search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96529"

    தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
    சேலம்:

    சேலத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- உங்களை விமர்சனம் செய்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே?

    பதில்:- கொள்கை வேறு, கூட்டணி வேறு.

    கே:- அமைச்சர் ஜெயக்குமர் தே.மு.தி.க. வந்தால் ஏற்றுக்கொள்வோம், இல்லையென்றாலும் கவலை இல்லை என்று கூறி இருக்கிறாரே?


    ப:- இது அவருடைய கருத்து. தே.மு.தி.க.வுடன் மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    கடந்த முறை தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.

    நாடு முழுவதும் பார்க்கும்பொழுது பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.

    இவ்வாறு அவர் கூறினார். #TNCM #EdappadiPalaniswami #ADMK #DMDK
    தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புவதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #DMDK
    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தான் வருகிறார். குமரி மாவட்டத்திற்கும் அதுபோல தான் வருகிறார்.

    விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    பாரதிய ஜனதா கூட்டணியை ‘பி’ அணி என்றும், தமிழகத்தில் நாங்கள்தான் ‘ஏ’ அணி என்றும் கமல்ஹாசன் கூறி உள்ளார். சினிமாவில் தான் ‘ஏ’, ‘யூ’ என்று சான்றிதழ் கொடுப்பார்கள். அவர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. தமிழக குடும்பங்களின் கூட்டணிதான் எங்கள் கூட்டணி. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் என்று நம்புகிறோம்.

    பிரதமர் நரேந்திர மோடி ரேடியோவில் மனதின் குரல் என்ற தலைப்பில் பேசி வந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ஆன பிறகு மீண்டும் நரேந்திர மோடி மனதின் குரல் மூலம் மக்களுடன் ரேடியோவில் பேசுவார்.



    பிரதமர் ரேடியோவில் பேசும்போது மக்களின் கருத்துக்களை கேட்டு உள்ளார். மக்கள் கருத்துக்களை அவரிடம் தெரிவிக்க வசதியாக குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் அதற்காக பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. நாகர் கோவில் வேப்பமூடு சந்திப்பு, வடசேரி சந்திப்பு, ஆரல்வாய்மொழி, ஈத்தா மொழி, திங்கள்நகர், தக்கலை, புதுக்கடை, குழித்துறை ஆகிய இடங்களில் இந்த பெட்டி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #DMDK
    தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமா? வராதா? என்பது ரகசியம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். #ADMK #DMDK #MinisterVellamandiNatarajan
    திருச்சி:

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் தொலைநோக்கு பார்வையுடன் சீரிய முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதற்கு சான்றாக இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர்க்கு ஜெயலலிதா வழங்கியதுபோல, எடப்பாடி பழனிசாமி திட்டங்களை தொய்வின்றி வழங்கி வருகிறார். குறிப்பாக பொங்கல் பரிசு, 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் முதல் தவணையையும் வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-

    கே: அ.தி.மு.க. கூட்டணி முழு வடிவம் பெறுவது எப்போது?

    ப: அதற்கான வடிவம் ஏற்கனவே அமைக்கப்பட்டு தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் அந்த அமைப்பில் உள்ளனர். அவர்கள் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுப்பார்கள். அது ரசகியம் தான். கூட்டணி இறுதி வடிவம் பெற்றதும் அறிக்கை வெளியிடப்படும்.


    கே: அ.தி.மு.க.வில் தே.மு.தி.க. இடம்பெறுமா?

    ப: ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தை என்பதே ரகசியம்தான். எனவே தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமா? வராதா? என்பதும் ரகசியம்தான்.

    கே: அ.தி.மு.க. மீண்டும் திருச்சி தொகுதியை தக்க வைக்குமா?

    ப: அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திறமைக்கு உரியது. தற்போது நாங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து செயல்பட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #DMDK #MinisterVellamandiNatarajan
    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK #DMDK
    ஆலந்தூர்:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.

    நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது

    ரியல் எஸ்டேட் தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது.

    அதைப்போல பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மக்களுக்கு இலவசம் தருவதை யாரும் கொச்சைப்படுத்தக்கூடாது. அ.தி.மு.க. அரசு மக்கள் நல அரசு, சமூக நீதிக்கான அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை சுமார் 5 லட்சம் அரசு வேலைக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். அதேபோல் 3.5 லட்ச காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.

    எல்லோருக்கும் அரசு வேலை என்பது எந்த அரசாலும் கொடுக்க முடியாது. அதனால் பெண்கள், இளைஞர்கள் தொழில் முனைவோரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கட்டித்தருவது, பிற்படுத்தப்பட்டோர், மீனவர்கள், நெசவாளர்கள் போன்றவர்களுக்கு பல சலுகைகளை அரசு ஏற்படுத்தி தருகிறது. இது எல்லாம் தவறா? வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி தொகையாக 2,000 தருவது எந்தவிதத்திலும் தவறல்ல.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில் தான் தேர்தல் கூட்டணி. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை பார்த்து ஸ்டாலின் விரக்தியின் உச்சகட்டத்திற்கு போய்விட்டார். அதனால் தான் அரசியல் நாகரீகங்களுக்கு அப்பாற்பட்டு எங்களை கண்டபடி திட்டுகிறார்.

    டி.டி.வி. தினகரன் ஒரு தனி மரம். இனி அவருடைய அரசியல் இங்கே எடுபடாது. அவர் ஒரு வெற்று காகிதம். அதைப்போல கமல்ஹாசனுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இந்த மூன்று பேருக்கும் அ.தி.மு.க. மெகா கூட்டணியை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது.

    கிராமசபை, ஊராட்சி சபை ஏன் ஐ.நா. சபை நடத்தினாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    தே.மு.தி.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது அந்த கட்சியினுடைய தனிப்பட்ட செயல். அதனால் கூட்டணி பேச்சு வார்த்தை முற்றுப்பெற்றது என்று சொல்லி விட முடியாது.



    ஸ்டாலின் விஜயகாந்தை சந்திக்கும்போது அரசியலும் பேசினார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். இதிலிருந்து உண்மை தெரிகிறது. ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு போய்விடக்கூடாது என்ற எண்ணம்.

    தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க. எல்லோரது கால்களிலும் விழுகிறது. இதுதான் அவர்களின் நிலைமை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இன்னும் கூட்டணிக்கான கதவு திறந்திருக்கிறது, பேச்சு வார்த்தை நடக்கும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருவான்மியூரில் உள்ள பள்ளியில் இன்று, காலை உணவு திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை.

    மு.க.ஸ்டாலின் கோபத்தின் விரக்தியில் இருக்கிறார். இது தலைவனாக இருப்பதற்கு அழகல்ல.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரும் மனுவை கவர்னர் இதுவரை நிராகரிக்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி கவர்னர் முடிவு எடுக்க அரசு வலியுறுத்த முடியாது” என்றார். #MinisterJayakumar #ADMK #DMDK
    தேமுதிக தலைவர் விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தபோது அனைத்தும் பேசப்பட்டது என பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிகள் ஓரளவு உறுதியான போதிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



    தே.மு.தி.க.வுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் கூட்டணி. தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். 

    மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தே.மு.தி.க.வின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

    தே.மு.தி.க.வின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தே.மு.தி.க. சார்பில் நன்றி. விஜயகாந்த் உடனான ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் உள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை.

    விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அனைத்தும் பேசப்பட்டுள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். தே.மு.தி.க.விற்கு கிடைக்கும் இடங்களை பொருத்து கூட்டணி முடிவு இருக்கும். 

    ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தே.மு.தி.க.வின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. பலத்தை நிரூபிக்கும் என தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
    தி.மு.க. கூட்டணி தெளிவாக உள்ளது. எந்த இழுபறியும் இல்லை என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். #kanimozhi #mkstalin #vijayakanth

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. அடிப்படை மனிதாபிமானத்தின் படி சந்தித்து உள்ளார். பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன்வைக்கும் பெயர் ராகுல்காந்தி தான். தேர்தலுக்கு பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து மற்ற கட்சிகளுடன் கேட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால் தி.மு.க. சொல்லும் பெயர் ராகுல்காந்தியின் பெயர் தான்.


    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சுயமரியாதையுடன் வளர்த்து வந்த இயக்கத்தை தற்போது உள்ளவர்கள் மற்றவர்களுக்கு அடிபணிந்து செல்லும் நிலைக்கு மாற்றியுள்ளனர். இதனை அந்த கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் சிந்திக்க வேண்டும்.

    தி.மு.க. கூட்டணி தெளிவாக உள்ளது. எந்த இழுபறியும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. எப்படி குட்டிகரணம் போட்டு கூட்டணியை உருவாக்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிக்கும் தேமுதிக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. பிரேமலதா தொடங்கி வைத்தார். #DMDK
    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது.

    அதன்படி கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் துணை செயலாளர்கள் சுதிஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    பொது தொகுதிக்கு ரூ. 20 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனு வாங்கி சென்றனர். சுதீசும் விருப்ப மனுவை பிரேமலதாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

    பின்னர் பிரேமலதா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். #Tamilisai #edappadipalanisamy #vijayakanth
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. 

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். 

    இந்த சந்திப்பிற்கான காரணம், அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறியவும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. #Tamilisai #edappadipalanisamy #vijayakanth
    விஜயகாந்த் உடல்நிலை குறித்து நேற்று சந்தித்து பேசிய ரஜினிகாந்த், விஜய பிரபாகரனின் அரசியல் பேச்சை பாராட்டினார். #VijayaPrabhakaran #rajinikanth #vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் அமெரிக்கா சென்று திரும்பியதும் முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் இருவரும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்தனர். இந்த சந்திப்பில் அரசியல் இருந்ததாகக் கூறப்பட்டாலும், “ஒரு துளிகூட அரசியல் இல்லை” என இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.

    சமீபகாலமாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேடையிலும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவரின் அரசியல் பேச்சுகள் குறித்து சந்திப்பின்போது ரஜினி பேசியுள்ளார்.


    ரஜினி விஜயகாந்த் குடும்பத்துடன் பேசும் புகைப்படத்துடன் விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் அரசியல் மேடைகளில் பேசியதை பார்த்ததாக ரஜினி அங்கிள் என்னிடம் சொன்ன தருணம் சிறப்பான ஒன்று.

    மேடைகளில் நான் பேசியதை சொல்லி ஆச்சர்யப்பட்டார். அது குறித்து சந்தோ‌ஷமாகப் பகிர்ந்து கொண்டார். கண்டிப்பாக அங்கிள் இனியும் நான் நன்றாக வேலை செய்வேன்” என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. #VijayaPrabhakaran #rajinikanth #vijayakanth

    ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ACBus #MRVijayabaskar
    கரூர்:

    கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 2000 மின்சார பஸ்களும்,12,000 காற்று மாசுபடாத அதி நவீன புதிய பஸ்களும் இயக்கப்பட உள்ளது. 3 வருட காலத்திற்குள் இந்த பஸ்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சியில் விரைவில் இயக்க முதல்வர் சி.40 அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    குறைந்த தூரத்தில் ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பொதுவாக குளிர் சாதன பஸ்கள் 2-2 சீட்டுகள் அமைப்பில் உள்ளன. ஆனால் இந்த புதிய குளிர் சாதன பஸ்கள் 3-2 என்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது.



    முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 50 குளிர் சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ACBus #MRVijayabaskar
    விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள் என்று விஜய பிரபாகரன் பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் கும்பகோணம் சென்ற விஜயபிரபாகரன் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    ‘காவிரி டெல்டா பகுதியில் கடந்த காலங்களில் 58 சதவீத விவசாயம் நடைபெற்றது. தற்போது 7 சதவீதம் தான் விவசாயம் நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் வராததால் 51 சதவீதம் விவசாயம் செய்ய முடியாமல் போய் விட்டது.



    விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் வரும். மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவிப்பார். அப்படி செய்யாவிட்டால் ஏன் செய்யவில்லை என சட்டையைப் பிடித்துக் கேட்கலாம். விஜயகாந்த்துக்கு வாய்ப்பு கொடுங்கள். தே.மு.தி.கவை சேர்ந்தவர்கள் யாருக்கும் பயப்படாதீர்கள்.

    வருங்காலத்தில் விஜயகாந்தின் ஆட்சி இல்லை என்றால் எதுவும் இல்லை. விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார். ஆனால் பன்றிகள்தான் கூட்டமாக வரும். அதுபோலதான் சிலர் உள்ளனர்.

    தே.மு.தி.கவுக்கு 2 சதவீதம் வாக்குகள்தான் உள்ளது, விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு என்று கூறுபவர்கள் ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நிற்கிறார்கள். எங்களிடம் வைத்து கொள்ளாதீர்கள், நாங்கள் ஒதுக்கி கொடுக்கின்ற கட்சி. வருகிற எம்.பி தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி இல்லை. தற்போது டெல்லிக்கு குரல் கொடுப்பதற்கு சரியான தலைவர் இல்லை.

    தமிழ்நாட்டுக்கு திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை கொண்டுவர வேண்டும். இப்போது உள்ளவர்கள் போல் வாயை மூடிகொண்டு சுற்றுகிற ஆள் விஜயகாந்த் இல்லை. இப்போதுள்ள கட்சியினரிடையே தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் உள்ளார்.

    அவர் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. வரும் எம்.பி. தேர்தலில் எதிரிகளுக்கு சவுக்கடி கொடுத்து அவர்களின் முகத்திரையை கிழிக்கணும். எனக்கும் விஜயகாந்த்துக்கும் தஞ்சாவூர் தொகுதி மேல் தனி பாசம் உண்டு.”

    இவ்வாறு அவர் பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
    சென்னை:

    திருவான்மியூரில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது. எல்லாம் நல்லது நடக்கும். கூட்டணி முடியும் நேரம் முடியும்.

    தற்போது அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்து வருகிறது. இது வெற்றி கூட்டணியாக மாறும். கடந்த தேர்தலின்போது 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது ‘நாற்பதும் நமதே’ என்பதே எங்கள் கோ‌ஷம் ஆகும்.

    விஜயகாந்தை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் கூறுகையில், இதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார். அதனால் தான் வாய் குழறுகிறது. ஸ்டாலினின் இன்றைய நிலை இதுதான்.

    எங்களை பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விட்டோம். பலம் பொருந்திய சக்தி வாய்ந்த மெகா கூட்டணியாக உள்ளோம். இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

    அந்த கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு போகக்கூடாது என மு.க.ஸ்டாலின் எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அது எடுபடப்போவதில்லை.



    எங்களது அணிக்கு தேசிய முற்போக்கு கூட்டணி என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறுவது பற்றி எனக்கு தெரியாது. அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் இயக்கம். ஆரம்பத்தில் இருந்து அ.தி.மு.க. தலைமையில் தான் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நான் பா.ஜனதா கட்சியை மட்டும் சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு பெயர் கொடுப்பதை அ.தி.மு.க. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
    ×