search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96693"

    கூகுள் மேப்ஸ் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அன்றாட பயணங்களில் பயன்தரும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. #GoogleMaps



    கூகுள் மேப்ஸ் தளத்தில் அன்றாட பயணங்களை கட்டுப்படுத்தும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய கம்யூட் (commute) எனும் டேப் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களை நேரலையில் வழங்கும்.

    புதிய அம்சம் கொண்டு ஒரே கிளிக் செய்து நீங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து நிலவரத்தை நேரலையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் உங்களது பயணம் வழக்கமானதாக இருக்குமா அல்லது கூடுதல் நேரம் தேவைப்படுமா என்ற விவரங்களையும் இந்த அம்சம் வழங்குகிறது.

    கம்யூட் டேப் மூலம் நெரிசல் அல்லாத வேறு வழிகளையும் தெரிந்து கொள்ள முடியும். ஆன்ட்ராய்டு தளத்தில் தாமதம் மற்றும் இடையூறு சார்ந்த விவரங்களை நோட்டிபிகேஷன் வடிவில் பெற முடியும். மேலும் வாகனம் ஓட்டுவது அல்லது பொது போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பயணர்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் நேரத்திற்கு சரியாக சென்றடைவதற்கான விவரங்களை வழங்குகிறது.



    இத்துடன் வழித்தடத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் அல்லது அடுத்த ரெயில் கிளம்பும் நேரம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

    உலகம் முழுக்க 80 பகுதிகளில் உள்ள டிரான்சிட் ரைடர்கள், தங்களது பேருந்து மற்றும் ரெயில் எங்கு இருக்கிறது என்பதை நேரலையில் பார்க்க முடியும். சிட்னி நகரில் இந்த வசதியை வழங்க கூகுள் நிறுவனம் நியூ சவுத் வேல்ஸ் உடன் இணைந்துள்ளது. இதை கொண்டு அடுத்து வரும் பேருந்து அல்லது ரெயிலினுள் நெரிசல் எந்தளவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த அம்சம் விரைவில் உலகம் முழுக்க அதிகப்படியான நகரங்களில் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக் மற்றும் கூகுள் பிளே மியூசிக் போன்ற சேவைகள் கூகுள் மேப்ஸ் தளத்தினுள் இயக்க முடியும். இதனால் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் செய்யும் போதே பாட்காஸ்ட்களை கேட்க முடியும். வரும் வாரங்களில் புதிய அம்சங்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்கப்பட இருக்கிறது.
    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய தலைவராக ஆடம் மொசேரி பொறுப்பேற்பார் என இணை நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் அறிவித்துள்ளனர். #instagram



    சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற அம்சங்களை வழங்கும் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் தளத்தில் தங்களது சமீபத்திய புகைப்படங்களை பல பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராமின் துணை நிறுவனர்களாக இருந்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் கடந்த வாரம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.



    இந்த நிலையில் இன்ஸ்டாகிராமின் புதிய தலைவராக ஆடம் மொசேரி பதவியேற்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்களது நிறுவனத்தின் துணை தலைவராக உள்ள ஆடம் மொசேரி இன்றிலிருந்து இன்ஸ்டாகிராமின் தலைவராக பொறுப்பேற்கிறார் என அறிவித்து கொள்கிறோம்' என தெரிவித்துள்ளது.

    வடிவமைப்பாளராக தனது பணியை தொடங்கிய மொசேரி கடந்த 2008ம் ஆண்டு ஃபேஸ்புக் வடிவமைப்பு குழுவில் தன்னை இணைத்து கொண்டார்.

    ஆடமின் தலைமைத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவரது தலைமையின் கீழ் இன்ஸ்டாகிராம் வளர்ந்து, தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என இன்ஸ்டாகிராம் முன்னாள் துணை நிறுவனர்களான சிஸ்ட்ரோம் மற்றும் கிரீகர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். தளத்தில் விளம்பரங்கள் தோன்ற இருப்பதாகவும், இதற்கான சோதனை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் இணை நிறுவனர் பிரியான் ஆக்டன் ஃபேஸ்புக் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் பிரபல செயலியில் விளம்பரங்களை வழங்க ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் திட்டமிட்டு இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

    அந்த வகையில், செயலியை கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், செயலியில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து @WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் விளம்பரங்களை வழங்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விளம்பரங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் தோன்றும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியிலும் ஸ்டோரீஸ் அம்சத்தில் விளம்பரங்கள் தோன்றுகின்றன. எனினும் இந்த விளம்பரங்கள் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.



    வாட்ஸ்அப் செயலி முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதால், ஃபேஸ்புக்கால் பயனர் விவரங்களை அறிந்து கொள்ள முடியாது. எனினும், வாட்ஸ்அப் நம்பர்களுடன் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் அக்கவுன்ட்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பயனர்களுக்கு ஏற்ற விளம்பரங்களை வழங்க முடியும்.

    இதுவரை இந்த அம்சம் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வரை இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஐபோன் மாடல்களில் இதற்கான அப்டேட் வரும் மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்டு மாதத்தில் வெளியான தகவல்களில் விளம்பரம் சார்ந்த வியாபாரத்திற்கு வாட்ஸ்அப் மாற இருப்பதாக கூறப்பட்டது. 

    வாட்ஸ்அப் செயலியிலின் ஸ்டேட்டல் பகுதியில் தோன்றும் விளம்பர அமைப்பு முற்றிலுமாக பேஸ்புக் மூலம் இயங்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் போன்று அனைத்து தளங்களிலும் விளம்பரங்களை புகுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அலுவலர் மேட் இடிமா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக பார்த்து ரசிக்க ஜியோ புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. #Jio



    ஸ்டார் இந்தியாவுடன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு இருப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஜியோ டி.வி. மற்றும் ஹாட்ஸ்டார் மூலம் பயனர்கள் இந்திய அணி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். 

    ஜியோ மற்றும் ஸ்டார் இந்தியா இடையேயான ஒப்பந்தத்தின் படி டி20, சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் உள்ளூர் பிரீமியர் தொடர்களை ஜியோ டி.வி. மற்றும் ஹாட்ஸ்டாரில் பார்த்து ரசிக்கலாம்.

    முன்னதாக இந்தியாவிலேயே முதல் முறையாக இன்டராக்டிவ் ஸ்போர்ட் அனுபவத்தை ஜியோ டி.வி. செயலியில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கியது. இந்த சேவையை கொண்டு பயனர்கள் தாங்கள் விரும்பும் கேமரா கோணத்திற்கு திருப்பிக் கொள்வது, மைக் தேர்வு செய்வது மற்றும் போட்டிகளை பார்த்து ரசிக்க குறிப்பிட்ட மொழிகளில் ஒன்றை தேர்வு செய்வது போன்றவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

    இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது ஜியோ கிரிக்கெட் பிளே எனும் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. போட்டியுடன் ஜியோ கிரிக்கெட் சீசன் பேக் மற்றும் ஜியோ தண் தணா தண் நேரலை கிரிக்கெட் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இத்துடன் கிரிக்கெட் தொடரின் போது இலவச ஆட்-ஆன் சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப், மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகளை தொடர்ந்து யூடியூப் ஆப் அப்டேட் வழங்கப்படுகிறது. #JioPhone2 #YouTube



    ஜியோஸ்டோரில் யூடியூப் செயலி கிடைக்கும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜியோபோன் 2 மற்றும்  ஜியோ 1 மாடல்களை பயன்படுத்துவோர் இனி யூடியூப் செயலியை பயன்படுத்தலாம்.

    கைஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் யூடியூப் செயலி ஜியோபோனில் பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்கும். ஜியோபோன்களில் வாட்ஸ்அப் வசதி சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் யூடியூப் செயலிக்கான அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் ஆப் உள்ளிட்டவை ஜியோபோன்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி வழங்கப்பட்டு விட்டது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் தெரிவித்தார்.

    ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கான யூடியூப் ஆப் ஜியோ ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. செயலியை டவுன்லோடு செய்து வீடியோக்களை சீராக பார்த்து ரசிக்கலாம். கைஓ.எஸ். தளம் என்றாலும், ஆன்ட்ராய்டில் உள்ளதை போன்றே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கூகுள் இன்பாக்ஸ் செயலி நிறுத்தப்படுவதாக கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GoogleInbox



    கூகுள் இன்பாக்ஸ் செயலியை மார்ச் 2019 வாக்கில் நிறுத்தப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த தகவலை கூகுள் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இன்பாக்ஸ் செயலி புதிய மின்னஞ்சல் செயலியாக இருந்து வந்தது. இதில் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு, பின் அவை ஜிமெயிலில் வழங்கப்பட்டது. கூகுளை பொருத்த வரை சோதனை தளமாக செயல்பட்டு வருகிறது. 

    எனினும் போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத காரணத்தாலும், செயலி இருப்பதை உணர்த்தும் பயனர்களுக்கான அப்டேட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 



    "அனைவருக்கும் சிறப்பான மின்னஞ்சல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேலும் சிறப்பான அணுகுமுறையை கையாள வேண்டும். இதனால், ஜிமெயிலில் மட்டும் அதிக கவனம் செலுத்தி, இன்பாக்ஸ் சேவையை மார்ச் 2019-க்குள் நிறுத்த இருக்கிறோம்," என ஜிமெயில் அம்சங்ளுக்கான மேளாலர் மேத்யூ சாட் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இன்பாக்ஸ் செயலியில் மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்யும் வசதி, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், நட்ஜஸ், மிகமுக்கிய நோட்டிஃபிகேஷன்கள், ஜெஸ்ட்யூர் மற்றும் பன்ட்லிங் அம்சங்கள் உள்ளிட்டவற்றுடன் வழங்கப்பட்டது. 

    "திடீர் மாற்றம் கடினமாக இருக்கும் என எங்களுக்கு தெரியும், இதனால் இன்பாக்ஸ்-இல் இருந்து புதிய ஜிமெயிலுக்கு மாறுவதற்கான டிராசிஷன் கைடு உருவாக்கி இறுக்கிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
    இன்ஸ்டகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக எமோஜி ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. #instagram #emojis



    இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் இம்முறை தனித்துவம் வாய்ந்த எமோஜி ஷார்ட்கட்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த அம்சத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜி கீபோர்டின் மேல் வைக்கப்படும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் புதிய அம்சம் இன்னும் இரு தினங்களில் வழங்கப்பட இருக்கிறது.



    எனினும் இந்த அம்சம் கமென்ட்ஸ் பகுதியில் மட்டுமே வேலை செய்கிறது. அந்த வகையில் ஸ்டோரிக்கள் மற்றும் சொந்த போஸ்ட்களில் புதிய அம்சம் பயன்படுத்த முடியாது.

    செயலியை லாப நோக்கில் தொடர்ந்து இயங்கச் செய்ய பல்வேறு புதிய விஷயங்களை இன்ஸ்டாகிராம் முயன்று வருகிறது. இதேபோன்று இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் செய்வதற்கென பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. ஐ.ஜி. ஷாப்பிங் என்ற பெயரில் இந்த செயலி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    பயனர்கள் இன்ஸ்டாவில் பின்தொடரும் பக்கம் அல்லது விற்பனையாளரிடம் இருந்து நேரடியாக பொருட்களை வாங்கிட முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக பெற்றோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த ஏதுவாக பேரென்ட்ஸ் கைடு அறிமுகம் செய்தது. 

    இந்த கைடு கொண்டு தனியுரிமை, இன்டராக்ஷன்கள் அல்லது நேரத்தை இன்ஸ்டாகிராமில் எவ்வாறு இயக்க வேண்டும் போன்று மூன்று அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஸ்டோரிக்களில் இசையை அறிமுகம் செய்தது, இதில் ஸ்டோரியில் இசையை சேர்க்க முடியும். 
    ஜியோபோன் சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோனிற்கு ஏற்ப வாட்ஸ்அப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. #WhatsApp #JioPhone



    கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோன்களுக்கு வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

    ஒருமாத தாமதத்திற்கு பின் வாட்ஸ்அப் வசதி தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ளது. கை ஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

    இதனால் ஜியோபோனில் வாட்ஸ்அப் சேவை சீராக பயன்படுத்த முடியும். ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு வாட்ஸ்அப் செயலியை ஜியோ ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். 

    செப்டம்பர் 20-ம் தேதி முதல் அனைத்து ஜியோபோன்களுக்கும் வாட்ஸ்அப் செயலி வழங்கப்படுகிறது. ஒரு முறை டவுன்லோடு செய்து விட்டால், பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

    மொபைல் நம்பரை வாட்ஸ்அப் செயலியில் உறுதிப்படுத்தியதும் விரும்பியவர்களுடன் சாட் செய்யலாம். ஜியோபோனில் வாட்ஸ்அப் வழங்கப்படுவதைத் தொடர்ந்து கை ஓ.எஸ். மூலம் இயங்கும் நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பயனர் விவரங்களை சேகரித்து வழங்கிய ஐ.ஓ.எஸ். செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. #iOS



    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இருக்கும் சில செயலிகள் பயனர்களின் லொகேஷன் விவரங்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கியது சூடோ செக்யூரிட்டி குழுமம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் வரி விளம்பரங்கள் சார்ந்தவைகளாக இருக்கின்றன. இவை ப்ளூடூத் எல்.இ. பீக்கன் டேட்டா, ஜி.பி.எஸ். லாங்கிடியூட் மற்றும் லேட்டிடியூட், வைபை எஸ்.எஸ்.ஐடி மற்றும் பி.எஸ்.எஸ்.ஐ.டி. உள்ளிட்டவற்றை கொண்டு பயனரின் லொகேஷன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது.

    சேகரிக்கப்பட்ட விவரங்களை செயலிகள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் பயனர் விவரங்களை விற்று வருகின்றன. சில சமயங்களில் இந்த செயலிகள் செல்லுலார் நெட்வொர்க் எம்.சி.சி./எம்.என்.சி, ஜி.பி.எஸ். ஆல்டிடியூட் மற்றும் பல்வேறு விவரங்களை வாடிக்கையாளர்களிடம் தகவல் கொடுக்காமலேயே எடுத்துக் கொள்கின்றன.



    செயலிகளின் தன்மை சார்ந்து ஜி.பி.எஸ். விவரங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய காரணத்தை மட்டும் குறிப்பிட்டு, அவை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது குறித்த தகவல்களை பயனர்களுக்கு வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. 

    சில செயலிகள் ஜி.பி.எஸ். விவரங்களுடன் அக்செல்லோமீட்டர் விவரங்கள், பேட்டரி சார்ஜ் நிலவரம் மற்றும் ஸ்டேட்டஸ் என பல்வேறு விவரங்களை சேகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிப்பதாக இதுவரை 24 செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



    முன்னதாக வெளியான தகவல்களில் உள்ளூர் மொழிகளில் செய்திகளை வழங்கும் கிட்டத்தட்ட 100 செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்குதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஐ.ஓ.எஸ். சாதனங்களில் நீங்கள் டிராக் செய்யப்படாமல் இருக்க செட்டிங்ஸ் -- பிரைவசி -- அட்வெர்டைசிங் ஆப்ஷன் சென்று லிமிட் ஆட் டிராக்கிங் வசதியை இயக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது லொகேஷன் விவரங்கள் சேகரிக்கப்படாமல் இருக்கும். 

    இத்துடன் லொகேஷன் விவரங்களை சேகரிக்கும் செயலிகள் கூடுதல் விவரங்களுக்கு பிரைவசி பாலிசியை பார்க்கக் கோரும் பட்சத்தில் அதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பது நல்லது. 
    ஸ்கைப் கால் செய்வோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முற்றிலும் கிளவுட் சார்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஸ்கைப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் செயலியை மேலும் எளிமையாக்கும் நோக்கில் ஹைலைட்ஸ் மற்றும் கேப்ச்சர் போன்ற அம்சங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எடுத்தது.

    அந்த வகையில், ஸ்கைப் கால் செய்யும் போது அவற்றை ரெக்கார்டு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக கிளவுட் சார்ந்து இயங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்டோஸ் 10 தவிர மற்ற இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சம் தற்சமயம் வழங்கப்படாத நிலையில் விண்டோஸ் 10 தளத்திற்கு வரும் வாரங்களில் வழங்கப்படும் என மைக்ரோசாஃப்ட் உறுதி அளித்துள்ளது. அழைப்புகளை பதிவு செய்யும் போது மறுமுனையில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு பதிவு செய்யப்படுவதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். 



    பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை பயனர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது சேமித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அழைப்புகளை பதிவு செய்ய, திரையின் கீழே காணப்படும் "+" குறியை க்ளிக் செய்து, பதிவு செய்ய துவங்கலாம். மொபைல் செயலியில் அழைப்புகளை பதிவு செய்ய வட்ட வடிவில் காணப்படும் "+" குறியை க்ளிக் செய்ய வேண்டும்.

    பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, சாட் ஸ்கிரீன் சென்று மோர் -- சேவ் டு டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், அழைப்பு பயனரின் டவுன்லோடு ஃபோல்டரில் பதிவு செய்யப்படும். மொபைலில் ரெக்கார்டெட் கால் ஆப்ஷனை க்ளிக் செய்து, அழுத்திப் பிடிக்க வேண்டும். 

    கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்படும் அழைப்புகள் MP4 வடிவில் சேமிக்கப்படும்.
    இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிதாக ஷாப்பிங் ஆப் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram



    இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய செயலி ஐ.ஜி. ஷாப்பிங் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

    உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் மிகமுக்கிய அங்கமாக இருந்து வருகிறது. முன்னதாக செயலினுள் ஷாப்பிங் செய்ய ஏதுவான அம்சங்களை வழங்க முடிவு செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்சமயம் பிரத்யேக செயலியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பிரத்யேக செயலியில் பயனர்கள் பின்பற்றும் வியாபார மையங்களின் கணக்குகளில் இருந்து பொருட்களை தேடி, அவற்றை வாங்க இன்ஸ்டாகிராம் வழி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் இந்த செயலி சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    சோதனை செய்யப்படுவதால் இன்ஸ்டாவின் ஷாப்பிங் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் அல்லது பொது அறிவிப்புக்கு முன் ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்த இன்ஸ்டாகிராம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இன்ஸ்டாவாசிகளை கவரும் நோக்கில் பல்வேறு வியாபார மையங்களும், இன்ஸ்டாவில் தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே சுமார் 2.5 கோடிக்கும் அதிகமான வியாபாரிகள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களது டேட்டா முழுமையாக அபேஸ் ஆகிவிடும். #WhatsApp


    வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் டிரைவில் உள்ள விவரங்களை தானாக பேக்கப் செய்யவில்லை எனில், அவை தானாக அழிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட் உடன் மீடியாக்களை பேக்கப் செய்யாதவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. 

    கடந்த ஒருவருடமாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களது டேட்டாவை பேக்கப் செய்யவில்லை எனில், அவை அனைத்து தானாக அழிக்கப்படலாம். மேலும், வாட்ஸ்அப் தகவல்களை பேக்கப் செய்ய கூகுள் டிரைவ் கணக்கில் சைன்-இன் செய்து ஒரு வருடமாக பேக்கப் செய்யவில்லை எனில் வாட்ஸ்அப் கூகுள் டிரைவ் பேக்கப் அழிக்கப்பட்டு விடும். வாட்ஸ்அப் விவரங்களை பேக்கப் செய்ய இறுதி நாள் நவம்பர் 12 ஆகும்.

    "ஒரு வருடத்திற்கும் அதிகமாக அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்அப் பேக்கப்கள் கூகுள் டிரைவ் ஸ்டோரேஜில் இருந்து தானாக அழிக்கப்பட்டு விடும். இதை தவிர்க்க, வாட்ஸ்அப் தகவல்களை நவம்பர் 1, 2018க்குள் தானாக பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது,” என வாட்ஸ்அப் வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    மல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாயந்த செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அந்த வகையில் பலரும் தங்களது புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை கூகுள் டிரைவில் பேக்கப் செய்துள்ளனர். கூகுள் டிரைவில் 15 ஜிபி அளவு இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படும் நிலையில், வாட்ஸ்அப் பேக்கப்கள் அதிகளவு கூகுள் டிரைவ் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

    வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எளிமையாக இருக்கும் பட்சத்தில், ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் கூகுளுடன் இணைந்து வாட்ஸ்அப் பேக்கப் ஃபைல்களை கூகுள் டிரைவில் இலவசமாக பேக்கப் செய்ய இணைந்துள்ளன. இந்த ஒப்பந்தம் நவம்பர் 12-ம் தேதி முதல் செயல்பாட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் ஸ்டோரேஜ்-க்கான இலவச கூகுள் டிரைவ் ஸ்டோரேஜை பெற பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் டேட்டாக்களை நவம்பர் 12-ம் தேதிக்குள் பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.
    ×