search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96460"

    கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 51).

    இவர் வேலாண்டிபாளையத்தில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். வீரகேரளத்தை சேர்ந்த பத்மநாபன்(42) என்பவர் அடிக்கடி கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து கடன் பெற்ற வகையில் சரவணகுமார் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர் நாகராஜ்(43) ஆகியோருடன் நெருங்கி பழகினார்.

    இதனடிப்படையில் பத்மநாபனுக்கு சரவணகுமார் கடனுதவி செய்தார். ஆனால் பத்மநாபன் ஒழுங்காக பணத்தை திருப்பி கொடுக்காததால் உதவி செய்வதை சரவணகுமார் நிறுத்தினார். எனவே அவர் மீது பத்மநாபனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சரவணகுமாரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அவரை கடத்தி மிரட்டினால் எளிதில் பணம் கொடுத்து விடுவார் என்றும் பத்மநாபனிடம் நாகராஜ் ஆசைகாட்டினார். அதன்படி சரவணகுமாரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டிய பத்மநாபன் தனது நண்பரான ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் விஷ்ணுகுமாரின் உதவியை நாடினார். அவர் தனது கூட்டாளிகளான பாலன், கணபதியை சேர்ந்த அய்யப்பன், போத்தனூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் இந்த திட்டத்துக்கு சேர்த்துக் கொண்டார்.

    அதன்படி கடந்த 27.07.2016 அன்று சாய்பாபாகாலனியில் நடந்து சென்ற சரவணகுமாரை பத்மநாபன் உள்பட 6 பேரும் சேர்ந்து காரில் கடத்திக் கொண்டு ஆனைக்கட்டிக்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் தங்க வைத்து சரவணகுமாரை ஒரு பெண்ணுடன் சேர்த்து படம் எடுத்துள்ளனர். அந்த படத்தை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டினர். பயந்து போன சரவணகுமார் என்னிடம் ரூ.25 லட்சம் தான் உள்ளது எனக் கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார். இதனால் அவரை விடுவித்தனர்.

    அதன்பின்னரும் பத்மநாபன் அடிக்கடி சரவணகுமாரிடம் பணம் கேட்டார். தரமறுத்தால் பெண்ணுடன் சேர்த்து எடுக்கப்பட்ட உனது ஆபாச படத்தை வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதனால் சரவணகுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 7 மணி அளவில் கருணாநிதி நகர் பகுதியில் சரவணகுமார் சென்ற போது அவரை பத்மநாபன் வழி மறித்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் மனமுடைந்த சரவணகுமார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார், கார்த்திகேயன், அய்யப்பன், பாலா ஆகிய 6 பேர் மீதும் கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பாலா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திகேயன், அய்யப்பன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    வேலூரில் சென்னை ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி ரூ.26 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    சென்னை வடபழனியை சேர்ந்தவர் வில்சன் விமல் (வயது 44). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவரை கடந்த மாதம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் தங்களை விக்னேஷ், தமிழ்செல்வன் என அறிமுகப்படுத்தி, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நிலம் விற்பனைக்கு உள்ளது, அதனை நேரில் பார்க்க வரும்படி கூறினர்.

    இதையடுத்து வில்சன்விமல் நிலத்தை வாங்க ரூ.5 லட்சத்துடன் கடந்த மாதம் தனது காரில் வேலூருக்கு வந்தார். விக்னேஷ், தமிழ்செல்வன் மற்றும் நண்பர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் வில்சன்விமலை தங்கள் காரில் அழைத்து சென்று சில இடங்களை காண்பித்தனர்.

    பின்னர் 6 பேரும் சேர்ந்து வில்சன்விமலை தாக்கி கண்களை கட்டி காரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு கடத்தினர். அங்கு வைத்து ரூ.26 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து கொண்டனர். இதுதொடர்பாக வில்சன்விமல் அளித்த புகாரில் வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்தார். 2 தனிப்படை போலீசார் பெருந்துறையில் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் வாணியமபாடியை சேர்ந்த சீனிவாசன் (44), கரூரை சேர்ந்த விக்னேஷ் என்ற விஷ்வா (31) ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    களம்பூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    களம்பூரை அடுத்த கீழ்பட்டு பகுதியில் ஆற்று மண் மற்றும் சூளைமண் கடத்தி வருவதாக களம்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது வம்பலூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 37) என்பவர் மனி வேனில் மணல் கடத்தி கொண்டு வந்தார். இதனையடுத்து போலீசார் தேவராஜை கைது செய்து, மினிவேனை பறிமுதல் செய்தனர்.

    சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், மது மற்றும் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைசாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வந்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துபிள்ளை மனைவி ராஜம் (வயது 45), அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சத்யா (31) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், வெளிப்பாளையம், தெற்கு நல்லியான்தோட்டம், செல்லூர், கீழ்வேளூர், மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயிரத்து 925 லிட்டர் சாராயமும், 481 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
    கும்பகோணம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KumbakonamMurder #CollegeStudentMurder
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சாகுல்ஹமீது வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவனியாபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள் என்று மிரட்டி உள்ளார்.

    பின்னர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மும்தாஜ்பேகம் உடனடியாக உறவினர்களை அழைத்து கொண்டு திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து போலீசார் முன்தசீரின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அந்த அழைப்பு எங்கிருந்து பேசப்பட்டது என்று செல்போன் டவரை வைத்து போலீசார் ஆய்வு செய்து முன்தசீரை தேடி வந்தனர்.


    இந்த நிலையில் இன்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையோரம் கழுத்து அறுத்து முன்தசீர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த அவரது தாய், உறவினர்கள் மற்றும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த முன்தசீரின் உடலை பார்வையிட்டனர். கொலையாளிகள் பற்றிய தடயங்கள் கிடக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

    முன்தசீரின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் முன்தசீரின் நண்பர்களிடமும் அவருக்கு யாரேனும் விரோதிகள் இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகின்றனர். மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #KumbakonamMurder #CollegeStudentMurder

    பவானி அருகே காதலி கண் முன்பு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட காதலனை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சித்தோட்டை அடுத்து நசியனூர் அருகே உள்ள கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் சிவானந்தம் (23). பொறியியல் கல்வி படித்துள்ள இவர் நசியனூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    அதே நிறுவனத்தில் பவானியை அடுத்த ஒரிச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்த மணியன் மகள் பூர்ணிமா (21) வேலை செய்து வந்தார். ஒரே நிறுவனத்தில் இருவரும் வேலை செய்ததால் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

    கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து இருவரின் வீட்டிலும் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு இருந்த போதிலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பச்சையம்மன் கோவிலில் பூர்ணிமாவின் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சிவானந்தனுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

    பின்னர் இருவரும் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பவானி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    ஒரு வழிப்பாதையில் கார் சென்று கொண்டிருந்த போது பவானி தலைமை தபால் நிலையம் அருகே காரை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த மணமகன் சிவானந்தனை அடித்து, இழுத்துச் சென்று மற்றொரு காரில் கடத்திச் சென்றது.

    இதை தடுக்க முயன்ற பூர்ணிமாவை கீழே தள்ளிய கும்பல் மிரட்டி விட்டு சென்றது. இதைக்கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன் பிறகு உறவினர்கள் அனைவரும் பவானி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். இது தொடர்பாக மணமகள் பூர்ணிமா பவானி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    அதில் தானும் சிவானந்தமும் திருமணம் செய்து கொண்டு திருமணத்தை பதிவு செய்ய எனது சகோதரர் பிரபு, அண்ணி பிரியா, பெரியம்மா கருப்பாயி மற்றும் கணவரின் நண்பர் சதீஷ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தோம்.

    தபால் நிலையம் அருகே சென்றபோது 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரில் வந்த சுமார் 20 பேர் காரை வழிமறித்து எனது கணவரை கடத்திச் சென்றனர்.

    நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் முருகேசன், சண்முகசுந்தரம், பிரகாஷ், புவனேஷ், அருண், சுரேஷ், ரமேஷ், ஜீவா, கோகுல், நந்தகுமார், கவின், மணிகண்டன் மற்றும் பெயர் தெரியாத 2 பேர் சேர்ந்து காரிலிருந்து வெளியே தர தரவென இழுத்து உதைத்து எனது கணவரை கடத்திச் சென்றனர்.

    இதனை தடுக்க முயன்றும் முடியவில்லை. எனவே, எனது கணவரை மீட்டுத்தர வேண்டும். எனக்கும் எனது கணவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட கூறப்படும் சிவானந்தம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அவர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அவர் உண்மையில் கடத்தப்பட்டாரா? நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. பூர்ணிமாவிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    மதுரை அருகே என்ஜினீயரிங் மாணவியை கடத்தியதாக காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள பரவை பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவரது மகள் கிருத்திகா (30). என்ஜினீயரிங் மாணவியான கிருத்திகா. கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கிருத்திகாவை அவரது காதலன் நவீன்குமார் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் செந்தமிழ்செல்வன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவி கிருத்திகா மற்றும் நவீன்குமாரை தேடி வருகிறார். #tamilnews
    ரூ.90 லட்சம் பணத்துக்காக தனது மனைவி கடத்தப்பட்டதாக பவர் ஸ்டார் சீனிவாசனின் போலீசில் புகார் அளித்த நிலையில், ஊட்டியில் வைத்து ஜூலியை போலீசார் மீட்டனர். #PowerStarSrinivasan #Julie
    சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் பவர்ஸ்டார் சீனிவாசன். ‘லத்திகா’, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 6-ந்தேதி பவர்ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் மனைவியிடம் கூறாமல் ஊட்டி சென்றதாகவும், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மனைவி ஜூலி கையெழுத்து போட வேண்டியிருந்ததால் அவரையும் ஊட்டிக்கு வரும்படி அழைத்து சென்றதும் தெரியவந்தது.

    ஜூலி போலீசுக்கு தெரிவிக்காமலேயே ஊட்டிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டபோது ஊட்டியில் நிலம் பத்திரப்பதிவு முடித்து விட்டு சென்னை திரும்பி விடுவதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசனின் மகள் வைஷ்ணவி, தனது தந்தை - தாய் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர்களை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    ஆனால் போலீசார், வைஷ்ணவி பள்ளி மாணவி. அவருக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று சென்னை திரும்பினார். ஆனால் அவரது மனைவி ஜூலி ஊட்டியிலேயே தங்கியிருந்தார்.



    சில வேலைகள் இருப்பதாகவும் வேலை முடிந்ததும் சென்னை வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதனால் பவர்ஸ்டார் சீனிவாசன் பற்றிய பரபரப்பு முடிந்துவிட்டதாக கருதப்பட்டது.

    ஆனால் சென்னை திரும்பியது தொடர்பாகவும், மனைவி ஊட்டியில் இருப்பது தொடர்பாகவும் வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் உடனே போலீஸ் நிலையத்துக்கு வந்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே இதில் மர்மம் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பவர்ஸ்டார் சீனிவாசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3-ந் தேதி சினிமா மக்கள் தொடர்பு அதிகாரி பிரித்தி என்னை தொடர்பு கொண்டு புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக தங்களிடம் பேச வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கோவையில் இருப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து நான் தயாரிப்பாளரை சந்திப்பதற்காக 5-ந் தேதி கோவை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றேன். அப்போது நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு திடீரென வந்த பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஆலம் மற்றும் 9 பேர் கும்பல் நீ கொடுக்க வேண்டிய 90 லட்சம் ரூபாய் பணத்திற்காக ஊட்டியில் உள்ள உன்னுடைய வீட்டை உடனடியாக எனக்கு பத்திரம் செய்து கொடு என்று கூறி என்னை மிரட்டினர். 6-ந் தேதி என்னை காரில் வைத்து ஊட்டிக்கு அழைத்து சென்றனர்.



    உன் மனைவி ஜூலியை போனில் தொடர்பு கொண்டு உடனே ஊட்டிக்கு வரச் சொல் என்றும் கூறினார்கள். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரால் தனியாக வர இயலாது என்று கூறினேன். அவரை கோயம்பேடு பேருந்து நிலையம் வரச் சொல்லி காரில் ஊட்டிக்கு கடத்தி வந்து ஓட்டல் அறையில் அடைத்து சிறைவைத்து உள்ளனர்.

    நான் என்னுடைய பிள்ளைகளை பார்ப்பதற்காக நேற்று சென்னை திரும்பி வந்தேன். கடத்தி வைக்கப்பட்டுள்ள என் மனைவி ஜூலியை பத்திரமாக மீட்டு பிரித்தி, ஆலம், செல்வின் மற்றும் 8 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர் உத்தரவின் பேரில் கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர் தலைமையில் ஜூலியை மீட்க தனிப்படை போலீசார் ஊட்டிக்கு விரைந்தனர். அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்து ஜூலியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

    இந்த நிலையில் ஊட்டியில் சிறைவைக்கப்பட்ட ஜூலியை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். #PowerStarSrinivasan #Julie

    மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று வீடு திரும்பினார். #PowerStarSrinivasan
    பூந்தமல்லி:

    சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி. இவர் கடந்த 6-ந் தேதி தனது கணவரை (பவர்ஸ்டார் சீனிவாசன்) காணவில்லை என்று அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியிடம் கூறாமல் ஊட்டி சென்றிருப்பதும், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய தனது மனைவி ஜூலியின் கையெழுத்து போட வேண்டி இருந்ததால் அவரையும் ஊட்டிக்கு வரும்படி அழைத்துள்ளதும் தெரியவந்தது.

    ஆனால் புகார் கொடுத்த ஜூலி, தனது கணவர் ஊட்டியில் இருப்பதை போலீசாரிடம் தெரிவிக்காமல் ஊட்டிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் செல்போனில் தொடர்புகொண்டபோது, ஊட்டியில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்து விடுவதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதற்கிடையே பவர்ஸ்டார் சீனிவாசன் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.



    இந்த நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று ஊட்டியில் இருந்து தனது மனைவியுடன் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். தான் சென்னை வந்துவிட்டது குறித்து அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் விசாரணை செய்தபோது நிலம் பத்திரப்பதிவு தொடர்பாக ஊட்டி சென்றதாக தெரிவித்தார். அவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எதும் வரவில்லை. அவரும் தான் கடத்தப்பட்டதாக கூறவில்லை.

    தற்போது பவர்ஸ்டார் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டதால் அவரது மனைவி கொடுத்த புகாரின் மீதான நடவடிக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ஆனாலும் பவர்ஸ்டார் சீனிவாசன், தனது மனைவியிடமே கூறாமல் ஊட்டிக்கு சென்று நிலம் பத்திரப்பதிவு செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான முழு தகவல்களை அவர் எங்களிடம் தெரிவித்தால் மட்டுமே என்ன நடந்தது? என்பது தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். #PowerStarSrinivasan
    நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டு ஊட்டியில் இருப்பதாக தகவல் கூறப்பட்ட நிலையில், தனது அப்பா கடத்தப்பட்டதாக சீனிவாசனின் மகள் தெரிவித்துள்ளார். #PowerStarSrinivasan
    நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 5-ந்தேதி மாயமானார். இது தொடர்பாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

    அதில், “நண்பரை பார்க்க சென்ற எனது கணவர் திரும்பவில்லை. மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை அவர்கள் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்” என்று கூறி இருந்தார்.

    இதனால் பவர்ஸ்டார் சீனிவாசனை மர்ம கும்பல் கடத்தி சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுவதாக தகவல் வெளியானது.

    பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே மோசடி புகார்கள் உள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகி இருந்தார்.

    இதற்கிடையே பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பவர்ஸ்டார் சீனிவாசனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசும்போது ஊட்டியில் இருப்பதாக தெரிவித்தார். அங்குள்ள பங்களாவை விற்பனை செய்வது தொடர்பாக அவர் சென்றுள்ளார். அவர் ஊட்டியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளதால் பொறுமையாக இருக்கிறோம் என்றனர்.



    படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பவர்ஸ்டார் சீனிவாசன் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். தேனியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

    தேனியில் பலர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார்கள். இதுபோன்ற கந்துவட்டி கும்பலிடம் பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் அவரை அக்கும்பல் கடத்தி சென்றுவிட்டதாகவும் ஊட்டியில் உள்ள பங்களாவை தங்களது பெயருக்கு மாற்றி தரும்படி மிரட்டி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனின் மகள் வைஷ்ணவி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    5-ந்தேதி காலை எனது தந்தையை போலீஸ்காரர்கள் என்று கூறி சிலர் ஒரு ஓட்டலுக்கு கூட்டி சென்றதாக டிரைவர் எனது தாயிடம் கூறினார்.

    உடனே அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாலை தந்தை செல்போனில் தொடர்பு கொண்டு எனது அம்மாவை ஒரு மருத்துவமனை அருகே வரச்சொன்னார். அங்கு சென்ற எனது அம்மாவிடம் சிலர் சொத்து விபரங்களை வாய்ஸ் ரெக்கார்டிங் செய்துவிட்டு இரவு 9 மணி அளவில் தந்தையை அனுப்புவதாக கூறி உள்ளனர்.

    ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை தந்தையை ஊட்டிக்கு அழைத்து செல்வதாக கூறி அம்மாவிடம் கூறி உள்ளனர். அவரை அங்கு வரசொல்லி விமான பயண டிக்கெட் போட்டு கொடுத்தனர்.



    அங்கு சென்ற அம்மாவும் தந்தையும் என்னிடம் மிகவும் பயத்துடனும், பதட்டத்துடனும் பேசினர்.

    பெங்களூரில் உள்ள ஒருவரிடம் தந்தை கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக அவர்கள் தந்தையை கடத்தி இருக்கலாம் என போலீசில் புகார் அளித்தோம்.

    அப்போது போலீசார் இரவு ஊட்டி செல்லலாம் என்று கூறினார்கள். ஆனால் அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PowerStarSrinivasan

    திருக்காட்டுப்பள்ளி அருகே காண்டிராக்டரை காரில் கடத்திய மர்ம கும்பல் அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வடக்குவாடி தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல் (வயது 45). கட்டிட காண்டிராக்டர். இவர் கடந்த 5-ந்தேதி திருச்சி சென்று கடப்பா கல் வாங்கி கொண்டு வேனில் கல்லணையை அடுத்த கச்சமங்கலம் பிரிவு சாலையில் வந்துள்ளார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் கந்தவேல் சென்ற வேனை மறித்து கண்ணில் துணியை கட்டி அவரை கடத்தி சென்றனர்.

    அவர்கள் கந்தவேலிடம் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் உங்களையும், குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் கந்தவேல் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால் தங்களுக்கு ரூ.3 லட்சம் தந்தால் விட்டு விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கும் அவர் உடன்படாததால் அவர்வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை எடுத்து சென்று ரூ.37 ஆயிரம் எடுத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 1 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தெரிந்து விட்டால் தங்களை பிடித்து விடுவார்கள் என்று கருதிய கொள்ளையர்கள் கந்த வேலை நேற்று இரவு 11 மணி அளவில் துவாக்குடி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

    இந்த கடத்தல் சம்பவம் குறித்து கந்தவேல் தோகூர் போலீசில் இன்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக திருவையாறு டி.எஸ்.பி. குணசேகரன், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோரும் விசாரணை நடத்தி காண்டிராக்டரை கடத்தி நகை- பணம் பறித்த 4 பேரையும் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் காண்டிராக்டர் கந்த வேலை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் சிக்கினால் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். #PowerStarSrinivasan
    தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது.

    சென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

    இதுதொடர்பாக சீனிவாசனின் மனைவி ஜூலி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலையில் புகார் செய்தார். அதில் தனது நண்பரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவரை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    மர்ம நபர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயருக்கு மாற்றி தரச்சொல்லி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் நடித்து வந்த போதிலும் மோசடி வழக்குகளிலும் தொடர்ந்து சிக்கி வந்தார். ஒருமுறை கைதாகி திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். கடன் பிரச்சினையும் அவருக்கு இருந்து வந்துள்ளது. அதில் இருந்து மீள்வதற்காக சீனிவாசன், தேனியை சேர்ந்த சிலரிடம் அவர் அதிக அளவில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கடத்தப் பட்டிருக்கலாமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



    இதனை உறுதி செய்யும் வகையிலேயே போலீஸ் புகாரும் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சீனிவாசன் செல்போனை எடுக்கவில்லை. இதன் பிறகே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போனில் பேசிவிட்டோம் என்றும், அவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    ஊட்டியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமாக பங்களா உள்ளதாகவும், அதனை விற்பனை செய்வதற்காகவே சீனிவாசன் அங்கு சென்றிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்து கொள்வதற்காக சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்டபோது பதட்டத்துடன் பேசியது போல தெரிந்தது. ஹலோ என்று கூறிய பவர்ஸ்டார் பிறகு பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    எனவே அவர் கடன் காரர்களின் பிடியில் சிக்கி இருக்கலாமோ? என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீனிவாசனுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். #PowerStarSrinivasan

    ×