search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96604"

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DGP #Cellphone #Police
    சென்னை:

    கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி அன்று போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

    அந்த சுற்றறிக்கையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சமீபத்தில் சட்டசபை கூட்டம் நடந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் செல்போனை பயன்படுத்தினார்கள்.

    செல்போனை பயன்படுத்திய 6 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பணி நேரங்களில் போக்குவரத்து போலீசார் செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.

    செல்போனை பணி நேரங்களில் பயன்படுத்தும் போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்தநிலையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்தார்.

    அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போனை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது என்றும், அதைமீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு இந்த விதிமுறை பொருந்தும். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போராட்ட சம்பவங்களில் பாதுகாப்பு, திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடும் போலீசார் கண்டிப்பாக செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DGP #Cellphone #Police

    செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
    இன்று பல வீடுகளில் குழந்தைகளை சமாதானப்படுத்தும் சாதனம் செல்போன்தான். அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க, நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.

    செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.

    தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

    நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.

    இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், 14 வயதுடைய ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.



    இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.

    அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.

    ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.

    அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
    கன்னங்குறிச்சியில் செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ஆறுமுகஅய்யர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மணிகண்டன் என்ற பிரபு (வயது 25).

    ஐ.டி.ஐ.படித்துள்ள இவர் சேலத்தில் உள்ள ஒரு கார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களாக தனது பெற்றோரிடம் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி தரும்படி மணிகண்டன் கேட்டு வந்தார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி வாங்கி தருவதாக அவரது பெற்றோர் கூறி வந்தனர். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்தும் செல்போன் வாங்கி தர வில்லையே என்று மணிகண்டன் மீண்டும் கேட்டார். அப்போது விரைவில் வாங்கி தருவதாக கூறினர்.

    நேற்றிரவு 11 மணியளவில் தனது அறைக்கு மணிகண்டன் தூங்க சென்றனர். அப்போது நீண்ட நேரமாக அறை விளக்குகள் எரிந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டினர். கதவை திறக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறினர். உடனே அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போன் வாங்கி கொடுக்காததால் வாலிபர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமாவரம் போலீஸ் அதிகாரியிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர் வைகை தெரு சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் உமாசங்கர். இவர் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.

    கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி உமாசங்கர் கிண்டி போரூர் டிரங்க் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3பேர் கும்பல் உமாசங்கர் பைக் மீது மோதினர்.

    இதை தட்டி கேட்ட உமாசங்கரிடம் குடிபோதையில் இருந்த 3 பேரும் தகராறில் ஈடுபட்டனர். தீடீரென உமாசங்கரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

    போலீஸ் அதிகாரியை தாக்கி செல்போன் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உத்தரவிட்டார்.

    ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் கார் எண் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது பறித்து சென்ற செல்போனை அவர்கள் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்து உமாசங்கரை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ராமாபுரம் வள்ளுவர் சாலையை சேர்ந்த கமலக்கண்ணன், சங்கர், ராஜ்குமார் என்பது தெரிய வந்தது.

    3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    தேனியில் மில் காவலாளியிடம் செல்போன்- பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கருவேலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னமுத்து(வயது74). இவர் தேனி தொழிற்பேட்டையில் உள்ள பருப்பு மில்லில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தேனி-கருவேலநாயக்கன்பட்டி சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சின்னமுத்துவை மிரட்டினர்.

    மேலும் அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.800 பணத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி நகர் மற்றும் புறநகர் பகுதியில் தனியாக செல்லும் நபர்களிடம் நகை-பணம் பறிப்பது அதிகரித்துள்ளது. மேலும் நடைபயிற்சி செல்லும் பெண்களை குறிவைத்து செயின்பறிப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட பீதி

    ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
    வெறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்பதை தாண்டி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய அத்தியாவசியமான ஒன்றாக கைபேசிகள் உருவெடுத்துள்ள அதே வேளையில், இதுவரை நாம் அறியாத பிரச்சனைகளின் பிறப்பிடமாகவும் கைபேசிகள் உள்ளன.

    குறிப்பாக, உங்களது கைபேசியில் எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்வதற்கு ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆஃப் ஸ்டோருக்கோ சென்று செயலிகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் தானே? என்றாவது நீங்கள் பயன்படுத்தும் செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அது கேட்கும் அனுமதிகளை பார்த்தீர்களானால் அதிர்ச்சியடைய நேரிடும்.

    உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

    இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள், அதிலுள்ள ஆபத்தை உணராமல் ஜிபிஎஸ், நெட்ஒர்க் செயல்பாடு, வைஃபை, மற்ற ஆஃப்களின் செயல்பாட்டை கண்காணித்தல் & முடக்குதல், ஐஎம்இஐ எண், கைபேசியை அணையாமல் இருக்க செய்தல், தகவல்களை மாற்ற/ நீக்க அனுமதி போன்ற பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.



    உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களது கைபேசியில் இருக்கும் புகைப்படங்கள், காணொளிகள், ஆவணங்கள் போன்றவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அந்த செயலிகள் தனது சர்வர்களில் பதிவேற்றம் செய்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது.

    கைபேசி செயலிகளை போன்றே ஃபேஸ்புக்கை முதலாக கொண்டு ஒரு இணையதளத்தில் கணக்கை ஆரம்பிக்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போது நீங்கள் அந்தரங்கமாக வைத்திருக்கும் தகவல்கள், பதிவுகள், நண்பர்களின் தகவல்கள், உங்களது நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு ஏதோவொரு செயலின் வடிவமைப்பாளருக்கு அதிலுள்ள ஆபத்து தெரியாமல் பலரும் அனுமதி தருகிறார்கள்.

    இதுபோன்ற செயலிகள், சில நேரங்களில் உங்களது கணக்கை பயன்படுத்தி உங்களது நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பியதாக தவறான காணொளிகள்/ புகைப்படங்கள்/ இணையதள இணைப்புகளை பகிரும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

    ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் ‘அக்சஃப்ட்’ கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது.

    மேற்கண்ட தகவல்களை ஒரு குறிப்பிட்ட ஆப்பை உருவாக்குபவர் தவறாக பயன்படுத்தினால், உங்களது அந்தரங்க தகவல்களின் நிலை என்னவாகும் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள். 
    வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஷியாம்சுந்தர். இவரது நண்பர் வெங்கடேஷ்குமார். இருவரும் கல்லூரி மாணவர்கள்.

    நேற்று இரவு ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாருடன் வில்லிவாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே உள்ள செல்போன் கடைக்கு சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாரை தாக்கினர்.

    பின்னர் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே காலி மைதானத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன், பணம், மோதிரத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

    இதுகுறித்து ஐ.சி.எப். போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் வருமாறு:-

    இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்கள் வாங்குவதற்கும் பதிப்பகங்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 11 பேர் கொண்ட கல்வியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகத்தை மேலும் நவீனப்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது புதிய பாடத்திட்டங்களை மாணவர்கள் படிப்பதற்காக பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளில் ஒரே நேரத்தில் பார்த்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேர் விபத்தில் சிக்கியதால், போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பேரையூர்:

    திருமங்கலம் கலை நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஸ்வம் (வயது 16) தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று கடைக்குச் சென்ற விஸ்வம், கையில் செல்போனை எடுத்துச் சென்றார். அதனை பார்த்துக் கொண்டே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் விஸ்வத்தின் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் விஸ்வம் புகார் செய்தார். அப்போது செல்போன் பறித்த மர்ம நபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் நம்பர் பற்றியும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு 11 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அது செல்போன் பறித்தவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது.

    அதில் வந்த லோகேஸ்வரன் (25), ராகுல் ரோ‌ஷன் (18) ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர் அருகே செல்போன் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    கம்பம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே வசித்து வருபவர் கர்ணன் (வயது 53). இவர் சம்பவத்தன்று கூடலூரில் இருந்து கம்பத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென பைக் பழுதானது. இதனால் அதனை நிறுத்தி சரி செய்து கொண்டு இருந்தார். தனது செல்போனை பைக் மீது வைத்து விட்டு ரிப்பேர் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்றனர்.

    கர்ணன் சத்தம் போட்டு அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்களை விரட்டி பிடித்தார். பின்னர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கே.கே.பட்டி கருமாரிபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி (26), கார்த்திக் (24) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள்.
    நமக்கு முந்தைய தலைமுறையினர் சட்டைப்பையில் ஒரு சின்ன நோட்புக்கும், ஒரு பேனாவும் சொருகி வைத்துக் கொண்டு திரிந்தார்கள். அந்த புத்தகம் தான் அவர்களுடைய ஒட்டு மொத்த கணக்கு வழக்குகளுக்கு மான ஆதாரம். அதில் தான் விலாசங்களும், தொலைபேசி எண்களும், கடன் பாக்கிகளும் எழுதப்பட்டிருக்கும். இன்றைக்கு அது டிஜிட்டல் மயமாகிவிட்டது. நமது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் நமது நடமாடும் தகவல் பெட்டகம். தொலைபேசி எண்களானாலும் சரி, தகவல்களானாலும் சரி, வங்கிக்கணக்கு விஷயங்களானாலும் சரி எல்லாமே அந்த கையடக்க பெட்டிக்குள் டிஜிட்டல் வடிவத்தில் இளைப்பாறுகின்றன.

    டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானதா? எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள். அது தருகின்ற வசதிக்காக, சில சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். உதாரணமாக நீண்ட நெடிய கியூவில் சில மணி நேரங்கள் காத்திருப்பதை விட ஒரு சின்ன ஆபத்து வரலாம் எனும் எச்சரிக்கை உணர்வுடன் ஆன்லைனில் பில் கட்டுவதையே மக்கள் இன்று விரும்புகின்றனர். தியேட்டரில் கவுண்டர் முன்னால் அதிகாலையிலேயே நின்று மண்டை உடைய, ரத்தம் சொட்டச் சொட்ட முதல் காட்சி டிக்கெட் வாங்கியதெல்லாம் வரலாறுகளாகிவிட்டன. இன்று ஏதோ ஒரு ஆப் தான் நமக்கு டிக்கெட்களை வசதியாய் வாங்கித் தருகிறது.

    வணிகம் எப்போதும் மக்களுடைய வசதிக்கு ஏற்ப கடைகளை விரித்துக் கொண்டே இருக்கும். இன்றைக்கு மக்களின் டிஜிட்டல் பயன்பாட்டை முன்னிறுத்தி தான் ஏகப்பட்ட புதிய பிஸினஸ் முறைகள் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. டிஜிட்டலைத் தொடாத எந்த தொழிலும் இனிமேல் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத விதி. அது உணவகம், மருத்துவம் போன்ற அடிப்படை விஷயங்களானாலும் கூட. அந்தவகையில் டிஜிட்டல் வாலெட்கள் இன்றைக்கு வசீகர அம்சமாக மாறியிருப்பதற்கும், புதிது புதிதாய் முளைத்தெழும்புவதற்கும் அது தான் காரணம். உதாரணமாக பே டி எம், மொபிவிக், பே-யு, கூகுள் பே, ஆப்பிள் பே, ஓலா மணி என ஏகப்பட்ட வாலெட் சேவைகள் இன்றைக்கு களத்தில் குதித்திருக்கின்றன. அவற்றில் சில, மிக வெற்றிகரமாக காலூன்றியும் இருக்கின்றன.

    பயனர்களுக்கு எதைப் பயன்படுத்தலாம்?, எது நல்லது?, எது ஆபத்தில்லாதது? எனும் கேள்விகள் எழுவது சகஜம். குறிப்பாக சில டிஜிட்டல் வாலெட் நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடிகளை அள்ளி வீசுகின்றன, ஏகப்பட்ட ‘கேஷ் பேக்’ ஆபர்களையும் கொட்டித் தருகின்றன. டிஜிட்டல் வாலெட்டுகளின் மூலம் பணம் அனுப்பினாலும், வரப்பெற்றாலும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கின்றன. கூடவே ‘ஸ்கிராட்ச் கார்ட்’ ஆபர்களும் கிடைப்பதால், டிஜிட்டல் வாலெட்டை மக்கள் அதிகமாக பயன் படுத்துகின்றனர்.

    இதற்கிடையில் இந்த இணையதளத்தில் வாங்கினால் இவ்வளவு சலுகை, அந்த இணையதளத்தில் அவ்வளவு ஆபர்... என கவர்ச்சி வலைகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ‘லாபம்’ எனும் விஷயம் இல்லாமல் எந்த நிறுவனமும் அதன் சுண்டு விரலைக் கூட பயனர்களை நோக்கி நீட்டுவதில்லை. பெரும்பாலான டிஜிட்டல் வாலெட் நிறுவனங்களும், மொபைல் அப்ளிகேஷன்களும் அப்படித் தான்.

    இவை பயனர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு பாலம் போல இருக்கின்றன. பயனர்களின் தேவையை, விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி தங்கள் மூலமாக பரிவர்த்தனை செய்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு லாபம் பல வகைகளில் வருகின்றன. ஒன்று, விற்பனையாளர்களிடமிருந்து ஒரு தொகையை கமிஷனாகப் பெறுகின்றன. சில சேவைகளுக்கு பயனர்களிடமிருந்தே கட்டணத்தைப் பெறுகின்றன. இன்னொன்று தங்கள் மூலமாக நடைபெறும் மொத்த பரிவர்த்தனைகளின் மூலம் சேரும் பல கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட காலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து பல இடங்களில் முதலீடு செய்கின்றன.

    வங்கியின் மூலம் நடக்கவேண்டிய பணப்பரிமாற்றம், தனியார் நிறுவனங்களின் வழியே நடப்பதனால், அதில் கிடைக்கும் லாபத்தின் சில பங்கை நமக்கு ‘ஆபர்’ என்ற பெயரில் கொடுக்கிறார்கள். இப்படி சின்ன மீனை ‘ஆபர்’ என்ற பெயரில் அள்ளி வீசுவது, ‘பெரிய பரிவர்த்தனை’ என்ற மீனை பிடிக்கத்தான். ஏனெனில் ஒருசில ஆயிரங்களை பரிமாற்றம் செய்யும்போதே கொள்ளை லாபம் கிடைக்கிறது என்றால், பரிவர்த்தனை லட்சங்களை தொட்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில்தான் நமக்கு ஆபர்கள் கிடைக்கின்றன. இந்த ஆபர்களுக்கு நமக்கு டிஜிட்டல் பணமாகவே கிடைக்கிறது. உதாரணமாக, உங் களுக்கு 300 ரூபாய் பணம் திரும்ப வருகிற தெனில் அது உங்கள் பாக்கெட்டில் பணமாக வருவதில்லை. ஏதோ ஒரு டிஜிட்டல் வடிவத்தில் தான் தருகின்றன.

    உண்மையில் அந்த பணம் நீங்கள் பயன்படுத்தும் வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஒரு கோடி பேருக்கு 300 ரூபாய் கிடைத்தால் அந்த முன்னூறு கோடி ரூபாயும் உண்மையில் அவர்களிடம் தான் இருக்கும். இந்த பணத்தை வைத்திருக்கின்ற வங்கியும் நிறுவனத்துக்கு வட்டி கொடுக்கும். அந்த பணத்தை முதலீடு செய்யும்போதும் கணிசமான லாபம் கிடைக்கும். அந்த பரிவர்த்தனைகளுக்கும் நல்ல கட்டணம் கிடைக்கும். இவையெல்லாம் போக விளம்பரங்களை தளங்களில் வெளியிடு வதன் மூலமும் பணம் கிடைக்கும்.

    இந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் ஆபத்து உண்டா? என்றால் சில ஆபத்துகள் உண்டு என்பதே பதில். உதாரணமாக, இவை உங்களுக்கும் உங்களுடைய வங்கிக்கும் இடையேயான பாலமாக இருக்கின்றன. உங்களுடைய முக்கியமான தகவல்கள் இந்த இடை நிறுவனத்திற்குக் கிடைக்கிறது. அவற்றை அவை தவறாகப் பயன்படுத்துவதில்லை, காரணம் நீங்கள் அவர்களுடைய கஸ்டமர். ஆனால் அவர்களிடமிருந்து அவை திருடப்படலாம், ஹேக்கர்களால் கடத்திச் செல்லப்படலாம் எனும் ஆபத்து உண்டு.



    எனினும், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இத்தகைய நிறுவனங்களின் பாதுகாப்பையும் ‘என்கிரிப்ஷன் டெக்னாலஜி’ மூலமாக உறுதி செய்கின்றன. இதன்மூலம் தகவல்கள் திருடப்படுவது குறையும். ஆயிரம் தான் இருந்தாலும், டிஜிட்டல் பயன் பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு. டிஜிட்டலை முழுமையாய் ஒதுக்கி விடவே முடியாது எனும் காலகட்டத்தில் நாம் வாழ் கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்த சூழல் உருவாகியிருக்கிறது. இத்தகைய சூழலில் பாதுகாப்பாய் இருக்க இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:

    1. டிஜிட்டல் வாலெட் அப்ளிகேஷன்களில் சிரமம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்டு பயன் படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள்.

    2. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    3. பொது வை-பைகளில் அதை இணைக்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் வை-பையை அணைத்தே வையுங்கள்.

    4. புதிதாக வருகின்ற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.

    5. எந்த ஆப் பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்தியபின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள்.

    6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என கவனியுங்கள்.

    7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

    8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

    9. சந்தேகத்திற்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.

    10. உங்கள் பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு போன்ற அனைத்தையும் பாதுகாப்பாகவே வைத்திருங்கள்.

    பரிவர்த்தனை முறைகள்

    யூ.பி.ஐ. UPI (Unified platform interface), பி.எச்.ஐ.எம். BHIM (Bharath Interface for Money), ஐ.எம்.பி.எஸ். IMPS (Immediate Payment Service), பி.பி.பி.எஸ். BBPS (Bharat Bill Payment System) போன்றவையெல்லாம் இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள். இவற்றில் யூ.பி.ஐ. (UPI) இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. உங்களுடைய மொபைல் எண்ணையோ, பயனர் சொல்லையோ மட்டும் வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்யும் எளிய முறை இது. இதன் மூலம் நமது வங்கிக் கணக்கு எண்ணையோ, தகவல்களையோ எங்கும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. உடனடியாகப் பணப் பரிமாற்றம் நடக்கும். இது பாதுகாப்பானது, ஆர்.பி.ஐ-யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படக் கூடியது என்பதால் நம்பிக்கையானது. இந்திய அரசின் டிஜிட்டல் கனவுக்குக் கைகொடுக்கப் போவது இது தான்.

    எந்த ஆப்கள் சிறந்தது?


    எல்லா வங்கிகளும் தங்களுக்கென தனியே மொபைல் ஆப்களை வைத்திருக்கின்றன. முடிந்தவரை அவற்றையே பயன் படுத்துங்கள். ‘தேர்ட் பார்ட்டி’ எனப்படும் வெளி ஆப்கள் மூலமாக உங்களுடைய வங்கியைத் தொடர்பு கொள்ளும் ஆப்களை முடிந்தவரை நீங்கள் தவிர்க்கலாம். உங்களுடைய வாகனத்தை முறையான சர்வீஸ் சென்டரில் விடுவதற்கும், ஏதோ ஒரு கடையில் சர்வீஸுக்கு விடுவதற்கும் இடையேயான வித்தியாசம் என இதைப் புரிந்து கொள்ளலாம்.

    பாதுகாப்பான அப்ளிகேஷனை தேர்ந்தெடுங்கள்

    இது டிஜிட்டல் யுகம். இன்னும் சிறிது காலத்தில் ஏ.டி.எம். எனும் ஒரு விஷயமே அபூர்வமாகிவிடும். எல்லாமே மொபைல் மூலமாக அல்லது அணியும் தொழில்நுட்பம் மூலமாக நடக்கின்ற பரிவர்த்தனைகளாக மாறிவிடும். விரும்பியோ, விரும்பாமலோ இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் அனைவரும் இணையும் நிலை உருவாகி வருகிறது. எனவே பாதுகாப்பான, நல்ல ஆப்களை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்குவது நல்லது.

    சேவியர்
    உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷிய அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார். #VladimirPutin #Smartphone #Kremlin
    மாஸ்கோ:

    உலகமெங்கும் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. அடுத்த ஆண்டு உலகளவில் செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 468 கோடியை எட்டி விடும், 2020-ம் ஆண்டு 478 கோடி ஆகிவிடும் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

    ஆனால் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷிய அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை. அவரிடம் செல்போன் கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை கிரெம்ளின் மாளிகை (அதிபர் மாளிகை) செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.

    “அப்படியென்றால் அதிபர் புதின் தகவல்களை எப்படி பெறுகிறார்?” என்று ரஷியா 24 டெலிவிஷன் சேனல் நிருபர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஒரே ஒரு தகவல் ஆதாரத்தையோ, ஊடக செய்தியையோ மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்பது அதிபர் புதினுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்” என்றார்.

    மேலும், “நாளிதழ் செய்தி சுருக்கங்கள், டி.வி. செய்திகளின் சுருக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அவர் தகவல்களை பெற்றுக்கொள்கிறார். கம்ப்யூட்டரில் அதிபர் தனிப்பட்ட முறையில் இணையதளங்களை பார்த்துக்கொள்கிறார். எனக்கு தெரிந்தவரையில் அவரிடம் செல்போன் கிடையாது” என கூறினார். #VladimirPutin #Smartphone #Kremlin 
    ×