என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96694
நீங்கள் தேடியது "slug 96694"
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பரீட்டா செயலியில் பல்வேறு புதிய அம்சங்Kள் சோதனை செய்யப்படுகின்றன. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட், மேம்பட்ட சர்ச் மற்றும் கைரேகை வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட இருக்கின்றன. சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ மற்றும் ஃபிரீக்வென்ட் ஃபார்வேர்டிங் என இரு அம்சங்களை சோதனை செய்வதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய வாய்ஸ் மெசேஜ் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.86 பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்ய முடியும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உருவாக்கப்படும் இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.100 பதிப்பில் காணப்பட்டது. கூடுதலாக புதிய பீட்டா அப்டேட்டில் பிக்சர் இன் பிக்சர் மோட் (பி.ஐ.பி. மோட்) மேம்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பி.ஐ.பி. மோட் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டு பின் டிசம்பர் மாதம் ஆண்ட்ராய்டில் வழங்கப்பட்டது.
இதுவரை ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பி.ஐ.பி. மோட் சாட்களிடையே நேவிகேட் செய்து கொண்டே வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கிய நிலையில், ஆண்ட்ராய்டு தளத்தில் ஒரு சாட் ஸ்கிரீனில் இருந்தபடி வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஐ.ஓ.எஸ். தளத்தில் இருப்பது போன்று ஆண்ட்ராய்டிலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
மேம்பட்ட பி.ஐ.பி. மோட் கொண்டு வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் சிறிய வீடியோவினை சாட் ஸ்கிரீனை விட்டு வெளியேறினாலும் தொடர்ந்து பார்க்க முடியும். எனினும் சமீபத்திய பீட்டா பதிப்பில் இந்த வசதி செயலிழக்க செய்யப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
கூகுளின் ஜிமெயில் ஐ.ஓ.எஸ். தளங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. #Gmail
கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையின் மொபைல் தளங்களில் சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். தளத்துக்கான ஜிமெயில் சேவையில் புதிய ஸ்வைப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
அதன் படி ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியில் ஆர்சிவ் (Archive), டிராஷ் (Trash), மார்க் ஆஸ் ரீட்/அன்ரீட் (Mark as read/unread), ஸ்னூஸ் (Snooze) மற்றும் மூவ் டு (Move to) என பல்வேறு அம்சங்களை ஸ்வைப் மூலம் இயக்கலாம். இந்த அம்சம் கொண்டு பல்வேறு அம்சங்களை மிக எளிமையாக ஸ்வைப் செய்தே இயக்க முடியும்.
பயனர்கள் ஸ்வைப் அம்சத்தை இயக்க ஐ.ஓ.எஸ். ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். மேலும் இதே அம்சங்களை கொண்டு நோட்டிஃபிகேஷன்களையும் இயக்கலாம். உதாரணத்திற்கு மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய ஜிமெயில் ஐ.ஓ.எஸ். நோட்டிஃபிகேஷனை அழுத்திப் பிடித்து ஸ்னூஸ் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது எதுவரை மின்னஞ்சல்களை ஸ்னூஸ் செய்ய வேண்டும் என்பதை தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் புதிய அம்சங்களுடன் அட்டாச்மென்ட் க்விக் வியூ, அக்கவுண்ட்களிடையே ஸ்விட்ச் செய்தல் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படலாம். #WhatsApp
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் 2.19.82 வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கிறது. செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் அம்சம் ஒருவழியாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய பீட்டா பதிப்புகளில் வெளியான விவரங்களில் மேலும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியில் சேர்க்கப்பட இருப்பதை வெளிப்படுத்தின.
வாட்ஸ்அப் செயலியில் அனைவருக்கும் டார்க் மோட் வசதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.82 பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதியின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய மோட் நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ், டேட்டா, ஸ்டோரேஜ் செட்டிங்ஸ், சாட் செட்டிங்ஸ் மற்றும் அக்கவுண்ட் செட்டிங் உள்ளிட்டவற்றில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டார்க் மோட் வசதி OLED பேனல்களுக்கு ஏற்றதாக இருக்காது என்றும் இது டார்க் கிரே நிறம் சார்ந்து உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் தற்சமயம் தானாக எனேபிள் செய்யப்படவில்லை. இதனால் செயலியை புதிய 2.19.82 வெர்ஷனுக்கு அப்டேட் செய்திருந்தாலும் இந்த அம்சத்தினை பார்க்க முடியாது. வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.80 பதிப்பில் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என இரு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புகைப்படம் நன்றி: WABetaInfo
ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் இந்த புதிய வழிமுறை பயனர்களை அவர்களது அக்கவுண்ட்களில் இருந்து லாக் அவுட் செய்கிறது. #Twitter
ட்விட்டரில் வைரலாகி வரும் புதிய பிழை பயனர்களை அவர்களது அக்கவுண்ட்களில் இருந்து லாக்-அவுட் செய்கிறது. இந்த பிழை பயனர்களிடம் அவர்களது பிறந்த தேதியை 2007 ஆம் ஆண்டு மாற்றக் கோருகிறது. இவ்வாறு செய்யும் போது அவர்களின் ஃபீட் புதிய நிறங்களில் வித்தியசமாக மாறும் என தகவல் பரவி வருகிறது.
இதை நம்பி பிறந்த தேதியை மாற்றுவோர் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்தே லாக்-அவுட் செய்யப்படுகின்றனர். ட்விட்டர் பயன்படுத்துவோர் நிச்சயம் 13 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் 2019 ஆம் ஆண்டில் இருக்கிறோம். இதனால் பிறந்த வருடத்தை 2007 என மாற்றும் போது பயனர் வயது 12 ஆகவே இருக்கும்.
ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டாம் என பயனர்களுக்கு ட்விட்டர் வலியுறுத்தி வருகிறது. இதனை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. ஒருவேளை ஏற்கனவே இந்த வழிமுறையை பின்பற்றியவர்களுக்கு ட்விட்டர் சார்பில் அனுப்பப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற ட்விட்டர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
We’ve noticed a prank trying to get people to change their Twitter birthday in their profile to unlock new color schemes. Please don’t try this. We don't have different color schemes based on your birthday.
— Twitter Support (@TwitterSupport) March 27, 2019
ட்விட்டர் கூறியபடி வழிமுறைகளை பின்பற்றினால் மீண்டும் ட்விட்டர் பயன்படுத்த முடியும். எனினும், இந்த வழிமுறையின் போது பயனர் தங்களின் வயதை நிரூபிக்க வேண்டும். பயனர்கள் ட்விட்டர் சப்போர்ட்டை தொடர்பு கொண்டு அவர்களது வயதை நிரூபிக்கும் அடையாள சான்றின் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது. #WhatsApp
வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது.
முன்னதாக தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொது தேர்தல் விரைவில் துவங்க இருப்பதையொட்டி, வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வழிமுறைகள் எவ்வித சிரமமும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதே எங்களின் முக்கிய குறிக்கோள். பயனர்கள் போலி தகவல்களை எதிர்கொள்ளும் போது அவற்றை எவ்வாறு கண்டறிவது பற்றிய விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது பாதுகாப்பை அதிகப்படுத்த முடியும் என வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோக்களை வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும் நாஸ்காம் மற்றும் டி.இ.எஃப். மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றன. இந்த வீடியோக்களில் போலி விவரங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பும் போது ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த சில மாதங்களில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அடையாளப்படுத்தும் தகவல் இடம்பெறுகிறது. இத்துடன் ஒருவர் அதிகபட்சம் ஃபார்வேர்டு செய்யும் குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு பிரபல பத்திரிகைகளை வாசிக்கும் வசதியுடன் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. #AppleEvent #AppleSpecialEvent
ஆப்பிள் நிறுவனம் புதிய செய்தி சேவையை துவங்கியிருக்கிறது. ஆப்பிள் நியூஸ் பிளஸ் என அழைக்கப்படும் புதிய சேவையில் 300க்கும் அதிகமான பத்திரிகைகளை வாசிக்க முடியும்.
ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் 9.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் உலகின் பிரபல பத்திரிகைகளை டிஜிட்டல் முறையில் வாசிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
நம் வாழ்க்கையில் ஊடகத்தின் சக்தி மற்றும் இது மேற்கொள்ளும் மாற்றத்தின் மீது எங்களுக்கு அதிகளவு நம்பிக்கை இருக்கிறது என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். அந்த வகையில் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை வாடிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்கனவே கிடைக்கிறது. இரு நாடுகளை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் விளம்பரதாரர்களால் பயனர் நடவடிக்கைகளை டிராக் செய்ய முடியாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்திற்கு இரண்டு பெரிய அப்டேட்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் இன்-ஆப் பிரவுசிங் மற்றும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உள்ளிட்ட அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இரு அம்சங்களும் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிய பயனர்களுக்கு வழி செய்யும்.
இந்நிலையில், ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியில் ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சம் கொண்டு போலி தகவல்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட இருப்பதாக தெரிகிறது. இதற்கென வாட்ஸ்அப் இரண்டு பெரிய அம்சங்களை செயலியில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.
இரு அம்சங்களும் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இருஅம்சங்களும் எவ்வாறு வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ளலாம். பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புகைப்படம் நன்றி: wabetainfo
இந்த பகுதியை இயக்க பயனர் அனுப்பிய குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பின் இன்ஃபோ ஆப்ஷனை குறிக்கும் (i) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இது சாட் விண்டோவின் மேல் காணப்படும். இந்த அம்சம் கொண்டு நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய ஃபார்வேர்டெட் மெசேஞ்களில் மட்டுமே வேலைசெய்யும்.
உங்களுக்கு வரும் ஃபார்வேர்டெட் மெசேஞ்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அதே குறுந்தகவலை நீங்கள் உங்களது காண்டாக்ட்களுக்கு ஃபார்வேர்டு செய்து மெசேஞ் இன்ஃபோ பகுதியில் அது எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஃபிரீக்வென்ட்லி ஃபார்வேர்டெட் அம்சத்தில், ஒருவர் குறுந்தகவலை நான்கு அல்லது அதற்கும் அதிகமானோருக்கு ஃபார்வேர்டு செய்திருந்தால் பயனர் அனுப்பிய குறுந்தகவலில் பார்க்க முடியும்.
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்களும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் அடுத்த பீட்டா அப்டேட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா 2.19.80 ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஓ.எஸ். தளங்களில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் லைவ் போட்டோஸ் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. #Twitter
ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு லைவ் போட்டோஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. ஐபோன் 6எஸ் மாடலுடன் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 1.5 நொடிகள் கொண்ட அனிமேட்டெட் புகைப்படங்கள் ஆகும். புகைப்படம் க்ளிக் செய்யும் முன் மற்றும் க்ளிக் செய்த பின் காட்சிகளை பதிவு செய்வதே லைவ் போட்டோ என அழைக்கப்படுகிறது.
ஃபேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ட்விட்டரிலும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியின் கோட்களில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்குவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
இதனை சமூக வலைதள ஆய்வாளர் மேட் நவாரா தனது ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட்களுடன் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிஃப்களாக மாற்றுவதற்கான அம்சம் சோதனை செய்யப்படுவதாக நவாரா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ட்விட்டரில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.
😮 Twitter testing a Live Photo to GIF feature for iOS ?
— Matt Navarra (@MattNavarra) March 21, 2019
I assume meaning you can attach Live Photo’s on your iPhone to a tweet and it gets auto-converted to a GIF. pic.twitter.com/GcpfvJfZjO
எனினும், ட்விட்டர் லைவ் போட்டோக்களை சாதாரண ஜிஃப்களாக கருதுமா அல்லது லைவ் போட்டோக்களாக கருதுமா இல்லை ஃபேஸ்புக் போன்று லைவ் போட்டோக்களாகவே குறிப்பிடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஐ.ஓ.எஸ். ட்விட்டர் செயலியில் ஏற்கனவே லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது, எனினும் இது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது.
இதை செய்ய தற்சமயம் போட்டோஸ் செயலியை திறந்து, லைவ் போட்டோவினை தேர்வு செய்து அதனை லூப் அல்லது பவுன்ஸ் ஆக மாற்றி, பின் அந்த போட்டோவினை ட்விட்டர் ஐ.ஓ.எஸ். செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது போட்டோ ஜிஃப் ஆக மாறியிருக்கும்.
லைவ் போட்டோக்களுக்கான வசதியின் மூலம் பயனர்கள் எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக லைவ் போட்டோவினை தேர்வு செய்து செயலியில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால் இது எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் எமோஜி சேர்க்கப்படுகிறது. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் போட்டோக்களை டூடுள் செய்யும் போது எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களை தேட வழி செய்யும் அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.
இதுதவிர வாட்ஸ்அப் பீட்டா செயலியில் திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற பாலினத்தவரை குறிக்கும் எமோஜிகளும் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் திருநங்கைகளை குறிக்கும் எமோஜி வழங்கப்பட இருப்பது பற்றி ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும் இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இத்துடன் எமோஜிபீடியா வலைதளத்தின் உதவியுடன் திருநங்கை எமோஜியை சாட்களில் மறைக்கும் வசதியை சேர்த்திருக்கிறது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருநங்கை எமோஜி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.73 வெர்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை கொண்டு தேட வழி செய்யும் சர்ச் பை இமேஜ் (Search by Image) அம்சமும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச் பை இமேஜ் அம்சம் கொண்டு பயனர்கள் அனுப்பிய அல்லது அவர்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானது தானா என கண்டறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இவைதவிர, வாட்ஸ்அப் செயலியில் ஆடியோக்களை அனுப்பும் முன் அவற்றை கேட்கச் செய்யும் வசதியும் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. இத்துடன் ஒரேசமயத்தில் அதிகபட்சம் 30 ஆடியோ ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது.
2019 பொது தேர்தலையொட்டி வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்களை கண்டறிவது பற்றி அதன் பயயனர்களுக்கு பாடம் எடுக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. #WhatsApp
இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாட்ஸ்அப் மற்றும் நாஸ்காம் பவுன்டேஷன் இணைந்து போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்க டிஜிட்டல் கல்வியறிவு வகுப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
இருநிறுவனங்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் போலி தகவல்களை கண்டறிவது மற்றும் வாட்ஸ்அப் செயலியில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.
பயிற்சியின் அங்கமாக மக்களுக்கு குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கவனமாக செயல்படுவது பற்றியும் கற்பிக்கப்பட இருக்கிறது. பயிற்சியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் உண்மையில் நடந்த சிறு கதைகள், ஃபார்வேர்டு ஆகும் தவறான குறுந்தகவல்களை எப்படி சட்ட வல்லுநர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் பன்மொழி பயன்பாடு பின்பற்றப்படுவதால், பயிற்சியை பல்வேறு மொழிகளில் நடத்த வாட்ஸ்அப் மற்றும் நாஸ்காம் திட்டமிட்டுள்ளன. இருநிறுவனங்கள் இணைந்து நடத்தும் முதல் பயிற்சி மார்ச் 27 ஆம் தேதி டெல்லியில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு பயிற்சி வகுப்புக்கள் இந்தியா முழுக்க நகர்ப்புறம், ஊரக பகுதிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட இருக்கிறது.
நாஸ்காம் பவுன்டேஷனை சேர்ந்த தன்னார்வ தொண்டு செய்யும் குழுவினரிடையே ‘Each One Teach Three’ (ஒருவர் மூவருக்கு பயிற்சியளிப்பது) எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம் ஒவ்வொருத்தரும் மூன்று பேருக்கு பயிற்சி அளிக்க உறுதியளிக்க வேண்டும்.
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் ஜிபோர்டு செயலியில் உடனடி மொழி மாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. #Gboard
கூகுள் நிறுவனம் தனது ஜிபோர்டு செயலியில் புதிய அப்டேட் வழங்கியிருக்கிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் உடனடியாக மொழிமாற்றம் செய்யும் வசதியை கீபோர்டு செயலியில் வழங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே அம்சம் ஜிபோர்டின் ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோர் கிட்டத்தட்ட 100 மொழிகளில் உடனடியாக மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். மேம்படுத்தப்பட்ட ஜிபோர்டு செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
புதிய அப்டேட் மூலம் கூகுள் டிரான்ஸ்லேட் சேவையில் கிடைக்கும் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். கூகுள் டிரான்ஸ்லேட் வலைதளத்தின் படி டிரான்ஸ்லேட் சேவை 103 மொழிகளை சப்போர்ட் செய்யும். உடனடி மொழிமாற்றம் தவிர, ஜிபோர்டு ஐ.ஓ.எஸ். செயலியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ஐ.ஓ.எஸ்.இல் ஜிபோர்டு பயன்படுத்துவது எப்படி?
செயலியை திறந்து மொழிமாற்றம் செய்ய வேண்டிய ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி, ஜி ஐகானை க்ளிக் செய்து டிரான்ஸ்லேட் ஐகானை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் மொழிமாற்றம் செய்ய வேண்டிய மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இனி நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய வார்த்தைகளை பதிவிட்டால், அதற்கான பிரீவியூ தெரியும். இனி நீங்கள் மொழிமாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள செலக்ட் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
புதிய மொழிமாற்ற வசதியுடன் ஜிஃப், எமோஜி சர்ச், ஸ்டிக்கர்கள், கிளைட் டைப்பிங், சர்ச் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜிபோர்டு செயலியில் தாய், மெர், லௌ மற்றும் மங்கோலிய மொழிகளுக்கான மொழிமாற்ற வசதியும் சேர்க்கப்பட்டது.
கூகுள் மேப்ஸ் சேவையில் விபத்துக்களை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #GoogleMaps
கூகுள் மேப்ஸ் சேவையில் பயனர்கள் விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோன்ற வசதியை வேஸ் எனும் நேவிகேஷன் செயலியில் ஸ்பீட் டிராப் மற்றும் விபத்துக்களை தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் கூகுள், இந்த வசதியை உலகம் முழுக்க அறிமுகம் செய்திருக்கிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த அம்சம் ஐபோன்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இதுகுறித்து ரெடிட் வலைதளத்தில் வெளியாகி வரும் தகவல்களில் நேவிகேஷன் மோடில் விபத்து மற்றும் ஸ்பீட் டிராப் வசதி ஆண்ட்ராய்டு சாதனங்களில் உலகம் முழுக்க பரவலாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிபோர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது.
வேஸ் செயலியில் இருப்பதை போன்றே புதிய அம்சமும் கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்களை விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாட்டு பகுதிகள் பற்றிய விவரங்களை பதிவிடலாம். பயனர்கள் திரையின் கீழ்புறம் இருக்கும் அம்புகுறி அல்லது நேவிகேஷன் ஸ்கிரீனில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து Add a report வசதியை பயன்படுத்தலாம்.
இதனை க்ளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்க முடியும். இதேபோன்று மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துக்களையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கும். இதனால் பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
விபத்து மற்றும் வேக கட்டுப்பாட்டு பகுதிகளை தெரிவிக்கும் வசதி பற்றி கூகுள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X