search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராசிகள்"

    கஷ்டங்கள் மற்றும் சோதனை காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிக மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடம் தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர்.
    12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பரிகார கோவில்கள் உள்ளது. எவ்வித பிரச்னைகளாயினும் அவற்றை எதிர்கொண்டு வெல்லும் மன வல்லமை பெறவும் இறையருள் நமக்குத் துணைபுரிவதற்கு ஏதுவாக, உங்கள் ஒவ்வொருவரது ராசிக்கும் உரிய தெய்வங்கள் இருக்கின்றன. பல விதமான கஷ்டங்கள் மற்றும் சோதனை காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிக மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடம் தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர். அந்த வகையில் 12 ராசியினரும் எந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டால்  நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
     
    மேஷம் : ராமேஸ்வரம்
    ரிஷபம் : திருப்பதி
    மிதுனம் : பழனி
    கடகம் : ராமேஸ்வரம்
    சிம்மம் : ஸ்ரீவாஞ்சியம்
    கன்னி : திருக்கழுக்குன்றம்
    துலாம் : திருத்தணி
    விருச்சிகம் : காஞ்சிபுரம்
    தனுசு : மயிலாடுதுறை
    மகரம் : சிதம்பரம்
    கும்பம் : தேவிப்பட்டிணம்
    மீனம் : வைதீஸ்வரன் கோவில்.
    ஒருவரது ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத்தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும்.
    செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் ஒரே ராசியில் இணைந்து அமையப்பெறுவது புத ஆதித்ய யோகம் ஆகும். இந்த யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடும் ஏற்படும். புதன், சூரியனுக்கு பின் அஸ்தங்கம் ஆகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே நல்ல பலனை அளிக்கிறது என்பதை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

    சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சூரியனின் உச்ச வீடான மேஷம், புதனின் ஆட்சி வீடான மிதுனம், புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடான கன்னி ஆகிய நான்கு வீடுகளில் இந்த யோகம் அமைந்திருப்பது சிறப்பு என்று ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவரது ஜாதக ரீதியாக புதனும், சூரியனும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதியாக வருவது, பகை வீடு அல்லது நீச்ச வீட்டில் இருப்பது, அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சேர்க்கை மற்றும் புதன் வக்ர கதியில் இருப்பது ஆகிய நிலைகளில் இந்த யோகம் நல்ல முறையில் அமைவதில்லை என்பதும் ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

    27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். இன்று 27 நட்சத்திரங்களுக்கான தமிழ் அர்த்தங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அஸ்வினி - குதிரைத்தலை

    பரணி - தாங்கிப்பிடிப்பது

    கிருத்திகை - வெட்டுவது

    ரோகிணி - சிவப்பானது

    மிருகசீரிஷம் - மான் தலை

    திருவாதிரை - ஈரமானது

    புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி

    பூசம் - வளம் பெருக்குவது

    ஆயில்யம் - தழுவிக்கொள்வது

    மகம் - மகத்தானது

    பூரம் - பாராட்டத்தகுந்தது

    உத்திரம் - சிறப்பானது

    ஹஸ்தம் - கை

    சித்திரை - ஒளி வீசுவது

    சுவாதி - சுதந்திரமானது

    விசாகம் - பிளவுபட்டது

    அனுசம் - வெற்றி

    கேட்டை - மூத்தது

    மூலம் - வேர்

    பூராடம் - முந்தைய வெற்றி

    உத்திராடம் - பிந்தைய வெற்றி

    திருவோணம் - படிப்பறிவு உடையது

    அவிட்டம் - பணக்காரன்

    சதயம் - நூறு மருத்துவர்கள்

    பூரட்டாதி - முன் மங்கள பாதம்

    உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்

    ரேவதி - செல்வம் மிகுந்தது. 
    இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.
    நம்மில் பலருக்கும் ஒரேஒரு சந்தேகம் உள்ளது. அது... “என் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரம் எது” என்பதுதான். இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.

    செவ்வாயின் நட்சத்திரங்களான :- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது. அதாவது ஆண்,பெண் இருவருக்கும் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருப்பின் சேர்க்கக்கூடாது. எளிமையாக புரியும்படி:-

    பெண்————————-ஆண்
    மிருகசீரிடம் —— சித்திரை, அவிட்டம்
    சித்திரை————— மிருகசீரிடம், அவிட்டம்
    அவிட்டம்——— சித்திரை, மிருகசீரிடம்
    இவை ஒன்றுக்கொன்று இணையக்கூடாது.

    சூரியனின் நட்சத்திரங்களான :- கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
    குருவின் நட்சத்திரங்களான:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
    இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று சேர்க்கக்கூடாது.

    சந்திரனின் நட்சத்திரங்களான:- ரோகிணி,அஸ்தம்,திருவோணம்,
    ராகுவின் நட்சத்திரங்களான:- திருவாதிரை, சுவாதி, சதயம்.
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் இணைக்கக்கூடாது.

    சுக்ரனின் நட்சத்திரங்களான:- பரணி, பூரம், பூராடம்,
    சனியின் நட்சத்திரங்களான:- பூசம், அனுசம், உத்திரட்டாதி,
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது.

    புதனின் நட்சத்திரங்களான:- ஆயில்யம், கேட்டை, ரேவதி.
    கேதுவின் நட்சத்திரங்களான:- அசுவினி, மகம்,மூலம்.
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேர்க்கக் கூடாது.

    இதுதான் “கழுத்து பொருத்தம் என்னும் ரஜ்ஜு பொருத்தம்” ஆகும்.

    சரி, நாங்கள் இதையெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டோம். இதனால் ஏதாவது உயிருக்கு ஆபத்து வருமா? என்ற பயம் இயல்பானதே.
    செவ்வாயின் நட்சத்திரங்களின் மணம் முடித்தவர்களுக்கும், சந்திரன் மற்றும் ராகு நட்சத்திரங்களில் மணம் முடித்தவர்கள் மட்டுமே சற்று கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி விபத்து, உணவு விசம் ஆகுதல்(food poison), கீழேவிழுதல், திடீரென உண்டாகும் தலைவலி, ரத்தகொதிப்பு, மயக்கம், இன்னும் சில.. இது போன்ற பாதிப்புகளை தரும்.

    செவ்வாய் - தலை ரஜ்ஜு
    சந்திரன்,ராகு- கழுத்து ரஜ்ஜு

    திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பொருத்தம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.
    திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பொருத்தம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.

    அஸ்வினி:- ஆண் குதிரை
    பரணி:- ஆண் யானை
    கார்த்திகை:- பெண் ஆடு
    ரோகிணி:- ஆண் நாகம்

    மிருகசீரிடம்:- பெண் சாரை
    திருவாதிரை:- ஆண் நாய்
    புனர்பூசம்:- பெண் பூனை
    பூசம்:- ஆண் ஆடு

    ஆயில்யம்:- ஆண் பூனை
    மகம்:- ஆண் எலி
    பூரம்:- பெண் எலி
    உத்திரம்:- பெண் எருது

    அஸ்தம்:- பெண் எருமை
    சித்திரை:- பெண் புலி
    சுவாதி:- ஆண் எருமை
    விசாகம்:- ஆண் புலி

    கேட்டை :- ஆண் மான்
    மூலம்:- பெண் நாய்
    பூராடம்:- ஆண் குரங்கு
    உத்ராடம்:- கீரி,மலட்டு பசு

    திருவோணம்:- பெண் குரங்கு
    அவிட்டம்:-பெண் சிங்கம்
    சதயம்:- பெண் குதிரை
    பூரட்டாதி:- ஆண் சிங்கம்

    உத்ரட்டாதி:- பெண் பசு
    ரேவதி:- பெண் யானை

    இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள். இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.

    சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்

    அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம். சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்? சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.

    தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும். இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜு, யோனி, கணம், இம்மூன்றும் மிகமிக முக்கியம்.
    ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் ... மிக அற்புதம்

    பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண் யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
    இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்
    இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்

    எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
     
    உங்கள் பெயரின் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.
    நமது அடையாளமாக இருந்து நமக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவது நமது பெயர்தான். இப்பொழுது நமது பெயரை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் நமக்கு கிடைத்த முதல் இயற்பெயர் என்பது தானாக அமைந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் நமது பெயர் நமது குணத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாகும்.

    பொதுவாக பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறியலாம் என்பார்கள். அது உண்மைதான், ஆனால் முதல் எழுத்தை போலவே உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தும் உங்கள் குணத்தையும், ஆளுமையையும் கூறக்கூடும். ஒருவேளை முதல் எழுத்தும், மூன்றாவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருந்தால் கூட அவை இருக்கும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடும். இந்த பதிவில் உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றிக்கூறும் ரகசியம் என்னவென்று பார்க்கலாம்.

    மூன்றாம் எழுத்து A

    உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து A வாக இருந்தால் இயற்கையிலேயே நீங்கள் காதல் உணர்வு மிகுதியவர்களாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி A என்பது ஆற்றலின் அடையாளமாகும், இவர்கள் துணிச்சலானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே உங்களுடைய தன்னம்பிக்கைதான். உங்களுடைய திறமையையும், சாகசத்தையும் எப்போதும் பிறருக்கு காண்பிக்க விரும்புவீர்கள்.

    மூன்றாம் எழுத்து B

    உங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து B ஆக இருந்தால் உங்களுடைய அடிப்படை குணம் பாசம் ஆகும். நீங்கள் எப்பொழுதும் உங்கள் அனைத்து உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை எப்படி அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் சிலசமயம் உங்களுக்குள் எழும் பேராசை உங்களை பலவீனமாக்கும்.

    மூன்றாம் எழுத்து C

    C என்ற எழுத்து மூன்றாவது எழுத்தாக உள்ளவர்கள் இனிமையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் அப்பாவியான குணத்தாலும், இனிமையாக பழகுவதன் மூலமும் அனைவருடனும் எளிதில் நன்கு பழகக்கூடியவர்கள். அதேசமயம் நீங்கள் காயப்பட்டுவிட்டால் நிச்சயம் அதற்கு பழிவாங்காமல் இருக்கமாட்டார்கள். அனைத்திற்கும் மேலாக உங்களிடம் இருக்கும் ஒரு சிறந்த குணம் நேர்மை ஆகும்.

    மூன்றாம் எழுத்து D

    D எழுத்தானது சமநிலை, கடின உழைப்பு மற்றும் பாதுகாப்பை குறிக்கும். இவர்கள் எப்பொழுதும் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், பொருட்களை அதற்குண்டான இடத்தில் வைப்பதிலும் அக்கறை செலுத்துவார்கள். இவர்கள் இயற்கையிலேயே தலைமைப்பண்பு மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள். உங்களின் எதிர்மறை குணம் என்பது பிடிவாதம் ஆகும்.



    மூன்றாம் எழுத்து E

    பெயரில் மூன்றாம் எழுத்தை E ஆக வைத்திருப்பவர்கள் இயற்கையிலேயே கருணையும், மென்மையான குணமும் கொண்டவர்கள். எந்தவித சிக்கலையும் எளிதாக தீர்க்கக்கூடியவர்கள், விரைவான சிந்தனையாளர்கள், வாழ்க்கை மீதான ஆழமான எண்ணம் கொண்டவர்கள். உங்களுடைய வசீகரிக்கும் குணம் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு நண்பர்களை பெற்றுத்தரும். ஆனால் காதல் உறவுகளில் உங்கள் மீது நம்பிக்கை வருவது கடினம்.

    மூன்றாம் எழுத்து F

    இவர்கள் குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். காதல் உறவுகளில் இறுதிவரை நேர்மையாக இருப்பார்கள். ஆனால் பழிவாங்கும் எண்ணமும், வேஷமிடும் குணமும் இவர்களுக்கு அதிகம்.

    மூன்றாம் எழுத்து G

    இவர்கள் தனக்கென ஒரு தனிவழியில் வாழ்பவர்கள், அதீத கற்பனைதிறன் மிக்கவர்கள். நீங்கள் அரிவுரையை வெறுப்பவர்கள், உங்கள் எண்ணம்போல வாழ்க்கையை வாழ நினைப்பீர்கள். திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்ட உங்களின் பலவீனம் சந்தேகம் ஆகும்.

    மூன்றாம் எழுத்து H

    இவர்கள் வாழ்க்கையை எப்பொழுதும் எதார்த்தமாக பார்ப்பார்கள், அதேசமயம் பணவிஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அடிப்படையிலேயே இருக்கும் வியாபார குணத்தால் இவர்கள் எளிதில் தலைவர்களாக வரமுடியும். தன் இலட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்கள் உறவுகளில் அதிக பொறாமை படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து I

    இவர்கள் இயற்கையிலேயே உதவும் குணம் கொண்ட தூய ஆத்மாக்கள். மற்றவர்களை சார்ந்து இருந்தாலும் ஆழமாக யோசிக்க கூடியவர்கள், இல்லாதவர்களுக்கு யோசிக்காமல் உதவக்கூடியவர்கள்.இவர்களின் பலவீனமும் இதுதான் பலசமயங்களில் எளிதில் ஏமாறக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து J


    சுறுசுறுப்பும், ஆர்வமும் இவர்களின் கூட பிறந்த குணங்களாகும். வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழக்கூடியவர்கள். இவர்களை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை அமைந்தால் இவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.



    மூன்றாம் எழுத்து K

    மிகவும் இரகசியமான குணம் கொண்ட இவர்கள் மற்றவர்களின் கவனம் எப்பொழுதும் தன் மீதே இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள். இதனால் சிலசமயம் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் இவர்கள் எப்பொழுதும் சமநிலைக்கும், மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவுகளில் விளையாட்டுத்தனமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.

    மூன்றாம் எழுத்து L

    இவர்களுக்கு வாழ்க்கை மீது எப்பொழுதும் ஒரு வித்தியாசமான அதேசமயம் தனித்துவமான கண்ணோட்டம் இருக்கும். இவர்களின் துணைதான் இவர்களுக்கு வாழ்க்கையிலே மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் கூடவே பிறந்த சுட்டித்தனம் இவர்களை அனைவரும் விரும்புபவர்களாக வைத்திருக்கும்.

    மூன்றாம் எழுத்து M

    இவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் வேலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை கவர்வதற்கு என எதையும் செய்யமாட்டார்கள், தன் வாழ்க்கையை தன்னுடைய விதிகளின் படி வாழ்வார்கள். இவர்களின் பிடிவாதமும், முன்கோபமும்தான் இவர்களின் பலவீனம்.

    மூன்றாம் எழுத்து N

    N எழுத்து மூன்றாவதாக உள்ளவர்கள் எப்பொழுதும் தான் செய்யும் காரியங்கள் முழுமையானதாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இவர்கள் இயற்கையிலேயே அதிகமாக பேசும் சுபாவம் கொண்டவர்கள். மற்றவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றாமல் தனக்கென ஒரு வழியை உருவாக்குபவர்கள்.

    மூன்றாம் எழுத்து O

    இரக்கமும், பிரியமும் கொண்டவர்கள் இவர்கள். இவர்களை கண்ணைமூடிக்கொண்டு நம்பலாம். தனக்கான பாதையை தானே கண்டறிந்து அதனை வடிவமைத்து அதில் செல்லக்கூடியவர்கள். மற்றவர்களின் முயற்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்.

    மூன்றாம் எழுத்து P

    இவர்கள் வாழ்க்கையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் அனைத்திலும் தான்தான் முன்னிலையில் இருக்கவேண்டுமென்று நினைப்பவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென நினைப்பவர்கள். அதற்காக எந்தவித வேடிக்கையான செயலையும் செய்ய தயங்கமாட்டார்கள்.



    மூன்றாம் எழுத்து Q

    இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு மர்மம் இருக்கும். இவர்கள் மற்றவர்கள் பின்பற்றும் எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றமாட்டார்கள். நேர்மையான இவர்கள் எப்போதும் சிறந்த நண்பர்களாகவும், அறிவுரையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் சுயத்தை இழக்க விரும்பமாட்டார்கள். இதுவே சிலசமயம் பலவீனமாகவும் அமையும்.

    மூன்றாம் எழுத்து R

    இவர்கள் அதிகளவு ஞானத்தையும், உள்ளுணர்வையும் கொண்டவர்கள். மற்றவர்களின் மனக்காயங்களை குணப்படுத்துவதற்கெனவே பிறந்தவர்கள். அமைதியை விரும்பும் உங்கள் குணமும், வாழ்க்கையை எதார்த்தமாக பார்க்கும் குணமும் அனைவரையும் விரும்பவைக்கும். இவர்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்கள்.

    மூன்றாம் எழுத்து S

    இவர்களை போல சிறந்த நேர்மையானவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அவர்களுக்கு காதல் உணர்வு கொஞ்சம் குறைவுதான். இயற்கையாகவே தலைமை குணம் கொண்ட இவர்களின் வசீகரம் எப்பொழுதும் இவர்களை சுற்றி ஆட்களை இருக்க வைக்கும். தங்களுக்கான இலட்சியங்களை எப்பொழுதும் உயர்ந்ததாகவே வைப்பார்கள். உண்மையான இரக்கமும், அரவணைக்கும் குணமும் இவர்கள் கூடவே பிறந்தது.

    மூன்றாம் எழுத்து T

    இராஜதந்திர குணம் அதிகமிக்கவர்கள் இவர்கள், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்கள். அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புபவர்கள். உங்களின் வெகுளித்தனமும், உதவும் குணமும் அனைவரும் உங்களை விரும்ப வைக்கும். அவர்கள் விரும்பும்படி செயல்கள் நடைபெறாவிட்டால் இவர்கள் எளிதில் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.

    மூன்றாம் எழுத்து U

    இவர்கள் எப்பொழுதும் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். வலிமையான உள்ளுணர்வு மற்றும் மனநிலையை கொண்ட இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். எப்பொழுதும் புதிய யோசனைகளை செய்ய தயங்கமாட்டார்கள். இவர்களின் ஈகோ காரணமானாக அடிக்கடி தங்கள் உடனிருப்பவர்களை காயப்படுத்துவார்கள்.

    மூன்றாம் எழுத்து V


    இவர்களை போன்றவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அந்த அளவிற்கு இவர்கள் உண்மையாக இருப்பார்கள். இவர்களின் சிறப்பே இவர்களின் அதீதமான நினைவாற்றல்தான். உறவில் இவர்கள் எப்பொழுதும் பொறாமைபடுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் அதீதமான அர்பணிப்பே இவர்களுக்கு சிலசமயம் பலவீனமாக அமையும்.



    மூன்றாம் எழுத்து W

    இவர்கள் இயற்கை மீது அதிக காதல் கொண்டவர்கள். உறவுகளில் அடிக்கடி நீங்கள் சிக்கல்களை சந்திப்பீர்கள், அதனை சரிசெய்ய உங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும். உங்களின் செயல்கள் சிலசமயம் மற்றவர்களை அதிக வெறுப்படையச்செய்யும்.

    மூன்றாம் எழுத்து X

    இவர்கள் எந்தவொரு உறவுகளிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்க விரும்பமாட்டார்கள். ஆனால் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள். இவர்களின் பேராசைதான் இவர்களின் மிகப்பெயய பலவீனம்.

    மூன்றாம் எழுத்து Y

    இவர்கள் தங்களின் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இவர்கள் சமூகத்தில் தங்கள் நிலை குறித்து அதிக கவலைப்படுவார்கள். இவர்கள் தங்கள் இடத்தில் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மற்றவர்களின் இடம் இவர்களுக்கு ஏற்றதல்ல.

    மூன்றாம் எழுத்து Z


    இவர்கல் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். இலட்சியத்தை பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பார்கள், சிறந்த முதலாளிகளாக இருக்க இவர்களுக்கு நிறைய வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் இருந்து எப்படி வேலை வாங்கவேண்டும் என்று நன்கு தெரிந்தவர்கள்.
    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.
    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    கிழமைகளும் பலன்களும் :

    ஞாயிற்றுக்கிழமை :


    ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

    திங்கட்கிழமை :

    திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பானவன். இனிய சொற்களால் அனைவரையும் மயக்கிவிடுவார்கள். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.

    செவ்வாய்கிழமை :

    செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். தந்திரக்காரனாய் இருப்பார். பிறருக்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள்.

    புதன்கிழமை :

    புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பவர். நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள்.

    வியாழக்கிழமை :

    வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார். அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள்.

    வெள்ளிக்கிழமை :

    வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர்பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

    சனிக்கிழமை :

    சனிக்கிழமையில் பிறந்தவர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள். பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்.
    உங்களது ஜாதகத்தில் சந்திரம் எந்த கிரகத்துடன் இணைந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சந்திரன் சூரியனுடன் இணைந்தால், அரச பயம், பண முடக்கம் போன்றவை தோன்றும்.

    சந்திரன் செவ்வாயுடன் இணைந்தால், சிறு விபத்து, ஆயுத பயம் ஏற்படும்.

    சந்திரன் புதனுடன் இணைந்தால், குழந்தைகளுக்கு நோய், கல்வித்தடை உருவாகும்.

    சந்திரன் குருவுடன் இணைந்தால், ஸ்தான நாசம் உண்டாகும்.

    சந்திரனும் சுக்ரனும் இணைந்தால், செலவு அதிகரிக்கும், வரவு குறையும்.

    சந்திரன் சனி, ராகுவுடன் இணைந்தால், கலகமும், குழப்பமும் தோன்றும்.

    சந்திரன் கேதுவுடன் இணைந்தால், துயரமான சம்பவம் இடம் பெறும்.

    இந்த பலன்கள் மற்ற ராசி, லக்னம், கிரகங்கள் உட்கார்ந்த வீடு, தசா புத்திகளை அனுசரித்து மாறுபடலாம்.
    பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக உள்ளன. எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.
    பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும், அவை

    மேஷம்-சிரசு,
    ரிஷபம்-வாய்,
    மிதுனம்-இரு கைகள்,
    கடகம்-மார்பு,
    சிம்மம்-வயிறு,
    கன்னி-இடை,
    துலாம்-புட்டங்கள்,
    விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள்,
    தனுசு-தொடை,
    மகரம்-முழங்கால்கள்,
    கும்பம்-காலின் கீழ்பகுதி,
    மீனம்-கால்களின் அடிப்பாகம் என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளன.

    மேலும் பைரவரின் சேவர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய அன்பர். எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார்.

    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்களையும், வழிபாடு செய்ய வேண்டிய முறையை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
    பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.
    கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.
    ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

    மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
    திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
    புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

    ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
    மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
    பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.
    உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
    சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
    விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.

    அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
    கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
    மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.
    பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

    உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
    திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.
    அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்யலாம்.
    சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

    பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.
    ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணி விக்கவும்.
    கிருத்திகை நட்சத்திரகாரர்களின் தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.
    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணிபுரியும் ஆர்வம் இருக்கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.

    இரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர்பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    மூன்றாவது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.

    ராகு திசை 18 வருடங்கள் 4-வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஜந்தவதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிவரும்.

    இந்த நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11 மணிக்கு உச்ச வானத்தில் காணலாம். கிருத்திகை நட்சத்திரகாரர்களின் தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது.
    இந்து மதம் அல்லது இந்திய ஜோதிட நம்பிக்கையின்படி பூமியில் உள்ள ஜீவன்களை நவக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.
    நவ ரத்தினங்கள் எந்த காலத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வந்தது என்பதை யாரும் சொல்ல முடிய வில்லையாம். ஆனால் ‘நவரத்தினா‘ என்ற சமஸ்கிருத வார்த்தை, இந்தி, கன்னடா, பர்மா, இந்தோனேசியா, நேபாளி ஆகிய மொழிகளில் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. தமிழிலும், மலையாளத்திலும் நவரத்தினம் என்றும், தெலுங்கில் நவரத்னலு என்றும் அழைக்கப்படுகிறது. அதுதான் நமக்கு தெரியுமே தமிழின் இறுதியில் ஒரு ‘லு‘ சேர்த்தால் அது தெலுங்கு.

    பல நாடுகளில் மன்னர்களும், ராஜ குடும்பத்தினரும் நவரத்தினங்களை பயன்படுத்தியுள்ளனர். இதில் இந்தியா, நேபாள், இலங்கை, சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, வியட்னாம், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மத, கலாசார வித்தியாசங்களை மீறி பல காலமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தாய்லாந்து நாட்டில் நவரத்தினம் என்பது தேசியச் சின்னமாக மட்டுமின்றி மன்னரின் ராஜ சின்னமாகவும் விளங்குகிறது.

    அங்கு மன்னர் மக்களுக்கு அளிக்கும் உயர்ந்த விருதின் பெயர் நொவரட் ரச்சாவரபோன். அந்தப் பதக்கத்தில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கும். இந்து மதம் அல்லது இந்திய ஜோதிட நம்பிக்கையின்படி பூமியில் உள்ள ஜீவன்களை நவக்கிரகம் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஒரு மனிதனின் முழு வாழ்க்கையிலும் இவை தொடர்பு கொண்டிருக்கின்றன.

    எனவே இந்த ஒன்பது ரத்தினங்களை அணிவதன் மூலம் கிரகங்களின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இவைகளை அணியும் போது குறை இல்லாத நல்ல தரமான கற்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் துரதிர்‌ஷ்டத்தை கொண்டு வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. ஒன்பது கற்களுக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது.

    மாணிக்கம் சூரியனை குறிப்பதால் அது நடுவில் இருக்க வேண்டும். அதனைச் சுற்றிலும் கடிகார சுற்றுவாக்கில் வைரம், முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், பு‌ஷ்பராகம் மற்றும் மரகதம் என்று அமைய வேண்டும். நவக்கிரக எந்திரத்திலும் இதே அமைப்புதான் இருக்கிறது. தாய்லாந்து அரசிகள் பரம்பரையாக இந்த அமைப்புள்ள செயின்களை அணிகிறார்களாம். இப்படி பல நம்பிக்கைகளை கொண்டதாக நவரத்தின கற்கள் இருக்கிறது. 
    ×