search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96693"

    மோட்டோரோலா உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ரேசர் போனில் குறிப்பிட்ட அளவு செயலிகள் மட்டுமே இரண்டாவது டிஸ்ப்ளேவில் இயங்கும் என கூறப்படுகிறது. #Motorola



    மோட்டோரோலா நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட் ரென்டர்களில் சில விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்சமயம் மென்பொருள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு தரவுகளை ஸ்கிரால் செய்து கொள்ளலாம். மேலும் முதற்கட்டமாக இரண்டாவது டிஸ்ப்ளேவில் குறிப்பிட்ட சில செயலிகளை இயக்குவதற்கான வசதியை மோட்டோரோலா வழங்கும் என தெரிகிறது.

    மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மாடலில் இருப்பதை போன்று முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்காது என XDA டெவலப்பர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட சிஸ்டம் செயலிகளை மட்டுமே டிஸ்ப்ளே செய்யும் என கூறப்படுகிறது.



    ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது டிஸ்ப்ளேவினை இயக்க முடியும், எனினும் இந்த நிலையில் பயனர்கள் மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்ஷன்ஸ் மற்றும் மோட்டோ கேமரா உள்ளிட்டவற்றையே இயக்க முடியும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளே டிராக்பேட் போன்றும் இயங்கும் என தெரிகிறது.

    இதை கொண்டு க்ரோம் பிரவுசிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த டிஸ்ப்ளேவில் அதிகபட்சம் ஆறு க்விக் செட்டிங்களை காண்பிக்கும் என்றும் இவை டைல் வடிவில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. எனினும், இதை பயனர்கள் ஸ்கிரால் செய்ய முடியுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    மெயின் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளேக்களில் வெவ்வேறு வால்பேப்பர்களை வைத்துக் கொள்ள மோட்டோரோலா புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மோட்டோரோலா சில அம்சங்களை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    டிக்டாக் செயலியை பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #TikTok
    டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் மூலம் இந்திய பயனர்களுக்கு தங்களது அக்கவுண்ட்டை முன்பை விட அதிக சிறப்பாக கையாள முடியும். 

    இந்த அம்சம் கமென்ட்க்ளில் அவர்கள் விரும்பும் வார்த்தைகளை ஃபில்ட்டர் செய்யும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது. ஃபில்ட்டர் கமென்ட்ஸ் என அழைக்கப்படும் இந்த அம்சம் பயனர் குறிப்பிட்ட 30 வார்த்தைகளை கமென்ட் பகுதியில் இருந்து நீக்கிவிடும்.

    பயனர்கள் ஒருமுறை வைத்த வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என டிக்டாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணைய பாதுகாப்பு தினத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென டிக்டாக் இந்தியா சைபர் பீஸ் பவுன்டேஷனுடன் இணைந்திருக்கிறது.


    தற்போதைய பாதுகாப்பு அம்சங்களின் படி பயனர்கள் தங்களது வீடியோக்களில் யார் கமென்ட் செய்ய வேண்டும் என்றும் யார் ரியாக்ட் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்க முடியும். இதேபோன்று பயனர்கள் தங்களுக்கு மெசேஞ் மற்றும் வீடியோக்களை யார் டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.

    முன்னதாக இந்திய பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த சூழலை செயலியில் உருவாக்க டிக்டாக் குறிக்கோள் கொண்டிருப்பதாக தெரிவித்தது. சீனாவை சேர்ந்த சமூக வலைதளமான டிக்டாக் செயலியை தடை செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் எனும் நிறுவனம் இந்த செயலியை 2016 ஆம் ஆண்டு சீனாவில் டோயுன் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. பின் 2017 ஆம் ஆண்டு இந்த செயலி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    உலகம் முழுக்க இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலியை 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok #Apps



    இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள செயலியான டிக்டாக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். பைட்டான்ஸ் எனும் சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக அமைந்துள்ளது.

    வீடியோ சார்ந்த செயலிகளில் இந்த செயலி ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பின்தள்ளியிருக்கிறது. 100 கோடி 
    டவுன்லோட்களில் டிக்டாக் பல்வேறு மொழி வேரியண்ட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 100 கோடி டவுன்லோட்களில் சீன சந்தையை சேர்ந்த ஆண்ட்ராய்டு சாதனங்களின் எண்ணிக்கை அடங்காது.



    அந்த வகையில் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். 100 கோடி டவுன்லோடுகளை சென்சார் டவர் ஸ்டோர் இன்டெலிஜன்ஸ் எனும் ஆப் அனாலடிக்ஸ் தளம் முதலில் அறிவித்தது. 

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டிக்டாக் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் 2018 வரை மொத்தம் 66.3 கோடி பேர் டவுன்லோடு செய்திருந்தனர். இதே ஆண்டில் ஃபேஸ்புக் செயலியை சுமார் 71.1 கோடி பேரும், இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 44.4 கோடி பேர் டவுன்லோடு செய்தனர்.

    2018 ஆம் ஆண்டு டிக்டாக் செயலி அதிகளவு பிரபலமாகி அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகளில் நான்காவது இடம் பிடித்தது. ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் அதிக இன்ஸ்டால்களை பெற்ற செயலிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இத்துடன் அமெரிக்காவில் கேமிங் இல்லாத செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்திருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் விரைவில் அட்வான்ஸ் சர்ச் வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க சுமார் 130 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். செயலியின் ஒட்டுமொத்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. 

    வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன், டார்க் மோட், சாட்களுக்கு கைரேகை சென்சார் லாக், தொடர்ச்சியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை சரிபார்க்க புதிய வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. 

    இவை தவிர, வாட்ஸ்அப் விரைவில் அட்வான்ஸ்டு சர்ச் மோட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனை தினந்தோரும் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அட்வான்ஸ் சர்ச் அம்சம் மூலம் ஒருவர் அதிகப்படியான குறுந்தகவல்களை தேட முடியும் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    புதிய ஆப்ஷனிற்கென வாட்ஸ்அப் செயலியில் மீடியா எனும் புதிய வசதி சேர்க்கப்படும் என்றும் இதனை கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், ஜிஃப்கள், வீடியோக்கள், டாக்குமென்ட், லிண்க் மற்றும் ஆடியோ உள்ளிட்டவற்றை தேட முடியும். உதாரணத்திறஅகு வாட்ஸ்அப் மீடியா ஆப்ஷனில் புகைப்படங்களை தேர்வு செய்யும் போது, புகைப்படங்கள் மட்டும் வரிசைப்படுத்தப்படும்.

    இதுதவிர மீடியா அபனஷன் வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் எத்தனை மீடியா ஃபைல்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதனுடன் சர்ச் ஹிஸ்ட்ரியை பார்க்கும் வசதியும், தேவைப்படாத சமயங்களில் இதனை நீக்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனில் தேடும் போது பிரீவியூ வழங்கப்படும் என்பதால், பயனர் தேடும் தரவுகளை மிகச்சரியாக தேர்வு செய்து பெற முடியும். புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் தொடர்ந்து உருவாக்கும் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோக்ரூப்டாக் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. #RelianceJio #JioGroupTalk



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை மிகவும் குறைந்த விலையில் வழங்கி, டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. டெலிகாம் சேவையை தவிர பல்வேறு இலவச செயலிகளையும் ஜியோ வழங்கி வருகிறது.

    ஜியோ தனது பயனர்களுக்கு ஜியோ சினிமா மற்றும் ஜியோ டி.வி. உள்ளிட்டவற்றை வழங்கியதை தொடர்ந்து தற்சமயம் ஜியோக்ரூப்டாக் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கொண்டு ஜியோ பயனர்கள் க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

    ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பயனர்கள் தங்களது ஜியோ நம்பர் கொண்டு பயன்படுத்த முடியும். சில நாட்களுக்கு மட்டும் ஜியோக்ரூப்டாக் செயலி சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலியை கொண்டு ஜியோ சேவையை பயன்படுத்தாதவர்களுடனும் பேச முடியும்.



    கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளும் போது பயனர்கள் எப்போது மற்றவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எப்போது தனியாக மியூட் செய்ய வேண்டும் என்றும் க்ரூப் மியூட் அல்லது மீண்டும் அவர்களை இணைப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    இந்த செயலியில் லெக்ச்சர் எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட் பயன்படுத்தி, பயனர்கள் இதர க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளில் இருப்பவர்களை மியூட் செய்ய வேண்டும். தற்சமயம் இந்த செயலியை கொண்டு ஆடியோ அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள முடியும். விரைவில் இந்த செயலியை கொண்டு வீடியோ கால் அல்லது க்ரூப் சாட் செய்ய முடியும்.

    ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனம் சுமார் 5.56 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் நன்கொடை வழங்க ஏதுவாக புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க முடியும். #Instagram #Apps



    ஃபேஸ்புக் 2019 திட்டங்களில் வணிகம் மிகமுக்கிய பங்குவகிக்கும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் உறுதி செய்திருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் புதிய ஸ்டிக்கர் சேர்க்கப்படுகிறது.

    ஃபேஸ்புக்கின் டொனேட் பட்டன்கள் மூலம் இதுவரை 100 கோடி டாலர்கள் வரை திரட்டப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமின் ஆண்ட்ராய்டு செயலியில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் புதிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட இருக்கிறது. தொண்டு காரியங்களுக்காக நிதி வழங்கியதும், அதே கட்டண விவரங்களை கொண்டு இன்ஸ்டாகிராமில் இதர பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.



    ஆண்ட்ராய்டு செயலியில் இருக்கும் இன்ஸ்டாகிராம் கோடுரளில், பயனர்கள் எவ்வாறு தொண்டு நிறுவனங்களை தேடி அவற்றை தொடர்பு கொள்ளலாம் என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இனி பயனர்கள் டொனேட் பட்டன் ஸ்டிக்கரை தங்களது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு செய்ததும் ஃபாளோவர்கள் ஸ்டோரியில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கலாம். ஃபேஸ்புக்கில் பண பரிமாற்றங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனினும், அதிக தொகை கொடுத்து வர்த்தகம் செய்யும் போது வணிக நிறுவனங்கள் விளம்பரங்களை வாங்க முடியும். 

    இன்ஸ்டாகிராமில் நிதியுதவி வழங்கும் வசதி ஆரம்பகட்டத்தில் தான் இருக்கிறது. விரைவில் இன்ஸ்டாகிராம் கொண்டு மக்கள் நிதி திரட்டி தொண்டு நிறுவனங்களுக்கு உதவ முடியும். என ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
    ட்விட்டர் பயன்பாடு பற்றி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ட்விட்டரை ஆபத்து காலங்களில் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #Twitter #SocialMedia
    ட்விட்டர் சமூக வலைதளம் என்றாலே பிரபலங்களின் வெரிஃபைடு அக்கவுண்ட் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ட்விட்டரை அதிகளவு பயன்படுத்துவோர் பிரபலங்கள் தான் என நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். இதனை முற்றிலும் பொய் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.

    பல லட்சம் ஃபாளோவர்களை பெற்று ட்விட்டரில் பிரபலங்களாக அறியப்படுவோர் அவ்வப்போது டிரெண்டிங் பட்டியலில் தோன்றுவர். ஆனால் குறைந்த ஃபாளோவர்களுடன் அவ்வப்போது சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் தான் இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் தீவிரமாக ட்விட்டர் பயன்படுத்துகின்றனர் என வெர்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதவிர இயற்கை பேரழிவு காலங்களில் பல லட்சம் ஃபாளோவர்களை கொண்டிருப்பவர்களை விட, குறைந்தபட்சம் 100 முதல் 200 ஃபாளோவர்களை கொண்டிருப்பவர்களே ட்விட்டர் தளத்தை அதிகளவு சரியாக பயன்படுத்துகின்றனர் என்கிறது வெர்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வு.

    ஆபத்து காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்ய அதிக ஃபாளோவர்களை வைத்திருப்பவர்களை விட, குறைந்தளவில் மிக சரியான தொடர்புகளை வைத்திருப்போரை பயன்படுத்துவதே சிறப்பானதாக இருக்கும் என வெர்மாண்ட் நடத்திய ஆய்வு முடிவுகளில் பரிந்துரைக்கப்படுகிறது.



    சராசரியாக சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் ஆபத்து காலங்களில் அதிகளவு ட்விட்களை பதிவிட்டிருந்தனர். இவர்கள் பதிவிடும் பெரும்பாலான ட்விட்கள் மிகமுக்கிய தகவல்களை கொண்டிருந்ததாக ஆய்வுக் குழுவை சேர்ந்த பெஞ்சமின் எமிரி தெரிவித்தார்.

    இவ்வாறாக பயனர்கள் குறைந்தளவு ஃபாளோவர்களை கொண்டிருந்தாலும், இவர்களது ஃபாளோவர்கள் பெரும்பாலும் அதிகளவு நண்பர்கள், குடும்பத்தார் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர். இவ்வாறு நெருங்கிய உறவுகள் ஆபத்து காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பலருக்கும் கொண்டு செல்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.

    இயற்கை பேரிடர் போன்ற ஆபத்து காலங்களில் ட்விட்டர் பயன்படுத்துவோர் மீட்பு பணிகள் அல்லது நிவாரண பொருட்கள் பற்றியே அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றனர். #Twitter #SocialMedia
    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsAppBusiness



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிஸ்னஸ் செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. சிறு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் நோக்கில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் துவங்கப்பட்டது. இந்த செயலியை கொண்டு பயனர்கள் தங்களது வியாபார விவரங்களுடன் சொந்தமாக ப்ரோஃபைல்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ப்ரோஃபைல்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வியாபாரத்தின் மின்னஞ்சல் அல்லது முகவரி மற்றும் வலைதள விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். எனினும், இதுவரை இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து WaBetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஓ.எஸ். பதிப்பின் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: wabetainfo

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஓ.எஸ். பீட்டா செயலி தற்சமயம் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த செயலியில் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் வெவ்வேறு நிறங்களை கொண்ட பின்னணி புகைப்படங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிகிறது.

    புதிய வசதிகளை பொருத்தவரை க்விக் ரிப்ளைக்கள், ஆட்டோமேட்டெட் கிரீட்டிங், அவே மெசேஜ்கள் மற்றும் ரெசிபியண்ட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். 8 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை இன்ஸ்டால் செய்ததும், வாட்ஸ்அப் பிஸ்னஸ் மூலம் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள எளிய, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்ற குறுந்தகவல் கிடைக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருக்கும் சாட் ஹிஸ்ட்ரியை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் மைக்ரேட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் அம்சம் புதிய வடிவமைப்பை பெற இருக்கிறது. இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் மேம்படுத்தப்பட்ட செட்டிங்ஸ் பகுதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் செட்டிங்ஸ் தோற்றம் மாற்றப்பட்டு பல்வேறு டூல்களுக்கு புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய மாற்றங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.45 செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் செட்டிங்ஸ் மெனு மற்றும் புதிய மாற்றங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய மாற்றங்களில் முதன்மையானதாக பேமென்ட்ஸ் (Payments) ஆப்ஷன் இருக்கிறது. இது இணைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்களை பட்டியலிடுகிறது.

    அக்கவுண்ட்ஸ் (Accounts) பகுதியை திறக்கும் போது ஒவ்வொரு ஆப்ஷனிற்கும் பிரத்யேக ஐகான் வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதன் செக்யூரிட்டி (Security), சேஞ்ச் நம்பர் (Change number), டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (Two-step verification) உள்ளிட்டவற்றுக்கும் புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    எனினும், நோட்டிஃபிகேஷன்ஸ் (Notifications) பகுதியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹெல்ப் (Help) பகுதியின் அனைத்து டூல்களும் பிரத்யேக ஐகான்களும் மாற்றப்பட்டிருக்கிறது.

    இதேபோன்று டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் (Data and storage usage) போன்ற ஆப்ஷன்களில் இனி டேட்டா பயன்பாடு பற்றிய விவரங்களை பார்க்க முடியும். இதற்கு நெட்வொர்க் யூசேஜ் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். புதிய இன்டர்ஃபேஸ் மெசஞ்சர் செயலியின் ஸ்டேபிள் பதிப்பில் காணப்படவில்லை.

    இத்துடன் நெட்வொர்க் யூசேஜ் பக்கத்தில் இனி மெமரி பயன்பாட்டு விவரம் மற்றும் தேதி, நேரத்துடன் காண்பிக்கிறது. பேமென்ட்ஸ் தவிர பீட்டா செயலியின் மற்ற அம்சங்கள் சீராக இயங்குகிறது.
    கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மூலம் வழிகாட்டும் புதிய வசதி தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. #GoogleMaps #ARnavigation



    கூகுள் தனது I/O 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை புகுத்த இருப்பதாக அறிவித்தது.

    கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வழிதெரியாத இடத்திற்கு செல்ல சரியாக வழிகாட்டும். தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படும் நிலையில், சில பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் கூகுள் மேப்ஸ் செயலி முதலில் ஜி.பி.எஸ். மூலம் வழிகளை சேகரித்துக் கொண்டு பின் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ விவரங்களை பயன்படுத்தி பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்.



    கூகுள் மேப்ஸ் செயலி ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்கும் என்றபோதும், பயனர்கள் ஸ்மார்ட்போன் கேமராவிற்காக எப்போதும் கையை உயர்த்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பயனர் இருக்கும் இடத்தை மேப்ஸ் சரியாக கண்டறிந்து, சீராக இயங்க துவங்கிடும்.

    புதிய அம்சம் அனைவருக்கும் சேர்க்கப்பட்டதும், கூகுள் மேப்ஸ் செயலில் ஸ்டார்ட் ஏ.ஆர். (Start AR) எனும் பட்டன் இடம்பெறும் என தெரிகிறது. பயனர் செல்ல வேண்டிய இடத்தை சீராக காண்பிக்கும் வகையில் புதிய யூசர் இன்டர்ஃபேசை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது.

    தற்சமயம் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அம்சம் அனைவருக்கும் வழங்குவது பற்றி கூகுள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    ஆப்பிள் ஐபோன்களில் வாடிக்கையாளர் தரவுகளை திருட ஐ.ஓ.எஸ். செயலிகள் புது யுக்தியை கையாள்வது தெரியவந்துள்ளது. #iPhone #Apps



    ஐ.ஓ.எஸ். செயலிகளை பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவுகளையும் சில செயலிகள் ரகசியமாக பதிவு செய்கின்றன. இந்த செயலிகள் உங்களது ஐபோன் ஸ்கிரீனினை உங்களின் அனுமதியின்றி பதிவு செய்வது கண்டறியப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். செயலிகள் உங்களது ஸ்கிரீனினை பதிவு செய்வதை உங்களால் கண்டறியவே முடியாது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் பல்வேறு பிரபல ஐ.ஓ.எஸ். செயலிகள் கிளாஸ்பாக்ஸ் வழிமுறையில் செஷன் ரீபிளே எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்தும் போது பயனரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிகத்துல்லியமாக பதிவு செய்துவிடும். இதில் பயனரின் மிகமுக்கிய விவரங்களும் அடங்கும். 

    அந்த வகையில் ஐ.ஓ.எஸ். செயலிகளில் செஷன் ரீபிளே வசதியை செயலிழக்கச் செய்ய ஐ.ஓ.எஸ். டெவலப்பர்களுக்கு ஆப்பிள் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 



    இவற்றில் எந்த செயலியிலும் பயனரிடம் ஸ்கிரீனினை பதிவு செய்வதற்கான அனுமதியை கோருவதில்லை. பிரபல ஐ.ஓ.எஸ். செயலிகளான ஏர் கனடா மற்றும் எக்ஸ்பீடியா உள்ளிட்டவை கிளாஸ்பாக்ஸ் அனாலடிக்ஸ் கொண்டு இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்கிரீனினை பதிவு செய்வதில் தங்கும் விடுதிகள், பயண வலைத்தளங்கள், வங்கி, விமான சேவை மற்றும் இதர சேவை வழங்கும் செயலிகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    செஷன் ரீபிளே தொழில்நுட்பம் செயிலில் பயனர் மேற்கொள்ளும் ஒவ்வொரு க்ளிக், கீபோர்டு பதிவு, பட்டன் புஷ் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும். எனினும், பயனர் செயலியை பயன்படுத்தும் போது மட்டுமே இவ்வாறு செய்யப்படும் என்பது பயனருக்கு சற்று ஆறுதலான விஷயம் எனலாம்.

    செயலிகளை ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்யவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என கூறப்பட்டது. எனினும், இவ்வாறு செய்யும் போது பயனரின் மிகமுக்கிய விவரங்களும் ஆப் டெவலப்பர் அறிந்து கொள்ள முடியும். 

    பொதுவாக ஐ.ஓ.எஸ். செயலிகளை இயக்கும் பயனரின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் பதிவு செய்யப்பட்டதும், அவை ஆப் டெவலப்பரின் சர்வெர்களுக்கு அனுப்பப்படும். இதன்மூலம் எவர் வேண்டுமானாலும் பயனர் விவரங்களை இயக்க முடியும். செஷன் ரீபிளே தொழில்நுட்பத்தினை கிளாஸ்பாக்ஸ் போன்று பல்வேறு இதர நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
    வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் மற்றும் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் செயலியினுள் மெஷின் லேர்னிங் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்த தொழில்நுட்பம் வழக்கத்தை விட அதிகளவு குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் பல்வேறு அக்கவுண்ட்களை உருவாக்கி தீங்கு விளைவிக்கும் போலி தகவல்களை பரப்புவோரை கண்டறியும். இதுபோன்ற அக்கவுண்ட்களை செயலி முழுக்க வெவ்வேறு தளங்களில் முடக்குவதாக வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

    அந்த வகையில் போலி தகவல்களை பரப்புவதற்கென உருவாக்கப்படும் அக்கவுண்ட்கள் பதிவு செய்யப்படும் போது, குறுந்தகவல் அனுப்பும் போது அல்லது மற்றவர்கள் புகார் எழுப்பும் போது என பல்வேறு தளங்களில் முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் செயலியில் சுமார் இருபது லட்சம் அக்கவுண்ட்கள் இவ்வாறு முடக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



    வாட்ஸ்அப் உருவாக்கி இருக்கும் மெஷின் லேர்னிங் மென்பொருளால் தற்சமயம் 20% அக்கவுண்ட்களை பதிவு செய்யப்படும் போதே முடக்கமுடிகிறது. அக்கவுண்ட்களை முடக்க பயனரின் ஐ.பி. முகவரி, அவர் வசிக்கும் நாடு, அவர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர், அக்கவுண்ட் எவ்வளவு பழையதாக இருக்கிறது என பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

    ஒரே ஸ்மார்ட்போனில் பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கும் விசேஷ மென்பொருள் உள்பட செயலியை தவறாக பயன்படுத்த அனுமதிக்கும் பல்வேறு வழிகளை வாட்ஸ்அப் கண்டறிந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்கானிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

    போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணிக்க பயனர் ஒரு குறுந்தகவலை மற்றவருக்கு ஃபார்வேர்டு செய்யும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதுதவிர ரேடியோ, தொலைகாட்சி, வலைதளம் உள்ளிட்டவற்றில் போலி செய்திகள் பரப்புவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.
    ×