என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96694
நீங்கள் தேடியது "slug 96694"
ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
வீடியோ பகிர்ந்து கொள்ளும் டிக்டாக் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் முதலிடம் பிடித்து இருக்கிறது. 2019 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஆப் ஸ்டோரில் உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் முதலிடத்தில் இருக்கிறது.
சென்சார்டவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி 2019 முதல் காலாண்டில் மட்டும் ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 3.3 கோடி பேர் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இதுதவிர ஆப் ஸ்டோரில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ட்விட்டர் 16 ஆவது இடத்தில் இருக்கிறது. டிக்டாக் செயலியை இன்ஸ்டால் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு காலாண்டில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் 88.6 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். இவற்றில் 99 சதவிகித டவுன்லோடுகள் ஆண்ட்ராய்டு தளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செயலியில் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜி மற்றும் நைட் மோட் வசதிகளை புதிய அப்டேட் மூலம் பெற இருக்கிறது.
வாட்ஸ்அப் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் பல்வேறு புதிய எமோஜிக்கள் மற்றும் நைட் மோட் வழங்கப்பட இருப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 அப்டேட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட சுமார் 155 எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய எமோஜிக்கள் அடுத்த கூகுள் பிளே ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. முந்தைய அப்டேட்டில் டார்க் மோட் அம்சம் காணப்பட்ட நிலையில், தற்சமயம் இவை நைட் மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புகைப்படம் நன்றி: WABetaInfo
அந்த வகையில் எதிர்காலத்தில் வரும் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் நைட் மோட் அம்சம் வழங்கப்படலாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் 155 எமோஜிக்கள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன. இவை வாட்ஸ்அப் அடுத்த ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் நைட் மோட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை உணர்த்தியிருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் எனேபிள் செய்யப்படவில்லை என்ற போதும், அடுத்த பீட்டா அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய அப்டேட் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்ட டார்க் மோட் அம்சம் நைட் மோட் என பெயர் மாற்றம் பெறுவதை உறுதி செய்திருக்கிறது.
உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் உடனடியாக தங்களது செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் சுமார் 150 கோடி பேரும் உடனடியாக செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது.
முன்னதாக ஹேக்கர்கள் கைவரிசை காரணமாக வாட்ஸ்அப் செயலி மூலம் பயனர் ஸ்மார்ட்போன்களில் ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆகியிருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனருக்கு தெரியாமல் அவர்களது ஸ்மார்ட்போனின் கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவற்றை ரகசியாக இயக்குவதோடு அவர்களது குறுந்தகவல், லொகேஷன் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆனது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் பிழையை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பயனர்கள் தங்களது செயலியை உடனடியாக அப்டேட் செய்ய அந்நிறுவனம் தனது பயனர்களை வலியுறுத்தி வருகிறது.
“மொபைல் சாதனங்களில் சேமிக்கப்பட்ட விவரங்களை ஸ்பைவேர் சேகரிக்காமல் இருக்கச் செய்யவே இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. எங்களது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சந்தையில் முன்னணி நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஸ்பைவேரை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சைபர் நுண்ணறிவு நிறுவனம் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பைவேர் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் மூலம் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் ஆகி இருக்கிறது. இது வாட்ஸ்அப் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் மொபைல்களில் இன்ஸ்டால் ஆகி இருக்கிறது.
முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கும் வாட்ஸ்அப் செயலியில் இந்த ஸ்பைவேர் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் இதுவரை வழங்கப்படவில்லை. உலகளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.
ஸ்பைவேர் தாக்குதல் பற்றி விசாரணை துவங்கப்பட்டு இருப்பதாகவும், விசாரணைக்கு உதவ அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் வழங்கி வரும் சிறப்பு சலுகையை அந்நிறுநனம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் பிரைம் சந்தாவை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து இருக்கிறது. ஜியோ பிரைம் சந்தா பெற்றிருக்கும் அனைவருக்கும் இச்சலுகை நீட்டிக்கப்படுகிறது.
ஜியோ வழங்கும் பிரைம் சந்தாவில் பயனர்கள் ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் மற்றும் ஜியோ டி.வி. என அனைத்து ரிலையன்ஸ் ஜியோ செயலிகளையும் இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ சிறப்பு சலுகைகளை பயன்படுத்தும் வசதியும் பிரைம் சந்தாவில் கிடைக்கிறது.
ஏற்கனவே ஜியோ பிரைம் சந்தாவை ரிலையன்ஸ் ஜியோ நீட்டித்து இருக்கிறது. ஜியோ பிரைம் சந்தா நீட்டிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பயனர்கள் மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் பகுதியில் பார்க்கலாம். இங்கு ஜியோ பிரைம் சந்தாவை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
புதிய அறிவிப்பின் பிடி, ஜியோ பிரைம் சந்தாவை இழக்க இருந்தவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டிற்கு பிரைம் சந்தாவை இலவசமாக பெற முடியும். எனினும், புதிய ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பிரைம் சந்தா பெற ரூ.99 ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஏற்கனவே பிரைம் சந்தா பெற்றிருப்போருக்கு இலவச பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. முன்னதாக இதோபோன்ற சூழலில் பிரைம் சந்தாவை இலவசமாக நீட்டிக்க பயனர்கள் தரப்பில் இருந்து கோரிக்கையை எழுப்ப வேண்டிய நிலை இருந்தது. இம்முறை இந்த வழக்கம் மாற்ற்பட்டு ஜியோ தரப்பில் தானாகவே பிரைம் சந்தா நீட்டிக்கப்படுகிறது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok
இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
பின் சென்னை உயர்நீதிமன்றம் செயலிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு செயலிக்கு விதித்த தடையை நீக்கியது. இதன் தொடர்ச்சியாக பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்த டிக்டாக் தற்சயம் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்சமயம் ஐ.ஓ.எஸ். மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகளுக்கான சோஷியல் பிரிவில் டிக்டாக் செயலி முதலிடத்தில் இருக்கிறது.
பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் #ReturnOfTikTok என்ற தலைப்பில் புதிய திட்டத்தை துவங்கி அதன் மூலம் செயலியை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. #ReturnOfTikTok திட்டத்திற்கு டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையொட்டி பயனர்கள் சிறு வீடியோக்களை உருவாக்கி #shareandwin ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை டிக்டாக்கின் #ReturnOfTikTok திட்டத்தை சுமார் 504 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தினந்தோரும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.3,49,63,000 வரை நட்டத்தை சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடை காரணமாக சுமார் 250 பேருக்கு வேலை பறிபோகும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை 2019 ஆண்டு இறுதியில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. #WhatsApp
பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலிக்கான வசதி 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் போன் 7 இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக விண்டோஸ் போன் தளங்களில் வாட்ஸ்அப் சேவை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலியை விண்டோஸ் 10 தளங்களில் பயன்படுத்த முடியாது.
மேலும் இந்த செயலிக்கான அப்டேட்களும் வழங்கப்படாது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு விண்டோஸ் போன் 8.0 தளத்தில் வாட்ஸ்அப் வசதி நிறுத்தப்பட்டது. தற்சமயம் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் தளங்களின் பட்டியலை அந்நிறுவனம் தனது வலைதளத்தில் மாற்றியிருக்கிறது.
விண்டோஸ் போன் தளத்தில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட இருக்கும் நிலையில், அந்நிறுவனம் சர்வதேச விண்டோஸ் தளத்துக்கான (Universal Windows Platform - UWP) புதிய செயலியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலி சமீபத்திய விண்டோஸ் போன் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர் விவரங்களை கையாள்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. #Facebook
கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கனடா நாட்டு விதிகளை மீறியதாக சட்டவிரோத நடவடிக்கைகளை கண்கானிக்கும் தனியுரிமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கனடா நாட்டு தனியுரிமை ஆணையர் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான தனியுரிமை ஆணையர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதற்கு பயனரிடம் இருந்து அனுமதி பெறவில்லை. பயனர் விவரங்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விவரங்களை கட்டுக்குள் வைப்பதற்கு எவ்வித பொறுப்பையும் ஏற்கவில்லை. என கூறப்பட்டுள்ளது.
"ஃபேஸ்புக் கையாளும் அதிகப்படியான பயனர் விவரங்களை பாதுகாப்பதில் அந்நிறுவனம் கவனம் செலுத்தாது தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக்கின் தனியுரிமை கட்டமைப்பு காலியாகவே இருக்கிறது. அதன் விதிகள் தனியுரிமை பாதுகாப்பிற்கு அர்த்தமற்றதாக மாற்றுகிறது." என கனடாவுக்கான தனியுரிமை ஆணையர் டேனியல் தெரியன் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது கண்டுபிடிப்புகளை நிராகரித்து விட்டதாகவும், கனடா நாட்டு விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க தனக்கு அதிகாரம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இதுபற்றி ஃபேஸ்புக் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. #AvengersEndgame
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியானது. உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கூகுளையும் விட்டுவைக்கவில்லை.
எண்ட்கேம் திரைப்படம் வெளியானதில் இருந்து இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான சினிமா டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது. இந்நிலையில் புதிய மார்வெல் திரைப்படம் பற்றிய தேடல்களில் அவெஞ்சர்ஸ் அபிமானிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
இவர்களை குஷிப்படுத்த கூகுள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வில்லன் கதாபாத்திரமான தானோஸ்-ஐ தேடுபவர்களுக்கு கூகுள் சுவாரஸ்யம் அளிக்கிறது. அந்த வகையில் கூகுளில் ‘Thanos’ என டைப் செய்து பின் திரையின் வலதுபுறம் இடதுபக்கத்தில் தோன்றும் நவரத்தின கற்களை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்ததும் தானோஸ் கையுறை தானாக விரல்களை மடித்துக் கொண்டு சொடக்கு போடும். பின் கூகுள் தேடல் பக்கத்தில் தோன்றிய பதில்கள் மேலும், கீழுமாக ஒவ்வொன்றாக காற்றில் மறைந்து போகிறது. மீண்டும் தானோஸ் கையில் இருக்கும் நட்சத்திர கற்களை க்ளிக் செய்ததும் மறைந்து போனவை திரையில் தோன்றுகிறது.
தானோஸ் கதாபாத்திரம் திரைப்படத்தில் செய்த நடவடிக்கைகள் கூகுள் தேடலில் அப்படியே பிரதிபலிப்பது அவெஞ்சர்ஸ் ப்ரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என தெரிகிறது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முந்தைய பாகத்தில் தானோஸ் கதாபாத்திரம் நவரத்தின கற்களை கொண்டு உலகின் பாதி மக்கள் தொகையை ஒரே சொடக்கில் அழித்து விடுவார்.
இந்நிலையில், எண்ட்கேம் திரைப்படம் வெளியானதையொட்டி கூகுளில் தானோஸ் சொடக்கு செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது கூகுள் செய்வோருக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதோடு மட்டுமின்றி, திரைப்படத்திற்கும் ஒருவித விளம்பரமாக மாறியிருக்கிறது.
இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை வழங்கும் பணிகளில் மும்முரம் காட்டுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #WhatsApp
ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை விரைவில் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். ஃபேஸ்புக் நிறுவன வருவாய் விளக்கக் கூட்டத்தில் பேசிய மார்க், சர்வதேச சந்தைக்கான பேமண்ட்ஸ் சேவையை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
வாட்ஸ்அப் பே சேவையை இயக்கும் போது தகவல்களை உள்நாட்டிலேயே சேமிக்க வேண்டும் என இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பீட்டா சோதனை சுமார் பத்து லட்சம் பயனர்களிடையே கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
"இந்திய வாட்ஸ்அப் செயலியில் சோதனை நடைபெறுகிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவையை துவங்குவோம் என நம்புகிறோம், எனினும் இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றி தற்போதைக்கு கூற முடியாது. ஆனால் சேவை தொடர்பான பணிகள் நடைபெறுகிறது" என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார்.
"இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஷாப்பிங் மற்றும் மார்கெட் பிளேஸ் அம்சங்கள் இருக்கின்றன. இவற்றை கொண்டு பல லட்சம் பேர் வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டுகின்றனர். இவ்வாறானவர்கள் புதிய வழிகளில் பணம் செலுத்த புதிய சேவை வழி வகுக்கும்.
குறுந்தகவல் சேவையை பயன்படுத்தும் போது அனைவருக்கும் தனியுரிமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அனைவரும் உரையாடல் மற்றும் பரிமாற்றங்களை மேற்கொள்ள தனிமையை விரும்புகின்றனர் என அவர் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் சேவையை தினமும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
இந்திய பொது தேர்தலையொட்டி ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Twitter
ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை கண்டறிந்து தெரிவிக்க மேலும் ஓர் புதிய வசதியை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த அம்சம் இந்தியா முழுக்க நடைபெறும் பொது தேர்தல் மற்றும் ஐரோப்பிய தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள் வாக்களிப்பது பற்றி தவறாக உள்ளது (It’s misleading about voting) என்றும் ரிபோர்ட் ட்விட் “Report Tweet” என அழைக்கப்படுகிறது.
ட்விட்டரில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், மற்றபடி விதிகளை மீறாமல் இருக்கும் நோக்கில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டரை பயனர்கள் உரையாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் கருதுகிறது.
இந்திய பொது தேர்தல் 2019 மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தல் காலத்தில் மக்களுக்கு இந்த அம்சங்கள் வழங்கப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு இதர நாடுகளிலும் இந்த அம்சம் தேர்தல் சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பது பற்றி தவறான விவரங்களை ட்விட்டர் பயனர்கள் பதிவிட முடியாது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. வாக்களிப்பது பற்றி எவ்வித தகவலையும் அவர்களால் பதிவிட முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரஙகளை தவறாக பதிவிடுவதும் ட்விட்டர் தகவல் விதிகளுக்கு எதிரானது ஆகும்.
புதிய அம்சங்கள் ட்விட்டர் டெஸ்க்டாப் பதிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது. புதிய அம்சங்கள் பற்றிய விவரம் ஏற்கனவே ட்விட்டர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுல்ளது என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் விரைவில் புதிய எமோஜி ஸ்டைல் வழங்கப்பட இருக்கிறது. #WhatsApp
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய எமோஜி ஸ்டைல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எமோஜிக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் சேர்க்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
எனினும், இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு தற்சமயம் வரை செயலிழக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் பற்றிய தகவல் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்சமயம் எமோஜி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்கிரீன்ஷாட்களை முடக்குவதற்கான வசதியை வழங்க இருப்பது பற்றிய விவரமும் வெளியானது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 வெர்ஷனில் பயனர்களுக்கு புதிய எமோஜி ஸ்டைல் டூடுள் பிக்கர் மூலம் கிடைக்கும். புதிய எமோஜி ஏற்கனவே செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் எமோஜிக்களுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எமோஜி ஸ்டைல் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின வழக்கமான சாட்களில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது.
புதிய எமோஜி ஸ்டைல் பற்றிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எமோஜி ஸ்டைல் வழக்கமாக வாட்ஸ்அப் சாட்களில் காணப்படும் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது. ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் வழங்கப்பட்டிருப்பதால் இது வழக்கமான சாட்களில் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
புகைப்படம் நன்றி: WABetaInfo
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது தற்காலிக நடவடிக்கை என நம்புவதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார். #TikTok
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. டிக்டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உலகம் முழுக்க சுமார் 150 சந்தைகளில் சுமார் 75 மொழிகளில் டிக்டாக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கான தடை எந்த வகையிலும் பலன் தராது என்ற வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
டிக்டாக் மீதான தடை இடைக்கால நடவடிக்கை என நினைக்கிறேன். அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என டிக்டாக் இந்தியாவின் மூத்த அதிகாரி சுமேதாஸ் ராஜ்கோபால் தெரிவித்தார். இத்துடன் செயலி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. டிக்டாக் சமூகம் தொடர்ந்து இயங்கி வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை டிக்டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது குறி்ப்பிடத்தக்கது.
செயலியில் பரவும் தரவுகளை ஆய்வு செய்யும் குழுவினரின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ராஜ்கோபால் தெரிவித்தார். தங்களது குழுவினர் தரவுகளை நீ்க்கி வருவதாகவும், கடந்த வாரம் மட்டும் விதிகளை மீறியதாக சுமார் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
டிக்டாக் செயலி குழந்தைகளிடம் ஆபாசத்தை கொண்டு சேர்க்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், செயலியை பல்வேறு கலைஞர்கள் பயன்படுத்த துவங்கியிருப்பதாக ராஜ்கோபால் தெரிவித்தார்.
பல்வேறு பிரபலங்கள் டிக்டாக் பயன்படுத்துவோரின் திறமையை பார்த்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக அவர் தெரிவித்தார். டிக்டாக் செயலி அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X