என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96812"
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவர் உறவினர் வீட்டு விஷேசத்திற்காக வத்தலக்குண்டுவில் இருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார்
அப்போது பையில் 8 பவுன் நகை கொண்ட பெட்டியும் வைத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததை பயன்படுத்தி நடராஜிடம் இருந்த நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
காளியம்மன் கோவில் அருகே வந்துபார்த்தபோது பையில் இருந்த நகை பெட்டி மாயமாகி இருப்பது கண்ட அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் விசாரித்தபோது யாரும் பார்க்க வில்லை என கூறி உள்ளனர்.
இதனால் கவலையுடன் பஸ்சில் இருந்து இறங்கி வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள், பயணிகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் நபர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களளுக்கு முன்பு வத்தலக்குண்டுவில் இருந்து தொழில் அதிபரை மை வைத்து மயக்கி பணம் பறித்து அவரை திருச்சியில் விட்டு சென்றனர்.
இதேபோல் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் பணம், செல்போன் பறித்த சேலத்தை பெண்களை பொதுமக்கள் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருந்தபோதும் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகூர்த்த நாட்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் உள்ளிட்ட கும்பல் நகை, பணம் பறித்து செல்கின்றன.
எனவே இதுபோன்ற முகூர்த்தநாட்களில் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் பயணிகளுக்கு இடையூறாக சுற்று திரியும் நபர்கணை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரில் கடந்த 2 மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் படி உதவி கமிஷனர் நவீன் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் குறித்து விசாரித்து வந்தனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது போலீசாருக்கு சில தடயங்கள் கிடைத்தது.
இதன்படி விசாரணை நடத்தினார்கள். அப்போது கோவையை சேர்ந்த சதிஷ் குமார் (42), வேலூர் சங்கர் (36) திண்டுக்கல் வீரபாபு (21) திருப்பூர் ரமேஷ் (30), திருவாரூர் குருசக்தி (31), திருப்பூர் பலவஞ்சிபாளையம் வெங்கடேஷ் (30), அம்மாபாளையம் கீதா (29) ஆகியோர் காரில் சென்று வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் குரு சக்தி மீது தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவர் தான் கொள்ளை கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து 80 பவுன் நகை, கார், 2 மோட்டார் சைக்கிள்கள் என 25 லட்சம் மதிப்புள் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இக்கொள்ளை கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பகல் நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் இக்கும்பல் வீடுகளை நோட்டமிடும். பின்னர் திருப்பூர் ஆர்.வி.இ. நகர் பகுதியில் கொள்ளை கும்பல் தலைவன் குரு சக்திக்கு சொந்தமாக உள்ள ஒர்க்ஷாப்பில் கொள்ளை தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள்.
பின்னர் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். தனிப்படை போலீசாரிடம் முதலில் கொள்ளை கும்பல் தலைவன் குரு சக்தி தான் சிக்கினார். அவரை வைத்து தான் மற்ற கொள்ளையர்களை பிடித்தனர்.
கொள்ளையர்களில் வெங்கடேஷ், சதிஷ் குமார் ஆகியோர் மீது ஒரு சில கொள்ளை வழக்கு உள்ளது. மற்றவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
கீதா மீதும் பல்வேறு கொள்ளை வழக்கு உள்ளது. இவருக்கு 4 கணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கொள்ளை அடிக்க இக்கும்பல் செல்லும் போது காரின் முன் பகுதியில் கீதாவை உட்கார வைத்து விடுவார்கள்.
இதற்கு காரணம் காரை போலீசார் சோதனை செய்யும் போது பெண் இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் தான் செல்கிறார்கள் என விட்டு விடுவார்கள் என்பதற்காக தான் அவரை அழைத்து சென்றுள்ளனர். போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கவே கீதாவை உடன் அழைத்து சென்றுள்ளனர்.
இக்கும்பல் திருப்பூர் மட்டுமின்றி வேறு எங்கும் கைவரிசை காட்டி உள்ளதா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலப்பாக்கம் பாலமுருகன் நகர் சித்திரை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் மாலை திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. படுக்கை அறையில் உள்ள ஏ.சி. கிரில்லை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருந்தனர்.
இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
சிறுவர்கள் 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கோவை:
கோவை காளப்பட்டி ரோடு, பி.எஸ்.ஜி. லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம மூர்த்தி (வயது 58). இவர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு மனைவி, மகளுடன் வெளியே சென்றார்.
மாலையில் வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
ராமமூர்த்தி குடும்பத்துடன் வெளியே செல்வதை கண்காணித்து மர்மநபர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நரிப்பள்ளி அருகே டாஸ்மாக விற்பனையாளர் மகரஜோதி கடந்த 16-ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அன்றைய விற்பனை தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தீர்த்தமலை- நரிப்பள்ளி சாலையில், தெத்து முனியப்பன் கோவில் அருகே சந்தேகமான முறையில் வந்த இருவரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஊத்தங்கரையை சேர்ந்த வெங்கடேசன் (வயது 32), பரதன் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் துப்பாக்கியால் சுட்டு டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தது உறுதியானது.
போலீசார் கைதான 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதில் வெங்கடேசன் வீட்டில் இருந்து ரப்பர் குண்டை பயன்படுத்தி சுடும் ஏர்கன் துப்பாக்கிகள் சிக்கியது. பரதன் வீட்டில் இருந்து எஸ்.பி.எம்.எல். (சிங்கிள் பேரல் மஸ்லோடு கன்) ரக துப்பாக்கியும், 4 தோட்டாக்களும், வெடி (கரி) மருந்துகளும் சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான 2 பேர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் முருகன், ஆனந்தன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்புடையது தெரியவந்தது.
கைதான வெங்கடேஷ் மற்றும் பரதன் ஆகிய 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
கோவை:
கோவை சிட்கோ பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவர் மதுக்கரை மார்கெட்டில் கட்டுமான பொருட்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் வெள்ளலூரை சேர்ந்த சுதிர் (50) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ரூ. இரண்டரை லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை சுதிர் வாடகைக்கு எடுத்து சென்றார். பல நாட்கள் ஆகியும் அதனை திருப்பி ஒப்படைக்கவில்லை.
அவரது செல்போனுக்கு கடை உரிமையாளர் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது. இது குறித்து சுதாகரன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுதிரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி:
தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது34). தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது குடும்பத்துடன் தேனியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது பக்கத்து வீட்டு காரர்கள் பாலகிருஷ்ணனின் வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி புறநகர் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள் ளையடிக்கும் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன.
வியாபாரிகள் போல் நோட்டமிட்டு பூட்டி கிடக்கும் வீடுகளில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தங்கவேலு மனைவி மற்றும் மகளுடன் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை தங்கவேலுவின் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் உரிமையாளர் தங்கவேலுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் பரணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
வீட்டின் முதல் தளத்தில் 3 அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை மர்மநபர்கள் அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர். அந்த லாக்கரில் சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மதுரையில் இருந்து தங்கவேலு வந்த பிறகு தான் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள சத்யா நகர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் தனபால்.
இவர் செக்காரப்பட்டி உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர் பங்குநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இருவரும் ஆசிரியர் என்பதால் நேற்ற காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் மாலையில் மீண்டும் 2 பேரும் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது அஙகு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதே பீரோவில் மற்றொரு கவரில் 5 பவுன் நகையை செல்வி சுருட்டி வைத்து இருந்தார். அதனை மர்ம நபர்கள் கவரிங் என்று நினைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று தெரியவந்தது. கவரில் சுருட்டி வைத்திருந்தால் 5 பவுன் நகை மட்டும் தப்பியது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் உடனே அங்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
பூட்டிய வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றனர்.
நள்ளிரவு சமயத்தில் வாலிபர் ஒருவர் கடையின் பின்பக்கம் இருந்த சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்தார். பின்னர் அங்கிருந்த பணம் ரூ.6,800 மற்றும் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார்.
மறுநாள் காலை விற்பனையாளர்கள் கடையை திறக்க வந்தபோது பின்னால் சுவரில் துளை போட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளைபோனது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் காமக்காபட்டியை சேர்ந்த ஞானசேகரன் என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் ஞானசேகரனிடம் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார்(38) என்பவர் மினிலாரி ஓட்டி வருகிறார்.
இவர் தனது மினிலாரியை ஆண்டிப்பட்டி பாரதஸ்டேட் வங்கி அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் காலை வந்து பார்த்த போது மினிலாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குமார் ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
இதேபோல வைகை அணை அருகே உள்ள முதலக்கம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெகதீஸ்வரன்(வயது30) என்பவர் தனது ஆட்டோவை காணவில்லை என்றும் போலீசில் புகார் செய்தார். அடுத்தடுத்து வாகனங்கள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அதோடு ரோந்து சென்றனர். அப்போது தேனியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த கெங்குவார்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி(வயது17)யை பிடித்து விசாரணை நடத்திய போது ஆட்டோ மற்றும் மினிலாரியை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த போது ரோட்டில் நின்றிருந்த மினிலாரியை திருடி வைகை அணை வழியாக முதலக்கம்பட்டி சென்ற போது மினிலாரி பழுது ஏற்பட்டு நின்றுவிட்டது. அந்தமினிலாரியை அங்கு நிறுத்திவிட்டு, அதே பகுதியில் நின்றிருந்த ஆட்டோவை திருடி தேனிக்கு சென்றார்.
அப்போது ஆட்டோவும் திடீரென நின்றுவிட்டதால், ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி சென்ற போது போலீசாரிடம் சிக்கிகொண்டார்.
இதனையடுத்து ராஜபாண்டியை கைது செய்த ஆண்டிப்பட்டி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ராஜபாண்டி மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மாதவரம் பால் பண்ணை சி.கே.எம். நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சரளா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த 18-ந்தேதி இவரது வீட்டில் இருந்து 45 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து மாதவரம் போக்குவரத்து பால்பண்ணை போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சர்மிளா வீட்டில் சுருட்டிய நகைகளை விற்பதற்காக கொள்ளை கும்பல், எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தங்கமணி, அவரது மனைவி ராணி ஆகியோரிடம் கொடுத்து இருப்பது தெரிந்தது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான தங்கமணியும், அவரது மனைவி ராணியும் இதே போல் வேறு கொள்ளையர்களிடம் இருந்து நகைகளை வாங்கி விற்று கொடுத்தனரா? அவர்களுடன் தொடர்பில் உள்ள கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சர்மிளாவின் திருடப்பட்ட கார் அவரது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது.
போலீசார் நெருங்குவதை அறிந்த கொள்ளை கும்பல் திருடிய காரை விட்டுச் சென்று உள்ளனர். காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்