search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.வி.சிந்து"

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை நெஸ்லிகனை பி.வி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.
    பாலி:

    இந்தோனேசியாவின் பாலியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கிளாரா அசுர்மெண்டியை 17-21 21-7 21-12 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை நெஸ்லிகனை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

    நெஸ்லிகனும் பி.வி.சிந்துவும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். 3 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, காலிறுதி ஆட்டத்திலும் சிந்து ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா- சிக்கி ரெட்டி ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.

    இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    ×