என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96528"
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. நான் பதவிக்காக அரசியலுக்காக வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.
இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம். என் தந்தை கூறினால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் தந்தையிடம் கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆண்டவர் கோவில் அருகே செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரவுண்டானா அருகே கட்சி கொடியை விஜயபிரபாகரன் ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். #vijayprabhakaran #vijayakanth #dmdk
பண்ருட்டியில் தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் தே.மு.தி.க.வின் கோட்டையாக திகழ்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளாகும். அவர்கள் ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துகின்றனர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார்.
விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று கூறமுடியாது. தமிழகத்தில் தற்போது எல்லா துறைகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது.
ஓ.பி.எஸ். மீதான வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி முருகன், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவரின் வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி ராஜேந்திரன் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். முதல்-அமைச்சர் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியுள்ளார்.
தீபாவளி அன்று ஒருநாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படாது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர்கள் சோதனை (ரெய்டு) பயத்தில் உள்ளனர். மக்கள் பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை. தமிழக அரசு முடங்கி உள்ளது.
மத்திய அரசு சார்பில் ரூ.3 ஆயிரம் கோடியில் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததை சாதனை படைத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி வரவேண்டும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMDK #Premalatha #Vijayakanth
தே.மு.தி.க. தலைமை கழகத்தில் இன்று பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். அப்போது பிரேமலதா பேசியதாவது:-
இப்போது எல்லோரும் ‘மீடூ’ பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் நெருப்பாக இருந்தால் ‘மீடூ’ எப்படி வரும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இன்னும் 15 நாளில் அவர் வெளிநாடு செல்வார்.
அவர் மீண்டும் சிங்கம் போல் எழுந்து வருவார். தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சி தே.மு.தி.க. தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இவ்வாறு பிரேமலதா பேசினார். #Vijayakanth #PremalathaVijayakanth #DMDK
சென்னை:
கோயம்பேட்டில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா, மாநில நிர்வாகிகள் மோகன்ராஜ், பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவேன், மாவட்ட செயலாளர்கள் தினகர், அனகை முருகேசன், மதிவாணன். பிரபு, ஆனந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சிலரது பொறுப்புகளை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.தே.மு.தி.க. பொருளாளராக இருந்து வந்த டாக்டர் இளங்கோவன் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்தும், அவைத் தலைவராக இருந்து வந்த அழகாபுரம் மோகன்ராஜ் கொள்கைபரப்பு செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதாவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பா.ஜ.க., தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் பிரேமலதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக பிரேம லதாவுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரேமலதா இதுவரை கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காமல் கட்சி பொதுக் கூட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PremalathaVijayakanth #Vijayakanth #DMDK
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அக்கோ நகர் 3-வது தெருவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு கட்டப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்த பணி தொடங்கியது. சமீபத்தில் வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் அப்பாராவ் என்பவர் குடும்பத்துடன் தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அங்கு வளர்க்கப்படும் 3 கறவை மாடுகளையும் அப்பாராவே பராமரித்து வந்தார். இவை வேங்கை இன மாடுகள் ஆகும்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாடுகள் வீட்டிலேயே கட்டப்பட்டிருந்தன. நேற்று காலையில் அப்பாராவ் எழுந்து பார்த்த போது 2 மாடுகளை காணவில்லை. அதை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி அவர் விஜயகாந்த் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். மாடுகள் திருட்டு போனது தொடர்பாக பூந்தமல்லி நகர தே.மு.தி.க. செயலாளர் ஸ்ரீராம் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விஜயகாந்த் வீட்டில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில் பார்த்த போது மாடு திருட்டு போன காட்சிகள் சரியாக பதிவாகவில்லை. விஜயகாந்த் வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் மாட்டை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலில் குதித்து வெற்றியை ருசித்தார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் அவர் எட்டி பிடித்தார்.
விஜயகாந்தின் அரசியல் பயணத்தில் அவரது மனைவி பிரேமலதா கட்சி தொடங்கிய நாளில் இருந்தே உடன் இருக்கிறார். விஜயகாந்த் பங்கேற்கும் கூட்டங்களில் தவறாமல் அவரும் கலந்து கொள்வார்.
விஜயகாந்த் பங்கேற்க முடியாத நிகழ்ச்சிகளில் பிரேமலதா தனியாகவும் கலந்து கொண்டு உள்ளார்.
விஜயகாந்தின் மகன்களான விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அரசியல் வாடை இன்றியே இதுநாள் வரையில் இருந்து வந்தனர். இதனால் அவர்கள் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை பொய்யாக்கும் வகையில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் திடீரென அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளார்.
விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் விஜய் பிரபாகரன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவரது பேச்சு வருமாறு:-
சிறு வயதில் இருந்தே அப்பாவுடன் காஞ்சீபுரத்துக்கு அடிக்கடி சென்றுள்ளேன். எனக்கு பிடித்தமான ஊர் காஞ்சீபுரம்தான். ஏன் என்றால் சங்கர் படத்தை போல காஞ்சீபுரம் பிரமாண்டமாக காட்சி அளிக்கும்.
நான் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலையில் சேர்த்து விடட்டுமா? என்று அப்பா கேட்டார். இதற்கு பதில் அளித்த நான், “விஜயகாந்த் மகனாக வெற்றி பெற விரும்பவில்லை. பிரபாகரனாகவே வெற்றி பெற விரும்புகிறேன் என்று கூறினேன்.
எனது விருப்பப்படியே நான் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க அனுமதி அளித்தார். எதுவாக இருந்தாலும் அடிப்படையில் இருந்தே செய்ய வேண்டும் என்று அப்பா கூறுவார். அதன்படி நான் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
எனது தொழில் விஷயமாக அருகில் உள்ள பெங்களூருக்கு அடிக்கடி சென்று உள்ளேன். ஆனால் அங்குள்ள வளர்ச்சி சென்னையில் இல்லை. இது போன்ற விஷயங்கள் எல்லாம் மாற்ற வேண்டும்.
எனக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அது புனிதமான பெயர். எப்போதுமே மனதுக்கு பிடித்த விஷயங்களை விரும்பி செய்வேன்.
இப்போது நான் எந்த நாட்டுக்கு சென்றாலும் எனக்காக 100 பேர் அங்கு நிற்பார்கள். பேட்மிண்டன் போட்டிக்கான அணியை வாங்கி இருந்தேன். அதில் தான் பி.சி.சிந்து சாதித்து காட்டினார். எப்போதுமே ஒரே மாதிரி சிந்தனை இல்லாமல் மாற்றி மாற்றி யோசிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். பிடித்த விஷயத்தை செய்தால் அதில் எளிதாக வெற்றி பெற முடியும்.
இப்போது தெரிந்தோ தெரியாமலோ எனக்கு பிடித்த இடத்தில் (அரசியல் மேடை) நின்று கொண்டு இருக்கிறேன். இதிலும் எனக்கு வெற்றி கிடைக்கும். எனக்கு வைத்துள்ள பிரபாகரன் என்ற பெயரை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்.
கூட்டத்துக்கு புறப்படும் போது அப்பா 2 விஷயங்களை என்னிடம் சொல்லி அனுப்பினார். கட்சியினரிடம் சீக்கிரம் வருவேன் என்று சொல்லு. கூட்டத்தை சீக்கிரம் முடிக்க சொல். மழை வருவது போல் இருக்கிறது. பெண்கள் எல்லாம் சீக்கிரம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
10 ஆயிரம் பேர் என்ன? ஒரு லட்சம் பேர் வந்தாலும் தே.மு.தி.க.வை அசைக்க முடியாது. அதில் இருந்து ஒரு செங்கலைகூட உருவ முடியாது. என்னோடு இணைந்து செயல்பட இளைஞர்கள் பலர் கைகோர்ப்பார்கள்.
கண்டிப்பாக நான் சாதித்து காட்டுவேன். அதற்கு நீங்களும் கை கொடுக்க வேண்டும்.
எனக்கு எப்போதுமே திமிரு அதிகம். அந்த திமிரோடு சொல்லிக் கொள்கிறேன். சத்தியமாக தே.மு. தி.க. ஆட்சியை பிடிக்கும். நீங்கள் எல்லோரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அனகை முருகேசன் அங்கிளை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் விரைவில் காலில் செருப்பு அணிவீர்கள். தாடியையும் எடுப்பீர்கள். இது நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு விஜய் பிரபாகரன் பேசினார்.
காஞ்சீபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளரான அனகை முருகேசன் விஜயகாந்த் முதலமைச்சர் ஆகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விழா மேடையில் தே.மு.தி.க. நிர்வாகிளும், தொண்டர்களும் விஜய் பிரபாகரனுக்கு மாலைகள், சால்வைகளை அணிவித்து மலர் கிரீடம் சூட்டினார்கள். “தே.மு.தி.க.வின் எதிர் காலமே”, “இளைஞர்களின் எழுச்சி தளபதியே”, கேப்டனின் தளபதியே” என்பது போன்ற கோஷங்களையும் தொண்டர்கள் எழுப்பினர்.
பின்னர் விஜய் பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன். எனக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பொறுப்பை தேடிப்போவது அரசியல் இல்லை, சேவையை தேடி வருவதுதான் அரசியல். மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதற்காக நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அதை அனைத்தையும் செயல்படுத்தப்போகிறேன். கட்சியில் பொறுப்பு வகிப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.
இது ஒருநாள் கூத்து இல்லை. என் அப்பா செய்யாததை நான் ஒன்றும் செய்து விடப்போவதில்லை. அவர் கட்சியில் செய்ததைத்தான் நானும் செய்யப்போகிறேன்.
இதற்காக இளைஞர்கள் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #vijayprabhakaran #vijayakanth #DMDK
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரன் பேட்மிண்டன் அணி ஒன்றை நிர்வகித்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் நாய்களையும் வளர்த்து வருகிறார்.
தி.மு.க.வில் மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதைபோல விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை முன்னிலைப்படுத்த உள்ளார்.
இன்று அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் தே.மு.தி.க கட்சியின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய்பிரபாகரன் கலந்துகொள்ள உள்ளார். அவருக்கு இது முதல் மேடை என்பதால் எப்படி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-
‘விஜய் பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என விஜயகாந்த் விரும்புகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. மகனுக்கு உடனடியாக பதவி கொடுத்து விட்டால் சர்ச்சையாகும் என்பதால் படிப்படியாக அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.
அந்த புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி மெல்ல மெல்ல மகனை கட்சியின் முக்கிய இடத்திற்கு கொண்டு வருகிறார்’
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விஜய் பிரபாகரன் கட்சிக்கு வந்தால் அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படலாம்? என்று கேட்டபோது:-
கட்சியில் வெகுகாலமாக இளைஞரணி செயலாளர் பொறுப்பை தலைவர் காலியாகவே வைத்துள்ளார். யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த பொறுப்பில் விஜய் பிரபாகரன் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறினர். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டது தான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்றும், இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு(நாளை மறுநாள்) நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார். #Vijayakanth
சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் @actorvijay அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2) pic.twitter.com/uIMXFUmlSa
— Vijayakant (@iVijayakant) September 23, 2018
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15-வது நிதிக்குழு 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று விவரிக்கின்றது. மாநிலங்களுக்கிடையே ஆன 1971 மற்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அதிகப்படியான வித்தியாசங்களை தெரிவிக்கின்றது. உதாரணத்திற்கு 1971-ல் தமிழ்நாட்டினுடைய மக்கள் தொகை 4.11 கோடியாகவும், பீகார் மாநிலத்தினுடைய மக்கள் தொகை 4.21 கோடியாகவும் இருந்தது.
2011-ம் ஆண்டில் தமிழ்நாடு 7.21 கோடியாகவும், பீகார் 10.21 கோடியாகவும் அதிகரித்துள்ளது. அதன்படி 15-வது நிதிக்குழு நிதி அதிகாரப்பகிர்வை 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் முடிவெடுத்தால், அதிகப்படியான தவறுகள் உருவாவதற்கும், மேலும் அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கு எதிராகவும், ஒருதலைப்பட்சமாகவும் அமைந்துவிடும்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதிப்பகிர்வை முடிவெடுத்தால் மத்திய அரசு வலியுறுத்திய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முழுமையாக அமல்படுத்திய மாநிலங்கள் மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்திற்காக செயலாற்றிய மாநிலங்கள் நிதி பயன்களை இழக்கக் கூடாது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் அது 1971 மக்கள் தொகை கணக்கீட்டுக்கு எதிரானதாக அமைந்து விடும். குடும்ப நல கட்டுப்பாடு திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்திய தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் பிறப்பு சதவீகிதம், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது.
15-வது நிதிக்குழு 2011 மக்கள் தொகை அடிப்படையில் வருவாய் பங்கீட்டை அமல்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய அதிகப்படியான நிதி ஆதாரங்கள் வட மாநிலங்களுக்கு சென்று விடுவதால் மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கப்படுவது போல் ஆகிவிடும் என்று தமிழ்நாடு சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் குற்றம் சாட்டுகிறது.
முடிவாக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி, இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக எடுத்துக் கொள்வது போல், 15-வது நிதி ஒதுக்கீட்டுக்கும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைக்காமல், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே வருவாய் நிதி பங்கீட்டை அமல்படுத்த வேண்டுமென 15-வது நிதிக்குழுவை தமிழ்நாட்டின் சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்