search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    வால்டாக்ஸ் சாலை மதுக்கடையில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் 40 பவுன் தங்க கட்டியை கொள்ளைடியத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #arrest

    ராயபுரம்:

    சென்னை சவுகார்பேட்டை நன்னியன் தெருவை சேர்ந்தவர் கமல் (வயது 36). நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை 4 மணியளவில் 300 கிராம் தங்க கட்டியை ஒரு பையில் வைத்தபடி தனது நண்பர் ஹேமந் என்பவருடன் கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் கமல் அருகில் வந்து பேசிக் கொண்டிருந்தார். கமல் மது குடித்து முடித்து வீட்டுக்கு சென்று பையை பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் தங்க கட்டியை காணவில்லை.

    இது குறித்து கமல் ஏழுகிணறு போலீசில் புகார் செய்தார். கொள்ளையனை பிடிக்க பூக்கடை உதவி கமி‌ஷனர் லட்சுமணன், ஏழுகிணறு இன்ஸ்பெக்டர் தவமணி, உதவி கமி‌ஷனர் சீனிவாசன், ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கமலுடன் அந்த மர்ம நபர் எடுத்த செல்பி படம் இருந்தது. அதை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வாகன சோதனையின்போது வால்டாக்ஸ் சாலை வழியாக வந்த அந்த மர்ம நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் இடுப்பில் தங்க கட்டியை மறைத்து வைத்திருந்தான். கொள்ளை நடந்த 2 மணி நேரத்தில் அவன் போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில் அவனது பெயர் கர்ணன் என்பதும், கொண்டித்தோப்பு சுந்தர முதலி தெருவை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 40 பவுன் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. #arrest

    கும்பகோணத்தில் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robbery

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சென்னை பைபாஸ் சாலை ஓ.எஸ்.எம். நகரை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 48). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி புதுக்கோட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் காரில் சேதுராமன் சென்றார். பின்னர் நேற்று மாலை அவர் கும்பகோணம் திரும்பினார்.

    அப்போது வீட்டுக்கு வந்த சேதுராமன், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    பின்னர் படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகை மற்றும் எல்இடி டி.வி, லேப்டாப் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல், பின்பக்க கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுபற்றி ஆசிரியர் சேதுராமன், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    மதுரை வில்லாபுரத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். #Robbery

    மதுரை:

    மதுரை வில்லாபுரத்தில் மத்திய அரசின் மண்டல நெடுஞ்சாலை ஆய்வு மையம் உள்ளது. சம்பவத்தன்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அலுவலக அறையில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஆய்வக பொருட்கள், கம்ப்யூட்டரை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செய்யது முகமது கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #Robbery

    புதுக்கோட்டை அருகே போலீஸ் துரத்தியதில் மரத்தில் கார் மோதி கொள்ளையன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த ஒடுக்கூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 35). இவர் மீது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள குளத்தூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோபால கிருஷ்ணனை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை விராலிமலை சாலை ஆம்பூர்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை யோரத்தில் உள்ள மரத்தில் கார் ஒன்று மோதி கிடப்பதாகவும், அதில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாகவும் மாத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மயக்கத்தில் காரை ஓட்டி சென்றதால் விபத்தில் சிக்கி கோபாலகிருஷ்ணன் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த கோபால கிருஷ்ணன் மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீரனூரில் நடந்த கொள்ளை தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர்.

    நேற்று ஆம்பூர்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக கோபாலகிருஷ்ணன் காரில் வரவே அவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் அவரை விரட்டி சென்றுள்ளனர். ஆம்பூர் பட்டி நால்ரோடு பகுதியில் செல்லும் போது கோபால கிருஷ்ணனின் கார் நிலை தடுமாறி மரத்தில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

    அதில் பலத்த காயமடைந்து கோபாலகிருஷ்ணன் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனால் கோபாலகிருஷ்ணன் இறந்தது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் காருக்குள் ஆண்கள் அணியக்கூடிய ஒரு ஜோடி செருப்பு கிடந்துள்ளது. இதனால் கோபால கிருஷ்ணனுடன் அவரது கூட்டாளி ஒருவரும் வந்துள்ளார். கார் விபத்தில் சிக்கியதும் லேசான காயத்துடன் அவர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

    பலியான கோபாலகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.மேலும் அவருக்கு ஒடுக்கூரில் மிகப்பெரிய வீடு மற்றும் கட்டிடங்கள் உள்ளது. போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளையன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூலூரில் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் 33½ பவுன் நகை மற்றும் 15 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robbery

    சூலூர்:

    சூலூர் சிந்தாமணிப்புதூர் வி.ஐ.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார்(வயது 44). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா (42). இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று பிரதீப்குமார் மற்றும் கவிதா ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். மகள் கல்லூரிக்கு சென்று விட்டார்.

    கவிதா மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 33½ பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து கவிதா சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கணவன்-மனைவி வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Robbery

    செங்கம் அருகே வங்கியில் ஜன்னல் கம்பிகளை வளைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் இரவு பின்பக்கமுள்ள ஜன்னல் கம்பிகளை வளைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். நேற்று அந்த பக்கமாக சென்றவர்கள் இதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கியின் ஜன்னல் கம்பிகளை மேலும் வளைக்க முடியாததால் வங்கியில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அரும்பாக்கத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்த 2 வாலிபர்கள், கார்-மோட்டார் சைக்கிளில் சென்று அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
    போரூர்:

    அரும்பாக்கம், அண்ணா நகர், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன.

    கொள்ளையர்களை பிடிக்க அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் குணசேகர், இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ஜெகதீசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    அவர்கள் நகைபறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சுற்றும் ஒரே வாலிபர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கொள்ளையர்களின் உருவ படத்தை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் நடந்து சென்ற ஒரு வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் விரட்டி பிடித்தனர்.

    அவர்கள் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சபி பாஷா, அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அண்ணாநகர், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.

    போலீசாரிடம் அவர்கள் கூறும் போது, “மோட்டார் சைக்கிளில் வந்து செயினை பறித்தவுடன் உடனடியாக சற்று தூரத்தில் காரில் காத்திருக்கும் கூட்டாளிகளிடம் அதை கொடுத்துவிட்டு தப்பி சென்றுவிடுவோம். பின்னர் அவர்களிடம் பணம் பெறுவோம். கார், மோட்டார் சைக்கிளில் சுற்றி நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்தோம்” என்றனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளியான பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமாரை கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் இருந்து 40 பவுன் நகை, கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை மதுக்கரை அருகே போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் இருந்து ரூ.2 ½ லட்சம் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பத்ரிபாலத்தை சேர்ந்தவர் சபீர் (வயது 43). இவரது தம்பி சுக்கூர் (23) மற்றும் இவர்களது நண்பர் மன்சூர் (33). இவர்கள் 3 பேரும் ஆடு, மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள்.

    சம்பவத்தன்று ஆந்திரா சென்று வியாபாரிகள் அங்கு அறுவை மாடுகளை வாங்கினர். வாங்கிய மாடுகளை ஒரு லாரியில் ஏற்றி கேரளா புறப்பட்டனர். லாரி முன்னே செல்ல 3 பேரும் காரில் பின்னால் வந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவையை கடந்து மதுக்கரை அருகே உள்ள சாவடிக்கு சென்றனர்.

    அப்போது ஒரு போலீஸ் ஜீப்பில் இருந்து 5 பேர் கும்பல் இறங்கியது. காரை சைகை காட்டி கும்பல் நிறுத்தியது. போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் தன்னை இன்ஸ்பெக்டர் என்றும் மற்றவர்களை போலீஸ் என்றும் அறிமுகம் செய்தார்.

    காரை சோதனை செய்ய வேண்டும் என்று காருக்குள் ஏறிய கும்பல் திடீரென மிளகாய் பொடியை அவர்கள் கண்ணில் தூவினர். கண்ணில் மிளகாய் பொடி பட்டதும் வியாபாரிகள் அலறித்துடித்தனர். அப்போது காரில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை பறித்தனர். பின்னர் அதே காரில் அவர்களை கடத்தினர்.

    கார் தமிழக எல்லையை கடந்து வாளையார் வனப்பகுதிக்குள் வந்ததும் அவர்களை அடுத்தடுத்து தள்ளி விட்டனர். பின்னர் கும்பல் அதே காரில் தப்பினர். வனப்பகுதியில் கிடந்த வியாபாரிகள் கண் எரிச்சல் குறைந்ததும் வாளையார் போலீசில் புகார் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் தமிழில் பேசினர். எனவே அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறியதின் பேரில் கோவை மதுக்கரை மற்றும் சாவடி போலீஸ் நிலையத்திற்கு வாளையார் போலீசார் தகவல் தெரிவித்தனர். தமிழக போலீசாருடன் தேடுதல் வேட்டையில் வாளையார் போலீசார் இறங்கினர். தீவிர தேடுதலில் வியாபாரிகளின் கார் கஞ்சிக்கோடு என்ற இடத்தில் அனாதையாக நின்றது. காரை இங்கு நிறுத்திய கும்பல் அவர்கள் கொண்டு வந்த ஜீப்பில் தப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. தமிழக போலீசார் உதவியுடன் கேரளா முழுவதிலும் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    கேரள மாநிலம் மலப்புரம் அருகே மூலிகை மயக்க மருந்து கொடுத்து தொழில் அதிபர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூரை சேர்ந்தவர் ஹயாத் அலி. தொழில் அதிபர். இவரது மனைவி சைனபா. இவர்களுக்கு பிதா என்ற மகள் உள்ளார். இவர்களது வீட்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 47) என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ஹயாத் அலியின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஹயாத்அலி, சைனபா, பிதா ஆகியோர் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    உடனடியாக 3 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது 3 பேருக்கும் மயக்க மூலிகை மருந்து கொடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் உறவினர்கள் ஹயாத் அலியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் வேலை பார்த்த மாரியம்மாள் மாயமாகி இருந்தார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தற்போது ஹயாத்அலி உள்பட 3 பேரும் மயக்க நிலையில் இருப்பதால் எவ்வளவு நகை மற்றும் பணம் கொள்ளை போனது என்பது தெரியவில்லை.

    இது குறித்து அவரது உறவினர்கள் திரூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாரியம்மாளை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திண்டிவனத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்து அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    பண்ருட்டியில் இருந்து கத்தரிக்காய் லோடு ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு மினிலாரி புறப்பட்டது. இந்த லாரியை சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சலீம்(வயது 35) ஓட்டி வந்தார். அந்த லாரி திண்டிவனம் கருணாவூர்பேட்டை புறவழிச்சாலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது.

    அப்போது லாரியை சாலையோரம் நிறுத்திய சலீம் கீழே இறங்கி சென்னையில் உள்ள தனது லாரி உரிமையாளரிடம் செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் சலீமிடம் திண்டிவனத்துக்கு எப்படி செல்லவேண்டும் என்று பேச்சு கொடுத்தனர். அதற்கு எனக்கு வழி தெரியாது என்று சலீம் கூறினார்.

    திடீரென அந்த மர்ம மனிதர்கள் சலீமை தாக்கினர். உன்னிடம் உள்ள பணத்தை கொடு, இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். பணம் கொடுக்க முடியாது என்று சலீம் கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியால் சலீமை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து சலீமின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.16 ஆயிரத்து 500 பணத்தை அந்த மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திண்டிவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பலத்த காயம் அடைந்த சலீமை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சலீமை தாக்கி கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ராமநாதபுரத்தில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூட்டிய வீடுகளை நோட்டமிடும் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம் நகர் பாரதி நகர், நேருநகர், சேதுநகர் மற்றும் ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. திருடர்களின் கைவரிசை தொடர்வதால் பொதுமக்கள் தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய விழித்திருக்கும் நிலை காணப்படுகிறது.

    ராமநாதபுரம் ராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 42). இவர் சைல்டுலைன் அமைப்பில் அணி உறுப்பினராக உள்ளார்.

    இவருடைய கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.கடந்த 7-ந் தேதி ராஜேஸ்வரியின் மகள் ஜனனிக்கு திருமண நாள். எனவே வீட்டை பூட்டி விட்டு பாரதிநகரில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். வெளியில் உள்ள பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது கதவை உடைத்து இருப்பது தெரியவந்தது.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராமேஸ்வரி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ராமநாதபுரம் நகரில் தொடர்ந்து வரும் திருட்டு சம்பவத்தால் ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி தனிப் படைகள் அமைக்கப்பட்டு மாறுவேடத்தில் தனிப்பிரிவு போலீசார் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.

    இருப்பினும் திருடர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து திருட்டில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து நடக்கும் இந்த திருட்டு சம்பவங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சினிமா துணை நடிகர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை நகரில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்ஊத்துக்குழியை சேர்ந்த சீனிவாசன்(வயது 35) என்பவர் சிக்கினார். இவர் ஆர்.எஸ்.புரத்தில் 2 பேர், போத்தனூர், சிங்காநல்லூரில் ஒருவர் என 4 பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து, 15 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    இவர் மதுக்கரை பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் நகைபறித்து வந்துள்ளார். இவரது நண்பர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே சீனிவாசனை கைது செய்துள்ளனர். நகை பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இவர் பொள்ளாச்சி பகுதியில் எடுக்கப்பட்ட கொடி உள்ளிட்ட சில சினிமாக்களில் சிறு, சிறு காட்சிகளில் நடித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சிங்காநல்லூர் போலீசில் ஒரு வழக்கு உள்ளது.

    இவரது மனைவி சூர்யா பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பூமார்க்கெட்டில் இருந்து சுந்தராபுரம் சென்ற பஸ்சில் ஒரு பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த போது பயணிகள் சூர்யாவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
    ×