search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96529"

    விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. #KamalHaasan #Vijayakanth
    சென்னை:

    சினிமாவில் இருந்து அரசியல் களத்துக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றனர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். இவர்களுக்கு பின்னர் பல சினிமா நட்சத்திரங்கள், அரசியலில் குதித்திருந்தாலும் யாரும் நிலைக்கவில்லை.

    அதே நேரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், அரசியல் களத்தில் வேகமாக முன்னேறினார். கட்சியை தொடங்கிய அடுத்த ஆண்டே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தனி ஆளாக விஜயகாந்த் களம் இறங்கினார். அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. கணிசமான ஓட்டுகளை அள்ளியது. விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி அனைவரின் புருவங்களையும் உயரச் செய்தார்.

    முதல் தேர்தலிலேயே தே.மு.தி.க. வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று ஆச்சரியப்படுத்தினர். இதுவே 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்ததாக கூறப்பட்டது.

    இதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தார்.

    இதன் மூலம் தே.மு.தி.க., 2-வது தேர்தலிலேயே 16 அடி பாய்ந்தது.

    இதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி உதயமான மக்கள் நலக் கூட்டணி மண்ணை கவ்வியது. 2 தேர்தல்களில் ஏறுமுகமாக இருந்த விஜயகாந்தின் செல்வாக்கு 2016-ம் ஆண்டு தேர்தலில் அடியோடு சரிந்தது. அதில் இருந்து மீள்வதற்கு விஜயகாந்த் போராடிக் கொண்டிருக்கிறார்.

    கட்சியை தொடங்கி ஓராண்டில் விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது போல கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கிறார்.



    தேர்தல் களத்தில் கமலின் இந்த முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கமல்ஹாசனை பொறுத்த வரையில், புதிய கட்சியை தொடங்கிய பின்னர் கிராமப்புறங்கள் தொடங்கி, நகர்ப் பகுதிகள் வரையில் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

    புதிய வாக்காளர்களான இளைஞர்கள் நிச்சயம் மாற்றத்தை விரும்பி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதே கமலின் நம்பிக்கையாக உள்ளது. இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.

    இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசவும் கமல் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளையும் ஊழல் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் கமல், தேர்தல் களத்தில் அதனை வேகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

    விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல். ஆனால் கமல் சந்திப்பதோ பாராளுமன்ற தேர்தல். மாநில கட்சியாக இருக்கும் மக்கள் நீதி மய்யம், பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் அதே வேளையில் புதிய மாற்றத்துக்காக எங்களை ஆதரியுங்கள். “நாளை நமதே” என்கிற கோ‌ஷத்துடன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மத்தியில் யாருக்கு ஆதரவு? யார் பிரதமர்? என்பது போன்ற வி‌ஷயங்களை பற்றி பிரசாரத்தின் போது கமலால் பேச முடியாது என்பது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    எது எப்படி இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் களம் நிச்சயம் கமலுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் முன்னுக்கு வந்ததை போல கமலும் கவனிக்கப்படும் புதிய அரசியல்வாதியாக அவதாரம் எடுப்பாரா? இந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Vijayakanth
    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Vijayakanth
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கி கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன்பின்னர் இதர கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்திடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.



    இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த சந்திப்பு நட்பு ரீதியானது என்றும், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய தனது நண்பர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறினார்.

    அரசியல் ரீதியாக பேசப்பட்டதா? என்று கேட்டதற்கு, “அவர் ஒரு கட்சியின் தலைவர், நானும் ஒரு அரசியல் தலைவர். இது தேர்தல் நேரம். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கும்போது, அரசியல்  பேசாமல் இருக்க முடியுமா? பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கூறினேன்” என்றார் திருநாவுக்கரசர். #Thirunavukkarasar #Vijayakanth
    நாட்டு நலனை விரும்புபவர்கள் பாஜக கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தலைவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் என்ற செய்தி வெளி வந்ததும் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இன்னும் எத்தனை கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது அ.தி.மு.க.விடம் தான் உள்ளது. பல கட்சிகள் இணையும், அதற்கான பணிகளை அ.தி.மு.க. மேற் கொண்டு வருகிறது.

    அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். அவர் பேசுவது அநாகரீகமான வார்த்தைகள். சாக்கடை எங்கு ஓடுகிறது என சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள்.

    பிரதமர் மோடி அரசாங்கம் மீண்டும் ஏற்படுவது நாட்டிற்கு தேவை. 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ள திட்டங்கள் அனைத்தும் அடித்தள மக்களுக்கானது. உலக அளவில் இந்தியா முதல் நாடாக மாறும். இதனை அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி தீர்மானிக்கும்.

    ஜாதி, மதம், இனம் மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தலை நிமிர்ந்து கைகோர்க்கும் சூழ்நிலை அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படும். அப்படிப்பட்ட நிகழ்விற்கு ஒவ்வொரு இந்தியர்களும், அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.

    தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு வரை கூட இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. பா.ஜ.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுவது என்றில்லை. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளும் எங்களுடையது தான். திருச்சியில் நிற்பது யாராக இருந்தாலும் அவர் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தான்.

    புல்வாமா தாக்குதல் பாதுகாப்பு, ராணுவம் தொடர்புடையது. பிரதம் நரேந்திர மோடி மீது 130 கோடி இந்திய மக்களும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதில் அரசியல் பாகுபாடுகளின் தேசம் என்ற ஒத்த கருத்துடன் இருக்க வேண்டும். பி.ஜே.பி., காங்கிரஸ், கம்யூனிஸ்டு என்று பிரித்து பார்க்க கூடாது.

    தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகளின் போது நானும் உடன் இருந்துள்ளேன். மத்திய மந்திரி பியூஸ் கோயல் பா.ம.க. கூட்டணியை அறிவித்து செல்லவில்லை. பா.ஜ.க.வின் கூட்டணியை அறிவித்துள்ளார். நாட்டு நலனை விரும்புபவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan

    மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். #LSpoll #PiyushGoyal #DMDK
    சென்னை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக மற்றும் பா.ஜ.க ஆகியவை இடம் பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி பற்றி பேச மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன். .ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பாஜகவை சேர்ந்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ் உள்பட பலர் உடனிருந்தனர். 

    சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். இந்த சந்திப்பு விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க மட்டுமே நடைபெற்றது; கூட்டணி குறித்து பேசவில்லை என தெரிவித்துள்ளார். #LSpoll #PiyushGoyal #DMDK
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப் 24-ந்தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.

    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் 2 முறை பேசி உள்ளனர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கத்தின் விருந்தினர் மாளிகையில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் மத்திய மந்திரி பியூஷ்கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். மீண்டும் பேசுவதற்காக நாளை மறுநாள் பியூஷ்கோயல் சென்னை வருகிறார்.

    இதேபோல் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த 3 கட்சிகளும் அ.தி.மு.க.வில் அதிக தொகுதிகளை கேட்டு வருவதால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

    ஜெயலலிதா இருக்கும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும் முன் கூட்டியே அறிவிப்பார்.


    அதே பாணியை இப்போதும் செயல்படுத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளை விட்டுக் கொடுக்க உள்ளதால் 25 தொகுதிகளில் யார்-யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 20 பேர்களுக்கு ‘சீட்’ கிடைக்கும் என்றும் மேலும் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை முடிவு செய்து இறுதி செய்து விட வேண்டும் என்றும் மூத்த நிர்வாகிகள் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நல்ல நாள் பார்த்து 25 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-

    ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.தி.மு.க. முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள், இப்போதைய அமைச்சர்கள், அவர்களின் மகன்கள் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டுள்ளனர்.

    இதனால் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக நிச்சயம் சிலர் போர்க்கொடி தூக்குவார்கள். இதை தவிர்க்க முன் கூட்டியே வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தயாராகி வருகிறோம்.

    ஜெயலலிதா இருந்தபோது வேட்பாளர்கள் தேர்வில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் இந்த தேர்தலிலும் பின்பற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #ParliamentElection
    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்தார். #DMDK #Vijayakanth #Premalatha
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.  அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

    இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார்.

    விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    அப்போது பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-


    கேப்டன் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். பயண களைப்பால் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வேறு எதுவும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தனது முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.

    யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் அவர் அறிவிப்பார். பெரிய கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை இடம், எந்த தொகுதி என்பது குறித்தெல்லாம் கலந்து ஆலோசித்து தெரிவிப்பார்.

    இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எந்த கட்சியும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. அப்படியிருக்கும் போது தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இப்போது எப்படி சொல்ல முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ADMK #BJP #ParliamentElection
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி உருவாகி உள்ளது.

    ரகசியமாக நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது.

    பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்து அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தினார்.

    பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரியுடன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டது. யார்- யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் மட்டும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதுவை என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

    தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கும், பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்.

    அ.தி.மு.க. தனது தொகுதிகளில் த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிக்கு தலா 1 தொகுதியை விட்டுக் கொடுத்தது போக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பா.ஜனதா தனது தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 4 தொகுதிகளும், தே.மு.தி. க.வுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்தது போக மீதம் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொகுதி பங்கீடுகள் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முடிவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருகட்சி தலைவர்களும் இணைந்து வெளியிடுவார்கள்.

    பியூஷ்கோயல் வருகிற திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மீண்டும் சென்னை வந்து இறுதிக்கட்ட பேச்சு நடத்துகிறார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    பா.ஜனதாவுக்கு தென் சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதம் உள்ள 2 தொகுதிகள் திருப்பூர், பொள்ளாச்சியா? அல்லது நெல்லை, ராமநாதபுரமா? என்பதில் மட்டும் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

    பா.ம.க.வுக்கு அரக்கோணம், ஆரணி, தர்மபுரி தவிர சிதம்பரம் அல்லது விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

    என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவையும், தே.மு.தி.க.வுக்கு மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தே.மு.தி.க. கூடுதலாக சேலம் தொகுதியையும் கேட்கிறது. அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்து விட்டது.

    வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாசி பவுர்ணமி நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் தொகுதி பங்கீடு விவகாரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #ADMK #BJP #ParliamentElection
    அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

    அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச குழு ஒன்றையும் அறிவித்து இருந்தார்.

    அதன்படி துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் நாடு திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார். மகன் விஜய பிரபாகர் மட்டும் வீட்டுக்கு சென்று விட்டார்.



    காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் வெளியில் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை வரவேற்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிகாலையில் குவிந்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

    இதற்கிடையே விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் காலை 9.05 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து மகன் விஜயபிரபாகர் 9.20 மணிக்கு விமான நிலையத்திற்குள் சென்றார்.

    காலை 11 மணி அளவில் மியாட் ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு டாக்டர், 3 நர்சுகள் அடங்கிய குழுவினர் விமான நிலையத்துக்குள் சென்றதாக தகவல் வெளியானது.

    அவர்கள் விஜயகாந்தின் உடல்நிலையை பரிசோதனை செய்ததாகவும். விமான பயணத்தினால் விஜயகாந்த் சோர்வடைந்து உள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளித்ததாகவும் தெரிகிறது.

    விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
    தே.மு.தி.க.வின் கொடி நாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை மாவட்ட செயலாளர் வழங்கினார்.
    கரூர்:

    தே.மு.தி.க.வின் கொடி நாள் விழா கரூர் 1-வது வார்டு மற்றும் லைட் ஹவுஸ் கார்னரில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு நகர செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் எம்.ஆனந்த்    வரவேற்றார்.

    தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, நகர இளைஞரணி பிரநிதி பன்னீர், செயலாளர் ரவிக்குமார்,   நெசவாளர் அணி துணை செயலாளர் கன்னியப்பன், வார்டு நிர்வாகிகள் கிருஷ்ணன், சதீஷ், விக்னேஷ், பாலமுருகன், மகேஷ், சிவகுமார், லோகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.வி.தங்கவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கரூர் 1-வது வார்டு மற்றும் லைட் ஹவுஸ் கார்னரில் கட்சி கொடியேற்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

    இதில் கரூர் சட்டமன்ற பொறுப்பாளர் சோமூர் ரவி, பொருளாளர் அரிவின்ஸ், பொதுக்குழு உறுப்பினர் முருகன்  சுப்பையா, கேப்டன் மன்றம் ராஜா, சரவணன், தொழிற்சங்க துணை தலைவர் ஹரிஹரன், நகர நிர்வாகிகள் மகாமணி, பழனிவேல், ஆரியப்ப ராஜா, சிவகுமார், ராஜகுமரேசன், அண்ணாதுரை, மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழிற் சங்கதுணை செயலாளர் எம். ஆனந்த் செய்திருந்தார். #tamilnews
    பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா-பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார். #vaithilingammp #admk #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க. ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும், தி.மு.க.-காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.

    இதேபோல் டி.டி.வி. தினகரன் தனி அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனியாக தேர்தலை சந்திக்க உள்ளார்.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளை சேர்க்க ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருமான வைத்திலிங்கம் எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே:- அ.தி.மு.க. கூட்டணி பேச்சு வார்த்தை எந்த அளவில் உள்ளது. பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறதா?

    ப:- கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பேச்சு வார்த்தை முடிந்தவுடன் அறிவிப்பு வரும்.

    கே:- அ.தி.மு.க. எந்தெந்த கட்சிகளுடன் பேசி வருகிறது?

    ப:- நீங்கள் சொன்ன கட்சிகளுடன் (பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.) பேசி வருகிறோம்.

    கே:- குறிப்பாக பாரதீய ஜனதா, கூட்டணி பேச்சு வார்த்தையில் வலுவாக உள்ளதா? அ.தி.மு.க. இதில் மவுனமாக உள்ளதே? மவுனத்துக்கான காரணம் என்ன?


    ப:- கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே இது குறித்து கூட்டணி பேச்சு வார்த்தை ரகசியமாக நடப்பதாக சொல்லி உள்ளார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் வெளிப்படையாக சொல்லி விடுவார்கள்.

    கே:- இதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    ப:-இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க. கட்சிகளுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளும் இடம் பெறும் என தெரிகிறது. #vaithilingammp #admk #parliamentelection

    கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் வரும் 16-ந்தேதி காலை சென்னை திரும்புவதாக தேமுதிக அறிவித்துள்ளது. #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி அமெரிக்கா சென்றார்.

    அவருக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வருகிறார்.

    விஜயகாந்தும், பிரேமலதாவும் அமெரிக்காவில் இருப்பதால் கட்சி பணிகளை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.



    கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் சுதீஷ் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? எந்த தொகுதிகளில் நிற்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விஜயகாந்த் ஆலோசனைப்படி நடப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் வருகிற 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்.

    இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன் என்றும் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். #DMDK #BJP #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் 2 வாரத்தில் அவர் சென்னை திரும்பியதும் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும்.



    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விஜயகாந்த் கை காட்டும் தொகுதியில் களம் இறங்குவேன்.

    இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி உள்ளது. #DMDK #BJP #Vijayakanth
    ×