search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96693"

    ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் செயலியில் புது அம்சத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை ஒவ்வொரு மாதமும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதே அம்சத்தை சுமார் 18.8 கோடி ஸ்னாப்சாட் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். ஏ.ஆர். செல்ஃபி மாஸ்க், அனிமேஷன் ஜிஃப், பிட்மோஜி போன்ற வசதிகள் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதுதவிர இந்த ஆண்டின் இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் ஸ்னாப்சாட் பயனர்கல் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து இருக்கிறது. எனினும், ஸ்னாப்சாட் செயலியில் தானாக மறைந்துபோகும் சாட் வசதி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை நிரந்தரமாக பதிவிடும் வசதி மட்டுமே வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டதும், அவற்றை அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே வேலை செய்யும். இன்ஸ்டாகிராம் செயலியில், நிரந்தரமாகவும், குறைந்த நேரத்திற்கு என புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும். டெக்ஸ்ட் பதிவுகள் நிரந்தரமானவை ஆகும்.

    இதேபோன்ற அம்சத்தை வாட்ஸ்அப் மிக எளிமையாக தனது செயலியில் வழங்க இருக்கிறது. இதற்கு பயனர்கள் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடும் போது தானாக குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மறைந்துபோகச் செய்ய டைமர் வசதியை சேர்க்க முடியும். வாட்ஸ்அப் செயலியில் தானாக அழிந்து போகும் ஸ்டேட்டஸ் வசதி விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ஸ்அப்பில் எழுத்துக்கள் தானாக அழிந்து போகச் செய்யவோ அல்லது எவ்வளவு நேரம் தெரிய வேண்டும் என்பதை மிக எளிமையாக வழங்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை இந்த அம்சம் வழங்கலாமா என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வசதியை வழங்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Messenger



    ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது சாதனங்களில் க்ரூப் சாட் மூலம் நண்பர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்க முடியும்.

    ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர்கள் அதிக நேரத்தை செலவிட வைக்கும் நோக்கில் ஃபேஸ்புக் புது அம்சத்தை வழங்க இருக்கிறது. புது அம்சம் மெசஞ்சரின் கோட்பேஸ் மூலம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒரே வீடியோவை பயனர் தனது நண்பருடன் ஒன்றிணைந்து பார்க்க முடியும். இதேபோன்று ஒரே வீடியோவை பற்றி சாட் செய்ய முடியும். 

    இவ்வாறு வீடியோ பார்க்கும் போது அனைவரும் வீடியோவை இயக்க முடியும். மெசஞ்சரின் புது அம்சம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.



    ஒன்றாக வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் எங்கிருந்து வீடியோக்களை தேட முடியும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஃபேஸ்புக்கில் இருந்து யு.ஆர்.எல். முகவரியை பதிவு செய்ய முடியும் என்றும், மெசஞ்சர் வழியாக வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

    இதுமட்டுமின்றி மெசேஜ் கம்போஸ் செய்யும் அல்லது டிஸ்கவர் டேப் மூலம் புது வீடியோக்களை பிரவுஸ் செய்ய முடியும் என்றும், யூடியூப் போன்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வீடியோக்களை பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீடியோக்களை ஒன்றிணைந்து பார்க்கச் செய்வதன் மூலம், மெசஞ்சர் தளத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம் ஆகும். வீடியோ பார்க்கும் சேவையில், விளம்பர வீடியோக்கள், திரைப்பட டிரெயிலர்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். தற்சமயம் வரை இந்த அம்சம் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அம்சத்தை மேம்படுத்தும் வகையில் அந்நிறுவனம் மூன்று புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. #Instagram



    இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கவும், மேம்படுத்துவும் அந்நிறுவனம் மூன்று புதிய அம்சங்களை  சேர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. 

    இன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை வழங்கி இன்ஸ்டாவாசிகளுக்கு ஷாப்பிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின் எக்ஸ்ப்ளோர் (Explore) பகுதியின் மூலம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் அந்நிறுவனம் புதிய பொருட்களை கண்டறிய மூன்று புது வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.

    அதன்படி பயனர்கள் புதிய பொருட்களை கண்டறிவதுடன், பிரான்டுகளிடம் இருந்து பொருட்களை வாங்குவது மற்றும் இன்ஸ்டாகிராம் ஷாப்பிங்கின் முழு விவரங்களையும் பார்க்க புதிய அம்சம் வழி செய்கிறது. 

    இன்ஸ்டாகிராமில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களில் ஏதேனும் பொருள் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அதனை ஷாப்பிங் பட்டியலில் சேமித்து வைத்துக் கொண்டு, பின்னர் அவற்றை பார்க்க முடியும். ஸ்டோரி அல்லது ஃபீட்களில் பொருட்களை கிளிக் செய்து வலது புறம் காணப்படும் சேவ் செய்துக் கொள்ளும் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பொருளை ஷாப்பிங் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.



    ஷாப்பிங் பட்டியல் ஆப்ஷனை உங்களது ப்ரோஃபைல் பகுதிக்குச் சென்று இயக்க முடியும். புதிய வசதியுடன் இன்ஸ்டாகிராம் செயலியின் பிஸ்னஸ் ப்ரோஃபைல்களில் உள்ள ஷாப் டேப் ஆப்ஷனை புதுப்பிக்க இருப்பதாகவும், இதற்கான சோதனை நடைபெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் ஷாப்பிங் சார்ந்த போஸ்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் பொருட்களை வேகமாக, எளிதில் பார்க்கக்கூடிய வகையில் ஷாப் டேப் மாற்றப்பட இருக்கிறது. அந்த வகையில் பிஸ்னஸ் ப்ரோஃபைல் செல்லும் போது, பொருட்களை பார்க்க ஷாப் பட்டனை கிளிக் செய்யும் போது குறிப்பிட்ட பொருளின் பெயர், விலை மற்றும் போஸ்ட் விவரங்களை பார்க்க முடியும்.

    நீங்கள் விரும்பும் பிரான்டுகளின் பொருட்களை வீடியோக்கள் மூலமாகவும் ஷாப் செய்ய முடியும். நீங்கள் விரும்பும் பிரான்டு வீடியோவினை ஃபீடில் பார்க்கும் போது, இடது புறமாக காணப்படும் ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
    இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டுள்ள புது அப்டேட் மூலம் உங்களது பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். #instagram



    இன்ஸ்டாகிராம் செயலியின் புது அப்டேட் மூலம் யுவர் ஆக்டிவிட்டி (Your Activity) எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு இன்ஸ்டாகிராம் செயலியை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

    இதுமட்டுமின்றி தினமும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அம்சங்களும் புது அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவற்றுடன் புஷ் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்யும் அம்சம் வழங்கப்படுகிறது. எனினும் மியூட் செய்யும் வசதி சிறிது நேரத்திற்கு மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டா செயலியை பயனர்கள் அதிகளவு இயக்குவதற்கான வசதிகள் சேர்க்கப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய வசதி செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் போன்ற அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனமும் அறிவித்து இருந்தது, எனினும் இதற்கான அப்டேட் அந்நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை வழங்கப்படவில்லை.



    “ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவையை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தச் செய்ய வேண்டும்,” என இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் வெல்-பீயிங் பிரிவு தலைவர் அமீத் ரனடைவ் தனது வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார்.

    புது வசதிகளை இயக்க விரும்பும் பயனர்கள் தங்களது ப்ரோஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும், இனி ஹேம்பர்கர் ஐகானை கிளிக் செய்தால் யுவர் ஆக்டிவிட்டி அம்சம் காணப்படும். இந்த ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சாதனத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செயலியை பயன்படுத்தி இருக்கின்றீர்கள் என்ற விவரங்களை பார்க்க முடியும்.

    டேஷ்போர்டின் கீழ் தினசரி ரிமைன்டர் செட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தியதும், நீங்கள் செட் செய்த காலம் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம். பின் அந்த நாளுக்கான நேரம் நிறைவுற்றதும், இன்ஸ்டாகிராம் உங்களுக்கு நினைவூட்டும். எனினும், இந்த ஆப்ஷனை எந்நேரமும் நிராகரிக்கவோ அல்லது மாற்றியமைக்கவும் முடியும்.

    இதேபோன்று நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ் சென்றால் மியூட் புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ் செட்டிங் காணப்படும். இதை செயல்படுத்தியதும், இன்ஸ்டாகிராம் நோட்டிஃபிகேஷன்கள் நீங்கள் விரும்பும் சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்தப்படும்.
    வாட்ஸ்அப் செயலியில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp



    வாட்ஸ்ப் செயலியில் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செயலியில் புதிய அம்சங்களை சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. புதிய வசதியின் மூலம் விரைவில் பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

    இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் நேம்டேக் (Nametag) அம்சம் போன்றே இயங்கும் என தெரிகிறது. மேலும் செயலியில் இருந்து நேரடியாக கான்டாக்ட் சேர்க்கும் அம்சத்தினை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஷேர் கான்டாக்ட் இன்ஃபோ வியா கியூ.ஆர். (share contact info via QR) அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் நேடம்டேக் அல்லது ஸ்னாப்சாட் செயலியில் ஸ்னாப்கோட் இயங்குவதை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வியாபார ரீதியாக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    புதிய அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நியூ கான்டாக்ட் (New Contact) ஷார்ட்கட் அம்சத்திற்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் நியூ கான்டாக்ட் அம்சம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மே மாதம் வழங்கப்பட்டது.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேரிட்டி டூல்ஸ் அம்சம் மூலம் மூன்று ஆண்டுகளில் தொண்டு நிறுவனங்களுக்காக ரூ.7,224 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. #Facebook



    ஃபேஸ்புக்கில் உள்ள சேரிட்டி டூல்ஸ் (தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சேவை) மூலம் மக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் நிதி திரட்டல் மூலம் இரண்டு கோடி மக்கள் நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து நிதி திரட்டும் சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    “எங்களின் தனிப்பட்ட நிதி திரட்டும் டூல்கள் 20 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது,” என ஃபேஸ்புக்கின் சமூக நலன் அமைப்பின் துணை தலைவர் நவோமி கிளெயிட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

    மக்கள் ஃபேஸ்புக்கின் லாப நோக்கமற்ற மற்றும் தனிப்பட்ட தேவைக்காக நிதி திரட்டும் டூல்களை பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் இந்த சேவை 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் இந்த சேவை இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.



    “எங்களின் லாப நோக்கமற்ற சமூகம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது, தற்சமயம் 19 நாடுகளில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமாக அவை அதிகரித்துள்ளது. இவை ஃபேஸ்புக் மூலம் நேரடியாக நிதியுதவிகளை பெற முடியும்,” என கிளெயிட் தெரிவித்தார்

    சிறு மற்றும் பெருந்தொகை என நிதி திரட்டும் சேவையை கொண்டு மக்கள் அவர்கள் வாழும் சமூகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

    உதாரணத்திற்கு குழந்தைகளை காப்பாற்றுவதற்கு மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.54.2 கோடி ரூபாய் ஃபேஸ்புக் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உலகம் முழுக்க சுமார் 60 நாடுகளில் கிட்டத்தடட் 65 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதே போன்று நோ கிட் ஹங்ரி (No Kid Hungry) திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.36.1 கோடி சேகரிக்கப்பட்டு அமெரிக்கா முழுக்க குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை உறுதி செய்திருந்த நிலையில், பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. #messengerupdate



    ஃபேஸ்புக் தளத்தில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இதற்கான அப்டேட் வழங்கப்படுவதாக தெரிகிறது. அதன்படி ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை திரும்பப் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    மெசன்ஜரில் அனுப்பிய குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட முதல் பத்து நிமிடங்களுக்குள் அவற்றை திரும்பப்பெற முடியும். இதன் மூலம் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை திருத்தவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ முடியும். இந்த ஆப்ஷன் பயன்படுத்தும் போது குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் திரையில் தோன்றுகிறது. 

    ஃபேஸ்புக்கில் அன்சென்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள் சிறிது நேரத்திற்கு அப்படியே இருக்கும், இதனால் மெசேஜ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டால் அவை மறுபரிசீலனை செய்யப்பட்டும். அனுப்பிய மெசேஜ்களை திரும்பப்பெறும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது.



    முதற்கட்டமாக இந்த வசதி போலாந்து, பொலிவியா, கொலம்பியா மற்றும் லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளில் விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படம், வீடியோக்கள், லின்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய பத்து நிமிடங்களுக்குள் அழிக்க முடியும்.

    மெசஞ்சர் உரையாடலில் அனுப்பப்படும் அனைத்தும் தகவல்களை அழிக்க முடியும், எனினும் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே உங்களால் அழிக்க முடியும். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களை உங்களால் அழிக்க முடியாது. 

    மெசஞ்சரில் அன்சென்ட் அம்சத்தை பயன்படுத்த, மெசேஜை அழுத்திப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மெசேஜை திரும்பப் பெறச் செய்யும் ஆப்ஷன் திரையில் தெரியும். அதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். 

    இவ்வாறு செய்யும் போது “மெசேஜ் நிரந்தரமாக அழிக்கப்படும், நீங்கள் மெசேஜை அழித்த விவரம் அனைவருக்கும் தெரியவரும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்” என்ற எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றும். மேலும் பல்வேறு புதிய அன்சென்ட் வசதிகளை வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் உலகம் முழுக்க 20 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. #WhatsApp



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் போலி செய்திகளை முடக்கும் பணிகளை மேற்கொள்ள உலகம் முழுக்க 20 ஆய்வு குழுக்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்தவர் ஆராய்ச்சியாளர்களும் அடங்கியுள்ளனர். 

    வாட்ஸ்அப் நியமித்திருக்கும் புதிய ஆய்வு குழு செயலியில் போலி செய்திகள், தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடுவர் என்றும், இந்த நடவடிக்கை மூலம் போலி செய்திகளை முடக்க முயற்சிப்பதாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இருந்து "வாட்ஸ்அப் விஜிலன்ட்ஸ்? வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்றும் மொபைல் வன்முறை" என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவில் சகுந்தலா பனாஜி, அனுஷி அகர்வால் மற்றும் நிஷா பசன்ஹா உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கின்றனர்.



    இந்த ஆய்வு மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப் சார்ந்த கொலை சம்பவங்களை எவ்வாறு புரிந்து கொண்டு அதற்கான தீர்வுகளை கண்டறிந்து கொள்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் தளத்தில் போலி தகவல்கள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. 

    போலி செய்திகளை முடக்கும் பணிகளை ஈடுபட முன்னர் குறிப்பிடப்பட்டு இருப்பவர்களை தவிர வினீத் குமார், அம்ரிதா சவுத்ரி மற்றும் ஆனந்த் ராஜே உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரே குழுவாக இணைந்து டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் டிஜிட்டல் சமூகங்களிடையே தவறான தகவல் பரப்பப்படுவதால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆய்வு செய்கின்றனர்.

    இவ்வாறு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க 20 ஆய்வு குழுவினர் போலி செய்திகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கென வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு ஆய்வு குழுவினருக்கும் அதிகபட்சம் 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ,36,30,300) வரை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
    ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் செயலி மாரடைப்பு ஏற்பட இருக்கும் அபாயத்தை கண்டறிந்து தெரிவிக்கும். #smartphone #Apps



    அமெரிக்காவில் இயங்கி வரும் இன்டர்மவுன்டெயின் மருத்துவ மையம் மற்றும் இதய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

    மருத்துவ மையங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கண்டறிய நடத்தப்படும் இ.சி.ஜி. சோதனைக்கு நிகராக மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கும் செயலியை இன்டர்மவுன்டெயின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். புதிய செயலியை கொண்டு பலரது உயிர்களை காப்பாற்ற முடியும். 

    ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய செயலி ஒருவரின் இதய நடவடிக்கையை டிராக் செய்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறியும். இந்த செயலி ஒருவரின் இதயத்தின் ரத்தக்குழாயில் நிரந்தர அடைப்பு ஏற்படுவதை கண்டறியும் தன்மை கொண்டுள்ளது.





    ஸ்டெமி மாரடைப்புக்கு பின் வழங்கப்படும் சிகிச்சை மூலமாக பலரது உயிரை காப்பாற்ற முடியும் என்றும் தற்சமயம் வரை கிடைத்து இருக்கும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடத்தக்க நன்மையை வழங்கும் வகையில் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 204 நோயாளிகள் வழக்கமான இ.சி.ஜி. பரிசோதனையும், கார்டியா (Kardia) செயலி மூலம் சோதனை செய்து கொண்டனர். இது இரு வயர் இணைக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போனிலேயே கண்காணிக்கப்பட்டது. வயர் இணைக்கப்பட்ட நிலையில் செயலி ஸ்டெமி மற்றும் நான்-ஸ்டெமி இ.சி.ஜி. சோதனையை மிகத்துல்லியமாக கண்டறிந்தது.

    இந்த செயலி மாரடைப்பை மிகத்துல்லியமாக கண்டறிந்தது, மேலும் மாரடைப்பு ஏற்படாத போது இந்த செயலி எவ்வித அறிகுறியையும் தெரிவிக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் முஹ்லெஸ்டெயின் தெரிவித்தார். 



    மாரடைப்பை கண்டறியும் செயலி மற்றும் இரண்டு வயர் எக்ஸ்டென்ஷனுக்கான கட்டணம் மிகவும் குறைவு தான். இதை கொண்டு ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கும் அனைவராலும் இ.சி.ஜி. பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

    கார்டியா ஆப் பயன்படுத்த முதலில் ஸ்மார்ட்போனில் கார்டியா அப் சென்று, சாதனத்தை ஸ்மார்ட்போனின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி விரல் நுனியை சாதனத்தில் சில நொடிகள் வரை மென்மையாக வைக்க வேண்டும். முப்பது நொடிகள் பதிவானதும், உங்களுக்கான பரிசோதனை அறிக்கையை ஸ்மார்ட்போனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மாரடைப்பு அபாயத்தை கண்டறியும் கார்டியா ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (ரூ.7,181) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    டிக்டொக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. #Facebook #Lasso



    டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய லேசோ ஆப் நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. புதிய செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகமாகி இருக்கிறது.

    லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வசிதயும் வழங்கப்படுகிறது. வைன்ஸ் போன்று செயலியில் சிறிய வீடியோக்களையும் பதிவு செய்யலாம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.



    லேசோ செயலியில் இன்ஸ்டாகிராம் மூலம் சைன்-இன் செய்தோ அல்லது ஃபேஸ்புக் மூலம் புதிய அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். செயலியை பயன்படுத்த ப்ரோஃபைல் பக்கம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும்.

    விரைவில் லேசோ வீடியோக்களில் ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் உள்ள வீடியோக்களை பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் உங்களது ப்ரோஃபைலை பிரைவேட் ஆக வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களில் உங்களது புகைப்படத்தை சேர்ப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். #whatsappstickers



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப் மற்றும் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஸ்டிக்கர் வசதி வழங்கப்படுகிறது. 

    ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு சில ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் பிளேவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது புகைப்படங்களையும் ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

    முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் 2.18 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன் கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இல்லாதபட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

    இனி உங்களுக்கு பயன்படுத்த வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.

    தேர்வு செய்த புகைப்படங்களை PNG ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் பின்னணியில் எதுவும் இருக்கக் கூடாது. 

    ஸ்மார்ட்போனில் இவ்வாறு செய்ய கூகுள் பிளே ஸ்டோர் சென்று பேக்கிரவுன்டு இரேசர் (Background Eraser) செயலிகளை பயன்படுத்தலாம். 

    இனி நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும். பேக்கிரவுன்டை அழிக்க ஆட்டோ, மேஜிக் அல்லது மேனுவல் டூல் பயன்படுத்தலாம்.



    புகைப்படம் ஸ்டிக்கர் போன்று காட்சியளிக்க ஏதுவாக கிராப் செய்ய வேண்டும். புகைப்படத்தை PNG வடிவில் சேவ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் உங்களது புகைப்படம் ஸ்டிக்கர் போன்று மாறிவிடும். 

    இதேபோன்று குறைந்த பட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களில் குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்கள் இருக்க வேண்டும்.

    இனி பிளேஸ்டோர் சென்று ‘Personal Stickers for WhatsApp’ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலி நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை தானாக தேடி பயன்படுத்திக் கொள்ளும்.

    செயலியில் உள்ள ‘Add’ பட்டனை கிளிக் செய்து மீண்டும் ‘Add’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும், சாட் விண்டோ திறந்து, ஸ்மைலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஜிஃப் ஆப்ஷனுக்கு அருகில் இருக்கும் ஸ்டிக்கர்ஸ் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய போட்டோ ஸ்டிக்கரை கிளிக் செய்து அனுப்பலாம். 

    நீங்கள் உருவாக்கிய தனிப்பட்ட ஸ்டிக்கர்கள் உங்களது ஸ்டிக்கர் பேங்கில் அப்படியே இருக்கும். அடுத்த முறை புதிய ஸ்டிக்கர்களை உருவாக்க மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Messenger



    வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்சமயம் இதே அம்சம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது.

    ஐ.ஓ.எஸ். 191.0 வெர்ஷனின் குறியீடுகளில் கலர் கிரேடியன்ட்கள், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதியை வழங்குவதாக குறிப்பட்டிருக்கிறது.



    அந்த வகையில் மெசஞ்சர் செயலியில் குறுந்தகவல்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அதனை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ முடியும். #Messenger #Facebook
    ×