search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் எனும் புதிய பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும். 

    ஃபேஸ்புக்கில் முன்னதாக வழங்கப்பட்டிருந்த ஆன் திஸ் டே (On This Day) அம்சத்தை தினமும் 9 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெமரீஸ் பக்கம் இதே அம்சத்திற்கான புதிய நீட்சியாக பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அம்சம் பயனர்களை மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தெரியவந்தது. 

    அந்த வகையில் ஆன் திஸ் டே அம்சம் மேம்படுத்தப்பட்டு, பயனர்கள் தங்களின் கடந்த கால நினைவுகளை மீண்டும் திரும்ப பார்ப்பதை மிக எளிமையாக்குகிறது. புதிய மெமரீஸ் பக்கத்தில் ஆன் திஸ் டே (On This Day), ஃப்ரென்ட்ஸ் மேட் ஆன் திஸ் டே (Friends Made On This Day), ரீகேப்ஸ் ஆஃப் மெமரீஸ் (Recaps of Memories), மெமரீஸ் யூ மே ஹேவ் மிஸ்டு (Memories You May Have Missed) போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய மெமரீஸ் ஆப்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு ஆப்ஷனிலும் குறிப்பிட்ட தேதியில் கடந்த ஆண்டுகளில் நீங்கள் பதிவிட்ட போஸ்ட்கள், புகைப்படங்களை பார்க்க முடியும். இத்துடன் மெமரீஸ் பகுதியில் கடந்த வாரம் நீங்கள் தவற விட்ட போஸ்ட்களை உங்களுக்கு பட்டியலிடும்.
    ஆப்பிள் இயங்குதளங்களில் ஆப் உருவாக்குவோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் காலென்டர் 2 செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. இந்த ஆப் பயனர்களின் சாதனங்களை க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு, மாற்றாக பிரீமியம் அம்சங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    க்ரிப்டோகரென்சி செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறியதால் காலென்டர் 2 செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் க்ரிப்டோகரென்சிக்களுக்கு எதிரான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகள் ஐஓஎஸ், மேக் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் செயலிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆப்பிள் அறிவித்திருக்கும் புதிய நெறிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

    - ஆப்பிள் இனி விர்ச்சுவல் கரென்சி வாலெட் செயலிகளை அனுமதிக்கும், எனினும் இதற்கு டெவலப்பர்கள் தங்களை நிறுவனங்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.

    - க்ரிப்டோகரென்சி மைனிங்-ஐ சாதனத்துக்கு வெளியே செய்யும் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது கிளவுட்-சார்ந்த மைனிங் செய்யும் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன.

    - செயலிகளை கொண்டு பயனர்கள் பணம் செலுத்துவது, பண பரிமாற்றம் அல்லது அனுமதிக்கப்பட்ட எக்சேஞ்ச்களில் க்ரிப்டோகரென்சிக்களை பெறவும் முடியும்.

    - இதேபோன்று காயின்களை வழங்கும் செயலிகள், பிட்காயின் பரிமாற்றங்கள், இதர க்ரிப்டோகரென்சி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை சட்டரீதியாகவும் இருக்க வேண்டும்.

    - பயனர்களை சமூக வலைத்தள நடவடிக்கை, மற்றவர்களை குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோடு செய்ய தூண்டுவது மற்றும் செயலிகளை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றுக்கு க்ரிப்டோகரென்சி செயலிகள் அதன் பயனர்களுக்கு விர்ச்சுவல் காயின்களை வழங்க கூடாது.


    கோப்பு படம்

    புதிய விதிமுறைகளால் சில மூன்றாம் தரப்பு க்ரிப்டோகரென்சி செயலிகள் தடை செய்யப்படும் சூழலில் இருக்கும் நிலையில், ஆப்பிள் க்ர்ப்டோகரென்சி செயலிகளின் போக்கு முற்றிலும் மாற்றியமைக்கும். புதிய விதிமுறைகளால் எத்தனை செயலிகள் நீக்கப்படும் என்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.

    ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளுக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், மேக் மற்றும் ஜெயில்பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் தொடர்ந்து க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய முடியும்.
    பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த அனைத்து சேவைகளை வழங்கும் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    ஆமதாபாத்:

    பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும். 

    இத்துடன் ஏற்கனவே பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்தால், அதன் ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். தபால் மூலம் அனுப்பப்பட்ட பாஸ்போர்ட் டெலிவரி சார்ந்த விவரங்களை இந்த செயலி மூலம் டிராக் செய்ய முடியும்.



    பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மிக எளிமையாக மாற்றும் திட்டத்தின் முதல் படியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். என ஆமதாபாத் வட்டார பாஸ்போர்ட் அலுவலர் நீலம் ரானி தெரிவித்தார்.

    இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் ஏஜென்டுகள் மற்றும் தரகர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமின்றி நேரடியாக விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் சேவா கேந்ரா அல்லது வட்டார பாஸ்போர் மையத்தையும் தேட முடியும்.
    ஜிமெயில் ஆன்டராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. 

    ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும். 

    ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் வழக்கமாக இருபுறமும் ஸ்வைப் செய்தால் மின்னஞ்சல்கள் ஆர்ச்சிவ் செய்யப்படும். ஆன்ட்ராய்டு போலீஸ் மூலம் முதலில் கண்டறியப்பட்ட இந்த அம்சம் மே 30-ம் தேதி வாக்கில் வெளியிடப்பட்ட சமீபத்திய அப்டேட் மூலம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய அம்சத்தை இயக்க ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் -- ஜெனரல் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன்களில் ஆர்ச்சிவ், டெலீட், மார்க் ஆஸ் ரீட்/ அன்ரீட், மூவ் டூ மற்றும் ஸ்னூஸ் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    புதிய அப்டேட் மூலம் ஜிமெயில் இந்த அம்சத்தை அதிகம் தெரிவிக்கவில்லை என்றாலும், பிழை திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் ஜிமெயில் தளத்தில் மிகப்பெரிய அப்டேட் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இதே அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு இமெயில் ஷார்ட்கட்கள், ஸ்மார்ட் ரிப்ளை, கான்ஃபிடென்ஷியல் மோட் மற்றும் நேட்டிவ் ஆஃப்லைன் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டது.
    ஓத் இன்க் நிறுவனம் யாஹூ மெசன்ஜர் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஒத் இன்க் நிறுவனம் யாஹூ மெசன்ஜர் சேவை ஜூலை 17-ம் தேதி முதல் இயங்காது என அறிவித்துள்ளது. 

    யாஹூ மெசன்ஜர் உலகின் முதல் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாகும். யாஹூ மெயில் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த யாஹூ ஐடி அப்படியே இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சேவையை நிறுத்துவதை அந்நிறுவனம் முடிவு செய்யவில்லை என்றாலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இதர சாட் செயலிகளின் ஆதிக்கம் காரணாகவே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓத் நிறுவனம் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெசன்ஜர் சேவையை நிறுத்தியது. 

    தகவல் பரிமாற்ற வழிமுறைகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது, வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    கடந்த மாதம் யாஹூ நிறுவனம் ஸ்கூரில் எனும் மெசேஜிங் செயலியை சோதனை செய்து வந்தது. அந்த வகையில் இந்த செயலி யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெசன்ஜர் செயலியின் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறு மாதங்களுக்கு டவுன்லோடு செய்ய முடியும் என அறிவித்துள்ளது. 

    யாஹூ மெசன்ஜர் செயலி மார்ச் 9, 1998-ம் ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு, ஜூன் 21, 1999-ம் ஆண்டு ரீபிரான்டிங் செய்யப்பட்டது. அந்த வகையில் யாஹூ மெசன்ஜர் ஆப் ஜூலை 17, 2018-இல் நிறுத்தப்படுகிறது.
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு தளத்துக்கான பீட்டா பதிப்பில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் (2.18.179) உங்களுக்கு வரும் மெசேஜ்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் இனி ஃபார்டுடெடு (Forwarded) என்ற லேபெல் இருக்கும்.

    இந்த புதிய அம்சம் மூலம் இனி உண்மையான மெசேஜ்கள் மற்றும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களுக்கு வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். இந்த லேபெல் மெசேஜை அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோருக்கும் காணப்படும். முன்னதாக பீட்டா செயலியில் மீடியா விசிபிலிட்டி அம்சத்தை மறைக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது கேலரியில் இருக்கும் வாட்ஸ்அப் மீடியாவை மறைக்கவோ அல்லது காண்பிக்கவோ செய்யும்.

    இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பீட்டா பயனர்களை மிக எளிமையாக கான்டாக்ட்களை சேர்க்க வழி செய்கிறது. 



    புதிய ஃபார்வேர்டெடு லேபிலை பார்க்க உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் மெசேஜ்களை தேர்வு செய்து மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்-இல் ஃபார்வேர்டு செய்ய வேண்டும். இந்த லேபில் மெசேஜின் மேல்புறம் பார்க்க முடியும். குறிப்பாக இந்த லேபிளலை மறைக்கச் செய்யும் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மெசேஜ்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் அதில் ஃபார்வேர்டடு லேபில் இருக்கும். 

    வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதி ஸ்பேம் மெசஜ்கள் அதிகம் பரப்பப்படுவதை தவிர்க்கவோ அல்லது தெரியப்படுத்தவோ ஏதுவாக இருக்கும். முன்னதாக ஃபார்வேர்டடு மெசேஜ் லேபெல் பிப்ரவரி மாத வாக்கில் காணப்பட்டது. தற்சமயம் பீடடா டெஸ்டிங்-இல் இருக்கும் இந்த அம்சத்தை உடனே பயன்படுத்த வாட்ஸ்அப் பீட்டா செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் டவுன்லோடு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த செயலி கூகுள் பிளே பீட்டா திட்டம் மற்றும் ஏபிகே மிரர் தளத்தின் ஏபிகே ஃபைல் வடிவிலும் கிடைக்கிறது. புதிய அம்சம் ஐஓஎஸ் தளத்தில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    புகைப்படம்: Twitter
    ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அதன் பயனர்கள் பதிவிட்ட போஸ்ட்களை பொதுவெளியில் அனைவரும் பார்க்க செய்கிறது.
    புதுடெல்லி:

    உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அந்நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

    ஃபேஸ்புக்கின் புதிய பிழை (பக்) அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பதிவிட்டிருக்கிறது. இந்த பிழை ஃபேஸ்புக் போஸ்ட் பிதிவிட்டோர், அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கட்டுப்பாடுகளை செட் செய்திருந்தாலும், அனைவருக்கும் பகிர்ந்து இருக்கிறது.  

    “தற்சமயம் நடைபெற்றிருக்கும் பிழைக்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,” என ஃபேஸ்புக் நிறுவன தனியுரிமை பிரிவு தலைவர் எரின் எகன் தெரிவித்துள்ளார்.


    கோப்பு படம்

    புதிய பிழை மூலம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தகவல் அவர்களின் நியூஸ் ஃபீடில் தெரிவிக்கப்படும். “ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்வோருக்கு போஸ்ட்களை பொதுவாக போஸ்ட் செய்யக்கோரும் பரிந்துரைகள் தானாக செயல்படுவது தெரியவந்துள்ளது.” என எகன் தெரிவித்துள்ளார். 

    “இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது, இன்று முதல் இந்த பிழை மூலம் பாதிக்கப்போட்டுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பிழையில் ஏற்கனவே பயனர்கள் ஏற்கனவே பதிவிட்ட போஸ்ட்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. 

    மேலும் பயனர்கள் முன்பை போன்று தங்களது போஸ்ட்களை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும். இந்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார். 


    கோப்பு படம்

    இந்த பிழை என்ன செய்யும்?

    ஃபேஸ்புக்கில் பயனர்கள் போஸ்ட் செய்யும் போது, குறிப்பிட்ட போஸ்ட்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யக்கோரும் மெனு தெரியும். இதில் பயனர் பப்ளிக் என தேர்வு செய்யும் பட்சத்தில் போஸ்ட்-ஐ அனைவரையும் பார்க்க முடியும். மற்ற ஆப்ஷன்கள் பயனர் தேர்வு செய்வதற்கு ஏற்ப போஸ்ட்-ஐ பார்ப்போர் பிரிக்கப்படுவர். 

    எனினும் மே 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அதிகம் பேர் பார்க்கக்கூடாது என கட்டுப்படுத்தப்பட்ட போஸ்ட்களையும் ஃபேஸ்புக் தானாக மற்றவர்கள் பார்க்கும் படி செய்துள்ளது. செட்டிங் மாற்றப்பட்டு இருப்பதை பயனர்கள் கவனிக்காத பட்சத்தில், அவர்களின் போஸ்ட் அதிகம் பேருக்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

    ஃபேஸ்புக்கின் புதிய பிழை 1.4 கோடி பயனர்களை பாதித்து இருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட போஸ்ட்களுக்கான செட்டிங் மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    கோப்பு படம்

    ஃபேஸ்புக்கின் சமீபத்திய சொதப்பல்கள்

    முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரம் ஃபேஸ்புக் தளம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு ஆளானது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் அதிகாரிகள் மற்றும் நிறுவனர் இன்று வரை பதில் அளித்து வருகின்றனர். 

    இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டதாக அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அந்த வகையில் ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் மேற்கொண்டது.

    பயனர் தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவகாரத்தில், ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்கவோ, சேமிக்கவோ இல்லை என்றும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சேவையை மேம்படுத்தும் நோக்கில் போடப்பட்டது என தெரிவித்தது.
    ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் டிவி செயிலிக்கான இலவச சந்தா டிசம்பர் 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவனத்தின் டிவி ஆப் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டு நேரலை தொலைகாட்சி, வட்டாரம் மற்றும் சர்வதேச தகவல்களை பார்க்கும் வழி செய்யும் அப்டேட்-ஐ வெளியிட்டது.

    இத்துடன் ஜூன் 2018 வரை ஏர்டெல் டிவி ஆப் இலவச சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏர்டெல் டிவி செயலியை இதுவரை சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.

    ஆகஸ்டு 2017-இல் ஒரு கோடி வாடிக்கைாயளர்களை கடந்த ஏர்டெல் டிவி செயலியை வெறும் ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் நான்கு கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். அந்த வகையில் புதிய மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில், ஏர்டெல் டிவி செயலிக்கான இலவச சந்தாவை டிசம்பர் 30, 2018 வரை நீட்டிப்பதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.



    ஜனவரி முதல் மே 2018 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஒடிடி செயலிகளில் ஏர்டெல் டிவி செயலியும் ஒன்று என ஆப் ஆன்னி வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்டெல் டிவி ஆப் தற்சமயம் 375-க்கும் அதிகமான நேரலை தொலைகாட்சி சேனல்களையும், 10,000-க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் பிரபல நிகழ்ச்சிகளை வழங்குகிறது. 

    ஏர்டெல் டிவி செயலி சார்பில் இரோஸ் நௌ, சோனிலிவ், ஹாட்ஸ்டார், அமேசான் மற்றும் பல்வேறு இதர நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு தரவுகளை வழங்குகிறது. இதேபோன்று மேலும் பல்வேறு நிறுவனங்களுடன் ஏர்டெல் ஒப்பந்தமிட இருப்பதாக கூறப்படுகிறது.
    டிஜிடெக் அறிமுகம் செய்திருக்கும் குட்டி சாதனம் இருந்தால் உங்களது பொருட்களை களவு போகாமல் பார்த்து கொள்ள முடியும்.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் இருக்கும் நிலையில், லேப்டாப் அல்லது இதர கேட்ஜெட்களை கண்டறிய போதுமான அளவு சாதனங்களோ வழிமுறைகளோ இல்லை என்றே கூற வேண்டும்.

    சுவாரஸ்ய சாதனங்களை அறிமுகம் செய்யும் டிஜிடெக் நிறுவனம் புதிய ஆன்டி-லாஸ்ட் (anti-lost) வயர்லெஸ் டிராக்கர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் கொண்டு களவு போகும் சாதனங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிய முடியும். இந்த டிராக்கர் டிஜிடெக் டிராக்கர் எனும் செயலியுடன் இணைக்கப்படுகிறது. 

    டிஜிடெக் டிராக்கர் ஆப் ஆன்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இலவசமாக டவுன்லோடு செய்ய முடியும். வெவ்வேறு வடிவமைப்புகளில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இந்த சாதனத்தை கீசெயின், வாலெட், லேப்டாப் மற்றும் இதர சாதனங்களில் இணைத்துக் கொள்ள முடியும்.



    மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்டால், டிராக்கர் இருக்கும் லொகேஷனை கண்டறிய முடியும். ப்ளூடூத் 4.0 கனெக்டிவிட்டி மற்றும் கூடுதல் பேட்டரிகளுடன் கிடைக்கிறது. மின்சாதனங்கள் மட்டுமின்றி இந்த சாதனம் கொண்டு கார்களையும் பாதுகாக்க முடியும். 

    இதன் இன்-பில்ட் அலாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும். இத்துடன் இது வேலை செய்யும் எல்லை அளவுகளை மாற்றியமைக்கவும் முடியும். அதிகபட்சம் 30 மீட்டர்கள் பரப்பளவில் இயங்கும் டிராக்கர் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடக்கும் போது ஸ்மார்ட்போனில் அலாரம் அடிக்கும்.

    இத்துடன் இணைக்கப்பட்ட சாதனம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு வெளியே அசைந்தாலும், பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. டிராக்கர் பயன்படுத்தி, ரிமோட் முறையில் ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்களை எடுக்கவும் முடியும். புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்க டிஜிடெக் டிராக்கரில் உள்ள பட்டனை அழுத்த வேண்டும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் அறிவித்தது. #WWDC18 #Memoji
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிவித்தது. ஐஓஎஸ் 12 துவங்கி, வாட்ச் ஓஎஸ், டிவி ஓஎஸ், மேக் ஓஎஸ் என ஆப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேரு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்டுவேர் சார்ந்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை.

    சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் ஆப்பிள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏஆர்கிட் போன்றவற்றை ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சேர்த்திருக்கிறது. இத்துடன் மேக் மற்றும் ஆப்பிள் வாடச் சாதனங்களை முன்பை விட மிக எளிமையாக இயக்க வழி செய்யும் அம்சங்களை புதிய இயங்குதளங்கள் கொண்டிருக்கின்றன.



    ஐஓஎஸ் 12-இல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்கும் ஆப்பிள்: 

    ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பதை ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 12 தளத்தின் புதிய அம்சம் மூலம் தெரிவித்திருக்கிறது. டு நாட் டிஸ்டர்ப் (DND), ஸ்கிரீன்டைம் ஆப் உள்ளிட்டவை உங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை டிராக் செய்து தகவல்களை மிக துல்லியமாக வழங்குகிறது. 

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயன்பாடு குறித்த தகவல்களை பார்த்து, அதற்கு ஏற்ப செட்டிங்களை மாற்றியமைக்க முடியும். இதேபோன்று அனைவரும் தங்களின் பயன்பாட்டை குறைக்க புதிய செட்டிங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.



    அனைவரையும் கவர்ந்த மீமோஜி:

    ஆப்பிள் நிறுவனத்தின் அனிமோஜி அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இதேபோன்று ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.



    சிரி வழங்கும் சிறப்பு சேவைகள் என்னென்ன?

    ஆப்பிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை போட்டியாளர்களை பந்தாடியிருந்தாலும், அதிக வசதிகளை வழங்குவதில் அமேசானின் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரு சேவைகளும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வடிவில் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. 

    2018 டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிரி ஷார்ட்கட்களை அறிமுகம் செய்தது. இதை கொண்டு சில செயலிகளில் குறிப்பிட்ட கமான்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் உங்களின் அன்றாட பயன்பாட்டை வைத்து சிரி இனி உங்களுக்கு பயன்தரும் பரிந்துரைகளை வழங்கும்.



    ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அற்புதங்கள்:

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தின் முதல் அறிவிப்பாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி இருந்தது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் டிஜிட்டல் புகைப்படங்களை நிஜ உலகில் பிரதிபலித்து விசேஷ ஹெட்போன்கள் மூலம் அவற்றை போன்களில் பார்க்க வழி செய்கின்றன. போக்கிமான் கோ அல்லது ஃபில்ட்டர்கள் மற்றும் லென்ஸ்கள் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியின் பிரபல கேம் மற்றும் செயலிகளாக இருந்தன.

    ஒரு ஆண்டுக்கு முன் ஆப்பிள் டெவலப்பர் நிகள்வில் அந்நிறுவனம் டெவலப்பர்களுக்காக ஏஆர் கிட் அறிமுகம் செய்தது. இந்த கிட் பயன்படுத்தி டெவலப்பர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிக்களை உருவாக்க முடியும். மேலும் வால்வ் நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தை டெஸ்க்டாப் மேக் சாதனங்களுக்கு கொண்டு வரயிருப்பதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. 

    இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தளத்துக்கென USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    இத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்து, அதில் செய்யக்கூடியவற்றை நிகழ்ச்சியின் மேடையிலேயே நிகழ்த்தி காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்துக்கான சந்தை வரும் ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி பெற இருக்கிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் சுமார் 2.2 கோடி விஆர் மற்றும் ஏஆர் ஹெட்செட்களை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் 10.4 இயங்குதளத்தை மேம்படுத்தியுள்ளது. இதன் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #macOSMojave
    கலிஃபோர்னியா:

    ஐஓஎஸ் 12, வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் இயங்குதளங்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் 10.4 இயங்குதளத்தை ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய மேக் ஓஎஸ் இயங்குதளம் மோஜேவ் என அழைக்கப்படும் நிலையில், பல்வேறு புதிய வசதிகளை இந்த இயங்குதளம் கொண்டிருக்கிறது. அதிகளவு ஹூட் மாற்றங்களை டெஸ்க்டாப் சாதனங்களுக்கு கொண்டு வந்திருக்கும் புதிய மேக் ஓஎஸ் இயங்குதளத்தை ஆப்பிள் தலைமை செயல் அகிகாரி குவியல் முழுவதும் புதிய அம்சங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    புதிய மேக் ஓஎஸ் சிஸ்டம்-வைடு டார்க் மோட் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் யூசர் இன்டர்ஃபேஸ் மட்டுமின்றி வால்பேப்பர் மற்றும் வின்டோஸ்-இல் இருக்கும் அனைத்து தரவுகளையும் இருள் சூழ்ந்ததாக மாற்றியமைக்கும். மேக் ஓஎஸ் மோஜேவ் டார்க் மோட் ஆப்ஷனை எக்ஸ்கோடிற்கும் கொண்டு வருகிறது. எக்ஸ்கோடு டெவலப்பர்களால் அதிகம் விரும்பக்கூடிய ஒன்றாகும்.



    ஆப்பிள் நிறுவனம் ஸ்டேக்ஸ் வசதியை டெஸ்க்டாப் தளங்களுக்கு கொண்டு வருகிறது. இந்த அம்சம் அனைத்து ஃபைல்களையும் ஒழுங்கான ஃபோல்டரில் ஒருங்கிணைத்து வைக்கும். மேக் கணினிகளில் ஃபோல்டர்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஃபைல் ஒன்றை ஸ்டேக் ஃபோல்டரில் சேர்க்க அதனை டிராக் செய்து டெஸ்க்டாப்-இல் வைத்தால் வேலை முடிந்தது.

    இத்துடன் ஸ்கிரீன்ஷாட்களை எடுப்பதை புதிய இயங்குதளத்தில் மிகவும் எளிமையாக ஆப்பிள் மாற்றியிருக்கிறது. மேக் ஓஎஸ் மோஜேவ் தளத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க டெஸ்க்டாப் கீழ் வலது புற ஓரமாக காணப்படும் ஐகானை க்ளிக் செய்தால் மார்க அப் ஆப்ஷன் தெரியும்.

    ஸ்கிரீன்ஷாட் மட்டுமின்றி க்விக்டைம் செயலியில் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்வதை ஆப்பிள் நிறுவனம் மேலும் எளிமையாக மாற்றியிருக்கிறது.  இதே அப்டேட் கன்டினியூட்டி கேமரா வடிவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கன்டினியூட்டி கேமரா மூலம் பகைப்படங்களை எடுத்ததும், அவற்றை உடனடியாக மேக் கம்ப்யூட்டரில் தெரியும். இந்த அம்சம் புகைபப்டங்களை போன் கேமராவில் எடுக்கப்பட்டதும் நேரடியாக மேக் கணினிகளில் பார்க்கும் வசதியை வழங்குகிறது.

    இத்துடன் நியூஸ் மற்றும் ஸ்டாக் செயலிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படுகிறது. மேலும் வாய்ஸ் மெமோஸ் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய இயங்குதளத்தில் முற்றியும் புதிய ஃபைல் சிஸ்டம் மற்றும் விண்டோயிங் சர்வீஸ் வழங்கும் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. உங்களது அனுமதியின்றி உங்களின் தகவல்களை செயலிகள் இயக்குவதை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் மாற்றியமைக்கப்பட்ட மேக் ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மேக் ஆப் ஸ்டோரின் இடதுபுறத்தில் சைடுபார் மற்றும் எடிட்டோரியலுக்கு பெரிய பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் டிஸ்கவர், கிரியேட், வொர்க், பிளே, டெவலப், கேட்டகரீஸ், அப்டேட்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன.

    ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும்.

    இதே நிகழ்வில் மெட்டல் API மூலம் மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயில கிரியேட் ML எனும் டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிராஸ்-பிளாட்ஃபார்ம் ஃபிரேம்வொர்க் தளத்தில் ஆப்பிள் மேற்கொண்டு இருக்கும் புதிய மாற்றம் காரணமாக டெவலப்பர்கள் தங்களது செயலிகளை ஐஓஎஸ் மற்றும் மேக் ஓஎஸ் தளங்களில் வழங்க முடியும். #WWDC2018 #macOSMojave #mojave
    இன்ஸ்டாகிராம் சேவையில் நியூஸ் ஃபீட் ஸ்டோரிக்களை ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக வழங்க அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் சேவையில் ரிவர்ஸ் க்ரோனோலாஜிக்கல் ஃபீட் வழிமுறையை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்தியது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புதிய ரேன்கிங் அல்காரிதத்தை அறிமுகம் செய்துள்ளது.

    அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேக ஃபீட் வழங்க மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மெஷின் லெர்னிங் பயன்படுத்துவதால், மற்றவர்கள் பயன்படுத்தும் கணக்குகளையே நீங்கள் பயன்படுத்தினாலும் அவற்றுடன் நீங்கள் உரையாடும் விதத்தை கொண்டு பிரத்யேக ஃபீட் பார்க்க முடியும்.

    இன்ஸ்டாகிராம் நியூஸ் ஃபீடில் நீங்கள் பார்க்கும் போஸ்ட்கள் விருப்பம், பயன்பாட்டு அளவு மற்றும் உரையாடல் என மூன்று அம்சங்களை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையிலான போஸ்ட்களுக்கு முன்னதாக நீங்கள் அணுகிய விதத்தை புரிந்து கொண்டு நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்களை நீங்கள் விரும்பும் வகையில் இருப்பதை இன்ஸ்டாகிராம் சரியாக புரிந்து கொள்ளும். 


    கோப்பு படம்

    மேலும் இந்த வழிமுறை போஸ்ட்களை பகிர்ந்து கொண்டவர்களிடம் நீங்கள் எத்தனை முறை உரையாடி இருக்கிறீர்கள் என்பதை கமென்ட், லைக் மற்றும் இதர அ்மசங்களை கருத்தில் கொண்டு கண்டறிந்து கொள்கிறது. மூன்று முக்கிய அம்சங்களை கடந்து ஃப்ரீக்வன்சி, பின்பற்றுவது மற்றும் பயன்பாடு உள்ளிட்டவற்றை அடுத்தக்கட்ட முக்கிய அம்சங்களாக எடுத்துக் கொள்கிறது.

    குறிப்பிட்ட நபர்களை ஃபாளோ செய்யும் போது ஃப்ரீக்வன்சி அம்சம் நீங்கள் எத்தனை முறை அவர்களின் போஸ்ட்களை பார்க்கின்றீர்கள் என்பதையும், பயன்பாடு என்பது நீங்கள் எத்தனை நேரம் போஸ்ட்களில் செலவிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளும்.

    மேலும் ஃபீட்களில் எதுபோன்ற போஸ்ட்கள் வரவேண்டும் என்பதை கட்டுப்படுத்தவில்லை என்றும், இன்ஸ்டா வாசிகள் விரும்பும் போஸ்டகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை புரிந்து கொண்டு புகைப்படம் அல்லது வீடியோ என அனைத்து ஃபீட்களும் தெரியும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
    ×