search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று துவங்க இருக்கும் நிலையில், நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது மென்பொருள் அப்டேட் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை டெவலப்பர் நிகழ்வில் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று (ஜூன் 4) துவங்குகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு 2018

    ஆப்பிள் நிறுவனம் இம்முறை அதிக அம்சங்களை அறிமுகம் செய்வதை காட்டிலும் பிழை திருத்தங்களில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய அம்சங்களை விட பிழைகளை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த ஆண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் என்எஃப்சி சிப்களை திறக்கலாம் என கூறப்படுகிறது. இதை கொண்டு ஆப்பிள் பே சேவையை தவிர அக்சஸ் கார்டுகளை போன்று கதவுகளை திறக்க பயன்படுத்த முடியும்.



    ஐஓஎஸ் 12

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில நோட்டிஃபிகேஷன் சென்டரை மாற்றுவதை பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர். சமீப காலங்களில் நோட்டிஃபிகேஷன்களை ஐபோன் இயக்கும் விதம் கவலை கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ்-இல் நோட்டிஃபிகேஷன் சென்டர் மோசமாக இயங்குவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்துடன் புதிய இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    வாட்ச் ஓஎஸ் 5

    வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ஆக்டிவிட்டி சார்ந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் வாட்ச் சாதனத்தை உடல்நலத்தை மேம்படுத்த ஏதுவான சாதனமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை உடற்பயிற்சி சார்ந்த அம்சங்களும், டிராக் செய்ய புதிய வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் அம்சம் வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உறக்கத்தை டிராக் செய்யும் பெடிட் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில், புதிய வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் மூன்றாம் தரப்பு ஃபேஸ்களை இன்ஸ்டால் செய்யும் வசதி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ச் ஓஎஸ் 4.3 தளத்தில் இருக்கும் மறைக்கப்பட்ட குறியீட்டில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



    மேக் ஓஎஸ் 10.14

    மேக் சாதனங்களில் ஐஓஎஸ் செயலிகள் வேலை செய்வது சார்ந்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த அம்சம் 2019 ஆண்டில் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை காட்டிலும், இந்த அம்சம் மேக் ஓஎஸ் தளத்தில் பலரும் விரும்பும் அம்சமாக இருக்கும்.

    ஐஓஎஸ் இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது மேக் ஆப் ஸ்டோரில் அதிகளவு செயலிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறமுடியும்.  மேலும் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், கானா, சாவன் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் மேக் ஆப் ஸ்டோரில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் செயலிகளை மேக் சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் பட்சத்தில் பாடல்கள், வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.


    டிவி ஓஎஸ் 12

    ஆப்பிள் டிவி பெட்டியை இயக்கும் டிவி ஓஎஸ் 12 இயங்குதளம் மற்ற தளங்களுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவாக அப்டேட்களை வழஹ்குகிறது. முந்தைய டிவி ஓஎஸ் தளத்தில் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் புதிய அம்சங்களை பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பட்டியலில் முதன்மையானதாக இருப்பது பிக்சர்-இன்-பிக்சர் மோட் எனலாம், இந்த அம்சம் ஒரே சமயத்தில் இரு அளவுகளில் இருவேறு வீடியோக்களை  பிளே செய்யும். ஒரு வீடியோ அளவில் சிறியதாகவும், மற்றொன்று பின்னணியிலும் ஓடிக்கொண்டிருக்கும்.

    இதேபோன்று பிரத்யேக ஹோம் ஆப் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சமாக இருக்கிறது. டிவி ஓஎஸ் பயனர்கள் ஆப்பிள் நியூஸ் செயலியின் வீடியோ-சென்ட்ரிக் பதிப்பையும் பயனர்கள் நிச்சயம் விரும்புவர். இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் இன்டகிரேஷன், மேம்படுத்தப்பட்ட ரிமோட் ஆப் உள்ளிட்டவை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 
    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பதாஞ்சலி அறிமுகம் செய்த கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாபா ராம்தேவின் பதாஞ்சலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கிம்போ எனும் குறுந்தகவல் செயலியை வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வெளியிட்டது. 

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் செயலியின் பாதுகாப்பு குறித்து பலரும் குற்றஞ்சாட்டினர். பாதுகாப்பு வல்லுநர்கள் செயலியின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் வெளியான ஒரே நாளில் கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

    செயலி நீக்கப்பட்டதை ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கும் கிம்போ பிளே ஸ்டோர்களில் கிம்போ பெயரில் இருக்கும் மற்ற போலி செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயலியை நீக்கியதற்கு அதிகப்படியான வரவேற்பு தான் முக்கிய காரணம் என கிம்போ சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாக்கில் தகவல் தெரிவித்துள்ளனர்.



    பிளே ஸ்டோரில் கிம்போ ஆப் என டைப் செய்தாலே, ஒரே பெயரில் சில எழுத்து மாற்றங்களுடன் பல செயலிகள் வெவ்வேறு டெவலப்பர்களின் பெயரில் இடம்பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் கிம்போ பெயரில் கிடைக்கும் போலி செயலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது. 

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று அதிகாரப்பூர்வ கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும் பதாஞ்சலி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் இந்த செயலி விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் டிஜிட்டல் பேமென்ட்ஸ் வசதியின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    செயலியில் பேமென்ட்ஸ் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை சேவைகளை வழங்க காத்திருக்கின்றது. இதற்கான பணிகள் முறையான சிஸ்டம்கள் இல்லாததால் தாமதமாகி வருகிறது.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும் படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.



    2018 பிப்ரவரி மாதம் முதல் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சத்தில் ரிக்வஸ்ட் மனி (request money) ஆப்ஷன் இன்வைட் முறையில் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது பேமென்ட்ஸ் அம்சம் பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் உள்ளிட்டவற்றுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்சமயம் வரை வாட்ஸ்அப் செயலியை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது பேடிஎம் சேவையை பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக அலிபாபவின் பேடிஎம் வாட்ஸ்அப் யுபிஐ பேமென்ட் தளம் முறையான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    தென்மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பப்புவா நியூகினியா:

    பப்புவா நியூகினியா அரசு ஃபேஸ்புக் சேவையை ஒரு மாத காலத்துக்கு தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை நிறுத்தும் வகையிலும், அந்நாட்டு மக்களின் பயன்பாடு குறித்து புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்பு துறை மந்திரி சாம் பசில் கூறும் போது, தடை விதிக்கப்படும் போது தகவல் தொடர்பு துறை மற்றும் பப்புவா நியூகினியா தேசிய ஆய்வு மையம் சார்பில் சமூக வலைத்தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ஃபேஸ்புக் தடை செய்யப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் போலி கணக்கு வைத்திருப்போர், ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்வோர், தவறான தகவல்களை பரப்புவோர் கண்டறியப்பட்டு, போலி தகவல்கள் முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பசில் மேலும் தெரிவித்துள்ளார்.


    கோப்புப்படம்

    இந்த நடவடிக்கை மூலம் உண்மையான கணக்குகளை வைத்திருப்போர் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்த வழி செய்யும். பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவை தடை செய்யப்படுவது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் பப்புவா நியூகினியாவில் சைபர் குற்றத்திற்கென சட்டம் இயற்றப்பட இருக்கிறது.

    “எங்கள் நாட்டில் ஃபேஸ்புக் மூலம் ஏற்படும் தீங்குக்கு இடமளிக்க முடியாது. சைபர் குற்றத்திற்கான சட்டம் குறித்து முறையான பயிற்சி மற்றும் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் வரை காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவேன்,” என பசில் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியனில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். மேலும் ஃபேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  

    ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை ரகசியமாக திருடி அவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன நடவடிக்கை அம்பலமானதைத் தொடர்ந்து பப்புவா நியூகினியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் உளவியல் ஆய்வாளரான அலெக்சான்டர் கோகன் என்பவரால் உருவாக்கப்பட்ட செயலியை கொண்டு சேகரிக்கப்பட்டது.
    வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது என்ன செய்யும் என்ற தகவலை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது செயலியில் நீங்கள் பிளாக் செய்தவர்களையும் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப வழி செய்கிறது.

    தற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்கள், எப்படியோ உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடிகிறது. புதிய பிழையை வாட்ஸ்அப் உறுதி செய்யவோ இதை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    எனினும் நீங்கள் பிளாக் செய்தவர்கள் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பாமல் இருக்க இந்த வழிமுறையை பின்பற்றலாம். முதலில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்-ஐ அன்பிளாக் செய்து பின் மீண்டும் பிளாக் செய்யலாம். இவ்வாறு செய்தால் பிளாக் செய்த கான்டாக்ட் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்கள் எதுவும் வராது.

    பிளாக் செய்த கான்டாக்ட்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதோடு இந்த பிழை அவர்களின் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் தகவல் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க வழி செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிளாக் செய்த கான்டாக்ட், பிளாக் செய்யாத கான்டாக்ட் பெறும் அனைத்து அம்சங்களையும் பெற முடிகிறது. இந்த பிழை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்ப்பது, க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சங்களை வழங்கியது. சமீபத்தில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் சர்வர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்பட்டது.
    ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் சமீபத்திய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. புதிய அப்டேட் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    உலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி ட்விட்டர் விண்டோஸ், லைட் ஆப் மற்றும் மொபைல் வலைத்தளங்களில் நைட் மோட், ரிட்வீட், லைக் எண்ணிக்கை, ரிப்ளை சார்ந்த அப்டேட் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.

    பல்வேறு தளங்களிலும் சீரான சேவையை வழங்கும் நோக்கில் இந்த அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ட்வீட் கம்போஸ் பாக்ஸ் மிக எளிமையாக ட்வீட் மற்றும் டைம்லைன் ஆப்ஷன்களிடையே செல்ல வழி செய்கிறது.



    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் ஏற்கனவே கிடைக்கும் நிலையில் மற்ற தளங்களுக்கும் இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்படுகிறது. இந்த மோட் ட்விட்டர் தீம் நிறத்தை இருளிக்கி இரவு நேரங்களில் பயன்படுத்தும் போதும் கண்களுக்கு சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

    ட்விட்டர் மொபைல் தளத்தில் ரியல்-டைம் ட்வீட் ரிப்ளைக்கள், ரீட்வீட்கள், லைக் உள்ளிட்டவற்றை பார்க்க அடிக்கடி ரீலோடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. புதிய அப்டேட் மூலம் இந்த நிலை மாற்றப்பட்டு ரீலோடு செய்யாமலேயே ரியல்-டைம் அப்டேட்களை பார்க்க முடியும்.

    ட்விட்டரில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ட்விட்டர் லைட், ட்விட்டர் விண்டோஸ் தளங்களிலும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
    கூகுள் மேப்ஸ் செயலியில் இதுவரை வழிகாட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு அனிமேஷன் வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    கூகுள் மேப்ஸ் செயலியில் சத்தமில்லாமல் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக கூகுள் மேப்ஸ் சேவைகளில் நமக்கு வழி காட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு விட்டது.

    கவலை வேண்டாம், அம்பு குறிக்கு மாற்றாக அழகிய கார் பொம்மைகளை வழங்கியுள்ளது. புதிய பொம்மை கார் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்லும். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப அதிவேக எஸ்யுவி அல்லது பிக்கப் டிரக் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.



    புதிய அம்சம் வெளியாக எவ்வித காரணமும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் மூலம் நேவிகேஷன் அனுபவம் முன்பை விட வித்தியாசமானதாக இருக்கும். ஸ்வாப் செய்ய பயணத்தின் போது டிரைவிங் நேவிகேஷன் மோடில் உள்ள அம்பு குறியை தட்டி, உங்களுக்கு விருப்பமான வாகனத்தை தேர்வு செய்ய செய்யலாம். 

    இந்த அம்சம் முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் சேவையின் ஐஓஎஸ் பதிப்பில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், அசிஸ்டண்ட் உள்ளிட்ட சில அம்சங்களில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் புதிய அம்சங்கள் அவ்வப்போது சிறிய அப்டேட்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.
    கலிஃபோர்னியா:

    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.

    புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பிப்ரவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.39 ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. 

    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதியில் க்ரூப்களில் இருக்கும் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ கால் ஒரே சமயத்தில் பேச முடியும். புதிய அம்சம் ஏற்கனவே  2.18.145 பதிப்பில் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட் பெற்றவர்கள் மட்டுமின்றி இந்த அம்சத்தை பெற அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    க்ரூப் வீடியோ கால் அம்சம் தற்சமயம் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வெளியிடப்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய அம்சத்தை குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் மற்ற அம்சங்களை போன்று இல்லாமல் புதிய வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. இதே நிலை ஐஓஎஸ் தளத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.52 க்ரூப் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    புதிய க்ரூப் காலிங் செய்ய வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் வீடியோ கால் செய்ய வேணடிய கான்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புதிய க்ரூப் காலிங் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால், Add participant என்ற பட்டன் திரையில் தெரியும், இந்த பட்டன் தெரியாதபட்சத்தில் வீடியோ காலிங் செய்ய முடியாது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    புதிய அப்டேட் மூலம் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். இனி ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் தெரியும். 



    இன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் பிரத்யேக பேக்கிரவுன்டுடன் ஷேர் செய்ய தயார் நிலையில் இருக்கும். இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம். இன்ஸ்டாகிராம் ஃபீட்களில் இருந்து ஷேர் செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும்.

    நீங்கள் பதிவிடும் போஸ்ட்களை மற்றவர்கள் ஸ்டோரீக்களாக ஷேர் செய்யாமல் இருக்க ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிக்கான அப்டேட்கள் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
    ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டோரீஸ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஃபேஸ்புக் தளத்தில் ஸ்டோரீஸ் அம்சத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஃபேஸ்புக் தளத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பின்னர் பார்க்க சேமித்து வைக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை ஆர்ச்சிவ் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதிகள் ஏற்கனவே பயனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

    ஃபேஸ்புக் கேமரா கொண்டு படமாக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் சேமித்து வைக்க முடியும். இவற்றை குறிப்பிட்ட வாடிக்கையாளர் மட்டும் பார்க்க முடியும். இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் மெமரியை சேமிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கிளவுடில் சேமிக்கப்படுகிறது. இவற்றை சேமித்து வைத்து பின்னர் பகிர்ந்து கொள்ள முடியும்.


    ஃபேஸ்புக் கேமரா

    ஃபேஸ்புக் கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை மட்டுமே தளத்தில் சேமிக்க முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டுள்ளது. என ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் அம்சத்திற்கான தலைவர் கானர் ஹேஸ் தெரிவித்துள்ளார். 

    வாய்ஸ் போஸ்ட் அம்சத்தில் வாடிக்கையாளர்கள் ஆடியோ நோட்களை ஸ்டோரீக்களாக பதிவு செய்ய முடியும். இத்துடன் புகைப்படங்களையும் சேர்க்க முடியும். “வாய்ஸ் போஸ்ட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்க அவர்கள் விரும்பும் வழிகளை பயன்படுத்த முடியும்.”  என்றும் ஹேஸ் மேலும் தெரிவித்தார்.

    இந்த அம்சம் குறைந்த டேட்டா அல்லது நெட்வொர்க் இருக்கும் பகுதிகளிலும் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது நியூஸ் ஃபீடில் மற்றவர்களும் வாய்ஸ் போஸ்ட்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. தற்சமயம் வாய்ஸ் போஸ்ட் செய்யும் கால அளவு 20 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


    ஃபேஸ்புக் வாய்ஸ் போஸ்ட்

    இந்த அம்சம் தற்சமயம் ஃபேஸ்புக் லைட் பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தாலும் விரைவில் ஆன்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஸ்டோரீ அம்சம் போன்றே இந்த போஸ்ட்களும் 24 மணி நேரத்திற்கு பின் மறைந்து விடும்.

    ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் அம்சம் வாடிக்கையாளர்களை தங்களது ஸ்டோரீக்களை பார்க்கவும், ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் வரும் வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஸ்டோரீக்களை ஆர்ச்சிவ் செய்வதற்கான அனுமதி கோரப்படும், இங்கு உறுதி செய்ய OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். ஆர்ச்சிவ் செய்ய வேண்டாமெனில் மறுக்க கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். 

    இதனை எப்போது வேண்டுமானலும் பார்க்கவும், அவற்றை போஸ்ட் அல்லது ஸ்டோரியாக மீண்டும் ஷேர் செய்யும் வசதிகள் வழங்கப்படுகிறது. ஸ்டோரீஸ் அம்சத்தில் வாய்ஸ் போஸ்ட் பதிவு செய்தால் குறிப்பிட்ட ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்து விடும், எனினும் ஆர்ச்சிவ் அம்சத்தை செயல்படுத்தி இருந்தால், அவற்றை ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் பகுதியில் பார்க்க முடியும்.
    கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புதிய குரல்களை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பெறுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். 

    அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. இது இயந்திர குரலினை மனித குரல் போன்று ஒலிக்க செய்யும் திறன் கொண்டுள்ளது. முதற்கட்டமாக ஜான் லெஜன்ட் குரல் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் மற்றவர்களின் குரல்களும் சேர்க்கப்பட இருக்கிறது. 

    இந்த தொழில்நுட்பம் கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைலில் உள்ள கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் இயங்கும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வழக்கமான இயந்திர குரலை கேட்டு சலித்து விட்டதா? இனி இவ்வாறு தோன்றும் போதெல்லாம் கூகுள் அசிஸ்டண்ட் குரலினை மாற்ற முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென தொடர்ந்து பார்ப்போம். 



    கூகுள் அசிஸ்டண்ட் செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் ஓபன் செய்ய வேண்டும். 

    இனி திரையின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் -- ப்ரிஃபரன்சஸ் -- அசிஸ்டண்ட் வாய்ஸ் ( Settings > Preferences > Assistant Voice) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். 

    இங்கு காணப்படும் ஆறு குரல்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இத்துடன் குரல்களை செட் செய்யும் முன் ஒவ்வொரு குரலையும் பிரீவியூ ஆப்ஷன் மூலம் கேட்க முடியும். பிரீவியூ செய்ய குரலின் அருகில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

    இந்த ஆப்ஷனில் நீங்கள் தேர்வு செய்யும் குரலில் கூகுள் அசிஸ்டண்ட் உங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும். ஒவ்வொரு பயனரும் வெவ்வேறு குரல்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் வீட்டில் உள்ள ஸ்பீக்கரில் வெவ்வேறு குரல்களை ஒலிக்க செய்யலாம். 

    புதிய அம்சத்தை பயன்படுத்த நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். இதுவரை இந்த அப்டேட் பெறாதவர்கள் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்து பின் முயற்சிக்கலாம். 

    லெஜன்ட் குரல் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதற்கான அப்டேட் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது லேங்குவேஜ் செட்டிங்ஸ்-க்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தும் சில சாதனங்களில் சில குரல்கள் வழங்கப்படாமல் இருக்கலாம்.
    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
    புதுடெல்லி:

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகள் முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சம் வழங்குகிறது.



    இந்த வசதிகள் அனைத்தும் பழைய க்ரூப்களுக்கும், புதிதாய் உருவாக்கப்படும் க்ரூப்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரூப்களை உருவாக்கும் போது க்ரூப் குறித்த விவரங்களை க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எழுத முடியும். இதனை க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றும் புதிதாய் இணைபவர்களும் பார்க்க முடியும். 

    க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்களை க்ரூப் அட்மின்கள் மற்றும் க்ரூப்-இல் இருப்பவர்களும் மாற்றியமைக்க முடியும். மற்றவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என நினைக்கும் க்ரூப் அட்மின்கள் இதற்கான வசதியை முடக்க முடியும். இதே போன்று க்ரூப் சப்ஜக்ட் மற்றும் ஐகானினை யார் மாற்ற வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்கள் முடிவு செய்ய முடியும். 

    இத்துடன் க்ரூப் அட்மின்கள் மற்ற க்ரூப்களில் இருப்பவர்களின் அட்மின் அனுமதிகளை திரும்ப பெற முடியும். மேலும் க்ரூப் உருவாக்குபவரை இனி க்ரூப்-ஐ விட்டு வெளியேற்ற முடியாது. வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் க்ரூப்களில் மென்ஷன்ஸ் எனும் புதிய வசதியை பயன்படுத்த முடியும். 



    இதேபோன்று க்ரூப் கேட்ச் அப் அம்சம் கொண்டு பயனர்கள் மென்ஷன் செய்யப்பட்டு இருக்கும் மெசேஜ்களை கண்டறிந்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். இந்த அம்சத்தை இயக்க க்ரூப் பயனர்கள் @ பட்டனை க்ளிக் செய்தால் சாட் ஸ்கிரீனின் கீழே வலதுபுறமாக மென்ஷன் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க முடியும்.

    வாட்ஸ்அப் க்ரூப்களில் உள்ளவர்களை ஸ்கிரால்-டவுன் செய்து தேடாமல், நேரடியாக சர்ச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. க்ரூப்களில் இருப்பவர்களை தேட க்ரூப் இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்தாலே போதும். 

    க்ரூப் இன்விடேஷன்களில் ஸ்பேம் அளவை குறைக்கும் நோக்கில் க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பது கடினமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×