என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96529"
சென்னை:
தென்சென்னை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் ஜெயவர்தன் சந்தித்து வாழ்த்து பெற்றார். பிரேமலதா விஜயகாந்த்தும் ஜெயவர்தன் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் வேட்பாளர் ஜெயவர்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்சென்னை தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுத்துள்ளேன். தொகுதி மேம்பாடு நிதியிலும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன்.
விருகம்பாக்கம் மற்றும் தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பொருட்டு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மூலம் வெள்ளத் தடுப்புபணிகள், உயர் கோபுர மின் விளக்கு, கழிப்பறை மற்றும் பயணியர்களுக்கு இருக்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
ஒட்டியம்பாக்கம் ஊராட்சியை மேம்படுத்தும் விதமாக 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்துதல், தெரு மின் விளக்கு போன்ற வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டது.
சோழிங்கநல்லூர் தொகுதியிலுள்ள கண்ணகி நகரில் கழிவுநீர் அடைப்பு அகற்றும் இயந்திரம் அமைப்பதற்கு ரூ.51.86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தொகுதி மக்களுக்காக அயராது பாடுபட்டு வரும் என்னை இந்த முறையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர் ஜெயவர்தனுடன் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர். #vijayakanth #admk #Jayavardhan
சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை தே.மு.தி.க. பின்பற்றும். 4 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதால் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை.
பல தேர்தல்களை பார்த்து விட்டோம். தேர்தல் அறிக்கைகளை பார்த்து விட்டோம். ஆனால் உறுதியாக இந்த முறை கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுமாறு மத்திய அரசிடம் தே.மு.தி.க. வலியுறுத்தும். தமிழகத்திற்கு தேவையானதை உறுதியாக எடுத்துரைப்போம். தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பிரதமர், முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.
மத்திய மந்திரிசபையில் தே.மு.தி.க. சேருவது பற்றி யோசிக்கவில்லை. தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும். யார் யார் வெற்றி பெற உள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் தான் மந்திரிசபையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்.
தூத்துக்குடியில் 2 பெண்கள் போட்டியிடுவது ஆரோக்கியமானது. வரவேற்கக்கூடியது. அரசியலுக்கு பெண்கள் அதிகமாக வர வேண்டும். இதில் யார் பலமானவர்? என்று சொல்ல முடியாது. 2 பேரும் நல்ல வேட்பாளர்கள். உழைக்கக்கூடியவர்கள். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். இதில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பது இனி தான் தெரியும்.
தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். விஜயகாந்த் முகத்தை காட்டினாலே போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். வருகிற 27-ந் தேதி முதல் 40 தொகுதிகளிலும் நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடைபெறவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க. தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27.03.2019 (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #PremalathaVijayakanth #LSPolls
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்ய உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் அவரது பிரசார திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 25-ந்தேதி கன்னியாகுமரி தொகுதியில் பிரேமலதா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார்.
மேலும் தே.மு.தி.க. போட்டியிடும் 4 தொகுதிகளில் அவர் 2 நாட்கள் முகாமிட்டு பிரசாரம் செய்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இறுதியில் தனது சகோதரர் சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். முன்பைபோல அவர் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என்பதால் ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
விஜயகாந்த் பிரசாரத்துக்கு மட்டுமே வருவார். ஆனால் பேச மாட்டார் என்று ஏற்கனவே எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். எனவே விஜயகாந்துக்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதா தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார். #LSPolls #DMDK #PremalathaVijayakanth
அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக செயலாளருமான எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் அழகர்சாமி, வடசென்னையில் அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால், கவுதம சிகாமணியை எதிர்த்து சுதீஷ் நிறுத்தப்பட்டுள்ளார். #LSPolls #DMDK #DMDKCandidates
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது.
அந்த கட்சிக்கு வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தனது பிறந்தநாளை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
துணை செயலாளர் எல். கே.சுதீஷ், அவரது மனைவி ஜோதி, பார்த்தசாரதி மாவட்ட செயலாளர்கள் போரூர் தினகர், வேளச்சேரி பிரபாகர், ஆனந்தன் சதிஷ் காந்த், அண்ணல் ஜே உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களது மெகா கூட்டணி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் நலன்களை பூர்த்தி செய்வோம். தி.மு.க. வாரிசு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது அவர்களின் நிலைப்பாடு. அதை பற்றி பதில் சொல்ல நான் விரும்பவில்லை. இதனை மக்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Premalatha #DMK
திருவாரூர்:
நாகப்பட்டினம் பாராளுமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தீவிர களப்பணியில் தங்களை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான இரா.காமராஜை தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. திருவாரூர் மாவட்டச் செயலாளர் எம்.சண்முகராஜ், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் கே.வைரவநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் என்.முத்தையா, மாவட்டத் துணை செயலாளர் முகம்மது மொகைதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜாபாண்டியன், திருவாரூர் நகர செயலாளர் சதீஷ்குமார், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் கே.ஜி.திருமுருகன், ஆகியோர் உடனிருந்தனர்.
இதுபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளும் அமைச்சர் இரா.காமராஜை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது தமாகா மாவட்டத் தலைவர் குடவாசல் எஸ்.தினகரன், மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் வடுவூர் சங்கர், நீடாமங்கலம் வட்டாரத்தலைவர் சந்திரசேகர், மன்னார்குடி வட்டாரத் தலைவர் முனியநாதன், மாவட்டச் செயலாளர் சிங்கு.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதில் நாகை பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி குறித்தும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. #dmdk #ministerkamaraj
சென்னை:
நீண்ட இழுபறிக்கு இடையே அ.தி.மு.க. - தே.மு.தி.க. தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. அ.தி. மு.க. கூட்டணியில் தே.மு.தி. க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தொகுதிகள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்குவது என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. என்றாலும் வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அதனை அ.தி.மு.க. தலைமை ஏற்று கொண்டதாக தெரிகிறது. வட சென்னையில் அ.தி.மு.க. போட்டியிட முடிவு செய்திருந்தது.
ஆனால் தே.மு.தி.க. வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் வடசென்னையை விட்டு கொடுத்துள்ளது. தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் நாளை அல்லது நாளை மறுநாள் 18-ந்தேதி வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்து அறிவித்து விட்டதால் இன்னும் தாமதம் செய்யக்கூடாது என அ.தி. மு.க. முடிவு செய்து நாளை (17-ந்தேதி) அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் விருப்பப்படி கொடுக்கப்பட்டதால் வேட்பாளர்களையும் தேர்வு செய்து தயாராக வைத்துள்ளனர்.
வடசென்னையில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் நிறுத்தப்படுகிறார்.
கள்ளக்குறிச்சியில் துணை பொதுச்செயலாளர் எல்.கே. சதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் டாக்டர் இளங்கோவன் அறிவிக்கப்படுகிறார்.
விருதுநகர் தொகுதியில் சென்னையைச் சேர்ந்த அப்துல்லா சேட் அல்லது அழகர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் பிரேமலதா நிற்கவில்லை. விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் களம் இறங்குகிறார். #parliamentelection #dmdk #lksudhish
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டது. இந்தநிலையில் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள் தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். இப்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.
விஜயகாந்த் விரைவில் தீவிர கட்சி பணியை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர் தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் அவர் தான் இறுதி முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakanth
தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில்தான் பிரச்சனை எழுந்தது.
நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். மேல்சபையில் ஒரு இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
என்றாலும் நாங்கள் விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தந்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்.
இதற்கிடையே பா.ஜனதா தலைவர்கள் எங்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளனர். எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் கேப்டனை சந்தித்து பேசினார்கள். இதன் மூலம் இரு கட்சி தொண்டர்களும் தமிழகம் முழுவதும் அடிமட்ட அளவில் இணைந்து செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த கூட்டணியில் முதலில் நாங்கள் பா.ஜனதா தலைவர்களுடன் பேசினோம். பிறகுதான் அ.தி.மு.க. வுடன் பேசத்தொடங்கினோம். இதனால் தான் கூட்டணியில் சில முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.
தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள்தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். தற்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது.
அடுத்த தேர்தல் பற்றி இப்போதே உறுதிபட கூற இயலாது. கூட்டணி மாறலாம். மாறாமலும் போகலாம். கேப்டனை முதல்-அமைச்சராக்கவே தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. அந்த இலக்கில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சில பிரச்சனைகள் அடிப்படையில் நாங்கள் முன்பு மோடி அரசை விமர்சனம் செய்து இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் மோடி அரசின் நல்ல கொள்கைகளை மனம் திறந்து பாராட்டியுள்ளோம்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.
அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் எங்களுக்குரிய தொகுதிகளை (வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர்) மிகவும் கவனமாக தேர்வு செய்துள்ளோம்.
2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். பா.ம.க. 8 இடங்களில் போட்டியிட்டது. எனவே இந்த தடவை 10 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று நினைத்தோம்.
ஆனால் பிப்ரவரி 20-ந் தேதியே பா.ம.க. மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்து விட்டது. இது எங்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது.2014-ம் ஆண்டு ஒரே நேரத்தில் எல்லா கட்சிகளுக்கும் ஒப்பந்தம் செய்ததைபோல இந்த தடவையும் தேர்தல் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறி வந்தோம். அது நடக்காமல் போய் விட்டது.
எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தி.மு.க. தரப்பில் இருந்து அழைத்தனர். அவர்களிடம் நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே கேப்டன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அவரது அறிவுரையை ஏற்று முடிவு எடுக்கப்பட்டது.
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விஷயத்தில் தி.மு.க.வினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி விட்டனர். துரைமுருகன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அரசியலுக்காக அந்த நட்பு மாறாது. இப்போதும் நான் அவரை அண்ணன் என்றுதான் அழைக்கிறேன்.
தி.முக.விடம் நாங்கள் குழு அமைத்து பேசவில்லை. எங்கள் தரப்பில் இருந்து சென்றவர்கள் அவர்களது சொந்த வேலைக்காக சென்றனர். ஆனால் அரசியலில் அது வேறுமாதிரி பேசப்பட்டு விட்டது.
விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் பயணம் மேற்கொள்வார். ஆனால் பேசமாட்டார்.
அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே அவர் தொகுதி வாரியாக வரும்போது தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள்.
கேப்டன் விரைவில் தீவிர கட்சி பணிகளை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர்தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் கேப்டன்தான் இறுதி முடிவு எடுப்பார்.
இவ்வாறு சுதீஷ் கூறினார். #DMDK #Vijayakanth #LKSudhish
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று காலை 11.15 மணிக்கு வந்தனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகு அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். பா.ம.க.- தே.மு.தி.க. தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் தொகுதிகளை பிரிப்பதில் இழுபறி ஏற்படுவது வழக்கமான நடைமுறைதான். தேர்தல் பற்றி பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் பிரேமலதா சுதீசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றனர். #Vijayakanth #Ramadoss #AnbumaniRamadoss
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்