search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96418"

    ராமர் கோவில் வாக்குறுதி பொய்யானால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 2 இடங்கள் தான் கிடைக்கும் என சிவசேனா தலைவர் எச்சரித்துள்ளார். #ShivSena #UddhavThackeray #RamTemple
    மும்பை:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை விரைவாக கட்டி முடிக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதே கோரிக்கையையே முன்வைக்கிறது.

    இந்நிலையில் ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் நடைபெற்ற சிவசேனா பொதுக்கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சேகரிக்கப்பட்ட செங்கற்கள் எல்லாம் உண்மையில் அதற்காக அல்ல. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்காகத் தான். ராமர் கோவில் கட்டுவதாக தேர்தலில் அளித்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 280 இடங்களில் வென்ற பா.ஜனதாவுக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெறும் 2 இடங்கள் தான் கிடைக்கும். 2019-ம் ஆண்டு தேர்தலுக்கான போர் இப்போதே தொடங்கிவிட்டது. 

    நாடாளுமன்ற தேர்தல் வேகமாக வந்துவிடும். அரசியல் சூழல் நாட்டில் சரிவை நோக்கி செல்கிறது. என்னுடைய கவலையெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி அல்ல, மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்துத் தான். 2014-ம் ஆண்டு பா.ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் பணவீக்கம் குறையவும் இல்லை, வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் மக்களிடம் சென்று, நரேந்திர மோடி அரசிடம் இருந்து ஏதாவது நல்ல திட்டங்களைப் பெற்றிருக்கிறீர்களா என்று கேட்க வேண்டும். 

    மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்க்க நான் செல்கிறேன். ஆனால் பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் பிசியாக இருக்கிறார். மகாராஷ்டிராவில் அடுத்த முதல்-மந்திரி சிவசேனா கட்சியில் இருந்து வர வேண்டும். இதை நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உறுதி செய்வேன். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக மாநில அரசு அறிவித்து உள்ளது. ஆனால் எப்போது மக்களுக்கு நிவாரணத் தொகையை அளிக்கப்போகிறது என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ShivSena #UddhavThackeray #RamTemple
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். #UddhavThackeray #BJP #ShivSena
    மும்பை:

    சிவசேனா கட்சி சார்பில் தசரா பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் அங்கு நடந்தது. கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து திரளாக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    தொண்டர்கள் மத்தியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் வீழ்ச்சி, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, இந்துத்துவா கொள்கை, அயோத்தி ராமர் கோவில் விவகாரம், பணம் மதிப்பிழப்பு விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய மற்றும் மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று மோடி கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து விட்டார். மோடி பிரதமரான பிறகு அயோத்திக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நான் நவம்பர் (அடுத்த மாதம்) 25-ந் தேதி அயோத்தி செல்கிறேன். அப்போது ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் தாமதம் ஏன்? என்று பிரதமரை கேள்வி கேட்பேன். நாங்கள் பிரதமருக்கு எதிரிகள் அல்ல. ஆனால் மக்களின் உணர்வில் விளையாட நாங்கள் விரும்பவில்லை.



    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பெற்ற வெற்றியை மோடி அலை என்று கூறி பெரிது படுத்தினார்கள். ஆனால், அதுபோன்ற அலை தற்போது நாட்டில் எங்கும் இல்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி வைக்காது. தேர்தலை சந்திக்க சிவசேனா தொண்டர்கள் தயாராக வேண்டும். டெல்லியில் நாங்கள் காவி கொடியை ஏற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டதுடன், தற்போது மத்திய, மராட்டிய அரசுகளில் அக்கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில் உத்தவ் தாக்கரேயின் பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #UddhavThackeray #BJP #ShivSena
    சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்க்கும் வகையில், பம்பை ஆற்றில் தற்கொலை போராட்டம் நடத்தப் போவதாக கேரளா சிவசேனா அறிவித்துள்ளது. #Sabarimala #KeralaSivsena
    திருவனந்தபுரம்:

    பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
     
    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று பக்தர்கள் கருத்து தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மறு சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. மேலும் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கமான வழக்குகளுடன் சேர்த்து சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்றும் இதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்க இயலாது என்றும் கூறிவிட்டது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளை கேரள அரசு தொடங்கியது. இது ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர்கள், மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்தனர்.



    வரும் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைந்துவிட வாய்ப்பு இருப்பதாக கருதிய பக்தர்கள் அதனை தடுக்க போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்க்கும் வகையில், பம்பை ஆற்றில் தற்கொலை போராட்டம் நடத்தப் போவதாக கேரளா சிவசேனா அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கேரளா சிவசேனாவை சேர்ந்த பெரிங்கமலா அஜி கூறுகையில், வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் எங்கள் பெண் உறுப்பினர்கள் பம்பை ஆற்றில் முற்றுகையிடுவர். எந்த பெண்ணாவது சபரிமலையில் நுழைந்தால் எங்கள் உறுப்பினர்கள் ஆற்றில் விழுந்து  தற்கொலை செய்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். #Sabarimala #KeralaSivsena
    சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டாவிட்டால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #BJP #AyodhyaRamTempleIssue
    மும்பை:

    பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா, சமீப காலங்களில் பாஜகவை தீவிரமாக சாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக தனது அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாஜக மத்தியிலும், உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சிக்கு வரும்போது அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டிவிடுவார்கள் என நம்பியதாகவும், ஆனால் ஒருவார்த்தை கூட தற்போது அதைப்பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    மேலும், ராமர் பாஜகவுக்கு நல்ல நாட்களை அளித்ததாகவும், ஆனால் இன்னும் ராமர் அயோத்தியில் இருந்து அன்னியமாகவே இருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என கூறும் பாஜக, அந்த வழக்கு எத்தனை ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது என உச்சநீதிமன்றத்தில் கேட்கவில்லை என கூறியுள்ளது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே போய்விட்டதாகவும், ஒருவேளை ராமர் கோவில் கட்டப்படவில்லை என்றால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் எனவும் சாமனா நாளிதழில் சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. #ShivSena #BJP #AyodhyaRamTempleIssue
    மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய கட்சியான சிவசேனா தனது சாமனா நாளிதழில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்தும், மகாராஷ்டிர மாநில அரசு குறித்தும் கடுமையாக சாடியுள்ளது. #UddhavThackeray #ShivSena #Saamana
    மும்பை:

    பிரதமர் மோடி, நிதிமந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் தலைமையில் நேற்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதிமந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோல் டீசல் மீதான வரியில் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதேபோல், பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில் சிவசேனா கட்சி கருத்து பதிவிட்டுள்ளது. அதில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மிகவும் தாமதமாக நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தினமும் 1 லட்சம் கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகை மக்களிடம் இருந்து அரசு கஜானாவுக்கு சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    அதேபோல், கடந்த புதன்கிழமை அன்று, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், அம்பேத்கருக்கும், சத்ரபதி சிவாஜிக்கும் சிலை வைப்பதற்காக மாநிலத்தையே அடகு வைப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ள சிவசேனா, அரசியல் வெற்றிக்காக விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் பலகோடி ரூபாய் பணத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.



    மேலும், அம்பேத்கர் உயிருடன் இருந்து இருந்தால், மாநிலத்தை அடகு வைப்பேன் எனக்கூறிய ஆளும் கட்சிக்கு எதிராக பிரம்பை கையில் எடுத்து இருப்பார் எனவும் சாமனாவில் சிவசேனா தெரிவித்துள்ளது.

    மேலும், மாநிலத்தின் கஜானா காலியாக இருக்கும் நிலையில், நினைவுச்சின்னங்கள் அமைக்கும் பணி நின்றுபோக நேர்வது நல்லது அல்ல என்றும், நினைவுச்சின்னங்களுக்கான மாநிலத்தை இப்போது நீங்கள் அடகுவைப்பதாக சொல்லும் நிலையில் அதை யார் மீட்பது? எனவும் சாமனா நாளிதழில் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. #UddhavThackeray #ShivSena #Saamana
    சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டித்து சிவசேனா முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. #Sabarimala #ShivSena
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்புக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து இன்று (1-ந் தேதி) கேரள மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்திருந்தது. 



    இந்த நிலையில், கேரளாவில் 7 மாவட்டங்களில் இன்று புயல் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், தங்களது முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில நிர்வாகிகள் கூறுகையில், முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர். #Sabarimala #ShivSena #SupremeCourt

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டித்து கேரளா முழுவதும் நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்புக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து நாளை (1-ந் தேதி) கேரள மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.

    இதுகுறித்து கேரள மாநில சிவசேனா தலைவர் புவனச்சந்திரன் கூறியதாவது-

    ஒவ்வொரு கோவிலுக்கும், ஒரு பழக்க வழக்கம் உள்ளது. அதேபோல் சபரிமலை கோவிலுக்கென உள்ள பாரம்பரிய பழக்கவழக்கங்களை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனை கண்டித்து இந்த கடை அடைப்பு போராட்டத்தை நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் அக்டோபர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. #ShivSena #Keralastrike
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்களுக்கு நிகராக அனைத்து வயதுடைய பெண்களும் வழிபட அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மகளிர் அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் அக்டோபர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் 12 மணிநேர முழு அடைப்புக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. #ShivSena #Keralastrike #SabarimalaTempleverdict
    மத்தியில் பாஜக ஆட்சியில் வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது இந்தியா என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நட்ந்து வருகிறது. அங்கு கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்து வருகிறது. ஆனாலும், இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு செயல்படும் விதத்தை சிவசேனா கடுமையாக தாக்கி வருகிறது.

    இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியில் இந்தியா வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கூறுகையில், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்து வருகிறது. தேசிய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலைப்படாமல் பிசியாக உள்ளார். 

    எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலையோ 100 ரூபாயை நெருங்குகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
      
    விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. உணவு பொருள்கள் , சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய திட்டங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என தெரிவித்துள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
    பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும், பா.ஜ.க மோடியின் புகழ் பாடுவது, ரோம் நகர் எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல் இருப்பதாக சிவசேனா குறிப்பிட்டுள்ளது. #Demonetisation
    மும்பை:

    சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு குறித்து தலையங்கத்தில் கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
     
    'கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 2016, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு இழப்பு  நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம், ஊழல் போன்றவை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியதற்கு மாறாகவே அனைத்தும் நடந்துள்ளது.

    மக்களுக்கு வெறுப்பையும், மோசமான அறிவுரைகளையும் செலுத்தி செயல்படுத்தப்பட்ட இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையைத் தேசப்பற்றுடன் கொண்டுவரப்பட்டது என்று கூற முடியாது. நாட்டில் பொருளாதார சர்வாதிகாரத்தை இது ஏற்படுத்திவிட்டது.

    சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் பணமதிப்பு இழப்பின் போது புழக்கத்தில் இருந்த செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.1.47 லட்சம் கோடியில், 99.30 சதவீதம் வங்கிக்குத் திரும்பி வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஏறக்குறைய ரூ.10 ஆயிரம் கோடி மட்டுமே வங்கிக்கு வரவில்லை.


    இதன்மூலம் மலையைத் தோண்டிப் பார்த்தும், ஒரு சுண்டெலிகூட வெளியேவரவில்லை என்பதுதான் தெளிவாகிறது. இந்தக் குறைவான தொகையை, பிடிப்பதற்காகத்தான் மத்திய அரசு பொருளாதாரத்தையே சிதைத்து இருக்கிறது.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவால், நாடு பொருளாதார குழப்பத்தைச் சந்தித்தது. சிறு, குறு தொழில்கள் அழிந்துபோகின. சேவைத்துறை மிகப்பெரிய சிக்கலில் சென்றது. கட்டுமானத்துறை ஆட்டம் கண்டன. சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான மக்கள் வங்கியின் வாசலிலும், ஏ.டி.எம் வரிசையிலும் நின்று மடிந்தனர்.

    அதுமட்டுமா, அதன்பின் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியின் வேகம் திடீரென சரிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது.

    பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியும், அதை நாடுமுழுவதும் பகிர்ந்து அளிக்க ரூ.2 ஆயிரம் கோடியும், ஏ.டி.எம் நெட்வொர்க்கை மேம்படுத்த ரூ.700 கோடியும் செலவு செய்துள்ளது.


    நாடு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை, இழப்பைச் சந்தித்தபோதிலும், மோடி அரசு தொடர்ந்து பெருமை பேசித்தான் வருகிறது. இந்த மனநிலையைப் பார்க்கும்போது, 'ரோம்நகரம் தீபற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்தது நினைவுக்கு வருகிறது'. பணமதிப்பு நீக்கம் என்பது கொடுமையான நடவடிக்கையாகும்.

    நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய நிலையில், அது கொள்ளையடிக்கப்பட்டபோது, அது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டார். அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டும்.

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது புரட்சிகரமான நடவடிக்கை. அதனால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்று நம்மிடம்  காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான கோடி கறுப்புப்பணம் அரசியல்வாதிகளால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது.

    குஜராத்தில் உள்ள இரு கூட்டுறவு வங்கிகளில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டன. பணமதிப்பு நீக்கம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே சில நாளேடுகள் இது குறித்து செய்தி வெளியிட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முட்டாள் என்று பட்டம் சூட்டியவர்களின் செயலின் உண்மை வெளிவந்துவிட்டது. பணமதிப்பு இழப்பு தோல்வி அடைந்த ஒன்று ரிசர்வ் வங்கி கூறிவிட்டது'. இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Demonetisation #BJP #ShivSena
    அஸ்தியை கரைப்பதில் அரசியல் சாயம் பூசி வாஜ்பாயை பா.ஜனதா சிறுமைப்படுத்துவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. #AtalBihariVajpayee #ShivSena
    மும்பை :

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா செய்துள்ளது.

    இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்தபின் உருவான அரசியல் வெற்றிடத்தை மோசமான மற்றும் பொருத்தமற்ற வழிகளில் நிரப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

    பா.ஜனதா கட்சியில் மூத்த தலைவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை. ஆனால் இறந்த மூத்த தலைவர்களின் அஸ்தி மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

    வாஜ்பாய் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளாலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக கருதப்பட்டார். இதனால் தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

    ஆனால் இறப்பிற்கு பின் அவரை சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது.



    அவர் அஸ்தி கரைக்கப்படும் நிகழ்ச்சி ஒரு கட்சியால் நடத்தப்படுவதாக இருக்க கூடாது. அனைத்து கட்சிகளும் உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்வாக அது நடந்திருக்கவேண்டும்.

    ஜவகர்லால் நேருவும், அடல்பிகாரி வாஜ்பாயும் அரசியல் வட்டத்திற்கு அப்பாற்பட்ட மிகப்பெரிய தலைவர்கள் ஆவர். ஆனால் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சிக்கு அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல.

    சில மந்திரிகளும், கட்சியின் பொறுப்பாளர்களும் வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை வாங்கிக்கொண்டு, உலக கோப்பையை வென்றது போன்ற உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

    எப்படி அவர்களால் மகிழ்ச்சியுடன் அவரின் அஸ்தியை வாங்க முடிகிறது? இது டி.வி. கேமராக்களில் பதிவாகிறது. சிலர் அந்த அஸ்தி கலசத்துடனேயே ‘செல்பி’ எடுத்து கொள்கின்றனர். இது வாஜ்பாயின் மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தின் முகமூடியற்ற வெளிப்பாடாகும்.

    வாஜ்பாயின் அஸ்தி அரசியலாக்கப்படுவதை கண்டு அவரின் குடும்பத்தினர் கூட வருத்தப்படுவார்கள். இது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இனி யாருக்கும் இதுபோல் நிகழக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #ShivSena
    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதன் மூலம் சிவசேனாவை வளைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். #Sivasena #UddhavThackeray #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இங்கு கூட்டணி கட்சியாக சிவசேனா கட்சி இருந்து வருகிறது.

    இதற்கிடையே, சிவசனோ தலைவர் உத்தவ் தாக்கரே தனது 58-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு கட்சி பிரமுகர்கள் மட்டுமின்றி தொண்டர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    உத்தவ் தாக்கரே டுவிட்டரில் இல்லாத போதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தது சிவசேனாவை 
    வளைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தாக்கரேயை சமரசம் செய்ய கடந்த வாரம் அமித்ஷா மும்பை சென்றார். மேலும், பாராளுமன்றத்தின் மக்களவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் சிவசேனா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Sivasena #UddhavThackeray #Congress #RahulGandhi
    ×