search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96569"

    நடிகை மேகா ஆகாஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார். #MeghaAkash
    கவுதம் மேனன் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சில காரணங்களால் அப்படம் வெளிவராத நிலை உள்ளது. இதற்கிடையில் மேகாவுக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

    ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிம்பு நடித்த வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த அதர்வாவின் பூமராங் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்த அவரிடம் விஜய், அஜித், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டதற்கு ஜாலியாக பதில் அளித்தார். விஜய்யை பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்றும், அஜித்தை பார்த்தால் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும் கேட்பேன்.



    டோனியை நேரில் பார்த்தால் சட்டென ஐ லவ் யூ சொல்லிவிடுவேன். மேகா ஆகாஷின் பதிலை கண்டு விஜய், அஜித் ரசிகர்கள் பாராட்டினாலும், டோனி ரசிகர்கள் மேகாவை கிண்டல் செய்து வருகின்றனர். டோனிக்கு ஐ லவ் யூ கூறினாலும் அவர் ஏற்க மாட்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
    ‘ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான்’ என்று இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறினார். #BharatArun #Dhoni #RishabhPant
    மொகாலியில் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முக்கியமான கட்டத்தில் ஸ்டம்பிங்கை கோட்டை விட்டார். அது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

    இதுகுறித்து இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் நேற்று கேட்டபோது ‘ரிஷப் பந்தை டோனியுடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது. டோனி ஒரு ஜாம்பவான். விக்கெட் கீப்பிங் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். மேலும் கேப்டன் விராட் கோலிக்கு தேவையான நேரத்தில் ஆலோசனைகளை வழங்குகிறார்’ என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இப்போது பேட்டிங்கில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 4, 6 மற்றும் 7 என்று பல வரிசைகளிலும் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அது மட்டுமின்றி மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசுகிறார். இது அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும்’ என்றார். #BharatArun #Dhoni #RishabhPant

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நாளை (10-ந் தேதி) நடக்கிறது. இந்த போட்டியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #INDvAUS #ViratKohli #dhoni

    ராஞ்சி:

    இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன் குவித்தது.

    உஸ்மான் கவாஜா 113 பந்தில் 104 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), ஆரோன் பிஞ்ச் 93 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 281 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 32 ரன்னில் வெற்றி பெற்றது.

    வீராட் கோலி தனி ஒருவராக போராடி சதம் அடித்தார். அவர் 95 பந்தில் 123 ரன் (16 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தார். இந்த சதம் பலன் இல்லாமல் வீணானது.

    கும்மினஸ், ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-


    ஆஸ்திரேலியா 350 ரன்னுக்கு மேல் குவித்து விடும் என்று நினைத்தேன். ஆனால் நமது பவுலர்கள் ஆஸ்திரேலியாவை பின்னர் கட்டுப்படுத்தினர்.

    என்னால் முடிந்தவரை கடுமையாக போராடினேன். நான் கூடுதலாக ரன் எடுக்க நினைத்தேன். ஹம்லா சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி என்னை அவுட் செய்தார். நான் ‘அவுட்’ ஆகிய விதத்தால் அதிருப்தி அடைந்தேன்.

    அடுத்த போட்டியில் அணியில் சில மாற்றம் இருக்கும். உலக கோப்பைக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 2 போட்டியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். டோனி இந்த 2 போட்டியிலும் விளையாட மாட்டார். அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

    டோனி இடத்தில் ரி‌ஷப்பண்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக ரி‌ஷப் பண்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    இதே போல முகமது ‌ஷமி காயம் அடைந்ததால் அவர் இடத்தில் புவனேஷ்வர்குமார் களம் இறங்குவார். தவான் இடத்தில் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நாளை (10-ந் தேதி) நடக்கிறது.

    ராஞ்சி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றியை நீட்டித்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

    சர்வதேச போட்டிகளில் 16,967 ரன்கள் எடுத்திருந்த டோனி, 17 ஆயிரம் ரன்னை எட்டுவதற்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. நேற்றைய ஆட்டத்தின்போது அவர் 26 ரன்னில் ஆட்டம் இழந்தார். எனவே, 17 ஆயிரம் ரன் என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் 7 ரன் அவருக்கு தேவை. 

    இந்நிலையில், கடைசி 2 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், 17 ஆயிரம் ரன் இலக்கை எட்டுவதற்கு அவர் உலக கோப்பை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. #INDvAUS #ViratKohli #dhoni

    டோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி நேரத்தில் ஒரு ரன் எடுக்க முயற்சி செய்யவில்லை என்பதே தோல்விக்குக் காரணம் என விமர்சிக்கப்படுகிறது #SAvSL
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியா முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது. 3-வது விக்கெட்டாக ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் டோனி களம் இறங்கினார்.

    அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. டோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார். கடைசி நான்கு ஓவர்களில் பெரும்பாலும் ஒரு ரன்னிற்கு அவர் ஓடவில்லை.

    இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பியுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல், பும்ரா ஆகியோர் டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    டோனி ஆட்டம் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம்.  பாதாளத்திற்குச் சென்ற ஆட்டத்தை திரும்பவும் நல்ல நிலைமைக்கு எடுத்துச்செல்ல டோனி முயற்சி செய்தார்.



    நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு கடும் நெருக்கடி கொடுத்தோம். ஆகவே, டோனி அவரது திட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ததாக நினைக்கிறேன்’’ என்றார்.

    ‘‘டோனி 37 பந்தில் 29 ரன்கள் அடித்தது போதுமான ஸ்டிரைக்-தான். ஆடுகளத்தை பொறுத்த வரைக்கும் எந்தவொரு பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் ரன் குவிக்க இயலாத வகையில் கடினமாக இருந்தது. டோனி உலகத்தரம் வாய்ந்த பினிஷர். நடு பேட்டில் பந்தை மீட் செய்வதற்காக டோனி கடினமாக முயற்சி செய்தார்.



    இறுதியாக கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி 7 ஓவரில் அது மட்டும்தான் பவுண்டரி கோட்டை தாண்டியது. இதில் இருந்தே ஆடுகளம் எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவரும். கடைசி சில ஓவர்களுக்கு முன் டோனி இந்த சிக்ஸை அடித்திருந்தால், அது மிகப்பெரிய முயற்சியாக இருந்திருக்கும்’’ என்றார்.
    ஹாமில்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 92 ரன்களில் இந்திய அணியை சுருட்டியது. #NZvIND #TeamIndia
    ஹாமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

    இந்திய அணியைப் பொருத்தவரை எஞ்சிய இரு போட்டிகளும் சம்பிரதாய போட்டிகள்தான். எனவே, பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். தசைப்பிடிப்பால் கடந்த போட்டியில் பங்கேற்காத டோனி, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13) இருவரையும் போல்ட் விரைவில் வெளியேற்றினார். இதையடுத்து அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின்னர் இளம் வீரர் சுப்மான் கில் 9 ரன்களும், கேதர் ஜாதவ் ஒரு ரன்னும் எடுத்த நிலையில், போல்ட்டிடம் விக்கெட்டை இழந்தனர். தேனீர் இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது இந்தியா.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியபோதும், பேட்ஸ்மேன்களால் களத்தில் நீடிக்க முடியவில்லை. விறுவிறுப்பாக 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்திக் பாண்டியா, 16 ரன்னுடன் நடையைக் கட்டினார். புவனேஸ்வர் குமார் 1 ரன், குல்தீப் யாதவ் 15 ரன்கள், அகமது 5 ரன்களில் ஆட்டமிழக்க, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா, 92 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



    விராட் கோலி, டோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்  குப்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து நிகோலஸ்-கேன் வில்லியம்சன் ஜோடி விளையாடியது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி வெற்றி பெற 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #NZvIND #TeamIndia
    மவுன்ட்மவுக்னி:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ்கார்த்திக் இடம் பெற்றார். இதேபோல விஜய்சங்கர் இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு நீக்கப்பட்டதால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கிராண்ட் ஹோமுக்கு பதிலாக சான்ட்னெர் இடம் பெற்றார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது.



    59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முன்ரோ 7 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 13 ரன்னில் புவனேஷ்குமார் பந்திலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவருமான வில்லியம்சன் 28 ரன்னில் யசுவேந்திரசாஹல் பந்தில்‘அவுட்’ ஆனார்.

    4-வது விக்கெட்டான டெய்லர்- டாம்லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். டெய்லர் 71 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னும், லாதம் 68 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னும் எடுத்தனர்.

    இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டாம் லாதம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 178 ஆக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 118 ரன் எடுத்தது. அடுத்து வந்த நிக்கோலசை 6 ரன்னில் பாண்ட்யா வெளியேற்றினார். அடுத்து வந்த சான்ட்னெர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அபாரமாக விளையாடி வந்த டெய்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 93 ரன்னில் முகமது‌ஷமி பந்தில் 7-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 106 பந்தில் 9 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 222 ஆக (45.1 ஓவர்) இருந்தது.

    நியூசிலாந்து அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் எளிதில் விழுந்தன. அந்த அணி 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன் இலக்காக இருந்தது. முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    244 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா விளையாடியது. ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    அவர் 27 பந்தில் 28 ரன்னுடன் (6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 39 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு ரோகித்சர்மாவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். #NZvIND #TeamIndia
    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 325 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்ததார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. #NZvIND
    உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர் என இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
    புதுடெல்லி:

    இரண்டு உலக கோப்பையை வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்ந்தவர் டோனி.

    2007-ம் ஆண்டு அறிமுக 20 ஓவர் உலககோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலககோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணியின் 3 நிலைக்கு கேப்டனாக ஜொலித்த டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியில் மட்டும் ஆடி வந்தார்.

    கடந்த ஆண்டு அவரது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் உலககோப்பை அணியில் அவர் தேவையா? என்ற விவாதம் எழுந்தது.

    ஆனால் இந்த ஆண்டு டோனியின் தொடக்கமே அமர்களமாக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற டோனியின் ‘பேட்டிங்’ முக்கிய பங்கு வகித்தது.

    3 ஆட்டத்திலும் சேர்த்து 192 ரன்கள் குவித்தார். மூன்றிலும் அரைசதம் எடுத்து முத்திரை பதித்தார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் அவர் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

    உலககோப்பை அணியில் அவர் இடம் பெறுவதை யாராலும் இனி தடுக்க இயலாது.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் இன்னும் உலகின் சிறந்த வீரராக டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர். டோனி ஆட்டத்தை முடிக்கும் திறமையில் இருக்கும் போது யாராலும் தடுக்க இயலாது.

    அவரது ஷாட்டுகள் மிகவும் அதிரடியாக இருக்கும். அவர் தனது தந்திரமான ஆட்டத்தை சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக கையாள்வதை பலமுறை நிரூபித்துவிட்டார்.



    ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் 6-வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்வார். ஆனால் அவரையும் விட சிறந்தவராக டோனி இருக்கிறார்.

    பெவன் பவுண்டரி மூலம் தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார். டோனி சிக்கர் மூலம் ஆட்டத்தின் தன்மையை மாற்றி வெற்றி பெற வைப்பார். விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுக்க ஓடுவதில் டோனி வல்லவர். 37 வயதிலும் அவரால் ரன் எடுக்க வேகமாக ஓட முடிகிறது. ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டம் மேம்பட்டு இருப்பதற்கு 20 ஓவர் போட்டியில் ஆடுவது காரணம். புள்ளி விவரப்படி டோனி தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் உலகின் சிறந்த வீரர்.

    இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்து கவுரவப்படுத்தி உள்ளது. #ICC #Dhoni
    துபாய்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கவுரவித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் டோனியின் படத்தை வைத்து கவுரவப்படுத்தி உள்ளது.

    ஐ.சி.சி. ட்விட்டர் கவர் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள டோனியின் படத்தை அவரது ரசிகர்கள் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஐ.சி.சி.க்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். #ICC #Dhoni
    இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது. இந்திய அணிக்காக அவர் நிறைய பங்களிப்பு அளித்து இருக்கிறார் என்று கேப்டன் விராட் கோலி கூறினார். #AUSvIND #ViratKohli #Dhoni
    மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இது பேட்டிங்குக்கு சிறந்த ஆடுகளம் அல்ல. அதனால் நிலைத்து நின்று ஆட வேண்டியிருந்தது. கடைசி கட்டத்தில் நாங்கள் கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும், டோனி, ஜாதவ் ஜோடியினர் சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டனர். டோனியை நினைத்து ஒரு அணியாக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் இந்த தொடரில் கணிசமான ரன்கள் எடுத்து இருக்கிறார். எப்போதும் ரன் குவிக்கும்போது, அது பழைய நிலைக்கு திரும்பி, நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும். டோனி குறித்து வெளியில் நிறைய பேசுகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது என்பதை நாங்கள் அறிவோம்.



    இந்திய அணிக்காக அவர் நிறைய பங்களிப்பு அளித்து இருக்கிறார். மிகவும் புத்திசாலித்தனமான ஒரு கிரிக்கெட் வீரர். அணிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவரை, அவரது போக்கிலேயே விட்டுவிட வேண்டும்’ என்றார்.

    தொடர்நாயகன் விருது பெற்ற டோனி கூறுகையில், 4-வது பேட்டிங் வரிசையில் நான் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். நாம் எந்த வரிசையில் பேட்டிங் செய்கிறோம் என்பதை விட அணியின் சமச்சீர் தன்மை மாறக்கூடாது. அது தான் முக்கியம். பேட்டிங்கில் நான் எந்த வரிசையிலும் களம் காண தயாராக இருக்கிறேன். மீண்டும் 5 அல்லது 6-வது வரிசை என்றாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.

    14 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவிட்ட நிலையில், இப்போது 6-வது வரிசையில் இறங்க மாட்டேன் என்றோ, 4 அல்லது 5-வது வரிசை தான் தேவை என்றோ கூற முடியாது. அணிக்கு எந்த வரிசையில் நான் தேவைப்படுகிறனோ அந்த வரிசையில் இறங்கி விளையாடுவேன்’ என்றார். #AUSvIND #ViratKohli #Dhoni

    இந்திய அணியின் பேட்டிங்கில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு அம்பத்தி ராயுடுவை விட, டோனியே சிறந்தவர் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். #RohitSharma #India #Australia #MSDhoni
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கவில்லை. பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன். ஏனெனில் இது 300 ரன்களுக்கு மேல் எடுக்க வாய்ப்புள்ள ஆடுகளம். அதனால் 289 ரன்கள் இலக்கை சேசிங் செய்து விடலாம் என்று கருதினேன். ரோகித் சர்மா அற்புதமாக ஆடினார். டோனி அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். ஆனால் இன்னும் வேகமாக ரன் சேர்த்து இருக்கலாம்.

    டோனி ஆட்டம் இழந்ததும் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி உருவாகி விட்டது. இன்னொரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால், இலக்கை நெருங்கியிருக்க முடியும். தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது பெரும் பின்னடைவாக அமைந்தது’ என்றார்.

    சதம் அடித்த இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறுகையில், ‘பேட்டிங்கில் 4-வது வரிசையில் விளையாடுவதற்கு டோனி மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று நான் எப்போதும் நினைப்பது உண்டு. ஆனால் அம்பத்தி ராயுடு, 4-வது வரிசையில் உண்மையிலேயே சிறப்பாக ஆடியிருக்கிறார். யாரை அந்த வரிசையில் இறக்குவது என்பது முழுக்க முழுக்க கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முடிவை பொறுத்தது. தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால், டோனி 4-வது வரிசையில் பேட்டிங் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்’ என்றார்.

    மேலும் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இன்றைய (நேற்று) ஆட்டத்தில் டோனி மெதுவாக ஆடியதாக சொல்கிறீர்கள். 3 விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்த நிலையில் சிக்கலான கட்டத்தில் அவர் பேட்டிங் செய்ய வந்தார். அது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. இத்தகைய சூழலில் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைப்பது எளிதான விஷயம் அல்ல. அதனால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு விளையாடினோம். நான் கூட வேகமாக ரன்கள் எடுக்கவில்லை. நானும் என்னை நிலைநிறுத்திக்கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் இன்னொரு விக்கெட் போயிருந்தால், நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

    டி.ஆர்.எஸ். அப்பீல் வாய்ப்பு கைவசம் இருந்திருந்தால், டோனிக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூ. தீர்ப்பு மாற்றப்பட்டு இருக்குமே என்று கேட்கிறீர்கள். டி.ஆர்.எஸ்.-ஐ பயன்படுத்துவதா? வேண்டாமா என்பதை களத்தில் சட்டென்று முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. அதனால் சில நேரம் கணிப்பு தவறாக போய் விடுகிறது. அம்பத்தி ராயுடு, தனக்கு எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்ட அந்த பந்து லெக்-ஸ்டம்புக்கு வெளியே செல்வது போல் இருப்பதாக கூறினார். நானும் அப்படி தான் நினைத்தேன். அதனால் தான் அவருக்கு டி.ஆர்.எஸ்.-ன் படி முறையிட்டோம். அதற்கு பலன் கிடைக்கவில்லை. டி.ஆர்.எஸ்.-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அடிலெய்டு சென்றதும் அது குறித்து விவாதிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்போதைக்கு, இந்திய அணியில் 4-வது வரிசைக்கு அம்பத்திராயுடு தான் சரியான வீரராக இருப்பார் என்று விராட் கோலி கூறிய நிலையில், அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா கருத்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் டோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். #AUSvIND #Dhoni
    இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, நிர்யணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

    தொடக்க ஆட்டகாரரான தவானை எல்பிடபிள்யூ (கோல்டன் டக்) முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

    அதன்பின்னர் ரோகித் சர்மா, டோனி இருவரும் நிதானமாக விளையாடினர். டோனி இந்த போட்டியில் முதல் ரன்னை எடுத்தபோது, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு, சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

    ஒருநாள் போட்டிகளில் மொத்த ரன்கள் அடிப்படையில், சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். கங்குலி 11,221 ரன்களும், டிராவிட் 10,768 ரன்களும், விராட் கோலி 10,232 ரன்களும் எடுத்துள்ளனர். #AUSvIND #Dhoni
    ×