search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96851"

    • நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படத்தின் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
    • 'சர்தார்' திரைப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.


    கார்த்தி

    இந்நிலையில், இப்படத்தின் புது அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, 'சர்தார்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார்.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1௦௦ கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

     

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    இப்படத்திற்கும் படத்தில் நடித்தவர்கள் பலருக்கும் திரைதுறையினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை தொலைப்பேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார்.

     

    ரஜினி - கமல்

    ரஜினி - கமல்

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பாராட்டியுள்ளனர். இதனை கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் பணிகளை பார்த்து நீங்கள் பாராட்டுவது எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

     

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    மேலும் "கமல் சார், நீங்கள் எப்பொழுதும் சினிமாவில் பெரிய இலக்குகளை அடைய, உயர்ந்த தரத்தை அமைக்க எங்களுக்கு தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை இது போன்ற தருணங்களில் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். மிகுந்த அன்பும் மரியாதையுடன் கார்த்தி" என குறிப்பிட்டுள்ளார். 


    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'.
    • இப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடம் பிடித்தது.


    சர்தார்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'சர்தார்' படத்தின் பின்னணி இசையில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகிறார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகை ராஷ்மிகா ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது.


    ராஷ்மிகா மந்தனா

    இவர் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அமிதாப் பச்சனுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'குட் பை' திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ராஷ்மிகா மந்தனா

    இந்நிலையில், நடிகர் கார்த்தி இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விரைவில் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாவது வாரம் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.
    • பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய ரஜினி, கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.


    பொன்னியின் செல்வன்

    இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் 'பொன்னியின் செல்வன்' படத்தை பார்த்து விட்டு கார்த்திக்கு செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    விக்ரம் - கமல்ஹாசன் - கார்த்தி

    இது குறித்து கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சினிமாவில் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க எங்களை எப்போதும் ஊக்குவித்து வருகிறீர்கள் கமல் சார். அன்பையும் மரியாதையையும் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    ரஜினி

    மேலும், "ரஜினி சார் உங்கள் அழைப்பு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பிறர் உழைப்பை அங்கீகரித்து அவர்களை மனதார பாராட்டும் உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கிறது" என்று கூறியுள்ளார்.


    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'.
    • இப்படத்தின் டீசர் தற்போது யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

     

    சர்தார்

    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசரை நேற்று முன்தினம் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார்.

     

    சர்தார்

    சர்தார்

    இந்நிலையில் 'சர்தார்' படத்தின் டீசர் அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது. இதனை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'.
    • இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

     

    சர்தார்

    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவார் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தெரிவித்திருந்தார்.

     

    சர்தார்

    சர்தார்

    இந்நிலையில் 'சர்தார்' படத்தின் டீசரை அறிவித்தபடி நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள் இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


    பொன்னியின் செல்வன்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து, நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், த்ரிஷா, இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை படித்த ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி அளிக்குமா? என்று கார்த்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது.


    பொன்னியின் செல்வன்

    இதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, "நடிக்கும் போது தான் நான் இந்த புத்தகத்தை படித்தேன். படப்பிடிப்பின் போது ஒவ்வொரு கதாபாத்திரங்களை பார்க்கும் போதும் மிகவும் அழகாக இருந்தது. கதையில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியை பார்க்கும் போதும் எனக்கு ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது.

    நீங்களும் அப்படி தான் படத்தை பார்க்கப் போகிறீர்கள். அதனால் எப்படி பண்ணியிருப்பார் என்று மார்க் போட வராதீங்க. இது இந்த தலைமுறைக்கு கிடைத்த அனுபவம் . இது 60 வருட கனவு இதை அனுபவியுங்கள்" என்று பேசினார். 

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார்.


    விருமன்

    மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    விருமன்

    இந்நிலையில், 'விருமன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது.


    • பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இதில் கலந்துக் கொண்ட நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பல ஆண்டுகள் தமிழ் மக்கள், தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ஒரு தருணம். பொன்னியின் செல்வன் படம் வரப்போகிறது இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது என்பது பெருமையாக உள்ளது. மற்ற படங்களில் பணியாற்றும் போது நம் சிந்தனைகள் வெளியே சென்று வரும் இதில் பணியாற்றும் போது எங்கிருந்தாலும் சிந்தனை அந்த கதாப்பாத்திரத்திலேயே இருக்கும். இதில் நடித்த அனைவருக்கும் இதே உணர்வு தான் இருந்தது. தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய அனைத்து பெரிய நடிகர்களும் இப்படத்தில் இருக்கிறார்கள் மொத்த தமிழ் திரையுலக்கத்தையும் பொன்னியின் செல்வன் படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் அன்பு எப்பொழுதும் தேவை.

     

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    இந்த படத்தில் எல்லா கதாப்பாத்திரங்களும் மிக முக்கியமானவை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ரொம்ப அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதி கதாப்பாத்திரங்கள் உண்மையாக வாழ்ந்தவை பாதி கதாப்பாத்திரம் கற்பனையாக வடிவமைக்கப்பட்டது. வந்தியத்தேவன் எல்லா கதாப்பாத்திரத்தையும் சந்திக்கக் கூடியவை எல்லாரிடமும் ஒரே மாதிரி பேச முடியாது. உடல் மொழி பேசுகிற மொழி ஒவ்வொருவரிடமும் மாறும் என்றார்.

    கார்த்தி

    கார்த்தி

     

    இதற்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, ஆயிரத்தில் ஒருவனில் சோழ தூதுவனாக நடித்திருந்தேன். முதலில் நீங்கள் கதையை புரிந்துக் கொண்டு வாங்க என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். மேலும் அந்த படத்திற்கும் இதற்கும் எந்த ஒப்பிடுதலும் இல்லை. பொன்னியின் செல்வன் படத்தில் அந்த காலக்கட்டத்தில் வாழ வேண்டும் என்றார். 

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா.
    • இவர் தனது 25-வது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் சினிமா திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது 25-வது ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடி வருகிறார். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில், "கனவு காணுங்கள், நம்புங்கள்" என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.


    சூர்யா - கார்த்தி

    இதனிடையே நடிகர் கார்த்தி, சூர்யா குறித்து தனது இணைய பக்கத்தில், "அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்ற இரவும் பகலும் உழைத்தார். அவர் தன் சொந்த சாதனையை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக, அவர் ஏற்கனவே தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார்." என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கார்த்தியின் பதிவை பகிர்ந்துள்ள சூர்யா "வந்தியத்தேவா... அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். சூர்யா கிண்டலாக பகிர்ந்துள்ள இந்த பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • பொன்னியின் செல்வன் படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்-1". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


    பொன்னியின் செல்வன்

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    இதையடுத்து, இப்படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதில், 'ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    பொன்னியின் செல்வன்

    இந்த பதிவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, "ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


    ×