search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தூர்"

    100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் மிகவும் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் பெற்றுள்ளது.
    புதுடெல்லி:

    தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தூய்மையான நகரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது.  4,320 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருதுகளை வழங்கினார்.

    இதில், நாட்டின் மிக தூய்மையான நகரம் என்ற பெருமையை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் பெற்றுள்ளது. அதற்கான விருதை ஜனாதிபதி வழங்கினார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக தூய்மைக்கான விருதை பெற்றுள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா மூன்றவாது இடத்தையும் பிடித்தது.

    சத்தீஸ்கர் மாநிலத்திற்கு விருது

    100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தையும், மஹாராஷ்டிரா 2வது இடத்தையும் மத்திய பிரதேசம் 3வது இடத்தையும் பிடித்தன. இதேபோல் கங்கை கரையோர நகரங்களில் தூய்மையான நகரமாக வாரணாசி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதுகளையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

    மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக பரவி வரும் மர்ம வைரஸ் காய்ச்சலால் 64 பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. #indoreunknownvirus

    இந்தூர்:

    மத்தியபிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடந்த 4 மாதங்களில் அம்மாநிலத்தில் 64 பேர் பலியாகியுள்ளனர். இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள், போபாலில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    போபால் வைரஸ் ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மொத்த மாதிரிகளில், 39 பேர் பன்றி காய்ச்சலாலும், 350 பேர் டெங்கு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் 64 பேரை கொன்ற வைரஸ் எந்த வகை வைரஸ் என்பது கண்டறியப்படவில்லை எனவும் கூறினர்.

    மத்திய பிரதேசத்தில் 72 பேர் ஏற்கனவே பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஐடிஎஸ்பி அமித் மலாக்கர் கூறுகையில், ‘ஆண்டுதோறும் பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் மரபணுக்கள் மாற்றம் அடைந்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த  மருந்துகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2015-ம் ஆண்டு காலிபோர்னியா பன்றிக் காய்ச்சல், ஹெச்1என்1 இறப்பு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டபோது பெயரிடப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிச்சிகன் ஹெச்1என்1 இன்ஃப்ளூஜென்ஸா என புதிய வகை வீரியமிக்க வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கிடையில் இந்த 64 நோயாளிகளின் மாதிரிகளில் காணப்படும் வைரஸ், பொதுவான காய்ச்சலுக்கான இயல்பு  கொண்டது. இருப்பினும், வைரஸ் வகை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    இந்நோயாளிகள் கடுமையான குளிர் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. பன்றிக் காய்ச்சலைப் போல இந்நோயும் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக தாக்கி , இறப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், இது ஹெச்2என்3 எனும் புதிய தொற்றாகவும், இதற்கு அளிக்கப்படும் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் வீரியம் குறைவாகவும் உள்ளது’ என கூறினார்.

    இதுவரை 510 பேர் ஹெச்1என்1 ஆல் தாக்கப்பட்டு பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 39 பேருக்கு இந்நோய் உள்ளது. இன்னும் 16 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #indoreunknownvirus  
    மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு என காங்கிரஸ் தலைவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்த மாநிலத்தின் சில தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், ம.பி.யில் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், மோடியின் தாயார் வயதுபோல் ரூபாயின் மதிப்பும் தேய்ந்து வருகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மபியின் இந்தூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னால் இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் ரூபாயின் மதிப்பு உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.

    ஆனால், தற்போது உங்கள் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு உங்களது தாயாரின் வயதுபோல் தேய்ந்து வந்துள்ளது என தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ராஜ் பாப்பரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜின் உடல் இன்று இந்தூர் நகரில் தகனம் செய்யப்பட்டது. #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ். உதய் சிங் தேஷ்முக் என்னும் இயற்பெயரை கொண்ட இவருக்கு மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது.

    மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பய்யூ மஹராஜின் சீடர்களாக உள்ளனர். இதுதவிர பல லட்சக்கணக்கானவர்களின் ஆன்மிக குருவாக இருந்த இவர், நேற்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு ஆபத்தான நிலையில் இந்தூரில் உள்ள பாம்பே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த செய்தி பரவியதும் ஆஸ்பத்திரியின் முன்னர் அவரது சீடர்கள் பலர் திரண்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பய்யூ மஹராஜ் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததும் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    அவரது மறைவுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் செய்தி வெளியிட்டனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பய்யூ மஹராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தூரில் உள்ள அவரது ‘சூர்யோதய்’ ஆசிரமத்தில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, மகாராஷ்டிரா மந்திரி பங்கஜா முண்டே மற்றும் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


    பின்னர், இன்று பிற்பகல் அங்கிருந்து புறப்பட்ட பய்யூ மஹராஜின் இறுதி யாத்திரை சாயாஜி சுடுகாட்டை சென்றடைந்தது. வேத மந்திரங்கள் ஒலிக்க அவரது மகள் குஹு பய்யூ மஹராஜின் சிதைக்கு தீ மூட்டினார்.

    ஆன்மிக பணிகள் மட்டுமின்றி பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வந்த இவர், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் முன்னர் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஹசாரேவுக்கும் அரசுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றார். ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜுக்கு மத்தியப்பிரதேச மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் இணை மந்திரி பதவி அளிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம். #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj
    மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார். #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சமூகச் சேவைகளில் ஈடுபட்டுவந்த பிரபல ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜ். உதய் சிங் தேஷ்முக் என்னும் இயற்பெயரை கொண்ட இவருக்கு மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது.

    மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பய்யூ மஹராஜின் சீடர்களாக உள்ளனர். இதுதவிர பல லட்சக்கணக்கானவர்களின் ஆன்மிக குருவாக இருந்த இவர், இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு ஆபத்தான நிலையில் இந்தூரில் உள்ள பாம்பே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த செய்தி பரவியதும் ஆஸ்பத்திரியின் முன்னர் அவரது சீடர்கள் பலர் திரண்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பய்யூ மஹராஜ் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததும் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.



    ஆன்மிக பணிகள் மட்டுமின்றி பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வந்த இவர், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் முன்னர் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஹசாரேவுக்கும் அரசுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றார். ஆன்மிக தலைவர் பய்யூ மஹராஜுக்கு மத்தியப்பிரதேச மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் இணை மந்திரி பதவி அளிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம். #BhayyuMaharajsuicide #SpritualguruBhayyuMaharaj


    ×