search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். த.மா.கா. சார்பில் விஜயசீலன் போட்டியிடுகிறார்.

    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
    • 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஏப்ரல்-19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    28-ந்தேதி (வியாழக்கிழமை)-கரூர், ஈரோடு, 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 1-ந் தேதி (திங்கட்கிழமை)-திருநெல்வேலி, தென்காசி, 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-கன்னியாகுமரி, 4-ந்தேதி (வியாழக்கிழமை)-மதுரை, தேனி, 8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை தெற்கு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 40 தொகுதிகளிலும் தி.மு.க.-இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
    • தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி நிலவுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நிச்சயமாக தி.மு.க.வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.-இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

    நான் எனது தூத்துக்குடி தொகுதியில் மட்டும் இல்லாமல், மேலும் 10 அல்லது 12 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். சென்னை தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வது பற்றி திட்டம் உள்ளது. எனது தேர்தல் பிரச்சார பயணத் திட்டம் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி என்று பார்க்கும் போது, தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் நிச்சயமாக பா.ஜ.க.வை, தமிழக மக்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள்.

    அண்ணாமலை சவால் விட்டுக் கொண்டு இருக்கட்டும். தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது, பார்த்துக் கொள்ளட்டும். பா.ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்று நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் முக்கியமான ஒரு மாநிலமாக இருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதற்குக் காரணம், திராவிட இயக்கங்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு இருக்கின்ற, ஆட்சி நடப்பதால்தான்.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு ஒருபோதும் உரு வாகாது. அந்த நிலை ஏற்பட்டால், தமிழ்நாட்டை யாருமே காப்பாற்ற முடியாது. இப்போது முதலில் அனைவரும் சேர்ந்து, நமது இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நேரத்தில் மட்டும் வாரத்திற்கு 3, 4 நாட்கள் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார்.
    • பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    உடன்குடி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழகத்தில் ஒரு பிடி அளவு மண் கூட பா.ஜ.க. விற்கு சொந்தம் இல்லை என்கிற நிலையை உருவாக்கி காட்ட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாரத்திற்கு 3, 4 நாட்கள் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார்.

    ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சம்பவங்களின் போது எந்த நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை.

    தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அரசு தங்களை எதிர்த்தவர்களை கைது செய்து மிரட்டி வருகிறது. தமிழக மக்களை அவர்க ளால் ஏமாற்ற முடியாது. பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.விற்கு போடக்கூடிய வெடி என்பதை நினைத்து இந்த தேர்தலில் களப்பணியாற்ற வேண்டும்.

    இந்த மண்ணில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. 2-வது இடத்திற்கு வந்து விடக்கூடாது என்பதனை மனதில் வைத்து கொண்டு நாம் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்போடு இருக்கிறார்
    • நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    பின்னர் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்த பகுதி தண்ணீருக்கு பிரச்சனையான பகுதி. 361 கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிவடைய கூடிய நிலையில் உள்ளது.

    தூத்துக்குடியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வின் பாஸ்ட் (கார் கம்பெனி) நிறுவனத்தில் தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பயிற்சி கொடுத்து இங்கு இருக்க கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று முதலமைச்சர் உறுதி கொடுத்துள்ளனர்.

    இன்னும் தூத்துக்குடிக்கு பல புதிய முதலீடுகள் கொண்டு வர வேண்டும் என்று முதலமைச்சர் முனைப்போடு இருக்கிறார். இதன் மூலம் தூத்துக்குடி புகழ் பெற்ற நகரமாக மிளிரும்.

    நீட் தேர்வை ரத்து செய்ய ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்றும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது.

    ஒன்றியத்தில் மாற்றம் உருவாகும்போது தமிழகத்தில் இருந்து நீட் விலக்கப்படும். எங்களை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து எதையுமே செய்யாத எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை கேட்பது வருத்தமாக உள்ளது.

    மக்களுக்கு எதிராக பா.ஜ.க. கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் ஏற்றுக்கொண்டு அது வெற்றி பெறுவதற்காக வாக்களித்த இயக்கம் தான் அ.தி.மு.க.. அப்போது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோல்வி பயம் காரணமாக பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.
    • திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்வதால் தி.மு.க.வுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ளாரே?

    யாருக்கு காய்ச்சல் வந்துள்ளது என்று எங்கள் பொருளாளர் டி.ஆர்.பாலு தெளிவாக பதில் கூறி இருக்கிறார். அவருக்கு தோல்வி பயம் வருகிற காரணத்தலே அடிக்கடி வருகிறார். பிரதமர் வரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் வரும் பாரத பிரதமர், மழை வெள்ளம் வந்தபோது மக்களுக்கு ஆறுதல் சொல்லி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறதே? விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொது தொகுதி ஏன் வழங்கப்படவில்லை?

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரைக்கும், அவர்கள் கேட்க உரிமை உண்டு. அதற்காக தான் குழு அமைத்திருந்தோம். அந்த குழுவில் பேசி விவாதித்து பின்னர் திருப்தி அடைந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய அளவில் உள்ள கட்சி. மற்ற மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளை சரி செய்து விட்டு தமிழ்நாட்டில் இங்கு பேசுவதற்கு கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. அதையும் உட்கார்ந்து சுமூகமாக பேசி தீர்த்துள்ளோம். அதுவும் பொறுமையாக முடித்துள்ளோம். அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு முடிக்கவில்லை.

    பாஜக வளர்ந்து வருவது உண்மையா?

    நீங்களே உண்மையா என்று கூறுகிறீர்கள். நான் என்ன சொல்ல...

    திமுகவை கார்னர் செய்வதை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

    எங்கள் பிரசாரத்தின் மூலம் எதிர்கொள்வோம். ஏற்கனவே இருக்கும் கவர்னரே போதும் எங்களுக்கு பிரசாரம் செய்வதற்கு. இப்போது பிரதமரும் எங்களுக்கு பிரசாரம் செய்கிறார். இருவரும் சேர்ந்து திமுகவிற்கு பெரிய வெற்றியை தேடி தருவார்கள் என்பது உண்மை.

    வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளதாக பாஜக கூறுவது?

    இது குடும்ப கட்சி. திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப பாச உணர்வோடு அண்ணா, தலைவர் கருணாநிதி ஆரம்பித்து வைத்தது.

    திமுகவில் வாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பது இல்லை. உழைப்பின் அடிப்படையில் பணி கொடுக்கிறோம்.

    பாஜக 2 இடத்தை பிடிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது பற்றி?

    பாஜக வளர்ந்து வருவதாக அவர்கள் சொல்லி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்பு தெரியும். யார் நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெறுகிறார்கள் என்று தேர்தலுக்கு பின் தெரியும்.

    தேர்தல் அறிக்கை மத்திய அரசு திட்டங்கள் போல் உள்ளதே?

    எங்கள் கூட்டணி தான் மேல வரப்போகிறது. அந்த தைரியத்தில்தான் கொடுத்திருக்கிறேன்.

    பிரதமர் வேட்பாளராக உங்கள் மனசாட்சிபடி யாரை முன்நிறுத்துவீர்கள்?

    இந்தியா கூட்டணி வேட்பாளரை முன் நிறுத்துவேன் என்று கூறினார்.

    • ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
    • உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-

    * தமிழ்நாட்டிற்கு ' நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

    * மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும்.

    * மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    * ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    * ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

    * வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

    * தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்க்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

    * பாராளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

    * உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

    * புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.

    * ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.

    * ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

    * அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

    * மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
    • புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது.

    அதில் தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது.

    அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் பிரச்சனை என்.எல்.சி. விரிவாக்கம், வங்கி கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன.

    பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களும் இதில் இடம் பெறுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்த முறை கதாநாயகியாக கூட இருக்கலாம் என்று கனிமொழி ஏற்கனவே கூறி இருந்தார்.

    அதன்படி தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களை இடம் பெற செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நகல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதில் அவர் சில திருத்தங்களை செய்ததுடன் புதிய அம்சங்கள் சிலவற்றையும் இடம் பெற செய்யுமாறு கூறினார்.

    அதன்படி தி.மு.க. தேர்தல் அறிக்கை இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது முழு வடிவத்தில் பிரிண்ட் செய்யும் பணி தொடங்கி விட்டது. இந்த பணி 2 நாளில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

    • விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
    • பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    செய்துங்கநல்லூரில் பாலக்காடு விரைவு ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி கனிமொழி எம்.பி.யிடம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-


    தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? இவ்வளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும்.

    இதுவரைக்கும் தமிழ் நாட்டிற்கு என என்ன செய்துள்ளார்கள்? நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சாமானியனுக்கும் இவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? வேலை வாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அவர், கலாம் கனவு காணுங்கள் என்று கூறி உள்ளார்.கனவு காண்பது அவர்களது உரிமை.

    பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

    • கருத்து கேட்பு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது.
    • பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவ-மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, சென்னை மேயர் பிரியா உள்பட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்துக்களை பெற மாவட்டம் வாரியாக பிப்ரவரி 5-ந்தேதி முதல் இக்குழுவினர் சென்று பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டனர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிற்சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அந்தந்த மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், கனிமொழி எம்.பி. குழுவினரிடம் மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தது. இ-மெயில் மூலமும் ஏராளமான கருத்துக்கள் பெறப்பட்டிருந்தது.

    கடந்த மாதத்துடன் கருத்து கேட்பு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தேர்தல் அறிக்கையில் பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவ-மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சரியாக உள்ளதா? என்பதை குழுவினர் தற்போது பார்வையிட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கும் ஓரிரு நாளில் இதை அனுப்ப உள்ளதாகவும் குழுவில் இடம் பெற்றவர்கள் தெரிவித்தனர்.

    இதில் திருத்தங்கள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென குறைத்தது.
    • பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? என அவர் கேள்வி எழுப்பினார்.

    தூத்துக்குடி:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மகளிர் தின பரிசாக வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென குறைத்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிலிண்டர் விலையை எப்பொழுதோ குறைத்திருக்க முடியும். தேர்தல் வரும் சமயத்தில் தான் சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளனர். அதுவும் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யாரும் தி.மு.க.வுடன் பேச வேண்டாம். அவர்களாக வரட்டும். தொகுதி எண்ணிக்கையை சொல்லட்டும்.
    • இறுக்கமான சூழ்நிலையை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை கனிமொழி எம்.பி. மூலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்துள்ளது.

    சென்னை:

    நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க.-காங்கிரஸ் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதற்கு திரைமறைவில் நடந்த கசப்பு மற்றும் இனிப்பான சம்பவங்கள் பற்றி டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:-

    டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தான் ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதலில் 5 பிளஸ் 1 என்பதில் இருந்து ஏலம் தொடங்கியது. 6 பிளஸ் 1 என்று உறுதிப்படுத்தியதும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

    அதை கேட்டதும் இதற்கு மேல் ஒதுக்க முடியாது. நீங்கள் இழுத்தடித்தால் உங்களுக்குதான் சிக்கல். நீங்கள் பார்ப்பது கலைஞர் அல்ல. தளபதி. நீங்கள் உடன்படாவிட்டால் தளபதி உறுதிப்படுத்தி விட்டு அவர் வழியில் போய்க்கொண்டே இருப்பார் என்று கூறியிருக்கிறார்.


    டி.ஆர்.பாலுவின் இந்த கறார் பேச்சு டெல்லி தலைவர்களை ஆத்திரமூட்டி இருக்கிறது. அதன் புறகு தான் யாரும் தி.மு.க.வுடன் பேச வேண்டாம். அவர்களாக வரட்டும். தொகுதி எண்ணிக்கையை சொல்லட்டும். அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

    மேலிடத்தின் இந்த கசப்பான அனுபவத்தை தான் எங்களுக்குள் எந்த கசப்பும் இல்லை. இனிப்பாகவே இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சூசகமாக அடிக்கடி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

    இறுக்கமான சூழ்நிலையை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை கனிமொழி எம்.பி. மூலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்துள்ளது.

    டெல்லியில் நல்ல நட்புடன் இருக்கும் கனிமொழிதான் தனது பேச்சு சாதுர்யத்தால் கசப்பை மறந்து இனிமையான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்.

    அவருடன் நடந்த பேச்சில்தான் கூட்டணி இனிப்பாக முடிந்து இருக்கிறது என்றனர்.

    ×