search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சரவை"

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், கட்சியின் முக்கிய தலைவரான சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என விமர்சிக்கும் சச்சின் பைலட், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

    எனவே, நவம்பர் 11-ம் தேதி முதல் மந்திரி அசோக் கெலாட் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள 21 அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்துள்ளனர். நாளை அமைச்சரவை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். 

    நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 12-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காலியா திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஒடிசா மாநில சட்டசபையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காலியா திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தினால் ஒடிசாவில் உள்ள 32 லட்சம் விவசாயிகளில் 92 சதவீதம் பேர் பலனடைவார்கள். விவசாயிகளின் வறுமையைப் போக்கும் விதமாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    காலியா திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் தாங்கள் வாங்கிய வங்கி கடன்களை அடைக்க முடியும். இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது மட்டுமின்றி நிலமற்றவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெறமுடியும் என தெரிவித்தார். #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    பாகிஸ்தான் நாட்டில் அதிபர், பிரதமர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல் வகுப்பில் பய்ணம் செய்ய தடை விதித்து பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. #PakistanCabinet #Bansfirstclassairtravel
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில், அதிபர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில், அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, பார்லிமென்ட் மேலவை மற்றும் கீழவை தலைவர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராணுவ தளபதி எப்போதும் சாதாரண வகுப்பில் தான் பயணம் செய்வார். வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமானத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். #PakistanCabinet #Bansfirstclassairtravel
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் இழைக்காத பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 11-ந் தேதியுடன் (இன்று) 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கைது செய்யப்பட்டு இரு ஆயுள் தண்டனை காலங்கள் முடிவடைந்த பிறகும், ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    7 தமிழர்களின் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 4½ ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மத்திய அரசு சார்பில் கூறப்படும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுவதும், பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. அவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 27 ஆண்டுகளைக் கடந்தும் அப்பாவிகளின் சிறைவாசம் தொடர்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலைசெய்ய எந்தத் தடையும் இல்லை.

    ஆனால், யாருக்கோ அஞ்சி அந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகும். தமிழர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நீதிகிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி 161-வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி அவர்கள் விடுதலையாவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #KarnatakaCabinet
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைந்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.

    இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 என (முதல்வர், துணை முதல்வர் உள்பட) பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இலாகா பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆனது.

    பின்னர் முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேலிடப் பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், வேணுகோபால் ஆகியோரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர்கள் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.



    இதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அப்போது, புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும், மஜதவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்காத நிலையில், 7 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.#KarnatakaCabinet
    ×