search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் செயலி மாரடைப்பு ஏற்பட இருக்கும் அபாயத்தை கண்டறிந்து தெரிவிக்கும். #smartphone #Apps



    அமெரிக்காவில் இயங்கி வரும் இன்டர்மவுன்டெயின் மருத்துவ மையம் மற்றும் இதய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

    மருத்துவ மையங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கண்டறிய நடத்தப்படும் இ.சி.ஜி. சோதனைக்கு நிகராக மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கும் செயலியை இன்டர்மவுன்டெயின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். புதிய செயலியை கொண்டு பலரது உயிர்களை காப்பாற்ற முடியும். 

    ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் புதிய செயலி ஒருவரின் இதய நடவடிக்கையை டிராக் செய்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறியும். இந்த செயலி ஒருவரின் இதயத்தின் ரத்தக்குழாயில் நிரந்தர அடைப்பு ஏற்படுவதை கண்டறியும் தன்மை கொண்டுள்ளது.





    ஸ்டெமி மாரடைப்புக்கு பின் வழங்கப்படும் சிகிச்சை மூலமாக பலரது உயிரை காப்பாற்ற முடியும் என்றும் தற்சமயம் வரை கிடைத்து இருக்கும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடத்தக்க நன்மையை வழங்கும் வகையில் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 204 நோயாளிகள் வழக்கமான இ.சி.ஜி. பரிசோதனையும், கார்டியா (Kardia) செயலி மூலம் சோதனை செய்து கொண்டனர். இது இரு வயர் இணைக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போனிலேயே கண்காணிக்கப்பட்டது. வயர் இணைக்கப்பட்ட நிலையில் செயலி ஸ்டெமி மற்றும் நான்-ஸ்டெமி இ.சி.ஜி. சோதனையை மிகத்துல்லியமாக கண்டறிந்தது.

    இந்த செயலி மாரடைப்பை மிகத்துல்லியமாக கண்டறிந்தது, மேலும் மாரடைப்பு ஏற்படாத போது இந்த செயலி எவ்வித அறிகுறியையும் தெரிவிக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் முஹ்லெஸ்டெயின் தெரிவித்தார். 



    மாரடைப்பை கண்டறியும் செயலி மற்றும் இரண்டு வயர் எக்ஸ்டென்ஷனுக்கான கட்டணம் மிகவும் குறைவு தான். இதை கொண்டு ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கும் அனைவராலும் இ.சி.ஜி. பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

    கார்டியா ஆப் பயன்படுத்த முதலில் ஸ்மார்ட்போனில் கார்டியா அப் சென்று, சாதனத்தை ஸ்மார்ட்போனின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி விரல் நுனியை சாதனத்தில் சில நொடிகள் வரை மென்மையாக வைக்க வேண்டும். முப்பது நொடிகள் பதிவானதும், உங்களுக்கான பரிசோதனை அறிக்கையை ஸ்மார்ட்போனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மாரடைப்பு அபாயத்தை கண்டறியும் கார்டியா ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (ரூ.7,181) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    டிக்டொக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. #Facebook #Lasso



    டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய லேசோ ஆப் நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. புதிய செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகமாகி இருக்கிறது.

    லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வசிதயும் வழங்கப்படுகிறது. வைன்ஸ் போன்று செயலியில் சிறிய வீடியோக்களையும் பதிவு செய்யலாம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.



    லேசோ செயலியில் இன்ஸ்டாகிராம் மூலம் சைன்-இன் செய்தோ அல்லது ஃபேஸ்புக் மூலம் புதிய அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். செயலியை பயன்படுத்த ப்ரோஃபைல் பக்கம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும்.

    விரைவில் லேசோ வீடியோக்களில் ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் உள்ள வீடியோக்களை பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் உங்களது ப்ரோஃபைலை பிரைவேட் ஆக வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களில் உங்களது புகைப்படத்தை சேர்ப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். #whatsappstickers



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப் மற்றும் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஸ்டிக்கர் வசதி வழங்கப்படுகிறது. 

    ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு சில ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் பிளேவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது புகைப்படங்களையும் ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

    முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் 2.18 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன் கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இல்லாதபட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

    இனி உங்களுக்கு பயன்படுத்த வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.

    தேர்வு செய்த புகைப்படங்களை PNG ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் பின்னணியில் எதுவும் இருக்கக் கூடாது. 

    ஸ்மார்ட்போனில் இவ்வாறு செய்ய கூகுள் பிளே ஸ்டோர் சென்று பேக்கிரவுன்டு இரேசர் (Background Eraser) செயலிகளை பயன்படுத்தலாம். 

    இனி நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும். பேக்கிரவுன்டை அழிக்க ஆட்டோ, மேஜிக் அல்லது மேனுவல் டூல் பயன்படுத்தலாம்.



    புகைப்படம் ஸ்டிக்கர் போன்று காட்சியளிக்க ஏதுவாக கிராப் செய்ய வேண்டும். புகைப்படத்தை PNG வடிவில் சேவ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் உங்களது புகைப்படம் ஸ்டிக்கர் போன்று மாறிவிடும். 

    இதேபோன்று குறைந்த பட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களில் குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்கள் இருக்க வேண்டும்.

    இனி பிளேஸ்டோர் சென்று ‘Personal Stickers for WhatsApp’ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலி நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை தானாக தேடி பயன்படுத்திக் கொள்ளும்.

    செயலியில் உள்ள ‘Add’ பட்டனை கிளிக் செய்து மீண்டும் ‘Add’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும், சாட் விண்டோ திறந்து, ஸ்மைலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஜிஃப் ஆப்ஷனுக்கு அருகில் இருக்கும் ஸ்டிக்கர்ஸ் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய போட்டோ ஸ்டிக்கரை கிளிக் செய்து அனுப்பலாம். 

    நீங்கள் உருவாக்கிய தனிப்பட்ட ஸ்டிக்கர்கள் உங்களது ஸ்டிக்கர் பேங்கில் அப்படியே இருக்கும். அடுத்த முறை புதிய ஸ்டிக்கர்களை உருவாக்க மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Messenger



    வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்சமயம் இதே அம்சம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது.

    ஐ.ஓ.எஸ். 191.0 வெர்ஷனின் குறியீடுகளில் கலர் கிரேடியன்ட்கள், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதியை வழங்குவதாக குறிப்பட்டிருக்கிறது.



    அந்த வகையில் மெசஞ்சர் செயலியில் குறுந்தகவல்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அதனை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ முடியும். #Messenger #Facebook
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் ரிப்ளை பிரைவேட்லி என்ற பெயரில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #WhatsApp #Apps



    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் ரிப்ளை பிரைவேட்லி (Reply privately) என்ற பெயரில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு க்ரூப்களில் அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு தனியே பதில் அனுப்ப முடியும்.

    ரிப்ளை பிரைவேட்லி ஆப்ஷனை கிளிக் செய்ததும், வாட்ஸ்அப் குறிப்பிட்ட கான்டாக்ட் உடன் பிரைவேட் சாட் திரையை தானாக திறக்கும். இந்த அம்சம் கொண்டு க்ரூப்களில் உள்ள பழைய சாட்களுக்கும் தனியே மெசேஜ் அனுப்ப முடியும். புதிய அம்சம் வாட்ஸ்அப் 2.18.335 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருப்பதால், புதிய அப்டேட்டை டவுன்லோட் செய்ய வேண்டும்.

    புதிய 2.18.338 அப்டேட்டில் யுனிகோட் 11 எமோஜி சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் 66 புதிய எமோஜிக்கள் சேர்க்கப்படுகிறது. இதில் சாஃப்ட்பால், கங்காரு, பார்டியிங் ஃபேஸ், பேரட் மற்றும் பல்வேறு இதர எமோஜிக்கள் கிடைக்கும். வாட்ஸ்அப் பிரைவேட் ரிப்ளை அம்சம் மூலம் க்ரூப்பில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாமல் ஒருவருக்கு மட்டும் தனியே பதில் அனுப்ப முடியும்.



    தற்சமயம் ஆன்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    வாட்ஸ்அப் பிரைவேட் ரிப்ளை அம்சத்தை பயன்படுத்த, பயனர் குறிப்பிட்ட மெசஜை அழுத்தி பிடிக்க வேண்டும், இனி திரையில் தோன்றும் மூன்று புள்ளி மெனு ஆப்ஷனை கிளிக் செய்து ரிப்ளை பிரைவேட்லி அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும். 

    வாட்ஸ்அப் பீட்டா செயலியில் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் பீட்டா பதிப்பில் சைன்-இன் செய்தால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும்.
    வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பது குறித்து அந்நிறுவன துணை தலைவர் க்ரிஸ் டேனிய்ல்ஸ் முக்கிய தகவலை வழங்கி இருக்கிறார். #whatsappstatus



    வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேட்டஸ் பகுதிகளில் விளம்பரங்கள் வழங்கப்படலாம் என் தகவல் வெளியானது. தற்சமயம் வாட்ஸ்அப் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வணிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடத் துவங்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    வணிகமயமாக்கும் முயற்சிகளின் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மக்களை வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும். வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்குவது குறித்த விவரங்கள் அவ்வப்போது வெளியான நிலையில், இதன் செயல்பாட்டுக்கு வரும் காலம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை இதுவரை சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

    வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புகைப்படம், எழுத்துக்கள், வீடியோக்கள், அனிமேஷன் ஜிஃப் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக மறைந்து போகும். தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் ஃபேஸ்புக் விளம்பர அமைப்பின் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வாட்ஸ்அப் இணை நிறுவனரான ப்ரியான் ஆக்டன் பதவி விலகினார். மேலும் வாட்ஸ்அப் என்க்ரிப்ஷன் அம்சங்களை தளர்த்தி, செயலியில் இருந்து வருமானம் ஈட்டுவதில் மார்க் சூக்கர்பர்க் தீவிரமாக இருக்கிறார் என ப்ரியான் ஆக்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
    ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய செயலி பயனர்கள் தங்களது லிப் சின்க் செய்யப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Lasso



    ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ என்ற பெயரில் உருவாகி வரும் புதிய செயலியில் பயனர்கள் பிரபல பாடல் அல்லது வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வீடியோக்களை படமாக்கி, அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஃபேஸ்புக்கின் புதிய லஸ்ஸோ செயலி டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக இருக்கும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிக்டொக் செயலி இளைஞர்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முற்றிலும் பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை செய்யும் வகையில் இருக்கிறது.

    அந்த வகையில் ஃபேஸ்புக் சார்பில் உருவாகி வரும் புதிய செயலியை ஃபேஸ்புக்கின் வீடியோ மற்றும் வாட்ச் குழுவினரால் உருவாக்கப்படுவதாகவும், இதற்கு தலைமை மூத்த வடிவமைப்பாளர் பிராடி வொஸ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வொஸ் முன்னதாக ஃபேஸ்புக்கின் டி.வி. செயலியில் பணியாற்றி வந்தார்.



    ஃபேஸ்புக் நிறுவனம் இளைஞர்களுக்கான புதிய செயலியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே வருடத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு இசை நிறுவனங்களிடம் உரிமையை கைப்பற்றும் பணிகளில் ஈடுபடத் துவங்கியது.

    சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூசிக் ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயனர்கள் இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க முடியும், பின் இந்த அம்சம் ஃபேஸ்புக்கிலும் சேர்க்கப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் லிப் சின்க் அம்சத்தை நேரலை செய்யும் வசதியை சோதனை செய்ய துவங்கியிருக்கிறது. 

    மேலும் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களுக்கு விரும்பிய பாடல்களை பின் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படும் என்றும் இதனை நண்பர்கள் கேட்க முடியும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் மைஸ்பேஸ் மியூசிக் போன்று இருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியின் ஆன்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் வெப் பதிப்புகளில் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டு, இதற்கான அப்டேட் வழங்கப்படுகின்றன. #Whatsapp



    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த அம்சத்தை உருவாக்கி வரும் வாட்ஸ்அப் ஒருவழியாக பயனர்களுக்கு வழங்கி இருக்கிறது.

    புதிய ஸ்டிக்கர் அம்சத்திற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்படுவதால், அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க சில நாட்கள் ஆகும். இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் ஸ்டோர் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

    முதற்கட்டமாக ஸ்டிக்கர்ஸ் அம்சத்தில் கப்பி என்ற பெயரில் ஒரே பேக் மட்டும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை அன்-இன்ஸ்டால் செய்து, கூடுதலாக கிடைக்கும் ஸ்டிக்கர் பேக்களை இன்ஸ்டால் செய்யலாம். ஸ்டிக்கர்கள் எமோஜி, புகைப்படங்கள் அல்லது ஜிஃப்களை விட வித்தியாசமானவை. இவை இயங்குதளங்கள் அல்லது எமோஜி போன்ற தளங்களின் ஆதரவின்றி கிடைக்கிறது.  

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் ஜிஃப் ஐகானை அடுத்து வலதுபுறத்தில் ஸ்டிக்கர் ஐகான் தெரியும். இதில் பயனர் விரும்பும் ஸ்டிக்கர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஐ.ஓ.எஸ். பயனர்கள் டெக்ஸ்ட் இன்புட் பகுதியில் காணப்படும் ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும்.

    புதிதாக பேக்களை சேர்க்க ஸ்டிக்கர் பகுதியியன் இடது புறத்தில் இருக்கும் பிளஸ் ஐகானஐ கிளிக் செய்து ஸ்டிக்கர் ஸ்டோர் செல்ல வேண்டும். இங்கு அனைத்து ஸ்டிக்கர்களும் இடம்பெற்றிருக்கும். பயனர்கள் ஸ்டிக்கர்களை பிரீவியூ மற்றும் டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மை ஸ்டிக்கர்ஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலி வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் ஜியோபோன் 2ல் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். #jiophone



    ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதியை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது. ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

    முன்னதாக யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதி ஜியோபோனில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் வசதி மட்டும் வழங்கப்படாமல் இருந்து, தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கான அறிவிப்பு ரிலைன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலியை டவுன்லோடு செய்ய ஜியோஸ்டோர் சென்று இன்ஸ்டால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்ததும் சில நொடிகளில் செயலி டவுன்லோடு ஆகி, இன்ஸ்டால் ஆகும். செயலியை பயன்படுத்த ஜியோபோனின் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- டிவைஸ் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். 



    ஜியோபோனில் வாட்ஸ்அப் செட்டப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது மொபைல் நம்பருக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். ஒ.டி.பி. மூலம் உங்களது மொபைல் நம்பரை உறுதிப்படுத்தியதும் வாட்ஸ்அப் பயன்படுத்த துவங்கலாம்.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்த குறிப்பிட்ட ஐ.எம்.இ.ஐ. நம்பர் லாக் செய்யப்படவில்லை. இதனால் ஜியோபோனில் எந்த ஜியோ சிம் கார்டு நம்பரை கொண்டும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது எழுத்துக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும் என்றாலும் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். தளங்களில் இருப்பதை போன்று ஜியோபோனில் பயன்படுத்த முடியாது. கை ஓ.எஸ்.-இல் இயங்கும் ஜியோபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    ஜியோபோனில் வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளவோ, போட்டோ ஸ்டேட்டஸ்களை பார்க்க முடியாது. மேலும் லொகேஷன் ஷேரிங் ஆப்ஷன், சாட் பேக்கப் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது.
    வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. புதிய அம்சங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இதற்கான அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும். தற்சமயம் சாட் திரையில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும்.

    புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும். மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் தானாக அன்-மியூட் அல்லது அன்-ஆர்ச்சிவ் செய்யும் வரை அன்-ஆர்ச்சிவ் செய்யப்படாது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    குறிப்பிட்ட சாட் உங்களது சாட் லிஸ்ட்-இல் இருக்க கூடாது என நினைக்கும் போது வேகெஷன் மோட் பயனுள்ளதாக இருக்கும். தற்சமயம் சோதனை செய்யப்படும் வேகெஷன் மோட் இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோன்று, ஆன்டராய்டு தளத்துக்கான வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட சாட்களுக்கு ஆப் பேட்ஜ்களை மறைக்க வழி செய்கிறது.


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    இதேபோன்று வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை வெளிப்புற சேவைகளுடன் இணைக்கக் கோரும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலிக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்த அம்சம் மற்ற பயனர்களுக்கும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்த அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. லின்க்டு அக்கவுன்ட் ஆப்ஷன்கள் ப்ரோஃபைல் செட்டிங்களின் கீழ் வழங்கப்படுகிறது. தற்சமயம் இன்ஸ்டாகிராம் மட்டுமே எக்ஸ்டெர்னல் சேவையாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாட்ஸ்அப் அக்கவுன்ட்டில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலை இணைக்க முடியும்.

    லின்க்டு அக்கவுன்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை மீட்க முடியும். இதை கொண்டு நேரடியாக இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்ய முடியும். புதிய அம்சங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுவதால், இவை பயனர்களுக்கு வழங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
    அதிக நேரம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கேன உருவாக்கப்பட்டுள்ள யுவர் ஹவர் எனும் செயலியின் அம்சங்களை பார்ப்போம். #androidapps
    ‘காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது’ என்ற பழமொழியை எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் நாம் மறந்து வருகிறோம். எழுந்தவுடன் கண் விழிப்பதே செல்போனில் தான் என்றாகிவிட்டது. நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக போன் பார்ப்பதால் நம்மையும் அறியாமல் நாம் அதற்கு அடிமையாகிறோம்.

    இதனால் நமது வேலையும் பாதித்து, உடல் நலமும் கெடுகிறது. இதிலிருந்து நம்மை விடுவிக்கவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ‘யுவர் ஹவர்’ (your hour) ஆன்ட்ராய்டு செயலி (ஆப்). இந்த செயலியில் இருக்கும் அம்சங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவோரை அந்த பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்.

    ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தததும், நாம் ஒரு நாளில் எத்தனை முறை ஸ்மார்ட்போனை அன்லாக் செய்திருக்கிறோம், எவ்வளவு நேரம் உபயோகித்து இருக்கிறோம் போன்ற தகவல்களை நமக்கு இந்த செயலி தெரியப்படுத்துகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு நாம் எவ்வளவு நேரம் போனில் நேரம் செலவிட்டு இருக்கிறோம் என்பதையும் கணக்கிட்டு காண்பிக்கிறது.



    ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற மற்ற வலைத்தளங்களில் நாம் செலவிட்ட நேரத்தையும் துல்லியமாக சொல்லிவிடுகிறது. இத்துடன் அதற்கான வரைபடமும் (graph) போட்டு காண்பித்து விடும். இதை வைத்து நாம் போன் உபயோகிப்பதில் எந்த நிலையில் இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த செயலி ஏங்குபவர், எப்போதாவது உபயோகிப்பவர், சார்ந்து இருப்பவர், போனை காதலிப்பவர், அதற்கு அடிமையானவர் என்ற ஐந்து வகைகளில் நாம் எந்த பிரிவில் இருக்கிறோம் என்பதை நமது பயன்பாட்டை வைத்து சொல்லிவிடும். ஏதாவது ஆப் பார்க்க ஆரம்பிக்கும் போது நாம் ஒரு டைமரும் (timer) வைத்துக் கொள்ளலாம். இதனால் அதிக நேரம் போனைப் பார்த்து காலத்தை விரயமாக்காமல் காப்பாற்றும். #androidapps
    இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தும் புதிய முயற்சியை வாட்ஸ்அப் துவங்கியுள்ளது. இதற்கென வாட்ஸ்அப் ஊழியர்கள் குழு இந்தியா வந்துள்ளது. #WhatsApp



    இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் நோக்கில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. 

    வாட்ஸ்அப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பிரச்சார வாகனம் மூலம் பொது மக்கள் கூடும் இடங்களில் சிறிய நாடகங்கள் மூலம் போலி செய்திகளை பரப்புவதால் ஏற்படும் ஆபத்தை விளக்கி வருகிறது. முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதியில் சிறிய நாடம் மக்களிடம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

    நாடகத்தின் காட்சிகள், பயனர்கள் மிக எளிமையாக பரப்பும் போலி தகவல் எவ்வாறு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதன் தீவிரத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. 

    போலி செய்திகளை கட்டுப்படுத்த ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளுக்கு மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது. ஜனவரி 2017 முதல் இதுவரை சுமார் 30 பேர் போலி செய்திகள் பரப்பப்படுவதால் கொல்லப்பட்டு இருப்பதாக இந்தியா ஸ்பென்ட் வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து இந்த நடவடிக்கையை துவங்கியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. இந்நிலையில், அந்நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது.

    வாட்ஸ்அப் பிரச்சார திட்டத்தின் அங்கமாக ஜியோபோனில் எவ்வாறு வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் இந்தியர்கள் முதல் முறையாக இன்டர்நெட் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
    ×