search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96418"

    முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதை விமர்சித்த ராஜ் தாக்கரேவுக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நவ்நிர்மண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தொழுகை நடத்த விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ளட்டும் எனவும் ராஜ் தாக்ரே கூறியிருந்தார்.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஃபரூக்கி, முஸ்லிம்கள் தங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுக்க ஸ்பீக்கர் உபயோகிப்பதை தவறு என நினைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் சடங்குகளையும் அவர் தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.



    இந்த நிலையில், ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ராஜ் தாக்கரேவின் இந்த கருத்து முற்றிலும் அரசியல் நோக்கமுடையது என விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில்  முதன்மை கட்சிகளில் ஒன்றாக இருக்கும் சிவசேனாவுடன் போட்டி போடுவதை வெளிக்காட்டவே ராஜ் தாக்கரே இவ்வாறு கூறியதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
    உத்தவ் தாக்கரே, 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேச மாநிலம் செல்கிறார். அப்போது சர்ச்சைக்குரிய அயோத்திக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசிக்கும் செல்கிறார்.
    மும்பை :

    கூட்டணி கட்சியாக விளங்கினாலும் பா.ஜனதாவை சிவசேனா தொடர்ந்து வசைப்பாடி வருகிறது. சமீபத்தில் சாம்னா பத்திரிகைக்கு உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், நேரடியாகவே மோடி தலைமையிலான மத்திய அரசையும், பட்னாவிசின் மாநில அரசையும் வம்புக்கு இழுத்தார். அதில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா தற்போதே அயோத்தியில் ராமர் கோவிலை கட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அயோத்தி பிரச்சினையை பா.ஜனதா கிளப்பும் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரே, 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேச மாநிலம் செல்கிறார். அப்போது சர்ச்சைக்குரிய அயோத்திக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசிக்கும் செல்கிறார். இந்த தகவலை உறுதிப்படுத்திய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் உத்தவ் தாக்கரே பூஜை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சிவசேனா போட்டியிட இருக்கிறது. எனவே கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் சர்ச்சைக்குரிய அயோத்திக்கு செல்வதால் உத்தவ் தாக்கரேயின் உத்தரபிரதேச பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சிவசேனா கட்சியின் நிறுவனரும், உத்தவ் தாக்கரேவின் தந்தையுமான மறைந்த பால் தாக்கரே முக்கிய அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது. 
    பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கான நிதியை அளிப்பது யார்? என பாராளுமன்றத்தில் சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivSena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் ஊழல் தடுப்பு மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த், பா.ஜ.க.வின் ஊழல் ஒழிப்பு கொள்கைக்கும், நடைமுறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் செய்த அதே தவறை நாமும் செய்ய வேண்டுமா எனவும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.

    பிரதமர் மோடி நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிக்குமான நிதியை வழங்குவது யார்? என கேள்வி எழுப்பிய எம்.பி அரவிந்த், ஒருவேளை அரசாங்கத்தின் நிதியில் இருந்து செலவு செய்யப்படுமானால், அது சரியா எனவும் வினவினார்.

    தொடர்ந்து பேசிய எம்.பி, தேர்தல் ஆணையம் அனுமதித்த அளவு தொகையினை மட்டும் பயன்படுத்தி தேர்தலில் வென்றோம் என தங்கள் மனதை தொட்டு எம்.பிக்கள் கூற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    மேலும், தேர்தலின்போது எம்.பிக்கள் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் அனுமதிக்கப்படாமல் இருப்பதுபோல், அனைத்து பிரதமர்களும் தேர்தலின்போது தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு எம்.பியாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் தெரிவித்துள்ளார். #ShivSena
    சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய உத்தவ் தாக்ரே, இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    மும்பை:

    பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பசுக்களை பாதுகாப்பதாக நடத்தப்படும் வன்முறையால் உயிர்கள் பலியாவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன, ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பாஜகவின் இந்துத்துவா கொள்கை போலியானது என்றும், இந்தியாவில் இந்துத்துவா கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



    தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே, நாங்கள் பசுக்களை பாதுகாக்க வேண்டாம் என கூறவில்லை எனவும், பசுக்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியதால், பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் யார் தேச விரோதி என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது எனவும், மிகவும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததாகவும், ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியைப் போலவே இப்போதும் ஆட்சி நடப்பதாகவும் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு பதிலாக மனிதர்களை கொன்று வருகின்றனர் என சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #Sivasena #BJP #Modi
    மும்பை:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சி புறக்கணித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு பதிலாக மனிதர்களை கொன்று வருகின்றனர் என சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில், “நாட்டில் ஆட்சி செய்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் விலங்குகளை கொல்வதில்லை. அதற்கு மாறாக, மனிதர்களை கொன்று வருகின்றனர்.

    எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறுவதும், ஆட்சியில் நீடிப்பதும் ஜனநாயகம் அல்ல. பெரும்பான்மை என்பது எப்போதும் நிரந்தரமல்ல. நாட்டு மக்களே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் மோடி அரசை பதவியில் இருந்து கீழே இறக்க முடியாது.  ஒரு வெற்றியில் சந்தேகம் இருந்தால் பெரும்பான்மை பற்றி பேசக்கூடாது. பணம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தல் ஆகியவற்றின் மூலம் வெற்றி அடைவது வெற்றியாகாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sivasena #BJP #Modi
    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியினர் புறக்கணித்துள்ளனர். #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை விவாதம் நடத்த அனுமதி அளித்தார். 

    அதன்படி, பாராளுமன்றத்தில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. 

    முன்னதாக, இந்த விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. #ParlimentMonsoonSession #NoConfidenceMotion #ShivSena
    மும்பை:

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. 

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் எனகேட்டுக் கொண்டதாக தெரிகிறது.



    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு  எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக சிவசேனா எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ParlimentMonsoonSession #NoConfidenceMotion #ShivSena
    ராம ராஜ்ஜியம் எனக்கூறி பாஜக அரசியல் செய்து வருவதாகவும், தன் பெயரைச் சொல்லி அரசியல் செய்யுமாறு ராமர் கூறவில்லை எனவும் பாஜகவை சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. #ShivSena #BJP
    மும்பை:

    சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த சுரேந்திர சிங், நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை ராமராலும் கூட தடுக்க முடியாது எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது.

    இந்நிலையில், இதுதொடர்பாக சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நாட்டில் பாஜக எவ்வாறு ராம ராஜ்ஜியம் அமைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்காமல், ராமராலும் கூட இதனை தடுக்க முடியாது என பாஜக கூறி வருவதாக விமர்சித்துள்ளது. இதையடுத்து, பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடும், இப்போது மற்றொரு நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

    நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் மீதான கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் மாறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கைமீறிப்போனதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

    இதுபோன்ற நிலையில் ராம ராஜ்ஜியம் எவ்வாறு அமைக்கப்படும்? அதற்கான திட்டங்கள் குறித்து பாஜக விளக்க வேண்டும் எனவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

    ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனக்கூறி பாஜக அரசியல் செய்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமர் கூறவில்லை எனவும் சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #BJP
    டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடையூறுகள் தராமல் அவரை வேலை செய்ய விடுமாறு மத்திய அரசுக்கு சிவசேனா இன்று அறிவுறுத்தியுள்ளது. #ShivSena #ArvindKejriwal
    மும்பை:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்றும், மந்திரி சபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது.

    இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டது. அதில், டெல்லியின் ஆம் ஆத்மியின் ஆட்சி முறையாக இல்லையென்றால் ஆட்சியை கலைத்து விடுங்கள் என்றும், அதற்கு பதிலாக பணி செய்ய விடாமல் தடுக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், டெல்லியில், துணை நிலை ஆளுநருக்கும், முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே போட்டி இல்லை என்றும், பிரதமர் மோடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, இனியாவது டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது பணியை செய்யவிடுமாறு சாமனா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #ArvindKejriwal
    பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    மும்பை:

    நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தபட்ட நாளை கருப்பு தினமாக அனுசரித்த பாஜகவினர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடியும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

    இந்நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் இருந்த நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 

    இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாமனாவில் உள்ள தலையங்கத்தில் கூறியதாவது:



    பிரதமர் மோடியும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற எமர்ஜென்சி குறித்து அவர்கள் இப்போது பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. 

    ஜனநாயக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் பரவாயில்லை, ராஜாக்கள் வாழ்ந்தால் போதும். நமது ராணுவ வீரர்களும் விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஜவான், ஜெய் கிசான் ( ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கமும் செத்துக் கொண்டிருக்கிறது.

    மக்கள் எதிர்ப்பை மீறி ரத்னகிரி பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திறப்பது புற்றுநோய் மருத்துவமனையை திறப்பதற்கு சமமாகும் என தெரிவித்துள்ளது. #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, தேர்தல் அரசியலை பா.ஜ.க கையில் எடுத்துள்ளதாக சிவசேனா சாடியுள்ளது. #ShivsenaslamsBJP
    மும்பை:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க அமைத்து இருந்த கூட்டணியை சமீபத்தில் முறித்துவிட்டு ஆட்சியை கவிழ்த்தது. இதன்மூலம் தற்போது ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்று தொண்டர்களிடையே உரை நிகழ்த்தினார்.

    இதுதொடர்பாக பேசிய சிவசேனா, 2014-ல் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க தான் தாமாக முன்வந்து கூட்டணி அமைத்ததாகவும், இப்போது அந்த முகமூடியை கலைத்துவிட்டு, தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.



    பா.ஜ.க.வின் இதுபோன்ற சதிவேலைகளால் மக்கள் சோர்ந்து விட்டதாகவும், உண்மையை பேச யாராவது பா.ஜ.க.வுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சிவசேனா சாடியுள்ளது.

    ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சிகள் இல்லை என்றும் பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாகவும் கூறும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை? 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது எந்தப் பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்காமல், மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, தற்போது கூட்டணியை முறித்தபின் குற்றம் சாட்டுகிறது’ என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. #ShivsenaslamsBJP
    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார். #Mumbai #Sivasena #UddhavThackery #PMModi
    மும்பை:

    மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசில் சிவசேனா கூட்டணி வகித்தாலும், பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என குற்றம் சாட்டி பேசினார்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் சிவசேனா கட்சியின் 52-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

    கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது, பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களை ஆட்சியில் அமரவைத்து ஏமாற்றம் அடைந்து விட்டனர்.

    இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் பங்களாவிற்கு அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டு ஒன்றை கண்டதாக சில நிருபர்கள் செய்தி வெளியிட்டனர். அனேகமாக பிரதமர் மோடி தற்போது வேற்று கிரகங்களுக்கு தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக வெளியேறி உள்ளது. அந்த ஆட்சி பயனற்றது என கண்டறிய பா.ஜனதாவுக்கு 3 ஆண்டுகளும், 600 ராணுவ வீரர்களின் உயிரும் தேவைப்பட்டதா?

    பயங்கரவாதத்துக்கு மதத்துடன் சம்பந்தம் இல்லை என்றால், ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் நீங்கள் ஏன் போர் நிறுத்தம் அறிவித்தீர்கள்? விநாயகர் சதுர்த்தி அல்லது தசரா விழாக்களின் போது, பாகிஸ்தான் இதேபோன்ற கொள்கையை பின்பற்றுகிறதா? என குற்றம் சாட்டி பேசினார். #Mumbai #Sivasena #UddhavThackery #PMModi
    ×