என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96812"
தலைநகர் டெல்லியில் ஜகத்புரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பன்சால் என்பவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.2.7 லட்சம் பணத்தை துப்பாக்கியை காட்டி இருவர் கொள்ளையடித்தனர். பணத்தை இழந்த பன்சால் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.
இருப்பினும் துப்புதுலங்காததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பன்சாலிடம் பகுதி நேர ஓட்டுனராக பணியாற்றிய இண்டால்(29) என்பவரின் உதவியுடன் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றதை போலீசார் கண்டறிந்தனர். இண்டாலை கைது விசாரித்த போது பன்சால் பணம் எடுத்துச்செல்வதை அவரது நண்பரக்ள் ரவிந்தர்(28) மற்றும் கசனா(29) என்பவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி ஏற்கெனவே தீட்டிய திட்டத்தின் படி அவர் செல்லும் வழியில் வழிமறித்து பணத்தை ரவிந்தர் மற்றும் கசனா துப்பாக்கியை காட்டி கொள்ளை அடித்துள்ளனர். அப்போது மிரட்டுவதற்காக வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இறுதியில் இண்டால், ரவிந்தர் மற்றும் கசனா ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைநகரில் துப்பாக்கியை காட்டி பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DelhiRobbery
சேலம்:
சேலம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதி நேற்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செல்வதற்காக புதிய பஸ் நிலையத்திற்கு காரில் வந்து இறங்கினர்.
அப்போது, ஒரு கைப்பையில் துணிகள் வைத்திருந்தனர். அதற்குள் ஒரு சிறிய பையில் 1 லட்சம் பணமும், 10 பவுன் நகையும் சிறிய பையில் வைத்திருந்தனர்.
தனபால்-விஜயா தம்பதியின் மகன் காரில் இருந்து கைப்பைகளில் எடுத்துச் சென்று கும்பகோணம் செல்லும் பஸ்சுக்குள் வைத்தார். பின்னர் பஸ்சின் அருகில் நின்று பெற்றோரிடம் பெட்டியில் நகை, பணம் இருக்கிறது பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். சரி என்று சொல்லிய, பெற்றோர், காரில் நீ வீட்டுக்கு போ.. நாங்கள் பஸ்சில் ஏறுகிறோம் என்று கூறி மகனை காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பஸ்சுக்குள் ஏறி, கைப்பேக்கை திறந்து பார்த்தபோது பணம்-நகை வைத்திருந்த சிறிய பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தனபால்-விஜயா தம்பதியின் மகன் பேசியதை கேட்டுக் கொண்டு யாரோ ஒருவர், பஸ்சுக்குள் வைத்திருந்த கைப்பேக்கை திறந்து திருடி சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் துரிதமாக வந்து விசாரணை நடத்தி இருந்தால் இந்த பணம்- நகை திருடியது யார்? என்பதை கண்டுபிடித்து இருக்க முடியும். தாமதமாக வந்தால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாக தனபாலும் அவரது மனைவியும் கூறினர்.
நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்சில், பயணிகளை தவிர பிற நபர்களும் ஏறுகிறார்கள்.
மேலும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விழாக் காலம் நெருங்குவதால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி பொதுமக்கள் தினமும் அதிகளவில் புதிய பஸ் நிலையத்துக்கு வருகின்றனர். பஸ்களில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
பஸ் நிலையத்தில் நடைபெறும் திருட்டு தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உடனடியாக விசாரணை நடத்துவது கிடையாது என பயணிகள் கூறுகின்றனர்.
இதை தவிர்த்து திருட்டு சம்பவம் நடக்காமல் இருக்கும் வண்ணம் அதிக அளவிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் திருவிளான்பட்டி அன்னை மீனாட்சி நகரைச் சேர்ந்த ராகவன் மனைவி பேபி சசிகலா (வயது 49). இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு அலங்காநல்லூரில் இருக்கும் மகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 47 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய பேபி சசிகலா, வீடு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து பேபி சசிகலா அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளார். பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அனுப்பானடி வாஞ்சி நாதன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). இவர் நேற்று மதியம் தனது நண்பர் ரமேஷ், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோருடன் காரில் கீழவெளிவீதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரின் இருக்கையில் இருந்த பையில் இருந்து ரூ.20 ஆயிரம், 2 மலேசிய பாஸ்போர்ட்டுகள், டிரைவிங் லைசென்சு ஆகியவற்றை மர்ம நபர் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து விளக்குத் தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரில் திருடிய நபரை தேடி வருகிறார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் கருணா மூர்த்தி (வயது 67). விவசாயி. இவர் கடந்த 10-ந்தேதி குடும்பத்துடன் புறப்பட்டு திருவையாறில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டிருந்தது. மேலும் அதில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 5 பவுன் நகை, வீட்டில் இருந்து வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போய் இருந்தது.
இதைத் தொடர்ந்து கருணாமூர்த்தி நன்னிலம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வீட்டில் யாரும் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சுயம்பு கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். சமீபத்தில் குரு பெயர்ச்சி வழிபாடும் இங்கு விமரிசையாக நடை பெற்றது.
இன்று காலை அர்ச்சகர் ரகு கோவிலுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
காடுவெட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலின் உள்ளே இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சீனிவாசப் பெருமாள் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயிருப்பதாக செயல் அலுவலர் செந்தில் குமார் போலீசில் புகார் தெரிவித்தார்.
சுமார் 1 அடி முதல் 1½ அடி உயரம் கொண்ட இந்த சிலைகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 3 மணிக்கு 2 மர்ம மனிதர்கள் கோவிலின் கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே நுழைவது தெரியவந்தது. அவர்கள் கோவிலின் உள்ளே சர்வ சாதாரணமாக நடந்து வந்து அங்கிருந்த உற்சவர் சிலைகளை எடுத்து செல்வதும் கேமிராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் வடநாட்டு வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொள்ளையர்கள் மோப்ப நாய் தங்களை கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக கோவிலை விட்டு வெளியே வந்ததும் சிறுநீர் கழித்து சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலையை திருடிச் சென்ற மர்ம மனிதர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியின் த்வாரகா பகுதியில் அமைந்துள்ள கார்பரேஷன் வங்கியில் கேஷியராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார்(25). இவர் நேற்று மாலை பணி முடிந்து வங்கியை விட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், குண்டு தாக்கி ரத்த வெள்ளத்தில் தரையில் சந்தோஷ் குமார் தரையில் சரிந்தார். அப்போது அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வங்கி வாசலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் இருந்து பெரிய செவலை செல்லும் வழியில் ஏரிக்கரையில் கரை மேல் அழகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு திருவெண்ணைநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள் .
இந்த கோவிலில் பெரிய செவலை பகுதியை சேர்ந்த நடராஜன்(வயது 50) என்பவர் பூசாரியாக உள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு நடராஜன் வீட்டுக்கு புறப்பட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் கோவிலின் உள்ளே இருந்த 4 அடி உயரமுள்ள உண்டியலை அடியோடு பெயர்த்து எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த நடராஜன் கோவிலின் முன்பக்க கதவு உடைக்க பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த உண்டியல் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. கொள்ளையர்கள் தூக்கி சென்ற உண்டியலில் ரூ.70 ஆயிரம் இருந்தது கூறப்படுகிறது.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் நடராஜன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவில் உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த கோவிலின் முன்புறம் இருந்த சிறிய உண்டியலை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடதக்கது.
இந்த கோவிலில் தொடர்ந்து நடைபெறும் திருட்டால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூைரை அடுத்த காக்களூர் தேவா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். அதே பகுதி டீச்சர்ஸ் காலனியில் மளிகை கடை வைத்து உள்ளார்.
கிருஷ்ணகுமாரின் வீடு ஒதுக்குப்புறமாக உள்ளது. இதனால் வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மளிகை கடையில் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கடையை பூட்டி விட்டு கிருஷ்ணகுமார் வீட்டுக்கு வந்தார். இன்று அதிகாலை கடையை திறக்க சென்ற போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளிப் பொருட்கள் மாயமாகி இருந்தது.
மேலும் 25 கிலோ எடையுள்ள 10 அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களும் கொள்ளை போய் இருந்தன.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கடையில் இருந்த நகை-பணம் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது.
மளிகை கடையில் நகை- பணம் வைத்திருப்பதை அறிந்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது கிருஷ்ணகுமாருக்கு அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை எஸ்.ஆலங்குளம் அழகுமலையான் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது43). மாட்டுத்தாவணி காய்கறி கமிஷன் மண்டியில் வியாபாரியாக உள்ளார்.
இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று அதிகாலை அருகில் உள்ள கடைக்காரர்கள் கடையின் ஷட்டர் திறந்திருப்பதை தெரிவித்தனர். வந்து பார்த்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப் பட்டிருப்பது தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்