena #SanjayRaut #RamTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்