என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96860"
சமரா:
உலககோப்பை கால்பந்து போட்டியில் 3-வது மற்றும் 4-வது கால்இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.
சமரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவீடன் ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியா (1-0), மெக்சிகோவை (3-0) வென்று ஜெர்மனியிடம் (1-2) தோற்று, கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் துனிசியா (2-1), பனாமா (6-1) அணிகளை வென்று பெல்ஜியத்திடம் தோற்று (0-1) இருந்தது. 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டிஷூட்டில் தான் வென்றது.
1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி சுவீடனின் அதிரடியை சமாளிப்பது சவாலானது. அந்த அணி பின்களத்தில் வலுவாக இருக்கிறது.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து- 8, சுவீடன்-7-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து அணியில் ஹாரிகேன் முதுகெலும்பாக இருக்கிறார். ஸ்டெர்லிங், லிங்கார்டு போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர். சுவீடன் அணியில் கிரண்விஸ்ட், போர்ஸ்பெர்க், பெர்த் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.
ரஷியா ‘லீக்’ ஆட்டத்தில் சவுதி அரேபியா (5-1), எகிப்து (3-1) அணிகளை தொடர்ந்து உருகுவேயிடம் 0-3 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.
குரோஷியா அணி தோல்வி அடையவில்லை. 2-0 என்ற கணக்கில் நைஜீரியாவையும், 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவையும், 2-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கை பெனால்டிஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
குரோஷியா அணி பலம் பொருந்தியவை என்பதால் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். இதேபோல கோல்கீப்பர் அகிள்பீவ் முதுகெலும்பாக இருக்கிறார். குரோஷியா அணியில் மோட்ரிச், மென்டிச், ரகட்டிச் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகள் மோதிய போட்டியில் குரோஷியா 1 ஆட்டத்தில் வென்றது. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது. #WorldCup2018
பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மர் மீது இந்த உலககோப்பை யில் கடும் விமர்சனம் முன் வைக்கப்படுகின்றன. அவர் ஆட்டத்தின் போது எதிரணி வீரர்கள் லேசாக உரசியவுடன் கீழே விழுந்து வலியால் துடிப்பது போல் நடிக்கிறார் என்று மெக்சிகோ பயிற்சியாளர் ஜூவான் கார்லஸ் ஒசோரியம் குற்றம் சாட்டினார்.
மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தின் போது 71-வது நிமிடத்தில் கணுக்காலில் பிடித்து கொண்டு நெய்மர் வலியால் துடித்தார். உடனே மருத்துவ குழுவினர் மைதானத்துக்குள் வந்து சிகிச்சை அளித்ததால் நேரம் விரயம் ஆனது.
இதை சுட்டி காட்டிய மெக்சி கோ பயிற்சியாளர், நெய்மரின் செயலால் கடைசி கட்டத்தில் நேரம் வீணாகி எங்கள் வீரர்கள் சோர்வடைந்து விட்டனர் என்றார்.
இதற்கிடையே சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டி.வி. நிறுவனம் ஒன்று நெய்மர் விளையாடிய 4 ஆட்டத்தையும் ஆய்வு செய்தது. இதில் நெய்மர் அடிக்கடி கீழே விழுந்து வலியால் துடித்ததில் அவர் 14 நிமிட நேரத்தை வீணடித்து உள்ளார் என்று தெரிவித்து இருக்கிறது.
ஆனால் தன் மீதுள்ள விமர்சனத்தை பற்றி நெய்மர் கவலைப்படவில்லை. அவர் கூறுகையில், விமர்சனத்தையோ, பாராட்டுகளையோ நான் கண்டு கொள்வதில்லை. எனது பணி களம் இறங்கி அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் உதவுவது மட்டுமே என்றார். #FIFA2018 #brazil
உலகக்கோப்பை கால்பந்தில் நாளை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால்இறுதியில் பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் திறமை வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
5 முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி ‘லீக்’ ஆட்டங்களில் கோஸ்டாரிகாவை 2-0 என்ற கணக்கிலும், செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வென்றது. சுவிட்சர்லாந்துடன் 1-1 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2-வது சுற்றில் மெக்சிகோவை இரண்டு கோல்போட்டு வீழ்த்தியது.
பிரேசில் அணி 12-வது முறையாக அரை இறுதியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
நட்சத்திர வீரர் நெய்மர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். கோல் அடித்தும், சக வீரர்கள் கோல் போடவும் அவர் திறமையான முறையில் செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து 7-வது முறையாக பிரேசில் அணி கால்இறுதியில் ஆடுகிறது. இதில் 2006-ல் பிரான்சிடமும், 2010-ல் நெதர்லாந்திடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் கடந்த 3 உலககோப்பையில் ஐரோப்பிய அணியிடம் தோற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பையில் அரை இறுதியில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்று வெளியேற்றப்பட்டது.
இதனால் ஐரோப்பிய கண்டத்தில் தற்போது பலம் பொருந்திய அணியாக திகழும் பெல்ஜியத்துடன் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். பெல்ஜியம் அதிரடியை சமாளிப்பது சவாலானது.
பெல்ஜியம் இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணி ‘லீக்’ ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 2 கோல் வாங்கி பின்தங்கி இருந்த நிலையில் 3 கோல் போட்டு முத்திரை பதித்தது.
பெல்ஜியம் அணியில் கேப்டன் ஹசாட், லுகாகு போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருவரும் சிறந்த முன்னாள் வீரர்கள். பிரேசில் பின்கள வீரர்களுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள்.
2-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் பெல்ஜியம் உள்ளது. கடந்த உலக கோப்பையில் அந்த அணி கால்இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்று இருந்தது.
இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 3 ஆட்டத்திலும், பெல்ஜியம் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. உலக கோப்பையில் ஒருமுறை மோதியுள்ளன. 2002-ம் அண்டு நடந்த போட்டியில் பிரேசில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது.
தற்போது உள்ள பெல்ஜியம் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும். #FIFA2018 #brazil #belgium
‘இ’ பிரிவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் செர்பிய அணி 2-வது வெற்றியை நோக்கி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த செர்பிய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் 2-வது சுற்றை எட்டி விடும். மாறாக அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க சுவிட்சர்லாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி காண வேண்டியது அவசியமாகும்.
குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஐஸ்லாந்து நாடு, தனது முதல் ஆட்டத்தில் (டி பிரிவு) பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடன் பதற்றமின்றி விளையாடி டிரா செய்தது. அந்த அணி உலக கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவுடன் இன்று கோதாவில் இறங்க காத்திருக்கிறது. அதே நேரத்தில் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் உதைவாங்கிய இளம் வீரர்களை கொண்ட நைஜீரியா அணி, கடந்த உலக கோப்பையை போன்று நாக்-அவுட் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால், இன்றைய ஆட்டத்தில் ஐஸ்லாந்தை புரட்டியெடுத்தாக வேண்டும். #WorldCupRussia #FIFA2018
சாவ்பாங்லோ:
பிரேசில் நாட்டின் தொழில் நகரம் சாவ்பாவ்லோ. இங்கு லாரி மற்றும் வாகனங்களின் வேலைநிறுத்த போராட்டம் 5 நாட்கள் நடக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுகிறது.
லாரிகள் இயக்காமல் நடுரோடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாததால் பொருட்களுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே நிலைமையை சமாளிக்க சாவ்பாவ்லோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ரோடுகளில் நிறுத்தப்பட் டுள்ள லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை பிரகடனம் குறித்து அதிபர் டெமர் டி.வி.யில் உரை நிகழ்த்தினார். #MichelTemer #Lorrystrike
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விளையாடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத நெய்மர், ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறார்.
இந்நிலையில், நெய்மர் தனது கால் காயம் மற்றும் உலகக் கோப்பை எதிர்பார்ப்பு குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தனது காயம் மிக கடுமையானது என்றும், மூன்று மாதங்களாக விளையாடாமல் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயம் இருந்தபோதிலும், மருத்துவர்களின் அறிவுரைகளுக்குப் பிறகு தற்போது மன அமைதி கொண்டுள்ளதாகவும், அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். #Brazil #football #neymar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்