search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாண்டிராஜ்"

    அண்ணன், தம்பிகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் திரையில் ஒன்றாக இணைந்து நடிக்க விருப்பப்படும் நிலையில், கார்த்தி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kadaikutty Singam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மாட்டுவண்டி பந்தையத்தில் வெற்றி பெறும் கார்த்திக்கு, அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் சூர்யா பரிசு அளிக்கும்படியாக ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். கார்த்திக்கு, சூர்யா வெற்றிக் கோப்பை அளிக்கும்படியான ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. 

    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்சாரில் யு சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜூலை 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் கேரள திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #KadaikuttySingam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. 
    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் கேரள திரையரங்கு உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் கைப்பற்றியிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் எல்லோருக்கும் வரலாம், ஆனால் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம் என்பதை இந்த படம் சொல்கிறது என்று ‘சின்ன பாபு’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா பேசினார். #KadaikuttySingam #Karthi
    சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்பிரியா, விஜி சந்திரசேகர், சூரி, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இந்த படம் தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-

    “தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பழமொழி உண்டு. கார்த்தியை நான் அப்படித்தான் பார்க்கிறேன். தம்பி கார்த்தியின் வளர்ச்சியும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் பக்குவமும் எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் என்னை ஆச்சரியப்படுத்தின.



    வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் எல்லோருக்கும் வரலாம். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. விவசாயிகளின் சிறப்பையும் பேசுகிறது. இந்த படத்தை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.” இவ்வாறு சூர்யா பேசினார்.

    நடிகர் கார்த்தி பேசும்போது, “விவசாயிகளை பெருமைப்படுத்தும் படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். இந்த படத்தில் நான் விவசாயியாக நடித்து இருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. அதோடு உறவுகளின் முக்கியத்துவத்தையும் படத்தில் காட்சிபடுத்தி உள்ளோம். குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படமாக தயாராகி உள்ளது” என்றார். #KadaikuttySingam #Karthi #Suriya

    கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிப்பதாக கூறினார். #KadaikuttySingam #Karthi
    சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்பிரியா, விஜி சந்திரசேகர், சூரி, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிவக்குமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, பாண்டிராஜ், ஜான் விஜய், ஸ்ரீமன், பானுப்ரியா, திலீப் சுப்புராயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

    இதில் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா நன்றி தெரிவித்து பேசியதாவது, 

    இந்த மாதிரியான கதையை மக்களுக்கு கொண்டு சொல்ல வேண்டும் என்று முயற்சியில் எடுக்கப்பட்ட படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் நடித்துள்ள பலரும் அவர்களது உணர்ச்சியையே கதாபாத்திரத்தில் பிரதிபலித்திருக்கின்றனர். உறவுகளுக்கு மருந்தளிக்கும் படமாக கடைக்குட்டி சிங்கம் நிச்சயமாக இருக்கும். பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிக்கிறோம். உறவுகளை மீண்டும் புதுப்பிக்க, பலம் சேர்க்கும் படமாக நிச்சமாக அமையும் என்றார். 



    நடிகர் கார்த்தி பேசும் போது, 

    இயக்குநர் பாண்டிராஜ், படத்தில் மட்டும் விவசாயத்தை உட்புகுத்தாமல், சென்னையிலேயே ஒரு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்த படத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். அனைவருக்கும் வித்தியாசமான கதபாத்திரங்களை கொடுத்திருக்கிறார். பட்டணத்திற்கு பிழைக்க சென்றவர்களை மீண்டும் கிராமத்திற்கு அழைக்கும் படம் தான் இது. அதேபோல் சொந்த பந்தங்கள் அழிந்து வருகிறது. சொந்தங்களை நியாபகப்படுத்தும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்றார். 

    படத்தில் தனது கதாபாத்திரம் என்னவோ, அதுவாகவே வந்து சத்யராஜ் அனைவரையும் கவர்ந்தார். #KadaikuttySingam #Karthi


    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா சய்கல் நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்தி கிராம பின்னணியில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டம். #KadaikuttySingam #Karthi
    2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. 

    முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா, பிரியா பவானி ‌ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பானுப்ரியா சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.



    ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், இசை - டி.இமான், கலை - வீரசமர், படத்தொகுப்பு - ரூபன், இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், தயாரிப்பு - சூர்யா, எழுத்து, இயக்கம் - பாண்டிராஜ்.

    “ இந்த படத்தில் கார்த்தி மாதம் ரூ.1½ லட்சம் சம்பாதிக்கும் கெத்தான விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். என்ஜினீயர், டாக்டர் போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட் முதல் பல இடங்களில் பெருமையாக எழுதிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.



    இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐ.டி வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். 

    படம் வருகிற ஜூலையில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi

    வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள அர்த்தனா, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். #Sema #Arthana
    பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அப்போது நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது “இயக்குநர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா அழுததாக சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பும். அதற்கு நாங்கள் காரணம் இல்லை. படப்பிடிப்பில் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. திருமணத்துக்கு பெண்பார்க்க செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் நகைச்சுவையாக படமாக்கி உள்ளோம்” என்றார்.



    பின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா கூறியதாவது:-

    “படப்பிடிப்பில் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்”

    இவ்வாறு அர்த்தனா கூறினார். #Sema #GVPrakash #Arthana

    வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா அவரது அடுத்தடுத்த படங்களிலும் கிராமத்து பின்னணியில் வருகிறார். #Sema #Arthana
    ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `செம'. வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தொண்டன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்த்தனா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். படம் பற்றி அர்த்தனா பேசும் போது,



    வள்ளிகாந்த் கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழக பின்னணியில், ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழினி பெயருக்கேற்றார் போல உண்மையானவள், நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குனர் வள்ளிகாந்துக்கு நன்றி".



    அர்த்தனாவின் அடுத்த இரண்டு படங்களும் கூட கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்கள் தான். அவை கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், விக்ராந்த்தின் வெண்ணிலா கபடி குழு. "இந்த இரண்டு படங்களிலுமே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை வாழ்வை 'செம' தொடங்கி வைத்திருக்கிறது. மே 25-ஆம் தேதி ரிலீஸுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நகரத்து பெண் கதாபாத்திரங்களிலும் நடிப்பேன்" என்றார். #Sema #GVPrakashKumar #Arthana

    வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் செம படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிடுகிறார். #Sema #GVPrakashKumar
    தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார். 

    அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படம் ஜி.வி.பிரகாஷூக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக `செம' படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

    இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளரான வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா விஜயகுமார் நடித்திருக்கிறார். யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    பசங்க புரொடக்சன்ஸ் சார்பில் பாண்டிராஜ் இந்த இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #Sema #GVPrakashKumar #Sivakarthikeyan

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டி.வி. ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #KadaikuttySingam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. வாங்கியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கிறது. 



    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    ×