search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96693"

    யூடியூப் ஷார்ட்ஸ் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது. கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 

     யூடியூப் ஷார்ட்ஸ்

    யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் பல்வேறு குறு வீடியோ உருவாக்கும் செயலிகளுக்கு கடும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்டாக் தடையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியாவில் 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்று வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. 
    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.


    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.

    அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

     கோப்புப்படம்

    பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
    கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

     கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

    நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் தீபாவளிக்காக பிரத்யேக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


    வாட்ஸ்அப் செயலியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரத்யேக அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதை கொண்டு பயனர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். 

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கொண்டாட்ட முறைகள் முற்றிலும் மாறி போயுள்ளன. இந்த காலக்கட்டத்தில் விர்ச்சுவல் முறையில் அனைவருடன் இணைந்து இருப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்திருக்க வாட்ஸ்அப் மட்டுமே சிறந்த தளமாக இருக்கிறது.

     வாட்ஸ்அப் ஸ்டிக்கர்

    இவற்றை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகைக்காக வாட்ஸ்அப் அனிமேடெட் ஸ்டிக்கர்களை வெளியிட்டு உள்ளது. ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு அனுப்பி பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
    வாட்ஸ்அப் செயலியின் புதிய பீட்டா வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வெளியாகி இருக்கின்றன.


    வாட்ஸ்அப் புதிய பீட்டா வெர்ஷனில் பேஸ்புக்கின் புதிய பெயர்- மெட்டா தோன்றுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பிரம் மெட்டா என காட்சியளிக்கிறது. இதுவரை வாட்ஸ்அப் பிரம் பேஸ்புக் என்றே தோன்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் இந்த மாற்றம் அமலாக மேலும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய பெயரை அறிவித்தது. இத்துடன் சமூக வலைதள நிறுவனமாக மட்டும் இல்லாமல், மெய்நிகர் ஆன்லைன் உலகமாக மெட்டாவெர்ஸ் நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்தது.

     மெட்டா

    புது மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.22.21 வெர்ஷனில் காட்சியளிக்கிறது. இது வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் மற்றும் செட்டிங் மெனுவில் காட்சியளிக்கிறது. பீட்டா வெர்ஷனிலும் இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் தோன்றவில்லை.

    வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது. 

    முன்னதாக தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் பொது தேர்தல் விரைவில் துவங்க இருப்பதையொட்டி, வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வழிமுறைகள் எவ்வித சிரமமும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.



    தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களின் முக்கிய குறிக்கோள். பயனர்கள் போலி தகவல்களை எதிர்கொள்ளும் போது அவற்றை எவ்வாறு கண்டறிவது பற்றிய விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்பை அதிகப்படுத்த முடியும் என வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோக்களை வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும் நாஸ்காம் மற்றும் டி.இ.எஃப். மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன. இந்த வீடியோக்களில் போலி விவரங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பும் போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    கடந்த சில மாதங்களில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது. இத்துடன் ஒருவர் அதிகபட்சம் ஃபார்வேர்டு செய்யும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் செயலியின் ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்திற்கு இரண்டு பெரிய அப்டேட்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் இன்-ஆப் பிரவுசிங் மற்றும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உள்ளிட்ட அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இரு அம்சங்களும் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிய பயனர்களுக்கு வழி செய்யும். 

    இந்நிலையில், ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியில் ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சம் கொண்டு போலி தகவல்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட இருப்பதாக தெரிகிறது. இதற்கென வாட்ஸ்அப் இரண்டு பெரிய அம்சங்களை செயலியில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இரு அம்சங்களும் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இருஅம்சங்களும் எவ்வாறு வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ளலாம். பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


    புகைப்படம் நன்றி: wabetainfo

    இந்த பகுதியை இயக்க பயனர் அனுப்பிய குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பின் இன்ஃபோ ஆப்ஷனை குறிக்கும் (i) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இது சாட் விண்டோவின் மேல் காணப்படும். இந்த அம்சம் கொண்டு நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய ஃபார்வேர்டெட் மெசேஞ்களில் மட்டுமே வேலைசெய்யும். 

    உங்களுக்கு வரும் ஃபார்வேர்டெட் மெசேஞ்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அதே குறுந்தகவலை நீங்கள் உங்களது காண்டாக்ட்களுக்கு ஃபார்வேர்டு செய்து மெசேஞ் இன்ஃபோ பகுதியில் அது எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஃபிரீக்வென்ட்லி ஃபார்வேர்டெட் அம்சத்தில், ஒருவர் குறுந்தகவலை நான்கு அல்லது அதற்கும் அதிகமானோருக்கு ஃபார்வேர்டு செய்திருந்தால் பயனர் அனுப்பிய குறுந்தகவலில் பார்க்க முடியும்.  

    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்களும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் அடுத்த பீட்டா அப்டேட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா 2.19.80 ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஓ.எஸ். தளங்களில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் லைவ் போட்டோஸ் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. #Twitter



    ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு லைவ் போட்டோஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. ஐபோன் 6எஸ் மாடலுடன் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 1.5 நொடிகள் கொண்ட அனிமேட்டெட் புகைப்படங்கள் ஆகும். புகைப்படம் க்ளிக் செய்யும் முன் மற்றும் க்ளிக் செய்த பின் காட்சிகளை பதிவு செய்வதே லைவ் போட்டோ என அழைக்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ட்விட்டரிலும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியின் கோட்களில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்குவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இதனை சமூக வலைதள ஆய்வாளர் மேட் நவாரா தனது ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட்களுடன் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிஃப்களாக மாற்றுவதற்கான அம்சம் சோதனை செய்யப்படுவதாக நவாரா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ட்விட்டரில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



    எனினும், ட்விட்டர் லைவ் போட்டோக்களை சாதாரண ஜிஃப்களாக கருதுமா அல்லது லைவ் போட்டோக்களாக கருதுமா இல்லை ஃபேஸ்புக் போன்று லைவ் போட்டோக்களாகவே குறிப்பிடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஐ.ஓ.எஸ். ட்விட்டர் செயலியில் ஏற்கனவே லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது, எனினும் இது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது.

    இதை செய்ய தற்சமயம் போட்டோஸ் செயலியை திறந்து, லைவ் போட்டோவினை தேர்வு செய்து அதனை லூப் அல்லது பவுன்ஸ் ஆக மாற்றி, பின் அந்த போட்டோவினை ட்விட்டர் ஐ.ஓ.எஸ். செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது போட்டோ ஜிஃப் ஆக மாறியிருக்கும்.

    லைவ் போட்டோக்களுக்கான வசதியின் மூலம் பயனர்கள் எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக லைவ் போட்டோவினை தேர்வு செய்து செயலியில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால் இது எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் எமோஜி சேர்க்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் போட்டோக்களை டூடுள் செய்யும் போது எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களை தேட வழி செய்யும் அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.

    இதுதவிர வாட்ஸ்அப் பீட்டா செயலியில் திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற பாலினத்தவரை குறிக்கும் எமோஜிகளும் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் திருநங்கைகளை குறிக்கும் எமோஜி வழங்கப்பட இருப்பது பற்றி ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும் இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இத்துடன் எமோஜிபீடியா வலைதளத்தின் உதவியுடன் திருநங்கை எமோஜியை சாட்களில் மறைக்கும் வசதியை சேர்த்திருக்கிறது.



    இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருநங்கை எமோஜி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.73 வெர்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை கொண்டு தேட வழி செய்யும் சர்ச் பை இமேஜ் (Search by Image) அம்சமும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சர்ச் பை இமேஜ் அம்சம் கொண்டு பயனர்கள் அனுப்பிய அல்லது அவர்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானது தானா என கண்டறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இவைதவிர, வாட்ஸ்அப் செயலியில் ஆடியோக்களை அனுப்பும் முன் அவற்றை கேட்கச் செய்யும் வசதியும் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. இத்துடன் ஒரேசமயத்தில் அதிகபட்சம் 30 ஆடியோ ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. 
    ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் சில மணி நேரங்கள் முடங்கியதை தொடர்ந்து டெலிகிராம் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. #Telegram



    ஃபேஸ்புக் சேவை முடங்கியது டெலிகிராமிற்கு நல்லதாக அமைந்தது. ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் உலகம் முழுக்க முடங்கியதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் டெலிகிராம் பயனர் எண்ணிக்கை முப்பது லட்சம் வரை அதிகரித்தது. 

    பிரிட்டனை சேர்ந்த டெலிகிராம் செயலியை கடந்த ஆண்டு வெளியான நிலவரப்படி உலகம் முழுக்க சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் மட்டுமே டெலிகிராம் பயனர் எண்ணிக்கை அதிகரித்தது என கூற முடியாது.

    எனினும், 24 மணி நேரத்தில் இத்தனை லட்சம் பயனர்கள் டெலிகிராமில் இணைந்திருப்பது எதேர்ச்சியான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. புதிய பயனர்கள் சேர்ந்திருப்பதை டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் தனது டெலிகிராம் சேனலில் தெரிவித்திருக்கிறார். 



    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் முப்பது லட்சம் புதிய பயனர்கள் டெலிகிராம் சேவையில் இணைந்திருக்கின்றனர். நாங்கள் உண்மையாகவே தனியுரிமை மற்றும் அனைருக்கும் வரம்பற்ற முறையில் இடமளிக்கிறோம் என துரோவ் தனது டெலிகிராமில் பதிவிட்டிருக்கிறார். 

    டெலிகிராம் சேவையும் வாட்ஸ்அப் போன்று முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட இலவச மெசேஜிங் சேவையாகும். இதில் வாய்ஸ் கால்களுக்கு முழுமையான என்க்ரிப்ஷன் மற்றும் ரகசிய சாட்களுக்கு முழுமையான என்க்ரிப்ஷன் வசதி தனியே வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் போன்று டெலிகிராமில் அனைத்து சாட்களும் என்க்ரிப்ட் செய்யப்படுவதில்லை.

    டெலிகிராம் செயலிகள் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., மேக் ஓ.எஸ்., லினக்ஸ், விண்டோஸ் போன் மற்றும் விண்டோஸ் என்.டி. உள்ளிட்ட தளங்களில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை டெலிகிராம் சேவையை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
    யூடியூப் நிறுவனம் இந்தியாவில் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. #YouTubeMusic



    யூடியூப் நிறுவனம் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கூகுள் தனது பிளே மியூசிக் சேவையை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

    புதிய யூடியூப் மியூசிக் சேவையில் அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பம்கள், ஆயிரக்கணக்கான பிளே லிஸ்ட்கள், ஆர்டிஸ்ட் ரேடியோ மற்றும் யூடியூபின் பிரத்யேக ரீமிக்ஸ், நேரலை நிகழ்ச்சிகள், கவர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இவை அனைத்தும் மிக எளிமையாக காட்சியளிப்பதோடு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

    யூடியூப் மியூசிக் சேவை இலவசமாகவும் கிடைக்கிறது. எனினும், இலவச சேவையை பயன்படுத்தும் போது இடையிடையே விளம்பரங்கள் வரும். யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.



    யூடியூப் பிரீமியம் சேவையில் ஆஃப்லைன் டவுன்லோடு வசதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வித விளம்பரங்களும் இன்றி யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையை ரூ.99 மற்றும் குடும்ப சந்தாவுக்கு மாதம் ரூ.149 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப சந்தாவில் தனிநபர் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

    சிறப்பு அறிமுக சலுகையின் பேரில் யூடியூப் மியூசிக் சேவைக்கான பிரீமியம் சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் பயனர்களது கட்டண சந்தா அமலாகும். கூகுள் பிளே மியூசிக் பயனர்களுக்கு யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாவும் சேர்த்து வழங்கப்படும்.



    யூடியூப் நிறுவனம் யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்குகிறது. யூடியூப் பிரீமியம் சேவையில் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லா அனுபவம், பேக்கிரவுண்டு பிளே மற்றும் ஆஃப்லைன் வீடியோக்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 பயன்படுத்துவோருக்கு யூடியூப் பிரீமியம் சேவை நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் யூடியூப் மியூசிக் சேவையும் அடங்கும். மற்ற பயனர்களுக்கு மூன்று மாதம் வரை இலவச பிரீமியம் சேவை வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.60 செலுத்தும் பயனர்களுக்கு யூடியூப் பிரீமியம் குடும்ப சந்தா வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.
    இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. #ElectionCommission



    இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி சமூக வலைதளங்களை கண்கானிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மூத்த தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

    ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் ஊடக சான்று மற்றும் கண்கானிப்பு குழுக்கள் இடம்பெற்றிருக்கும். இக்குழுவில் ஒரு சமூக வலைதள வல்லுநரும் இடம்பெறுவர். சமூக வலைதளங்களில் பதிவாக இருக்கும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 



    வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் சமூக வலைதளங்களில் பதிவாக இருக்கும் விளம்பரங்களுக்கு அனைத்து விதகள் மற்றும் நிபந்தணைளை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வாக்குப்பதிவு முறை, அமைதியை சீர்குலைக்கும், பொது அமைதிக்கு கலங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் ஏற்படாமல் இருக்க ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், வாட்ஸ்அப் மற்றும் ஷேர்சாட் உள்ளிட்ட தளங்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட இருக்கிறது என அரோரா தெரிவித்தார்.  

    மொபைல் போன்களில் அதிகப்படியான டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களின் மீதும், தொலைகாட்சி சேனல்கள், கேபிள் நெட்வொர்க், ரேடியோ, திரையரங்குகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆடியோ வீடியோ டிஸ்ப்ளேக்களில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருப்பது அவசியமாகும் என அரோரா மேலும் தெரிவித்தார்.
    ×