என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96553"
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளும் அம்மாநிலத்தில் கடும் சவாலுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.
ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் செய்யவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே பா.ஜ.க. அங்கு மீண்டும் வெற்றி பெற இயலாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கருத்துக் கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து உள்ளன.
இதனால் கணிசமான அளவு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு கொடுக்க வில்லை. அவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இது ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் பா.ஜ.க. தத்தளித்தப்படி திணறிக் கொண்டிருப்பதை அறிந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், அதற்கு ஏற்ப அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் அவர் 5 தடவை ராஜஸ்தானுக்கு சென்று ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அஜ்மரில் உள்ள ஷரிப் மற்றும் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு ராகுல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
அஜ்மர், ஜெய்சல்மார், பொக்ரான், ஜலூர், ஜோத்பூர் ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட கூட்டங்களில் ராகுல் பேச உள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியும் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய ராஜஸ்தான் சென்றுள்ளார். இதனால் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் மோடி பில் வாரா, துங்கர்பூர், கொடா ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். ராஜஸ்தானில் வரும் 5-ந் தேதி தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது.
பிரசாரத்துக்கு இன்னும் 9 நாட்களே அவகாசம் உள்ளதால் அங்கு உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. #PMModi #Rahul
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
இதில், தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொது சுகாதாரத்துறை மந்திரி சுரேந்திர கோயல் மற்றும் நாகவூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹபிபூர் ரஹ்மான் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகினர்.
இந்தநிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.
ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில தலைவர் சச்சின் பைலட் மற்றும் மாநில பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே ஆகியோர் முன்னிலையில் டவுசா ஹரிஸ் சந்திர மீனா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு வருகிற 12-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு எடுத்து வருகின்றன.
இந்த வார தொடக்கத்தில் வாக்காளர்களிடம் சி.ஓட்டர் எடுத்த கருத்து கணிப்பின்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் 150, பா.ஜனதா 45 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. மொத்த தொகுதிகள் 200.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 116 தொகுதிகளையும், பா.ஜனதா 107 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 64 தொகுதிகளும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 50-க்கும் குறைவான தொகுதிகளுமே கிடைக்கும் எனவும் சி-ஓட்டர் கூறுகிறது. மொத்த தொகுதிகள் 119.
சத்தீஷ்காரில் பா.ஜனதா 43 தொகுதிகளையும், காங்கிரஸ் 41 இடங்களையும், இதர கட்சிகள் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது. மொத்த இடங்கள் 90.
இதேபோல் 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரமில், மிசோ தேசிய முன்னணிக்கு 17, காங்கிரசுக்கு 12, சோரம் மக்கள் இயக்கத்துக்கு 9 இடங்கள் கிடைக்கும் என சி-ஓட்டர் கூறுகிறது.
அதேநேரம் சி.என்.எக்ஸ். நிறுவனம் டைம்ஸ் நவ் டி.வி.க்காக எடுத்த கருத்து கணிப்பில் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 115 இடங்களும், பா.ஜனதாவுக்கு 75 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
இதே நிறுவனம் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 122 இடங்களையும், காங்கிரஸ் 95 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளது.
சத்தீஷ்காரில் பா.ஜனதாவுக்கு 50 இடங்களும், காங்கிரசுக்கு 30 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 10 இடங்களும் கிடைக்கும் என்று சி.என்.எக்ஸ். கருத்து கணிப்பு கூறுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவமனை பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 61 - ஆக உள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 11 கர்ப்பிணி பெண்களும் அடக்கம் என்பது நினைவு கூறத்தக்கது.
டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் உருவாகும் புதிய கிருமி தொற்றான ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உணரப்பட்டது.
இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த வைரஸ் கிருமி பற்றி தெரிய வந்தது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. #Zikavirus
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்