search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    யூடியூப் ஷார்ட்ஸ் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கூகுள் ஃபார் இந்தியா 2021 நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கூகுள் வெளியிட்டது. கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 

     யூடியூப் ஷார்ட்ஸ்

    யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்றே செயல்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் பல்வேறு குறு வீடியோ உருவாக்கும் செயலிகளுக்கு கடும் வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்டாக் தடையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. 

    உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியாவில் 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்று வருகிறது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது. 
    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.


    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.

    அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

     கோப்புப்படம்

    பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
    கூகுள் நிறுவனம் தனது பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புது நடவடிக்கையை அமல்படுத்த இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

    இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

     கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

    நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் தீபாவளிக்காக பிரத்யேக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


    வாட்ஸ்அப் செயலியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரத்யேக அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதை கொண்டு பயனர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம். 

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கொண்டாட்ட முறைகள் முற்றிலும் மாறி போயுள்ளன. இந்த காலக்கட்டத்தில் விர்ச்சுவல் முறையில் அனைவருடன் இணைந்து இருப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்திருக்க வாட்ஸ்அப் மட்டுமே சிறந்த தளமாக இருக்கிறது.

     வாட்ஸ்அப் ஸ்டிக்கர்

    இவற்றை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகைக்காக வாட்ஸ்அப் அனிமேடெட் ஸ்டிக்கர்களை வெளியிட்டு உள்ளது. ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு அனுப்பி பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
    வாட்ஸ்அப் செயலியின் புதிய பீட்டா வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வெளியாகி இருக்கின்றன.


    வாட்ஸ்அப் புதிய பீட்டா வெர்ஷனில் பேஸ்புக்கின் புதிய பெயர்- மெட்டா தோன்றுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பிரம் மெட்டா என காட்சியளிக்கிறது. இதுவரை வாட்ஸ்அப் பிரம் பேஸ்புக் என்றே தோன்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் இந்த மாற்றம் அமலாக மேலும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய பெயரை அறிவித்தது. இத்துடன் சமூக வலைதள நிறுவனமாக மட்டும் இல்லாமல், மெய்நிகர் ஆன்லைன் உலகமாக மெட்டாவெர்ஸ் நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்தது.

     மெட்டா

    புது மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.22.21 வெர்ஷனில் காட்சியளிக்கிறது. இது வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் மற்றும் செட்டிங் மெனுவில் காட்சியளிக்கிறது. பீட்டா வெர்ஷனிலும் இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் தோன்றவில்லை.

    பிளாக்பெரி இயங்குதளத்தின் குறுந்தகவல் செயலியான பிளாக்பெரி மெசஞ்சர் சேவை நிறுத்தப்படுகிறது.



    பிளாக்பெரி நிறுவனத்தின் பி.பி.எம். (பிளாக்பெரி மெசஞ்சர்) சேவை இன்றுடன் (மே 31) நிறுத்தப்படுகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணிக்கு பின் பிளாக்பெரி மெசஞ்சர் செயலிக்கான வசதி முற்றிலும் நிறுத்தப்பட இருக்கிறது.

    இன்று வரை நாங்கள் உருவாக்கியவைக்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். தொழில்நுட்ப துறை மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. எங்களின் விடாமுயற்சியிலும் பயனர்கள் மற்ற தளங்கள் வழங்கும் சேவைகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவது கடினமான ஒன்றாகிவிட்டது.

    பிளாக்பெரி மெசஞ்சர் சேவைக்கு பிரியாவிடை கொடுப்பது எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும், இதனை கடந்து முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம் என பிளாக்பெரி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.



    பி.பி.எம்.இ. என அழைக்கப்படும் என்டர்பிரைஸ் எடிஷனை பயன்படுத்துவோர் தொடர்ந்து சேவையை இயக்க முடியும். இனியும் பி.பி.எம். சேவையை பயன்படுத்த விரும்புவோர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இருந்து என்டர்பிரைஸ் எடிஷனை டவுன்லோடு செய்து ஆறு மாதங்களுக்கு 2.50 டாலர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.

    பி.பி.எம்.இ. சேவையிலும் முழுமையான என்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி, அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப்பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சில மாதங்களுக்கு முன் சோதனை செய்யப்பட்ட அம்சம் தற்சமயம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக மார்ச் மாதத்தில் வாட்ஸ்அப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இருமாதங்கள் சோதனைக்கு பின் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக கேட்க முடியும்.

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். தற்சமயம் புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே க்ளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும். இந்த அம்சம் தவிர புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் CVE-2019-3568 பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.



    சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. வாய்ஸ் கால் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.

    இது பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜி.பி.எஸ். லொகேஷன், மின்னஞ்சல், பிரவுசர் ஹிஸ்ட்ரி, மற்றும் பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய பிராசஸருடன் 2019 ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாம் தலைமுறை ஐபாட் ஆகும். 

    2019 ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய ஐபாட் மாடலில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் மற்றும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஆப்பிள் ஐபாட் டச் மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ10 ஃபியூஷன் சிப் வழங்கப்பட்டுள்ளது. இதே பிராசஸர் ஐபோன் 7 மாடலில் வழங்கப்பட்டது.

    புதிய ஐபாட் டச் மாடலில் பழைய பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதில் முந்தைய மாடலில் இல்லாத பல்வேறு அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, க்ரூப் ஃபேஸ் டைம் உள்ளிட்டவை முதல்முறையாக ஐபாட் டச் மாடலில் வழங்கப்பட்டுள்ளது. 



    புதிய பிராசஸர், 256 ஜி.பி. மெமரி தவிர 2019 ஐபாட் மாடலின் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் 4-இன்ச் டிஸ்ப்ளே, ஹோம் பட்டன், கேமராக்கள் உள்ளிட்டவை முந்தைய மாடல்களில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபாட் மாடலில் ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய தலைமுறை ஐபாட் டச் மாடலில் கேமிங் அனுபவம் சீராக இருக்கும் என்றும், காட்சிகள் மிகவும் அழகாக தெரியும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவற்றில் ஏ.ஆர். அனுபவங்கள் பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய ஐபாட் டச் மாடல் ஸ்பேஸ் கிரே, வைட், கோல்டு, புளு, பின்க் மற்றும் பிராடக்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 32 ஜி.பி. மாடல் விலை ரூ.18,900, 128 ஜி.பி. மாடல் ரூ.28,900 என்றும் 256 ஜி.பி. மாடல் விலை ரூ.38,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெறுகிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கி வரும் க்ரிப்டோகரென்சியின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது.

    2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் சிஸ்டம் ஒன்றை துவங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோபல் காயின் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி செய்வதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இதனை சாத்தியப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வெஸ்டன் யூனியன் போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பணப்பரிமாற்றங்களை மிக எளிமையாக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஃபேஸ்புக் நிறுவனம் வங்கிகள் மற்றும் புரோக்கர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை அடுத்த ஆண்டு வணிக ரீதியில் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப இடையூறுகளை களைய வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் க்ரிப்டோகரென்சியில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்க பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநரை சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் ஃபேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் அடுத்த ஆண்டு வாக்கில் வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்க இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்க இருப்பது பற்றி ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், ஃபேஸ்புக் தனது குறுந்தகவல் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது பற்றி முதல் முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    2020 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் வருடாந்திர விளம்பர கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.



    ட்விட்டரில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது.



    இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்தது ஆகும். இது வாட்ஸ்அப் (ஐ.ஜி.) க்ளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மூன்றவாது திட்டத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும். இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் விளம்பரங்கள் தோன்றுவதை போன்று செயல்படும். 

    இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் அதிகளவு ரிச்சர் ஃபார்மேட்களை புகுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்களை வழங்குவது மட்டுமின்றி வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் தளமாக வாட்ஸ்அப் இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் நினைக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் படி பயனர்கள் இனி ஸ்டோரியை இங்கும் ஷேர் செய்ய முடியும் என கூறப்படுகிறது.



    இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரியை ஃபேஸ்புக் ஸ்டோரியில் ஷேர் செய்யும் வசதி ஏற்கனவே வழங்கப்படுகிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியிலும் இதே அம்சம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை ஃபேஸ்புக் ஸ்டோரியில் ஷேர் செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்று இல்லாமல், வாட்ஸ்அப்பில் இதனை பயனர்கள் தானாக ஷேர் செய்ய வேண்டும். இன்ஸ்டாகிராமில் இது தானாக நடைபெறும் வகையில் வழங்கப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் காண்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோட் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியை ஐ.ஓ.எஸ். தளங்களில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.151 பதிப்பில் இதற்கான வசதி சோதனை நடைபெறுகிறது.

    இதில் புதிய கியூ.ஆர். கோட் பட்டன் காணப்படுகிறது. இது வாட்ஸ்அப் செயலியின் ப்ரோஃபைல் பகுதியில் காணப்படுகிறது. கியூ.ஆர். கோட் ஆப்ஷனை க்ளிக் செய்ததும் கியூ.ஆர். கோட் உருவாக்கப்பட்டு விடும். இதனை மற்றவர்களுடன் மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும்.



    இந்த அம்சம் மூலம் பயனர்கள் மிக எளிமையாக காண்டாக்ட்களை நேரடியாக செயலியில் இருந்தபடி சேர்க்க முடியும். இது இன்ஸ்டாகிராமின் நேம்டேக் அம்சம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியின் ஸ்னேப்கோட் அம்சங்களை போன்று இயங்குகிறது. கியூ.ஆர். கோட் உறுதி செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் அட்ரஸ் புக் பகுதியில் தேவையான விவரங்களை தானாக பதிவு செய்து கொள்ளும்.

    கியூ.ஆர். கோடை முதல் முறை உருவாக்கும் போது, வாட்ஸ்அப் அதனை ரிவோக் செய்வதற்கான வசதி வழங்கப்படும், இதனை நிறுத்தி கியூ.ஆர். கோடை்களை ரீபிளேஸ் செய்து அவற்றை வேலை செய்ய வைக்கலாம். இந்த அம்சங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால், இவை வாட்ஸ்அப் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: wabetainfo
    வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.



    வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான போலி செய்திகள் பரவி வரும் நிலையில் டெல்லியை சேர்ந்த டிஜிட்டல் எம்பவர்மென்ட் பவுண்டெசன் அமைப்பு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வை நடத்தியது.

    நாட்டின் 11 முக்கிய மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் பொதுமக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. போலி செய்திகளால் ஏற்படும் மோதல்களுக்கு யார் பொறுப்பு? என்ற தலைப்பில் நடந்த இந்த ஆய்வில் 3,138 பேர் கலந்து கொண்டனர்.

    சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை சரிபார்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் பயனாளர்களிடம் ஏராளமான கோள்விகள் கேட்கப்பட்டது. இதில் 79 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வரை வாட்ஸ்அப்பில் செலவிடுவதாக கூறி உள்ளனர். 



    13 சதவிகிதம் பேர் 3 முதல் 4 மணி நேரம் வரையும், 3 சதவிகிதம் பேர் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக வாட்ஸ்அப்பில் செலவிடுவதாகவும் தெரிவித்தனர். ஊடகங்களில் வந்த தகவல்கள் என பரவும் செய்திகள் குறித்த கேள்விகளுக்கு 4 சதவிகிதம் பேர் வீடியோக்களுடன் வரும் செய்திகளை மட்டும் நம்புவதாக கூறி உள்ளனர். 15 சதவிகிதம் பேர் புகைப்படங்களை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

    வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை 45 சதவிகிதம் பேர் நம்பவில்லை என்பது ஆய்வில் தெரிவித்துள்ளது. 13 சதவிகிதம் பேர் எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் இல்லை எனவும், 53 சதவிகிதம் பேர் 1 முதல் 5 குரூப்பிலும், 18 சதவிகிதம் பேர் 6 முதல் 10 குரூப்பில் இருப்பதாகவும், 4 சதவிகிதம் பேர் 30க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்புகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
    ×