search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Instagram



    இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பயனர்களின் கடவுச்சொற்கள் வெளியானதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கடவுச்சொற்களை அனைவராலும் இயக்கக்கூடிய வகையில் பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிவித்தது.

    இவற்றை அந்நிறுவன ஊழியர்கள் மிக எளிமையாக இயக்கும் வகையில் இருந்தது இன்ஸ்டா வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து கூறும் போது, கடவுச்சொற்கள் நிறுவனத்தின் உள்புற சர்வெர்களில் சேமிக்கப்பட்டிருந்தது, அவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாது என தெரிவித்திருந்தது.



    தற்சமயம் ஃபேஸ்புக் வலைதளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் விவரங்கள் வெளியானது உறுதி செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இந்த சம்பவத்தில் சில ஆயிரம் பயனர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.

    மார்ச் மாதத்தில் இந்த பிழை காரணமாக பல லட்சம் ஃபேஸ்புக் லைட் பயனர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஃபேஸ்புக் லைட் செயலி குறைந்த மெமரியில் பழைய மொபைல் போன்கள் அல்லது இணைய வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
    இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். #TikTok



    இந்தியாவில் டிக்டாக் செயலியை ஏற்கனவே பல கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.

    எனினும், செயலி நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பிரபல வீடியோ தளமாக அறியப்படும் டிக்டாக் செயலியில் ஆபாசம் பரவுவதாக பலதரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.

    இதன் காரணமாகவே அரசு கோரிக்கையை ஏற்று செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. செயலி தடை செய்யப்பட்டு விட்டதால் அது பலனளிக்கும் என கூறிவிட முடியாது. 



    ஏற்கனவே டிக்டாக் செயலியை பயன்படுத்துவோர் அதனை ஷேர் இட் போன்ற செயலியை கொண்டு மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனை தரவிறக்கம் செய்து மற்றவரும் புதிய பயனராக பயன்படுத்தலாம்.

    டிஜிட்டல் பிரச்சனையை எதிர்கொள்ள தெளிவான அணுகுமுறை அவசியமாகும், இதனை தொழில்நுட்பத்தாலோ அல்லது மற்ற சட்டங்களை கொண்டு சரி செய்து விட முடியாது என டெக் ஆர்க் எனும் சைபர் நிறுவன நிறுவனர் ஃபைசல் கவூசா தெரிவித்தார். 

    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் டிக்டாக் செயலியை நீக்க உத்தரவிட்டது. டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 3 ஆம் தேதி பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆபாச தகவல்களை தடுக்கும் நோக்கில் புதிய வசதி சேர்க்கப்படுகிறது. #Twitter



    ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவோருக்கு தீங்கு, ஆபாசம் மற்றும் போலி தகவல்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் அந்நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வரும் மாதங்களில் ட்விட்டர் மேற்கொள்ள இருக்கும் புதிய மாற்றங்களை அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

    ட்விட்டரில் தீங்கு விளைவிக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள ட்விட்டர் பயனர்களிடம் கருத்து கேட்காமல், இவற்றை கண்காணிக்க பிரத்யேக குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தகவல்களை ஆய்வு செய்யும். அதன்படி ட்விட்டரில் தீங்கு விளைவிப்பதாக குறிப்பிடப்படும் 38 சதவிகித தகவல்கள் ட்விட்டர் குழுக்களுக்கு அனுப்பப்படுகிறது.

    ஜனவரி - மார்ச் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டும், புதிய கணக்குகளை துவங்க முயன்ற சுமார் ஒரு லட்சம் அக்கவுண்ட்களும் நீக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 45 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டரில் எழுப்பப்படும் புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 60 சதவிகிதம் வரை வேகமாக பதில் அளிக்கப்படுகிறது.



    ஆபாச தரவுகள் அடங்கிய அக்கவுண்ட்கள் மும்மடங்கு அதிகமாக நீக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். புதிய வழிமுறைகளை பின்பற்றுவதால், 2.5 மடங்கு தனிப்பட்ட விவரங்கள் நீக்கப்படுகின்றன.

    தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்று 38 சதவிகித அச்சுறுத்தல் நிறைந்த தரவுகளை மனித குழுவின் ஆய்வுக்கு பின் நீக்க முடிகிறது. இதனால் ட்விட்டர் பயன்படுத்துவோரிடம் கருத்து கேட்க வேண்டிய நிலை மாறியிருக்கிறது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

    தீங்கு விளைவிக்கும் தகவல், மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற பல்வேறு வகையான தகவல்களை ஆய்வு செய்ய பயன்படுத்தும் அதே விதிமுறைகளை பயன்படுத்தி எங்களது குழுவினர் ஆபத்து நிறைந்த தகவல்களை நீக்கி வருகின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    எங்களது தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி ஆபத்து நிறைந்த, விதிகளை மீறும் தரவுகளை மற்றவர் குறிப்பிடும் முன் அவற்றை வேகமாக நீக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். 

    இத்துடன் தீங்கான தகவல்களை குறிப்பிடும் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கி அவற்றின் மீது வேகமாக நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அடுத்த சில வாரங்களில் எங்களது விதிமுறைகளை மாற்ற திட்டமிட்டு இருக்கிறோம். குறுகிய காலக்கட்டம் என்ற போதும், இவை மிக எளிமையானதாகவும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
    ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Messenger



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்தது.

    முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியானது. பின் நான்கு மாதங்கள் கழித்து இந்த அம்சம் இந்தியா உள்பட சில நாடுகளில் வழங்கப்பட்டது. எனினும், இதனை ஆக்டிவேட் செய்ய எமோஜியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.



    இந்த அம்சத்தை இயக்க மெசஞ்சரில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் தெரியும் டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் திரை முழுக்க இருளாகி இருப்பதை பார்க்க முடியும். டார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருக்கும் நிலையில், திரையின் பிரகாசம் குறைக்கப்பட்டிருக்கும். இதனால் குறைந்த வெளிச்சமுள்ள சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

    முன்னதாக டார்க் மோட் வசதி நிலா எமோஜியை அனுப்பினால் செயல்படும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டது. ஜனவரி மாத வாக்கில் இந்த அம்சம் சில நாடுகளில் வழங்கப்பட்டிருந்தது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்படுகிறது. #JioTV



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டி.வி. ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீடியா செயலிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக பி.ஐ.பி. மோட் இருக்கிறது. இந்த ஆப்ஷன் கொண்டு வீடியோ பார்த்து கொண்டே மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.

    ஜியோ டி.வி. செயலி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும். மேம்படுத்தப்பட்ட ஜியோ டி.வி. ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. பிக்சர் இன் பிக்சர் மோட் கொண்டு வீடியோக்களை சிறிய திரையில் பார்த்து கொண்டே ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை இயக்கலாம்.



    ஜியோ டி.வி. ஆண்ட்ராய்டு வெர்ஷனின் சேஞ்ச்லாகில் புதிய அம்சம் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. ஜியோ டி.வி. செயலியில் நேரலை தொலைகாட்சி நிகழ்சிகளை பார்த்து ரசிக்கலாம். இந்த செயலியில் சுமார் 600-க்கும் அதிக தொலைகாட்சி சேனல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    இத்துடன் நிகழ்சிகளை பதிவு செய்யும் வசதி, வீடியோக்களை பாஸ் (pause) செய்து பார்க்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயனர்கள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, மலையாளம், அசாமீஸ், ஒடியா, உருது உள்ளிட்ட மொழிகளில் நிகழ்சிகளை கொண்டிருக்கிறது.

    தற்சமயம் ஜியோ டி.வி. ஆப் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. விரைவில் இந்த செயலி கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வடிவில் வெளியாகும் என ஜியோ தெரிவித்துள்ளது.
    சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்திருக்கும் நிலையில் இதனை நான்கு மாதங்களில் ஒன்பது கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok



    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில், இதனை டவுன்லோடு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது.

    சீனாவை சேர்ந்த வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 8.86 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். மொபைல் ஆப் சார்ந்த ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட்-டேன்ஸ் டிக்டாக் செயலியை நிர்வகிக்கிறது. முன்னதாக அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்ததாக டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 



    இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் டிக்டாக் செயலியில் ஆபாச காட்சிகள் ஊக்குவிக்கப்படுவதால், குழந்தைகளை மனதளவில் பாதித்து அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதால் செயலியை தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    டிக்டாக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 188 கோடியாக இருக்கிறது என சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    டிக்டாக் செயலியின் மொத்த டவுன்லோடுகளில் சுமார் 99 சதவிகிதம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகள் இருக்கின்றன.
    ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அந்நிறுவன செயலிகளுக்கு மட்டும் விசேஷ சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் டச்சு அரசாங்கம் விசாரணையை துவங்கியுள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், டச்சு அரசாங்கம் ஆப்பிள் மீது விசாரணையை துவங்கியுள்ளது.

    ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் ஆப்பிள் செயலிகளுக்கு மட்டும் விசேஷ சலுகைகளை வழங்கியதை தொடர்ந்து டச்சு அரசு ஆப்பிள் நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. டச்சு அரசாங்கத்தின் ஏ.சி.எம். நிறுவனம் விசாரணையை நடத்துகிறது. 

    இந்த விவகாரத்தில் ஆப்பிள் மட்டுமின்றி கூகுள் நிறுவனம் மீதும் எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை பரிந்துரை செய்வதில் கூகுள் நிறுவனமும் பாரப்பட்சம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆப் ஸ்டோர்கள் இருநிறுவனங்களுக்கும் அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் தளங்களாக இருக்கின்றன. ஆப் ஸ்டோர்களில் டச்சு செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.



    ஆப் டெவலப்பர்கள் செயலியினுள் வாங்கும் சேவைகளுக்கென செலுத்தும் கட்டணம், ஐபோனின் அனைத்து அம்சங்களை பயன்படுத்துவதில் ஆப் டெவலப்பர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் ஆப் ஸ்டோர் மட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரிலும் இதுபோன்ற பிரச்சனைகளை டெவலப்பர்கள் எதிர்கொள்ளும் பட்சத்தில் செயலிகளை உருவாக்குவோர் வெளிப்படையாக தகவல் தெரிவிக்கலாம் என ஏ.சி.எம். தெரிவித்துள்ளது. செயலிகளை உருவாக்குவோர் வழங்கும் விவரங்களை விசாரணையில் பயன்படுத்துவதாக ஏ.சி.எம். தெரிவித்துள்ளது.

    ஆப்பிள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஆப்பிள் முழுமையாக மறுத்திருக்கிறது. மேலும் ஆப் ஸ்டோரில் அனைத்து செயலிகளுக்கும் சம அளவு வாய்ப்புகள் வழங்கப்படுவதை ஏ.சி.எம். உறுதிப்படுத்தும் என நம்புவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெகேஷன் மோட் அம்சம் சோதனை செய்யப்படுவது பற்றிய விவரங்கள் வெளியானது. இதில் உரையாடல்களை ஆர்ச்சிவ் செய்யும் வழிமுறைகள் இடம்பெற்றிருந்தன. 

    வாட்ஸ்அப் செயலியில் வெகேஷன் மோட் இதுவரை வழங்கப்படாத நிலையில், இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் (Ignore archived chats) எனும் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இத்துடன் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.101 பதிப்பில் பிரத்யேக ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்அப் பீட்டா ஆப் டவுன்லோடு செய்யும் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. புதிய பீட்டா செயலியில் மற்றபடி பெரிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 



    இனி பயனர்கள் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சத்தை ஹோம் பேஜில் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தே இயக்க முடியும். இதனால் பயனர்கள் சாட் ஃபீட்களில் ஸ்கிரால் செய்ய வேண்டிய அவசியமின்றி ஆர்ச்சிவ்டு சாட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்திடலாம். 

    முன்னதாக பார்க்கப்பட்ட வெகேஷன் மோடிற்கு மாற்றாகவே புதிய இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் (Ignore archived chats) அம்சம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் புதிய மெசேஞ்கள் வரும்போது குறுந்தகவல்கள் தானாக அன்-ஆர்ச்சிவ் ஆவதை தடுக்கும்.

    புதிய இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் -- நோட்டிஃபிகேஷன்ஸ் -- இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். எனினும், இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்படுகிறது. இந்த அம்சத்தை உடனடியாக பயன்படுத்த புதிய பீட்டா செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோ நியூஸ் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செயலியை 12-க்கும் அதிக மொழிகளில் பயன்படுத்தலாம். #JioNews



    இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நேரலை டி.வி., வீடியோக்கள், செய்திகளை பார்ப்போர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

    செய்தி சேவையின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ நியூஸ் செயலியை துவங்கியிருக்கிறது. இது செயலி மற்றும் இணையம் என இருவிதங்களில் கிடைக்கிறது. 

    ஜியோ நியூஸ் சேவையில் உடனடி செய்திகள், நேரலை டி.வி., வீடியோக்கள், நாளேடு, பத்திரிகை உள்ளிட்டவற்றை ஒரே தளத்தில் இயக்க முடியும். இந்தியாவில் பொது தேர்தல், ஐ.பி.எல். 2019 கிரிகெட் தொடர், உலக கோப்பை 2019 மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க நடைபெற இருக்கும் நிலையில், ஜியோ தனது நியூஸ் சேவையை துவங்கியிருக்கிறது.



    ஜியோ நியூஸ் சேவையில் பயனர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுக்க கிடைக்கும் சுமார் 150-க்கும் அதிக நேரலை செய்தி சேனல்கள், 800-க்கும் அதிக பத்திரிகைகள், 250-க்கும் அதிக நாளேடுகள், பிரபல வலைபக்கங்கள் மற்றும் செய்தி வலைதளங்களை 12-க்கும் அதிக இந்திய மொழிகளில் இருந்து தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.

    மேலும் பயனர் விருப்பம்படி ஹோம்பேஜில் தோன்றும் தரவுகளில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வியாபாரம், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, அழகியல், வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், ஜோதிடம், வணிகம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் அவரவர் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளலாம்.

    கூடுதலாக இந்த சேவையில் டிரெண்டிங் வீடியோக்களையும் பார்க்கலாம். இத்துடன் வெவ்வேறு தலைப்புகளில் இருந்து சுமார் 800-க்கும் அதிக பத்திரிகைகளை வாசிக்க முடியும்.
    ஆண்ட்ராய்டு தளத்தின் கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்படுகிறது. இது பயனர் இருக்குமிடத்தை சுற்றி போக்குவரத்து நிலவரங்களை பார்க்க வழி செய்கிறது. #GoogleMaps



    கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள புதிய வசதி சேர்க்கப்படுகிறது. முன்னதாக கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தெரிவிக்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் இந்த அம்சத்தை தொடர்ந்து புதிய வசதி சேர்க்கப்படுகிறது.

    பயனர்கள் இனி கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பதிப்பின் விபத்து தெரிவிக்கும் ஆப்ஷனில் ஸ்லோடவுன் (Slowdown) வசதி மூலம் நெரிசல் இருக்கும் பகுதிகளை தெரிவிக்கலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் இந்த வசதி சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கடந்த மாதம் கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்கள் விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்கும் வசதி சேர்க்கப்பட்டது. இதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிபோர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டது. இதனை க்ளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்கலாம். 



    இதேபோன்று மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துக்களையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கிறது. இதனால் அதே வழியில் வருவோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் போது பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் ஸ்லோடவுன் ஆப்ஷன்களின் மூலம் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் குறைவான போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா அல்லது கூட்ட நெரிசல் மட்டும் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு (வெர்ஷன் 10.12.1) பதிப்பில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சத்தை பயன்படுத்த ஒருவர் நேவிகேஷன் மோட் சென்று ஏரோ அப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி திரையில் திறக்கும் மெனுவில் ஆட் எ ரிப்போர்ட் ஆப்ஷனிலேயே ஸ்லோடவுன் பட்டன் இடம்பெற்றிருக்கும். எனினும், இந்த வசதி சாதனத்தின் செட்டிங்கிற்கு ஏற்ப மொழி அடிப்படையில் வித்தியாசமாக தோன்றலாம்.

    புகைப்படம் நன்றி: xda-developers
    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆப்பிள் மியூசிக் சேவையின இந்திய கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. #AppleMusic



    ஆப்பிள் மியூசிக் ஸ்டிரீமிங் சேவை அமெரிக்காவில் ஸ்பாடிஃபையை முந்தியிருக்கும் நிலையில், ஆப்பிள் மியூசிக் சேவையின் இந்திய கட்டணத்தை குறைக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. 

    அந்த வகையில் ஆப்பிள் மியூசிக் சேவைக்கான மாத கட்டணம் தற்சமயம் ரூ.99 ஆகும். முன்னதாக இந்த விலை ரூ.120 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஆப்பிள் மியூசிக் மாணவர்களுக்கான சந்தா மாதம் ரூ.49 ஆக மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக மாணர்களுக்கு மட்டும் ஆப்பிள் மியூசிக் சேவை மாதம் ரூ.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    ஆப்பிள் மியூசிக் குடும்ப சந்தா மாதம் ரூ.149 ஆகும். முன்னதாக இந்த கட்டணம் ரூ.190 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    புதிய கட்டணம் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் மற்றும் புதிய சந்தாதாரர்களுக்கும் பொருந்தும் என்றே தெரிகிறது. ஸ்டிரீமிங் சேவைகளுக்கு இந்தியா மிகப்பெரும் சந்தையாக பார்க்கப்படுகிறது. 



    மார்ச் மாதத்தில் யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் பிரீமியம் சேவைகள் இந்தியாவில் துவங்கப்பட்டது. ஏற்கனவே அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்களது மியூசிக் சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகின்றன. இவற்றுடன் ஸ்பாடிஃபை சேவையும் இந்த ஆண்டு இந்தியாவில் களமிறங்கியிருக்கிறது.

    சமீபத்தில் ஜியோசாவன் மற்றும் கானா போன்ற சேவைகளின் கட்டணத்தில் சுமார் 70 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது. யூடியூப், ஸ்பாடிஃபை மற்றும் ஆப்பிள் நிறுவன சேவைகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    சியோமி ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு செயலியில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு செயலியில் பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிழை பாதுகாப்பு செயலியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் மால்வேர் நிறுவுதல் மற்றும் பயனர் விவரங்களை சேகரிக்க வழி செய்ததாக கூறப்படுகிறது.

    பிழைக்கான காரணம் `கார்டு' செயலியின் அடிப்படை வடிவமைப்பு தான் என தெரிகிறது. இந்த செயலியின் பாதுகாப்பு பிழையை செக்பாயின்ட் எனும் பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்த தெரிவித்துள்ளது. பிழை மட்டுமின்றி இதன் மூலம் ஏற்படும் பாதிப்பையும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    அவாஸ்ட், ஏ.வி.எல். மற்றும் டென்சென்ட் உள்ளிட்ட ஆண்டிவைரஸ் பிராண்டுகள் ஒற்றை செயலியில் இடம்பெற்றிருந்தது தான் பிழைக்கான காரணம் என கூறப்படுகிறது. பல்வேறு ஆண்டிவைரஸ் செயலிகள் இருப்பது மட்டும் இந்த பிரச்சனைக்கு காரணமாக கருத முடியாது. 



    இரண்டு ஆண்டிவைரஸ் செயலிகளின் மென்பொருள் வளர்ச்சி அமைப்பு (SDK) ஒன்றுடன் தகவல் பரிமாற்றம் செய்ததால் சியோமி சாதனங்களில் குறியீடை செயல்படுத்த வழி செய்துள்ளன. சியோமி பாதுகாப்பு செயலியில் வழங்கப்படும் இண்டர்நெட் என்க்ரிப்ட் செய்யப்படாததால் ஹேக்கர்கள் இரண்டடுக்கு தாக்குதல்களின் மூலம் தீங்கிழைக்கும் தகவல்களை சாதனத்தில் புகுத்த முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற தாக்குதல்களில் ஹேக்கர் பயனரின் ரவுட்டர் அல்லது இணைய மேடெம்களை வைரஸ் மூலம் பாதிப்பில் ஆழ்த்துவர் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் செயலியின் இறுதி வடிவத்தை எட்ட பல்வேறு எஸ்.டி.கே. பயன்படுத்துவதால் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட காரணமாக அமைகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் எஸ்.டி.கே.களில் பாதுகாப்பு பிழை இருக்கிறது என கருதமுடியாது. இதுபற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    ×