search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர்"

    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றியாகும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Congressworkers #RahulGandhi #2018Electionresults
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்றிரவு சுமார் 8 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த்தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
     
    பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்றிரவு சுமார் 8 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான வெற்றி. இந்த வெற்றி காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

    ’சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் ஒன்றானவை, பா.ஜ.க.வின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டவை.

    காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களுக்கான புதிய முதல் மந்திரிகளை தேர்வு செய்வது பெரிய காரியமல்ல. அது சுமுகமாக முடிந்துவிடும். எங்களை வெற்றிபெற வைத்த மாநில மக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்து, அவர்கள் பெருமைப்படும் வகையில் அவற்றை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்.

    இந்த நாட்டின் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுத்தபோது, ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் விவசாயிகள் பிரச்சனை ஆகிய மூன்று விவகாரங்களை முன்வைத்து தேர்வு செய்தனர். பிரதமர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என்று மக்கள் மனதில் இருந்தது. ஆனால், இப்போது பிரதமரே ஊழல்வாதி என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.



    பா.ஜ.க.வை பற்றி நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை இந்த தீர்ப்பின் மூலம் பிரதமருக்கு மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

    பா.ஜ.க.வுக்கு என்றொரு சித்தாந்தம் உள்ளது. அதை எதிர்த்து போராடி நாங்கள் வெற்றி பெறுவோம். இன்று அவர்களை நாம் தோற்கடித்து இருக்கிறோம். 2019-பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம். ஆனால், யாரையும் நாங்கள் அழிக்க விரும்பவில்லை’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #victoryoffarmers #Congressworkers #RahulGandhi #2018Electionresults
    சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் முதல்வர்கள் யார்? என்பது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
     
    இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 198 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்று, 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது.



    இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மேற்கண்ட 3 மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும்.

    இதேபோல், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை (புதன்கிழமை) அந்தந்த மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது. #RahulGandhi #MPCM #RajasthanCM #ChhattisgarhCM #2018electionresults
    சத்தீஸ்கரில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுக்களை அச்சடித்த தம்பதியரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #CoupleheldforFakeCurrency
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளது ராஜேந்திர நகர். அங்குள்ள வீட்டில் கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.  

    அப்போது, ரஜத் பிரைம் காம்ப்ளக்ஸ் என்ற பிளாட்டில் வசித்து வந்த நிகில் குமார் சிங் (29), அவரது மனைவி பூனம் அகர்வால் (30), ஆகியோர் வீட்டை சோதனை செய்தனர்.

    அங்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் காகிதங்கள், கலர் பிரின்டர், லேப்டாப், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 2 செல்போன்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    விசாரணையில், கள்ள நோட்டுகளை அச்சடித்த தம்பதி பீகாரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த தம்பதியை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். #CoupleheldforFakeCurrency
    சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளின் அனல் பிரச்சாரத்துடன் இரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைந்தது. #ChattsgarhAssemblyElections #SecondPhaseCampaign
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார். 

    இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதி மற்றும் 20-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.  டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



    சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 72 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.

    கடைசி நாளான இன்று பாஜக சார்பில் பிரதமர் மோடி, முதல் மந்திரி ராமன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் மற்றும் அஜித் ஜோகி கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என தகவல் வெளியானது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign
    சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தலித் என்பதால் சீதாராம் கேசரியால் காங்கிரஸ் தலைவராக தொடர முடியவில்லை என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் சென்ற வாரம் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 72 தொகுதிகளில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. 

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் மகசமுந்த் என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் தலைவராக சீதாராம் கேசரி இருந்தபோது, அவரது 5 ஆண்டு பதவிக்காலத்தை அக்கட்சி நிறைவு பெற விடவில்லை. அவருக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. சோனியா புதிய தலைவராக வேண்டும் என்பதற்காகவும், அவர் தலித் என்பதற்காகவும் சீதாராம் கேசரி பாதியிலேயே தூக்கி வீசப்பட்டார்.



    கடந்த சில பத்தாண்டுகளாக டெல்லியில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி நடைபெற்றது. இந்த ரிமோட் ஒரு குடும்பத்தின் கைகளில் இருந்தது. அவர்களுக்கு பாஜக மீது பயம் ஏற்பட்டது. ஒரு குடும்பத்தைச் சேராத திறமை வாய்ந்த ஒருவரை கட்சி தலைவராக காங்கிரஸ் நியமிக்க முடியுமா.

    காங்கிரசை சேர்ந்த ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை ஆட்சி செய்ததை எண்ணிப் பாருங்கள். மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவர்கள் ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்தித்தனர். மக்கள் நலத்திட்டங்கள் கிடைப்பதை பற்றி சிந்திக்கவில்லை. இவர்கள் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்.

    சத்தீஸ்கரின் வளர்ச்சிக்காக ராமன் சிங் ஏராளமாக உழைத்து வருகிறார். மாநிலம் வலுப்பெற வேண்டும் என்றால், அவருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். #ChattisgarhAssemblyElections #BJP #PMModi
    சத்தீஸ்கரில் நாளை நடைபெறவுள்ள முதல் கட்ட தேர்தலின் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் படைவீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். #ChattisgarhAssemblyElections #FirstPhaseCampaign
    ராய்ப்பூர்:
     
    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கரில் நாளை (12-ம் தேதி) மற்றும் 20-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் நாளை முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.



    சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார், டி.வி. கேமராமேன் உள்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். #ChattisgarhAssemblyElections #FirstPhaseCampaign
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்களின் அனல் பிரச்சாரத்துடன் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதி மற்றும் 20-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    முதல் கட்டமாக 18 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

    சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.



    கடைசி நாளான இன்று பாஜக சார்பில் அமித் ஷா, முதல் மந்திரி ராமன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல் காந்தியும் பாஜகவை கடுமையாக தாக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல்கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 187 பேர் களத்தில் உள்ளனர். 

    சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என தகவல் வெளியானது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனாலும், 90 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress
    சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். #ChhattigarhAssemblyElections #Congress #RahulGandhi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் பகுதியில் பகன்ஜோர் நகரில் உள்ள பண்டிட் சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:



    மோடி அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. தொழிலதிபர்களின் சம்மதம் பெறாமல் மோடி எதையும் செய்வதில்லை.

    பண மதிப்பிழப்பின் போது நீங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தீர்கள். ஆனால் கருப்பு பணம் வைத்துள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை. அதே சமயம் நீரவ்மோடி , விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டனர்.

    சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ChhattigarhAssemblyElections #Congress #RahulGandhi
    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக (நவம்பர் 12, 20) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன் ராணுவ வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



    இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் தண்டேவாடா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இன்று ஆரன்பூர் காட்டுப்பகுதி வழியாக அவர்கள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசாரும் சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் மற்றும் ஆரன்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ருத்திர பிரதாப், கான்ஸ்டபிள் மங்கலு  உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #ChhattisgarhElections #Congress
    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும், மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதியும், 72 தொகுகளில் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
     


    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 17பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி ராமன் சிங்கை எதிர்த்து வாஜ்பாய் உறவினரை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ChhattisgarhElections #Congress
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி ராமன் சிங்கை எதிர்த்து வாஜ்பாய் உறவினரை நிறுத்தியுள்ளது காங்கிரஸ். #ChhattisgarhElections #Congress
    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார். 

    இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும், மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதியும், 72 தொகுகளில் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி ராமன் சிங்கை எதிர்த்து வாஜ்பாய் உறவினரை நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.



    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். பாஜக சார்பில் முதல் மந்திரி ராமன் சிங் ராஜ்நந்தகாவ் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்.

    சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #ChhattisgarhElections #Congress
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 77 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. #ChhattisgarhElections #BJP
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார். 

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நவம்பர் 12ம் தேதியும், 72 தொகுகளில் 20ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.



    இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், 77 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். முதல் மந்திரி ராமன் சிங் ராஜ்நந்தகாவ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 14 பேர் பெண்கள். 14 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இதேபோல், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 38 பேர் கொண்ட பட்டியலையும், மிசோரமில் போட்டியிடவுள்ள 13 பேர் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது. #ChhattisgarhElections #BJP
    ×