search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96424"

    உணவகங்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. விதவிதமான உணவுகளை ருசிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
    இன்று, உணவகங்களில் வித விதமாக ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. எவ்வளவுதான் பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து சுவைத்தாலும், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது தனிக் கொண்டாட்டம் தான்.

    விதவிதமான உணவுகளை ருசிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்:

    * தரமான உணவகங்கள் பற்றி தெரிந்துவைத்துக்கொண்டு, அதை தேடிச் செல்லுங்கள்.

    * ஷாப்பிங் முடிந்த கையோடு அருகில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டலுக்கு சென்று அவசரமாக சாப்பிட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள். உணவின் தரம் முக்கியம்.

    * பெரிய ஓட்டல்களில் உணவருந்த ஆசைப்பட்டால் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் மூலம் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். எரிச்சல் இன்றி சந்தோஷமாக சாப்பிடவும் வழி ஏற்படும்.

    * முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் அந்த உணவகத்தை அடைய முடியாவிட்டால், உங்கள் இடம் வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடும். அதனால் கூச்சல் போடாதீர்கள். ஏன்என்றால் சாப்பிடும் முன்பு மனதை சாந்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கோபத்தோடும், எரிச்சலோடும் சாப்பிடும் உணவு சரியாக செரிப்பதில்லை. பொது இடங்களில் நாகரிகமாகவும் நடந்துகொள்ள தெரிந்துகொள்ளவேண்டும்.

    * முன்பதிவு செய்ததைவிட அதிகமான நபர்களை அழைத்துச்செல்லவேண்டாம். வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றுவிட்டால், அதை முன்கூட்டியே உணவகத்திற்கு தெரியப் படுத்திவிடுங்கள்.



    * உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நட்போடு பழகுங்கள். அவர்களும் உங்களைப் போன்றவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மரியாதையும், மதிப்பும் அவர்களுக்கு கொடுங்கள்.

    * நிதானமாக, யோசித்து ஆர்டர் கொடுங்கள். ஆர்டர் செய்துவிட்டு, பின்பு மாற்றாதீர்கள்.

    * மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் எப்படி சாப்பிடுவது என்று, உங்களோடு வரும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். எந்தெந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். தானே சாப்பிட பழக்குங்கள். குழந்தைகளின் அறிவு வளர்ச்சியடைந்து விட்டது என்பதை குறிக்கும் செயல் தானே எடுத்து சிந்தாமல் சாப்பிடுவது. மனவளர்ச்சி குன்றியவர்களால் அப்படி சரியாக சாப்பிட முடியாததை கவனித்திருப்பீர்கள்.

    * பரிமாறும் சர்வருக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பது இப்போது அங்கீ கரிக்கப்பட்ட விஷயம்போல் ஆகிவிட்டதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    * ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் அதை மென்மையாக எடுத்துக் கூறுங்கள். நாம் பணம் கொடுக்கிறோம் என்ற கர்வத்தில் வார்த்தைகளை சிந்திவிடாதீர்கள்.

    * பலரோடு உணவகத்திற்கு செல்லும் போது அவரவருக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யும்படி கூறுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு ஆர்டர் கொடுக்க வேண்டாம். அது அவர்களை உபசரிப்பதாகாது.

    * சாப்பிடுவதற்கு பொறுமையும், நிதானமும் அவசியம். போதுமான நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சாப்பிட்டு முடித்துவிட்டு வெகு நேரம் அமர்ந்து அரட்டையடிப்பது சரியான பழக்கம் அல்ல. சத்தமில்லாமல் சாப்பிடுவது நல்லது. உணவை வீணாக்காமல் ருசிப்பது மிக நல்லது. 
    ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து மையம் குழந்தைகள் சாப்பிடும் உணவில் இருக்கும் பூச்சி கொல்லி மருந்து அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
    ஐதராபாத்:

    அமெரிக்கா, ஐரோப்பியா நாட்டு குழந்தைகள் சாப்பிடும் உணவை விட ஐதராபாத் குழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீதம் அதிக பூச்சி கொல்லி மருந்து இருப்பது தெரியவந்தது.

    6 வயது முதல் 15 வயது வரை உள்ள 188 சிறுவர்கள், 188 சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டது. மேலும் குழந்தைகள் சாப்பிடும் 40 வகையான உணவு பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    சிறுவர்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் சிறுநீரில் சராசரியாக 4.1 மைக்ரோமொல் வளர்ச்சிதை மாற்றத்துக்கான அளவு இருந்தது.

    இந்த அளவு அமெரிக்க குழந்தைகளுக்கு 0.101 அளவாக உள்ளது. சிறுவர்களை விட சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகளில்தான் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து இருந்தது.

    ஏனென்றால் அந்த வயதில் சிறுமிகள் சிறுவர்களை விட அதிக பழங்கள் சாப்பிடுவது தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதிக விளைச்சலுக்காக ரசாயன பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பழங்கள், காய் கறிகளில் ரசாயன தன்மை படிந்து விடுகிறது.
    ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
    மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.

    அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை ஆறு மணிக்கு காபி அல்லது டீ, எட்டு மணிக்கு இரண்டு இட்லி, பத்து மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, நான்கு மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை ஆறு மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.

    சிலர் வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்குப் பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது.

    சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம். பொதுவாக முப்பது வயதைக் கடந்துவிட்டாலே சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.

    நம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, விடிகிற பொழுது நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
    மத்தியபிரதேச மாநிலத்தில் எலிகள் இறந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்காக சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு நாளும் மதியம் ஊட்டச்சத்து உணவு தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் சாகர் மாவட்டத்தில் உள்ள செம்ராபக் என்ற கிராமத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த உணவுக்குள் 4 எலிகள் செத்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதற்குள் சில குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டு விட்டது. அவர்கள் அதை சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பாட்டுக்குள் எலி செத்து கிடந்தது தெரிந்ததும் அந்த குழந்தைகளுக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.

    அவர்களில் 5 பேர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் துணை கலெக்டர் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சமையல் ஊழியர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.#tamilnews
    உங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    உங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் இரவில் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராது. அதனால் இரவில் நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!

    * இரவில் பால் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் தூங்க செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பாலில் இருக்கும் லாக்டோஸ் செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தும். அதனால் ஆழ்ந்த தூக்கம் தடைப்பட்டு போகும்.

    * இரவில் சாப்பிட்ட பின்பு சாக்லேட் சுவைக்க நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் அதில் கலந்திருக்கும் இனிப்பு சுவையும், காபினும் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஏதாவது முக்கியமான வேலை பார்ப்பதாக இருந்தாலும் சாக்லேட் சாப்பிடக்கூடாது. அது மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் தடை போட்டுவிடும்.

    * இரவில் பீட்சா உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதில் அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கலந்திருக்கும். அவை செரிமானம் ஆகாமல் வயிற்றுக்குள் நீண்ட நேரம் தொந்தரவை ஏற்படுத்தும்.

    * இரவு சாப்பிட்ட பிறகு பழ ஜூஸ் அருந்துவதும் கூடாது. இரவில் 9 மணிக்கு பிறகு பழ ஜூஸ் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினை ஏற்படக்கூடும். இதயத்திற்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

    * இரவில் சோடா போன்ற பானங்களை பருகவேண்டாம். அதில் வாயுக்கள் கலந்திருக்கும். அவை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். அதனால் செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு தூக்கம் தள்ளிப்போகும். 
    பாஸ்தாவை சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை.
    'பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்டு, சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து உள்பட எந்தச் சத்துமே இல்லை என்பதால், உடலுக்கு எந்த நன்மையும் கிடையாது.

    பாஸ்தாவில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மைகொண்டது. இது, பெரும்பாலானவர்களுக்கு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுத்தும். பாஸ்தா ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், ஆரோக்கியமானது அல்ல.



    நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவைத் தவிர்த்து, கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி போன்ற முழுதானிய மாவில் இருந்தும் பாஸ்தா தயாரிக்கப்படுகிறது. எந்த மாவில் இருந்து பாஸ்தா தயாரிக்கப்படுகிறதோ, அதைப் பொறுத்து சத்துக்கள் மாறுபடும். முழு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாஸ்தாவாக இருந்தால், அதில் வைட்டமின்கள், மக்னீஷியம், இரும்பு, கால்சியம், மாங்கனீஷ் உள்ளிட்ட தாது உப்புக்கள், நார்ச் சத்து போன்றவை இயற்கையாகவே இருக்கும்.

    கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது. இதைச் சாப்பிடும்போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த வகை பாஸ்தாக்கள், பி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்டது.



    இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு என்பது மிகவும் மெதுவாக இருக்கும். பாஸ்தாவுடன் அதிக அளவில் காய்கறிகள் சேர்க்கப்பட்டு சமைக்கப்படும்போது, அதன் பலன்களும் கூடும். எனவே, கடைசியில் பாஸ்தா வாங்கும்போது அது முழு தானியங்களால் தயாரிக்கப்பட்டதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும்.

    * இரண்டு வயது முதல் 70 வயதினர் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

    * செரிமானம் குறைபாடு உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

    * சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்த்து, பாஸ்தாவுக்குப் பதில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது'

    'நூடுல்ஸ் வகை உணவுகளைச் செய்வதுபோன்றே பாஸ்தாவையும் தயாரிக்கலாம். சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை.'
    ×