search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96604"

    புதுவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வழக்கில் கைதான வாலிபரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு பாகூர் பகுதியில் கூட்டு கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பலை பாகூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான 6 பேரிடமிருந்தும் நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் முக்கிய குற்றவாளியான கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27) என்பவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிறை வார்டன் கார்த்திகேயன் ரோந்து சென்றபோது வெடிகுண்டு வழக்கில் கைதான கார்த்திகேயன் அறையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கார்த்திகேயன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து சிறை சூப்பிரண்டு கோபிநாத்திடம் சிறை வார்டன் புகார் கூறி பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஒப்படைத்தார்.

    அதைத்தொடர்ந்து சிறை சூப்பிரண்டு காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார்.

    சாத்தான்குளம் அருகே செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    நாங்குநேரி அருகே உள்ள கீழசிந்தாமணி மேல தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் அண்டோ லிவின் (வயது 18). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் சரியாக படிக்காமல் அடிக்கடி செல்போன் பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். 

    இதில் மனமுடைந்த அண்டோ லிவின் பேய்குளத்தில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரையில் வியாபாரியை தாக்கி பணம்-செல்போன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் 2-வது பால்பூத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது46). இவர் மொத்தமாக செருப்புகளை கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டு மீதி இருந்த ரூ.61 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

    அவர்கள் பேசுவதற்கு செல்போன் தருமாறு கேட்டு உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மர்ம நபர்கள் குமாரை அடித்து கீழே தள்ளி விட்டு பையில் இருந்த ரூ.61 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களிடம் லேப்-டாப், செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பூர்:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிபவர் மன்னர் மன்னன்.

    நேற்று முன்தினம் டாக்டர் மன்னர்மன்னன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அறையில் தனது பையை வைத்து இருந்தார். ஒரு ஆபரே‌ஷனை முடித்து விட்டு அறைக்கு திரும்பினார்.

    அப்போது, லேப்-டாப் வைத்திருந்த அவருடையை பை, செல்போன், ஆகியவற்றை யாரோ திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூக்கடை புறநகர் போலீஸ் நிலையத்தில் டாக்டர் மன்னர் மன்னன் புகார் செய்தார். இஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்தார்.

    இதையடுத்து, உதவி கமி‌ஷனர் லட்சுமணன், மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று டாக்டரிடம் திருடிய வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவருடைய பெயர் விமல்பாபு (39). விசாரணையில் இவர், கே.எம்.சி., ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்களிடம் திருடியது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 3 லேப்-டாப், 2 டேப்லட், 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விமல்பாபு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வென்று ஜெயலலிதாவின் சமாதியில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPS #ADMK

    சென்னை:

    வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பெரம்பூரில் மாவட்ட செயலாளர் ‌ ஆர். எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்தது பெரம்பூர் பகுதி செயலாளர் ஜெ.கே.ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரு மாநிலத்தில் 27 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான். 17 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்தவர் அம்மா அம்மாவின் ஆசியால் நல்லாட்சி அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    18 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட கட்சியை 1½ கோடி தொண்டர்களாக மாற்றியவர் ஜெயலலிதா. பலர் செய்த சதிகளை எல்லாம் சந்தித்து துணிவுடன் வெற்றி கண்டார்.

    சாதாரண தொண்டனான நாங்களெல்லாம் இந்த பதவிக்கு வந்துள்ளோம் இது தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. அம்மாவின் எண்ணப்படி நூறு ஆண்டுகள் என்ன ஆயிரம் ஆண்டுகளும் இந்த ஆட்சியையும் கட்சியையும் நடத்துவோம். அம்மாவின் நம்பிக்கை நாங்கள் காப்பாற்றுவோம்.

    நாம் அமைத்திருப்பது மெகா கூட்டணி இந்தியாவிலேயே மகத்தான இந்தக் கூட்டணி நம்முடன் இப்போது பா.ம.க. இணைந்துள்ளது இந்த கூட்டணி கண்டிப்பாக ஒரு வெற்றி கூட்டணியாக மாறும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் கூட்டணி கட்சி நிற்கும் தொகுதிகளிலும் அ.தி.மு.க. நிற்பதுபோல் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை அம்மாவின் சமாதியில் சமர்ப்பிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் 23 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன், ஜெயபிரகாசம், பாஸ்கர், ஜனார்த்தனன், கிருஷ்ணவேணி, கணேசன், மாரிமுத்து, மாரியம்மாள், இளங்கோவன், சூசை, சுந்தரலிங்கம், வெற்றி வேந்தன், அஞ்சுலட்சுமி, புகழேந்தி, மூர்த்தி, பாலமுருகன், தேவா, இளங்கோவன், அகஸ்டின், வினோத்குமார், கார்த்திக், புருஷோத்தமன், ரமேஷ், நவீன், சத்தியமூர்த்தி, தினேஷ்குமார், வாஞ்சிநாதன், தமிழரசன், தனசேகர், ராஜேஷ், பாலாஜி, ராஜவேலு, சுரேஷ், கணேசன், பார்த்திபன், புவனேஸ்வரி, செல்வராணி, தனபாலன், வீரமருதுபாண்டியன், ராஜி, ராமதிலகம், செந்தில், மனோகரன், ரத்தினவேல், வினோத், தாமோதரன், வேலு, ‌ஷகிலா, கண்ணா, செல்வி, முருகன், அலெக்ஸ், நரசிம்மன், மூர்த்தி, வாசுகி, எம்.எம்.கோபி, டைகர் தயாநிதி, சுஜாதா, மதன கோபால், லாலுபாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். #OPS #ADMK

    ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan #Parliamentelection

    கூத்தாநல்லூர்:

    அமமுக சார்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில்நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    தமிழகத்தில் தேர்தல் குறித்த எந்த கவலையுமின்றி, மக்கள் பணியாற்றுவதிலும், மக்களை சந்திப்பு என செயல்படுவதும் அ.ம.மு.க.மட்டும் தான். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் எந்த கட்சியும் தனித்து நின்று வென்றதில்லை, ஆனால் ஜெயலலிதா மோடியா, லேடியா என்ற கேள்வியை எழுப்பியதால் தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்து வெற்றி பெற்று இந்திய அளவில் 3-வது பெரிய கட்சி என்ற சாதனையை நடத்தி காட்டினார். அவரது அந்த துணிவு இன்றைக்கு டி.டி.வி.தினகரனிடம் உள்ளது.

     


    தேசிய கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று அறிவிக்கிற துணிச்சல் நம்மிடம் இருப்பதால்தான், ஜெயலலிதா வழியில் தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை பொறுக்க முடியாததால் தான் நீட் தேர்வு முறையை கொண்டு வந்தனர். 1197 மதிப்பெண்களை பெற்ற அனிதா நீட்தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். மடியில் கனம் இருந்த காரணத்தால் மத்திய அரசை இப்பிரச்சினையில் எதிர்க்கும் துணிவை இழந்தனர். ஆனால் மீத்தேன், நீட் தேர்வு என மக்களுக்கு எதிரான திட்டங்களை, எதிர்க்கிற ஒரே தலைவர், தினகரன் மட்டும் தான்.

    ஜெயலலிதா அறிவித்த செல்போன் வழங்கும் திட்டம் 2 வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் நியாயமான கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாகும். அவர்களிடம் பிடித்த பணத்தை திரும்ப தரவேண்டும் என்றும் போராடினார்கள். ஆனால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி இல்லை என்று கூறினார். ஆனால் ஒருபுறம் பொங்கல் பரிசுக்காக ரூ 2500 கோடியை ஒதுக்கினார்.

    1952-ல் இருந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சிகளோடு, மாநில கட்சிகள் கூட்டு சேர்ந்ததால் தான், மாநில உரிமைகளை இழக்க நேருகிறது. மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்போது, தடுக்க முடிவதில்லை. அதனால்தான் அ.ம.மு.க. தேசிய கட்சியோடு கூட்டணி கிடையாது என்கிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வெற்றி பெற்று 'அரசியல் அதிசயம்' என்கிற சாதனையை நிகழ்த்தி காட்ட போகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #ThangaTamilselvan #Parliamentelection

    சுசீந்திரம் அருகே செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மேலகிருஷ்ணன்புதூர்:

    சுசீந்திரம் அருகே வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் அஜய்(வயது 18). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் சரியாக கல்லூரிக்கு செல்லாம் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    அஜய் தனது பெற்றோரிடம் புதிய செல்போன் வாங்கித்தருமாறு கேட்டு வந்தார். ஆனால், பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்காமல் இருந்து வந்தனர். பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்காததால் அஜய் மணமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர் மகன் வி‌ஷம் குடித்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அஜய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்ணன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செல்போன் வாங்கித் தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த செல்போன் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 3-வது நடைமேடையில் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் ராம்நாடு, பரமகுடி, பூம்பூரை சேர்ந்த பிரபாகரன்(வயது30) என்பதும், செல்போன் திருடன் என்பதும் தெரிய வந்தது. பலரிடம் கை வரிசை காட்டி உள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போச்சம்பள்ளி அருகே காணாமல்போன மனைவியை செல்போன் நெம்பரை வைத்து மீட்டு கணவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை(30). இவரும் இதே பகுதியை சேர்ந்த மாலதி (27) என்பவரும் கடந்த 4 வருடங்ளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

    தனது மனைவி மாலதி காணவில்லை என்று கணவர் தங்கதுரை கடந்த 5.12.2018 அன்று பாரூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதியை தேடிவந்தனர். 

    இந்த நிலையில் மாலதியிடம் உள்ள செல்போன் நெம்பரை வைத்து டிரெக் செய்ததில் அவர் ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் என்ற இடத்தில் இருப்பதாக தெரியவந்தது.

    மேலும் மாலதி அவரின் தோழி வீட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து, அங்குசென்று மாலதியையும், குழந்தையையும் அழைத்து வந்து பின்னர், கணவர் தங்கதுரையிடம்  ஒப்படைத்தனர்.
    போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.
    செல்போன் இன்று உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கிறது. அதுவும் பல்வேறு வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு பெரும்பாலானோர் மாறி விட்டனர். ஆனால், இந்த போன்களால் நமக்கு பலவகை ஆபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் செல்போன் வைத்திருக்கும் பல வகை அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக கூறப்படுகிறது.

    போனில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம். பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.

    உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை இன்ஸ்டால் செய்வதாக வைத்து கொள்வோம். அப்போது கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ் போன்றபலவற்றிற்கு அனுமதி அளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும். ஆனால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச்சரியான விளம்பரங்களை உங்களது போனுக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

    இதேபோன்று பல்வேறு செயலிகளில் முற்றிலும் சம்பந்தமே இல்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜி.பி.எஸ்., நெட்ஒர்க் செயல்பாடு, வைபை, மற்ற ஆப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் - முடக்குதல், ஐ.எம்.இ.ஐ. எண் போனை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற, நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சினையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.

    போனில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோல் அந்த ரங்க தகவல்களையும் எடுத்து கொண்டும் கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணைய தளங்கள் உங்களுக்கு தெரியாமலேயே கூகுள் சேகரிக்கும் பட்டியல் மிகவும் நீண்டது. இந்த காலத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்களை கண்டறிய முடியாத அளவுக்கு அவற்றின் பயன்பாடு மிகப் பெரியளவில் விரிவடைந்துள்ளது.



    பேஸ்புக் பயன்பாட்டாளர்கள், அதில் ஒரு பதிவை பகிரும் போது அதை யார் யாரெல்லாம் பார்க்க முடியும் என்று தேர்ந்தெடுக்கலாம். அதன்படி, பேஸ்புக்கின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையின் காரணமாக சுமார் 14 மில்லியன் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பொதுவாக தெரிவு செய்யும் “ஒன்லி மீ” என்பதற்கு பதிலாக “பப்ளிக்கில்” பதிவுகளை போட்டிருக்கக் கூடும் என்று சமீபத்தில் அந்நிறுவனம் எச்சரித்திருந்தது. இதன் மூலம் தங்களது அந்தரங்க தகவல்களை தங்களுக்கு தெரியாமலேயே பயனாளர்கள் பொதுவெளியில் பகிர்ந்திருக்கக் கூடும்.

    கைபேசி செயலிகளை போன்றே பேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும் போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.

    இதுபோன்ற செயலிகள் சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான வீடியோ, புகைப்படங்கள், இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன. இலவச கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு, கருத்துக் கணிப்பில் பங்கேற்றால் இலவச கூப்பன், பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி, புதிய கணக்கை தொடங்கினால் வாங்கும் பொருளில் தள்ளு படி போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலரும் தங்களது அந்தரங்க தகவல்களை அளித்து நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உள்நுழைகின்றனர்.

    மேற்குறிப்பிடப்பட்டது போன்ற விளம்பரங்களை நம்பி முன்பின் தெரியாத இணையதளங்களில் அந்தரங்க தகவல்களை அளித்த பயனீட்டாளர்களுக்கு என்றாவது ஒரு நாள், தன்னுடைய போட்டோ மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும்போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படும் போதோ தான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.

    ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்துக்கும் ‘அக்சப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தான் அதன் வீரியம் புரிகிறது.
    ஆண்டிப்பட்டி அருகே செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வைகைபுதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன். இவர் வைகை அணை பொதுப்பணித்துறையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சாருக்கா பாண்டிஸ்ரீ (வயது16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் தாயார் கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த சாருக்கா பாண்டிஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சமீப காலமாக பள்ளி மாணவ-மாணவிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு காலகட்டத்தில் அதற்கு அடிமையாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ-மாணவிகளை அவரது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    செல்போனில் அதிகம் பேசுவது, விளையாடுவது போன்றவற்றால் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் மனதளவிலும் பாதிக்கப்படும் அவர்கள் சிறிய ஏமாற்றத்தை கூட தாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

    இதன் காரணமாகவே இளம்வயதில் தற்கொலை உள்ளிட்ட ஆபத்தான முடிவுகளை எடுக்கின்றனர். எனவே பள்ளிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் இளவயதினர் இடுப்பு வலிக்கு ஆளாயினர். மொபைல் போன் வந்தபிறகு இளவயதினருக்கு கழுத்துவலி வரத் தொடங்கி இருக்கிறது.
    நம் கையில் எப்போதும் ஒட்டிக் கிடக்கிறது செல்போன். நமது உடலின் ஒரு அங்கம் என்று கூட சொல்லலாம்.

    கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் இளவயதினர் இடுப்பு வலிக்கு ஆளாயினர். மொபைல் போன் வந்தபிறகு இளவயதினருக்கு கழுத்துவலி வரத் தொடங்கி இருக்கிறது.

    தலையின் சராசரி எடை சுமார் 5 கிலோ. செல்போன் திரையை பார்க்க கீழ்நோக்கி குனியும்போது கழுத்தின் மீது தலை செலுத்தும் விசையின் அளவு கூடுகிறது.

    குனியும் கோணத்துக்கு ஏற்ப தலையின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் கழுத்து தசைகள் களைப் படைந்து கழுத்து வலி, தோல் பட்டைவலி, தலைவலி உண்டாகிறது.



    அழுத்தம் காரணமாக ஜவ்வுகள் வெளியே துருத்தி வந்து கை நரம்புகளை அழுத்துவதால் கை குடைச்சல் மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இளம் வயதிலேயே எலும்பு தேய்வதும் நடக்கிறது.

    தடுப்பதற்கான வழிகள்:

    * அதிக நேரம் செல்போன் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு ஒரு முறை பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * மிக முக்கியமாக செல்போனை முகத்துக்கு நேராக வைத்து பார்க்க வேண்டும். கீழே குனிந்து பார்ப்பது நல்லதல்ல.

    * படுத்துக்கொண்டு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * கழுத்து தசைகளை பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
    ×