search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிவலம்"

    அண்ணாமலையார் கோவிலை சுற்றிலும் கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை தரிசிப்பதன் மூலம் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை இங்கே காணலாம்.
    அண்ணாமலையார் கோவிலை சுற்றிலும் கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை தரிசிப்பதன் மூலம் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை இங்கே காணலாம்.

    லிங்கங்கள்    பார்வை - இருப்பு - கிரக பார்வை - யோக பலன்

    1. இந்திர லிங்கம் - கிழக்கு - சூரியன், சுக்கிரன் - நீண்ட ஆயுளும், புகழும் கிடைக்கும்
    2. அக்னி லிங்கம் - தென்கிழக்கு - சந்திரன் - நோய்கள் அகலும், பயம் போகும்
    3. எமலிங்கம் - தெற்கு - செவ்வாய் - விபத்தில்லாத வாழ்க்கை அமையும். நீண்ட ஆயுள் கிட்டும்
    4. நிருதி லிங்கம் - தென்மேற்கு - ராகு - உடல் ஆரோக்கியமாகும். குழந்தை பாக்யம் உண்டாகும்.
    5. வருண லிங்கம் - மேற்கு - சனி - நோய்கள் குணமாகும். குறிப்பாக தண்ணிர் தொடர்பான கண்டம் விலகும்
    6. வாயு லிங்கம் - வடமேற்கு - கேது - இருதயநோய், வயிற்று பிரச்சினைகள் அகலும்
    7. குபேர லிங்கம் - வடக்கு - குரு - பணம் குவியும், வாழ்க்கைத்தரம் உயரும்
    8. ஈசான்ய லிங்கம் - வடகிழக்கு - புதன் - மன அமைதி ஏற்படும். தெய்வீக அம்சம் ஏற்படும்.
    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 23-ந் தேதி மாலை நகரின் மையப்பகுதியில் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

    கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் பக்தர்களை போன்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிகழ்வு ஆண்டிற்கு 2 முறை மட்டுமே நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து 2-வது நாளும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடக்கும் திருவூடல் முடிந்ததும் பக்தர்களை போன்று அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருவார்.

    அதன்படி, நேற்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தார். அருணாசலேஸ்வரருடன், பராசக்தி அம்மனும், துர்கை அம்மனும் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரர் கிரிவலத்தை யொட்டி கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    தீபத்திருவிழாவை தொடர்ந்து அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. நேற்று இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடந்தது. தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (திங்கட்கிழமை) இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (செவ்வாய்கிழமை) சண்டிகேஸ்வரர் வீதி உலாவும் நடக்கிறது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இந்த மாதம் (அக்டோபர்) கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்னவென்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.02 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 24-ந் தேதி (புதன்கிழமை) இரவு 11.00 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். குருப்பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.
    4-10-2018 குருப்பெயர்ச்சி சிவ.அ.விஜய்பெரியசாமி

    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும், குரு பார்வ பட்டால் அந்த தோஷங்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

    குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார். ஜாதகங்களில் குரு சிறப்பாக அமைந்தால் ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை, உயர் பதவி, கல்வி, ஞானம், வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு, செல்வசெழிப்பு முதலியன சிறப்பாக அமையும். திருமணப் பேறு, புத்திரபாக்கியம் உண்டாகும்.

    ஜாதகத்தில் குரு பார்வை சரி இல்லாதவர்களுக்கு பெரியோர் சாபம், மறதி, விஷப் பூச்சிகளால் பாதிப்பு, காது மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், பணத்தட்டுப்பாடு, பேச்சு சம்பந்தமான பிரச்சினைகள், கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி துன்பத்தில் தவிப்பவர்கள் குருபகவானை வழிபட்டால் அந்த பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பழமையான சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் வழிபாடு, குருப்பெயர்ச்சி சமயத்தில் பக்தர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது.

    குரு பகவான் பரிகாரத் த‌லங்களாக திருச்செந்தூர், திருஆலங்குடி, பட்டமங்கலம், முறப்பநாடு, மதுரை குருவித்துறை, சென்னை திருவலிதாயம், தேவூர், தென்குடி திட்டை, சுசீந்திரம், உத்தமர்கோவில், தக்கோலம், கோவிந்தவாடி என பல திருத்தலங்கள் கூறப்பட்டாலும், குருப் பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

    ரமண மகரிஷியை அவரது அடியவர் ஒருவர், திருக்கயிலாய யாத்திரை செய்ய அழைத்தார். உடனே மகரிஷி சிரித்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவர் போல, ‘அங்கே அப்படி என்ன விசேஷம்?' என்றார்.

    ‘திருக்கயிலாய மலை, சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான், பூதகணங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம்’ என்று ரமணரிடம் பதிலுரைத்தார் அந்த அன்பர்.

    அதற்கு ரமணர், ‘அன்பனே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலை என்பதே சிவன் தான். சிவபெருமான் இங்கே இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?' எனக் கூறினார்.

    உண்மையை உணர்ந்த அந்த அன்பரும் திருக்கயிலாய யாத்திரையை விடுத்து, திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தொழுதார்.

    ஆம்.. இங்கு மலையே சிவபெருமான் தான்.

    ‘செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
    எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
    இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
    பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே’ என்ற திருநாவுக்கரசரின் திருமுறைப்பதிகமே திருவண்ணாமலையின் வரலாற்றை விளக்கிடும்.

    ஒருமுறை விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று வாதிடத் தொடங்கினர். சுவாரசியமாக ஆரம்பித்த வாதம், அனல் தெறிக்க இறுதியில் திருக்கயிலை நாதனான சிவபெருமானிடம் வந்து நின்றனர். கையில் அனல் ஏந்தி, நெற்றிக்கண்ணில் அனலோடு தகதகக்கும் பரம்பொருள் சிவபெருமான், ‘எமது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்' என்று கூறினார்.

    அத்தோடு இருவரின் நடுவிலும் பெரும் தூண் போன்ற அருட்பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். உடனே ஈசனின் அடியைத் தேடி பன்றி உருக்கொண்டு விஷ்ணுவும், அன்னப் பறவை உருக்கொண்டு சிவபெருமானின் முடியைத் தேடி பிரம்மனும் புறப்பட்டனர். பூமியைத் தோண்டி பாதாளம் ஏழுக்கும் கீழே சென்றும் ஈசனின் அடியைக் கண்டறிய முடியாமல் விஷ்ணு தோல்வியோடு திரும்பி வந்தார்.

    அன்னமாய் மாறி ஆகாயத்தில் பறந்து பல ஆண்டுகள் கடந்தும், ஈசனின் முடியை காண இயலாமல் பிரம்மனும் அயர்ந்து போனார். அப்போது ஈசனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ பல ஆயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவிடம் ‘நான் சிவபெருமானின் முடியை தரிசித்து விட்டதாக பொய் சொல்’ என்றார்.

    தாழம்பூவும் அப்படியே பொய் சாட்சி சொன்னது. அப்போது ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், பொய்யுரைத்த பிரம்மனுக்குச் சாபமும், மகாவிஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் செய்தார்.

    பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானை தொழுதுநிற்க, ஜோதிப்பிழம்பு அக்னி மலையாய் நின்றது. அக்னிமலையான ஈசனும் உள்ளம் குளிர்ந்தார். அதுகண்ட பிரம்மனும் விஷ்ணுவும், ‘பரம்பொருளே! எங்கள் பொருட்டு இங்கு அக்னி மலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை தான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால் தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என்றனர்.

    உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே, இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாச்சலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். உடனே தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.

    ‘அண்ணுதல்' என்றால் ‘நெருங்குதல்’ எனப்பொருள். ‘அண்ணா' என்றால் ‘நெருங்க முடியாதது’ என்று பொருள்படும். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் ‘திருஅண்ணாமலை’ ஆயிற்று.

    திருஅண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலையாகவும், பாமரர்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.

    இந்தத் தலத்தில் இறைவனின் உடலில் இடப்பாகம் பெறுவதற்காக பார்வதிதேவி தவம் செய்தார், அப்படி தவம் செய்ததோடு மட்டுமின்றி, கார்த்திகை பவுர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் பிரதோஷ காலத்தில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்ததால், அன்னையின் ஆசை நிறைவேறியது. சிவபெருமான் அம்மனுக்கு தன்னுடைய உடலில் சரிபாதியை வழங்கி அருள்பாலித்தார்.

    திருவண்ணாமலையை பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். அதிலும் குறிப்பாக கிரகண காலங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகச்சிறப்பாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வரும் குருப்பெயர்ச்சி நன்னாளில் திருவண்ணாமலையை வலம்வந்து வழிபடுவது தோஷங்களை விலக்கி, அனைவருக்கும் நற்பலன்களை வழங்கும்.

    விழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சுமார் 63 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. 
    இந்த மாதத்திற்கான கிரிவலம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு முடிகிறது. விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை பக்தர்கள் சிவனாக வழிபடுகின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமிதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வர்.

    அதன்படி இந்த மாதத்திற்கான கிரிவலம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு முடிகிறது. இந்தநிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் வெயில் கடுமையாக இருந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் சிலர் தங்கள் குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர்.

    மாலை சுமார் 5 மணிக்கு மேல் இரவு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாமி தரிசனம் செய்தனர். கிரிவலத்தை முன்னிட்டு நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சில இடங்களில் பேரி கார்டுகள் வைத்து போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர்.
    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த மாத புரட்டாசி பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.




     








    திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத புரட்டாசி பவுர்ணமி வருகிற திங்கட்கிழமை காலை 8.02 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 8.45 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆவணி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எதுவென்று பார்க்கலாம்.
    திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத ஆவணி பவுர்ணமி நாளை சனிக்கிழமை மதியம் 2.59 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.58 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உலக நன்மை வேண்டி 61 நாட்கள் ஆந்திராவை சேர்ந்த சாமியார் ஒருவர் நிர்வாண நிலையில் யாகம் நடத்தி வருகிறார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், திருநேர் அருணாசலேஸ்வரர் சன்னதி எதிரே உள்ள பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொக்குல கொண்ட கைலாச ஆசிரமம் பீடாதிபதி, அட்டயோகிஸ்வரா மவுனிதிகம்பரி ‌ஷட்ட கோபி என்பவர் உலக நன்மைக்காக நிர்வாண யாகம் செய்ய கடந்த 25-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார்.

    இவர் திருநேர் அருணாசலேஸ்வரர் சன்னதிக்கு எதிரே உள்ள பகுதியில் கடந்த 25-ந் தேதி உலக நன்மைக்காக நிர்வாணமாக யாகம் நடத்த தொடங்கினார். இந்த யாகத்தை இவர் 61 நாட்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தொடர்ந்து நடத்த உள்ளதாக சாதுக்கள் தெரிவித்தனர்.

    5-ம் நாளான நேற்று மாலை நிர்வாண யாகத்தில் யோகிஸ்வர மவுனி திகம்பரி ‌ஷட்டகோபி ஈடுபட்டிருந்தார். அப்போது, கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்கள் சிலர் அவருடன் மந்திரங்கள் ஓதியபடி யாக பூஜையில் ஈடுபட்டனர்.

    நிர்வாண பூஜையில் ஈடுபட்டிருக்கும் சாமியார் பேசுவது கிடையாதாம்.

    இவர் பேசி 37 வருடங்கள் ஆகிறது எனவும், தான் கூற நினைப்பதை பேப்பரில் எழுதி மட்டுமே காண்பிப்பார் என உடன் வந்த சாதுக்கள் தெரிவித்தனர்.இந்த யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவித்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமியார் உலக நன்மைக்காக நிர்வாண யாகம் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    இந்த மாதம் (வைகாசி மாதம்) பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    வைகாசி மாத பவுர்ணமியையொட்டி, இன்று (திங்கட்கிழமை) இரவு 7.33 மணி முதல் நாளை இரவு 8.38 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த நேரத்தில் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    ×