என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96693
நீங்கள் தேடியது "slug 96693"
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி ஒருவழியாக வழங்கப்பட்டுள்ளது. #Facebook #Messenger
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. மெசஞ்சரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப் போன்றே மெசஞ்சர் செயலியிலும் குறுந்தகவல்களை தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மெசஞ்சரில் அழிக்க வேண்டிய குறுந்தகவலை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பின் அழிக்கப்பட்ட குறுந்தகவல் இருந்த இடத்தில் குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உணர்த்தும் தகவல் இடம்பெறுகிறது. மெசஞ்சரில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க பத்து நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு தற்சமயம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மெசஞ்சரில் குறுந்தகவல்களை அழித்தபின், இந்த அம்சம் உருவாக்கப்படுவதை ஃபேஸ்புக் உறுதி செய்திருந்தது. குறுந்தகவல்களை பயனர் தங்களுக்கு மட்டும் அழித்துக் கொள்ள குறுந்தகவல்களை தேர்வு செய்து “Remove for You” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ததும் குறுந்தகவல் பயனருக்கு மட்டும் அழிக்கப்பட்டு விடும். ஃபேஸ்புக் இந்த அம்சத்தை முதற்கட்டமாக எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், லி்ண்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய 10 நிமிடங்களில் அழிக்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் செயலியில் வழங்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். #Instagram #Apps
இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் என்ன செய்கின்றனர் என்பதை அவரவர் ஃபாளோவர்களிடம் தெரிவிக்க ஏதுவாக ஸ்டோரிஸ் அம்சம் சேர்க்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் அம்சத்தை தற்சமயம் ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டு பேசிய மார்க் சூக்கர்பர்க், "இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்," என தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தினர். அந்த வகையில் ஆறு மாதங்களில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்திருக்கிறது.
இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளிலும் ஸ்டோரிஸ் அம்சம் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சம் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை ஸ்டோரிக்களாக பதிவு செய்யலாம்.
முன்னதாக இதேபோன்ற அம்சம் ஸ்னாப்சாட் செயலியில் மெமரிஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் இந்த அம்சத்தை கொண்டு வருவாய் ஈட்டத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியில் விளம்பரங்கள் தோன்ற துவங்கின. #Instagram #Apps
வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் அனுப்ப டைப் செய்வதற்கு மாற்றாக குரல் மூலம் குறுந்தகவல் அனுப்பும் வழிமுறையை பற்றி தொடர்ந்து பார்ப்போம். #Whatsapp
வாட்ஸ்அப்பில் டைப் செய்து குறுந்தகவல் அனுப்புவது பலருக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. டைப் செய்வதால் அதிக நேரம் பிடிப்பதுடன், பிழைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் பலரும் மைக் மூலம் குரலை பதிவு செய்து வாய்ஸ் மெசேஜாக அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பேசுவதை எழுத்துகளாக சைப் செய்து வழங்கும் நுட்பம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதுபோன்ற பயன்பாடு வாட்ஸ்அப்பில் வராதா? என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இந்நிலையில், கூகுளின் ஜி-போர்டு ‘கீபோர்டு’ அப்ளிகேசனை பயன்படுத்தி பயனர் தங்களது பேச்சை டைப் செய்துவிட முடியும். இதுவரை வாட்ஸ்அப்பில் அந்த வசதி அறிமுகம் செய்யப்படாவில்லை என்றாலும், ஜிபோர்டு வசதியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலிலும் குறுந்தகவலை டைப் செய்யலாம்.
இதை செயல்படுத்த வாட்ஸ்அப் செயலியின் புதிய பதிப்புக்கு உங்களது செயலியினை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஜிபோர்டு செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து நிறுவிக் கொள்ள வேண்டும்.
பின் டைப் செய்யும்போது வழக்கமான வாட்ஸ்அப் மைக் அருகே ஜிபோர்டின் மைக் குறியீடு தோன்றும். அதை அழுத்திவிட்டு பேசினால், அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும். இந்த வகையில் பாஸ்வேர்டு மற்றும் சில ரகசிய குறிகளை மட்டும் டைப் செய்ய முடியாது. இந்த வசதியை வாட்ஸ்அப் செயலியில் சேர்ப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
குறுந்தகவலை எழுத்துக்களாக டைப் செய்யும் பணியினை ஜிபோர்டு பார்த்துக் கொள்ளும் என்றாலும், குறுந்தகவலை அனுப்பும் முன் பிழை இல்லாததை உறுதி செய்துகொள்ள வேண்டும். #Whatsapp
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Twitter #socialmedia
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகின்றன. சமூக வலைதளங்களை பயன்படுத்தி உலகின் பல நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.
நண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், செயல்பாடுகளையும், நட்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கி பணம் சம்பாதிக்கின்றனர். இது போன்று எத்தனையோ நன்மைகள் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுகின்றன.
அதே நேரத்தில் இங்கு தனி மனித ரகசியங்களை எப்போதும் பாதுகாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வலைதளத்தில் ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி உள்ளே நுழைந்து மிகப் பெரிய தகவல் திருட்டு நடந்தது. இதை தொடர்ந்து பலர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள கணக்கில் இருந்து விலகினார்கள். இவற்றை பலர் தவறாக பயன்படுத்தியதாக கூறி நீக்கப்பட்டனர்.
ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் இருந்து ஒருவர் விலகினாலும், நீக்கினாலும் அதில் அவர் பதிவிட்டு இருந்த தகவல்களை அழிக்க முடியாது. இதன் மூலம் தனி மனித ரகசியத்துக்கு ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகமும் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டது.
ட்விட்டரில் 13,905 பேர் பதிவு செய்த 3 கோடி தகவல் திரட்டுகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதே போன்று ஃபேஸ்புக்கில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு கம்பெனியோ, அரசாங்கமோ அல்லது நடிகரோ, சாதாரண குடிமகனோ யாராக இருந்தாலும் இவற்றில் இருந்து விலகினாலும், நீக்கப்பட்டாலும் அவர்களின் தகவல்களை மீண்டும் பெற முடியும். ரகசியங்கள் பாதுகாக்க முடியாது என தெரியவந்துள்ளது.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய பதிப்பின் இன்டர்ஃபேஸ் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Twitter #socialmedia
ட்விட்டர் வெப் பயனர்களுக்கு புதிய இன்டர்ஃபேஸ் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. ட்விட்டரில் புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளவோ அல்லது முந்தைய வடிவமைப்பிலேயே தொடரலாம். புதிய இன்டர்ஃபேசை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ‘opt-in’ ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். புதிய வடிவமைப்பில் இரண்டு அல்லது மூன்றடுக்குகளை கொண்டிருக்கிறது.
இத்துடன் எமோஜி பட்"ன், க்விக் கீபோர்டு ஷார்ட்கட்கள், மேம்படுத்தப்பட்ட டிரெண்ட்கள், அட்வான்ஸ்டு சர்ச் மற்றும் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்டர்ஃபேஸ் பயன்படுத்த விரும்பாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பழைய இன்டர்ஃபேசிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
A new https://t.co/fHiPXozBdO is coming.
— Twitter (@Twitter) January 22, 2019
Some of you got an opt-in to try it now. Check out the emoji button, quick keyboard shortcuts, upgraded trends, advanced search, and more. Let us know your thoughts! pic.twitter.com/G8gWvdHnzB
ட்விட்டரில் டார்க் மோட் சீராக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி, விரைவில் மேம்படுத்தப்பட்ட டார்க் மோட் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சில வாடிக்கையாளர்கள் டார்க் மோட் கருப்பு நிறத்திற்கு பதிலாக டார்க் புளு நிறத்தில் தோன்றுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
சமீபத்தில் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் அவரவர் விரும்பும் டைம்லைனை தேர்வு செய்து கொள்ளும் வசதியை சேர்த்தது. ட்விட்டர் இந்த வசசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. முன்னதாக இந்த வசதி ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், விரைவில் வலைதளத்தில் வழங்கப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பீட்டா செயலியில் க்ரூப் கால் செய்வதற்கான ஷார்ட்கட் வழங்கப்பட்டுள்ளது. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்க்கப்பட்டது.
பயனுள்ள அம்சம் என்றாலும், வீடியோ கால் மேற்கொள்வது சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி, பின் மற்றவர்களை அதில் இணைத்துக் கொள்ள வேண்டும். தற்சமயம் சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும், விரைவில் இது எளிமையாக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை க்ளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம். பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய க்ரூப் காண்டாக்ட்கள் இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம். புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.
2.19.9 Android update is available now.https://t.co/TzvR1dJz9y
— WABetaInfo (@WABetaInfo) January 15, 2019
It fixes the GIF bug and the group call button is now enabled (it was not available in versions downloaded from the official website). https://t.co/R910Ws8RbZ
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். செயலியில் ஏற்கனவே க்ரூப் வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் லாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்ட பிழை பயனரின் பழைய குறுந்தகவல்களை தானாக அழிக்க செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலர் தங்களது வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் தானாக அழிந்துவிட்டதாக அவரவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.
சில பயனர்கள் 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அழிந்து போனதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும் பிழை குறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.
கம்ப்யூட்டர் சாதனங்களில் வீடியோ மற்றும் ஆடியோ ஃபைல்களை இயக்கும் வசதியுடன் அறிமுகமான வி.எல்.சி. மென்பொருள் இதுவரை 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. #VLC
பிரபல வீடியோ பிளேயர் மென்பொருள்களில் ஒன்றான வி.எல்.சி. 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இத்துடன் வி.எல்.சி. மீடியா பிளேயர் ஆண்ட்ராய்டு செயலியில் ஏர்பிளே வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதி கொண்டு பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஆப்பிள் டி.வி.யில் ஸ்டிரீம் செய்து பார்த்து ரசிக்க முடியும்.
வி.எல்.சி. ஆண்ட்ராய்டு செயலிக்கான அப்டேட் ஒரு மாதத்தில் வெளியாகும். இந்த அப்டேட் வெளியானதும் ஆப்பிளின் ஏர்பிளே ப்ரோடோகால் சூட் வசதியுடன் வயர்லெஸ் ஸ்டிரீமிங் செய்ய முடியும்.
வி.எல்.சி. மீடியா பிளேயர் சேவையை தொண்டு நிறுவனமான வீடியோலேன் வழங்கி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2019 விழாவில் வீடியோலேன் சார்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்கில் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை வரிசைப்படுத்தி, அவற்றை ஒன்றிணைத்து வெவ்வேறு தளங்களில் இருந்து வி.எல்.சி. டவுன்லோடுகள் கண்காணிக்கப்பட்டது.
In front of an audience at #CES2019 we reached the 3 billion downloads of #VLC in live. What an amazing journey! See you in a billion :-) pic.twitter.com/sncDsiQ1J3
— Ludovic Fauvet (@etixxx) January 10, 2019
சி.இ.எஸ். 2019 துவக்க நிகழ்வின் போது, வி.எல்.சி. பிளேயர் 300 கோடி டவுன்லோடுகளை கடக்க சில லட்சங்கள் பின்தங்கியிருந்தது. பின் 300 கோடி டவுன்லோடுகளை நேற்று (ஜனவரி 10) கடந்தது. மைல்கல் டவுன்லோடுகளை கடந்ததும், வி.எல்.சி. டெவலப்பரான லுடோவிக் ஃபாவெட் டவுன்லோடு கவுண்ட்டர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
ஆண்ட்ராய்டு வி.எல்.சி. செயலிக்கான ஏர்பிளே வசதி வி.எல்.சி. 4 பதிப்பில் வழங்கப்படும் என மூத்த டெவலப்பர்களில் ஒருவரான ஜீன் பாப்டிஸ்ட் கெம்ப் தெரிவித்தார். ஏர்பிளே வசதி எல்.ஜி.யின் OLED டி.வி., சாம்சங் டி.வி. உள்ளிட்டவற்றிலும் வழங்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு இதர ஸ்மார்ட் டி.வி. நிறுவனங்களும் ஆப்பிளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர். #Samsung #Facebook
சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் செயலியை அழிக்க முடிவதில்லை என பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பு கருதியோ, செயலியை தொடர்ந்து பயன்படுத்த விருப்பமில்லை, ஃபேஸ்புக் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது போன்ற காரணங்களால் செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய முயற்சிப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சுகிறது.
சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக், மின்னஞ்சல், ட்விட்டர், அமேசான், மெசஞ்சர் மற்றும் இதர செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்படுகிறது. இவற்றுடன் சில கூகுள் செயலிகளும் அடங்கும். இவ்வாறு பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளில் சிலவற்றை மட்டும் செயலிழக்க செய்ய முடியும் என்றாலும், சிலவற்றை அன்இன்ஸ்டால் செய்ய முடியாது.
சாம்சங் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சில பயனர்கள் தங்களது மொபைலில் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் செயலியை டெலீட் செய்வதற்கான ஆப்ஷனே வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒற்றை ஆப்ஷன் ஃபேஸ்புக் கணக்கை டி-ஆக்டிவேட் செய்வது மட்டும் தான். இவ்வாறு செய்தாலும் ஃபேஸ்புக் ஐகான் ஸ்மார்ட்போனில் அப்படியே இருக்கும்.
பயனற்று இருக்கும் சமூக வலைத்தள ஐகான்கள் ஸ்மார்ட்போன்களின் மெமரியை ஆக்கிரமித்துக் கொள்வதை தவிர வேறு எதையும் செய்வதில்லை. எனினும், சாம்சங் பயனர்கள் தரப்பில், ஃபேஸ்புக் செயலி பயனர் விவரங்களை பின்னணியில் சேகரிக்கிறதா என்ற அச்சம் பயனர்கள் மனதில் எழுகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறும் போது “செயலிழக்க செய்யப்பட்ட செயலி கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதற்கு சமமானது. இதனால் பயனர் விவரங்கள் சேகரிக்கப்படாது. எனினும், அவ்வப்போது இதுபற்றி பயனர்களுடன் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.” என தெரிவித்தார்.
“செயலி அழிக்கக்கூடியதாக இருப்பது ஃபேஸ்புக் கடந்த காலங்களில் மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை பொருத்து வேறுபடும்,” என ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த விங் எனும் ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப் கொண்டு ஸ்மார்ட்போனில் வீடியோ ரிங்டோன் செட் செய்து கொள்ள முடியும். #app
கலிபோர்னியாவை சேர்ந்த வீடியோ ரிங்டோன் செயலி இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த செயலி வழங்கப்படுகிறது.
இந்தியா முழுக்க டவுன்லோடு செய்யக்கூடிய வகையில் விங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு ஒவ்வொரு அழைப்பிலும் வீடியோவினை ரிங்டோனாக செட் செய்து கொள்ளலாம். இதன் இந்திய பதிப்பில் பயனர்கள் பாலிவுட் வீடியோக்களை தங்களது ஸ்மார்ட்போனில் ரிங்டோனாக செட் செய்யலாம்.
பயனர் விரும்பும் வீடியோக்களை தங்களது ரிங்டோனாக செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட வீடியோக்களை ரிங்டோனாக செட் செய்யவோ அல்லது தங்களது நண்பர்களுக்கென பிரத்யேக ரிங்டோன்களை செட் செய்யலாம்.
இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நேபால், நைஜீரியா, கானா, இந்தோனேசியா என உலகம் முழுக்க 174 நாடுகளில் விங் செயலி பயன்படுத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விங் செயலியில் உலகம் முழுக்க இதுவரை சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான விங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் புதிய வசதியை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. #WhatsApp #Apps
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் சாட் விவரங்களை பாதுகாக்க கைரேகை சென்சார் வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை செயல்படுத்தியதும், பயனர்கள் கைரேகையை வைத்தால் மட்டுமே செயலியை திறக்க முடியும்.
இதுகுறித்து WABetaInfo, வெளியிட்டிருக்கும் தகவல்களில் இந்த அம்சத்தை உருவாக்குவற்கான முதற்கட்ட பணிகள் மட்டுமே துவங்கி இருக்கிறது. இதனால் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.3 பதிப்பில் செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஃபேஸ் ஐ.டி. மற்றும் டச் ஐ.டி. அம்சங்களை ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்குவதற்கான சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து தற்சமயம் இதேபோன்ற பாதுகாப்பு வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
புகைப்படம் நன்றி: WABetaInfo
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் இதற்கான சோதனை மட்டும் நடைபெற்று இருக்கும் நிலையில், இதுவரை இந்த வசதி வழங்கப்படாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு வசதியை இயக்க செயலியின் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சத்தை இயக்கினால் மட்டுமே சாட் விவரங்களை பாதுகாக்க முடியும். ஏற்கனவே தங்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு வசதியை செயல்படுத்தி இருப்பின் இந்த அம்சம் தேவைக்கதிகமானதாகும்.
ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் கைரேகை பாதுகாப்பு வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதை செயல்படுத்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் தமிழ் மொழி வசதியுடன் புதிய மொபைல் பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது. #Jio #browser
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ புதிய பிரவுசர் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ பிரவுசர் என அழைக்கப்படும் புதிய செயலி இந்தியாவின் முதல் பிரவுசர் என்றும், இது இந்திய பயனர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என ஜியோ தெரிவித்துள்ளது.
குறைந்த மெமரியில் வேகமாகவும், மிக எளிமையாகவும் பயன்படுத்தக்கூடியதாக ஜியோ பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதால், மலிவு விலை சாதனங்களிலும் இதனை எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் புதிய செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
ஜியோ பிரவுசர் செயலியில் பயனர்கள் புத்தம் புதிய வீடியோக்கள் மற்றும் செய்திகளை வாசிக்க முடியும். தற்சமயம் தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் பெங்காலி என அதிகபட்சம் எட்டு மொழிகளில் ஜியோ பிரவுசரை பயன்படுத்தலாம். பயனர்கள் அவரவர் விரும்பும் மொழியை தேர்வு செய்து, அந்த தலைப்பில் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.
பிரவுசரில் பிரத்யேகமாக செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கான பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஃபாஸ்பைட்ஸ் வழங்கும் தரவுகள் வாடிக்கையாளர்களுக்கு பட்டியலிடப்படும். வேகமான பிரவுசிங் அனுபவம் வழங்கும் நோக்கில் ஜியோ பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக செயலிக்கான விவரக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை இணையத்தின் முன்னணி வலைத்தளங்களை விரைவில் இயக்க க்விக் அக்சஸ் எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரைவேட் பிரவுசிங் அனுபவத்தை வழங்கும் இன்காக்னிட்டோ மோட், செய்திகள் மற்றும் வீடியோக்களை நண்பர்கள், குடும்பத்தாருடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
பயனர்கள் டவுன்லோடு செய்த தரவுகளை இயக்கும் வசதி மற்றும் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய வலைத்தளங்களின் விவரங்கள் வழங்கப்படுகிறது. செயலியை மேம்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்கள் பரிந்துரைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிக்க ரிலையன்ஸ் ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.
தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் ஜியோ பிரவுசர் செயலி ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வெளியாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் பீட்டா பதிப்பில் புதிய வசதிகள் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp #Apps
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கின்றன.
அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.
இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். #Whatsapp #Apps
அந்த வகையில் புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அப்டேட் மூலம் செயலியில் சில முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, செயலியின் ஒட்டுமொத்த அனுபவமும் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஜிஃப்களில் ஸ்டிக்கர்களை சேர்க்க முடியும். இதில் பயனர்கள் நேரம், இருப்பிடம் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளில் கிடைக்கும் தனிப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டில் ஸ்டிக்கர்களை தேர்வு செய்ய புதிய வடிவமைப்பு கொண்ட பகுதி வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: WABetaInfo
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே இந்த அம்சம் தெரிகிறது. இதுதவிர குரூப்களில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சம் கொண்டு பயனர் தேர்வு செய்யும் குறுந்தகவல்களுக்கு வாட்ஸ்அப் தானாக புதிய சாட் ஸ்கிரீனை திறக்கும். இதில் பயனர்கள் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க முடியும்.
இத்துடன் ஸ்டேட்டஸ்களை சரிபார்ப்பதற்கென டெவலப்பர்கள் புதிய வழிமுறையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வழக்கமாக பயனர்கள் 3D ஃபோர்ஸ் முறையில் வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் அனுப்பும் குறுந்தகவல்களை சரிபார்ப்பதை போன்று இயங்கும். எனினும், தற்சமயம் இந்த அம்சம் 3D டச் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். #Whatsapp #Apps
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X