search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96933"

    இந்தியாவில் 13 ஆண்டுகளில் முதல்முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Scooter



    உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை இருக்கிறது. எனினும், கடந்த சில மாதங்களில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது. இந்திய சந்தையில் 13 ஆண்டுகளில் முதல் முறையாக ஸ்கூட்டர் விற்பனை சரிந்துள்ளது.

    2018-19 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 67 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 0.27 சதவிகிதம் குறைவாகும். 



    முன்னதாக 2005-06 நிதியாண்டில் ஸ்கூட்டர் விற்பனையில் 1.5 சதவிகிதம் சரிந்தது. வேலைவாய்ப்பு பிரச்சனை காரணமாக ஸ்கூட்டர் மற்றும் இருசக்கர வாகன விற்பனை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    ஜனவரி மாதம் முதல் இருசக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை சரிவை சந்திக்க துவங்கியது. பெரும்பாலான ஸ்கூட்டர் மற்றும் இருசக்கர வாகன பிராண்டுகள் உற்பத்தியை குறைத்துவிட்டன. 

    இந்த வரிசையில் டி.வி.எஸ்., ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2019 ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #2019HondaGrazia



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2019 ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்டேட் கிரேசியா டாப்-எண்ட் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதன் பேஸ் வேரியண்ட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    ஹோன்டா கிரேசியா டிஸ்க் வேரியண்ட் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களை பெற்றிருக்கிறது. இதில் முற்றிலும் புதிய நிறம் பூசப்பட்டுள்ளது. பியல் சைரென் புளு நிறத்தில் கிடைக்கும் டாப் எண்ட் DX வேரியண்ட் விலை ரூ.300 அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2019 ஹோன்டா கிரேசியா DX விலை ரூ.64,668 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    புதிய நிறம் மற்றும் விலையை தவிர டாப்-எண்ட் கிரேசியா ஸ்கூட்டரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய 2019 கிரேசியா ஸ்கூட்டரிலும் 124.9 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.5 பி.ஹெச்.பி. பவர், 10.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஸ்கூட்டரின் இருசக்கரங்களிலும் 130 எம்.எம். டிரம் பிரேக்களும், முன்புறம் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய வகையில் 190 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இந்த பிரேக்களுடன் ஹோன்டாவின் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதியும் வழங்கப்படுகிறது. ஹோன்டா கிரேசியாவில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    2019 கிரேசியா ஸ்கூட்டர் முன்புறம் 90/90 R-12, பின்புறம் 90/100 R-10 அளவு சக்கரங்களில் டியூப்லெஸ் டையர்களுடன் கிடைக்கிறது. இவற்றுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 18 லிட்டர் ஸ்டோரேஜ், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குளோவ் பாக்ஸ், யு.எஸ்.பி. சார்ஜிங் சாக்கெட், 4-இன்-1 லாக் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ஃபேசினோ டார்க் நைட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #FascinoDarkKnightEdition



    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஃபேசினோ டார்க் நைட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டார்க் நைட் எடிஷன் மோட்டார்சைக்கிள் விலை ரூ.56,793 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மொபெட் வாகனம் புதிய நிறம் மற்றும் மரூன் நிற சீட் கொண்டிருக்கிறது. புதிய நிறம் தவிர ஃபேசினோ டார்க் நைட் எடிஷனில் யுனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம் (யு.பி.எஸ்.) வழங்கப்பட்டுள்ளது. இது ஹோன்டாவின் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் போன்று இயங்கும். இவைதவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை.



    இந்த ஆண்டு மட்டும் யமஹா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட YZF-R15 வெர்ஷன் 3, புதிய FZ FI, FZS FI, FZ 25, ஃபேசர் 25 மற்றும் இதர ஸ்கூட்டர்களில் யு.பி.எஸ். வசதியை வழங்கியது. இத்துடன் இந்த வாகனங்களில் பல்வேறு புதிய நிறங்களும் கொண்டிருந்தன.

    யமஹா ஃபேசினோ டார்க் நைட் எடிஷனில் தொடர்ந்து 113 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8.1 என்.எம். டார்க், சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் மற்றும் கிக் ஸ்டார்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.
    ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் 2019 நவி சி.பி.எஸ். ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. #HondaNaviCBS



    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2019 நவி ஸ்கூட்டரை சி.பி.எஸ். (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய 2019 ஹோன்டா நவி விலை ரூ.47,110 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடலின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நவி மாடலை ஹோன்டா மீண்டும் விற்பனைக்கு அறிவித்திருக்கிறது.

    125சிசி-க்கும் குறைந்த திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் சி.பி.எஸ். வசதி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏப்ரல் 1 ஆம் முதல் அமலாக இருப்பதையொட்டி ஹோன்டா புதிய மாடலில் சி.பி.எஸ். வசதியை சேர்த்திருக்கிறது. சி.பி.எஸ். தொழில்நுட்பம் வாகனங்களின் இருசக்கரங்களிலும் சம-அளவு பிரேக்கிங் திறன் வழங்கும்.



    புதிய ஹோன்டா நவி மாடலில் சி.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டிருப்பதை தவிர எவ்வித அம்சங்களும் புதிதாக வழங்கப்படவில்லை. இதன் வித்தியாச வடிவமைப்பு இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. எனினும், இந்த மாடல் சந்தையில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

    2019 ஹோன்டா நவி மாடலில் 110சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் ஹோன்டா ஆக்டிவா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 8.94 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா நவி மாடலின் முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹோன்டா நவி 2016 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஹோன்டா இந்தியாவின் ஆய்வு மற்றும் உற்பத்தி குழுவினரால் வடிவமைக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நவி விற்பனை ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் 2019 சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது. #Suzuki #SuzukiAccess125



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2019 அக்சஸ் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 2019 சுசுகி அக்சஸ் ஸ்கூட்டரில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் துவக்க விலை ரூ.56,667 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சி.பி.எஸ். வசதியில்லாத மாடலை விட ரூ.690 அதிகம் ஆகும்.

    சி.பி.எஸ். வசதியை தவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித கூடுதல் அம்சங்களும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் சி.பி.எஸ். இல்லாத ஸ்கூட்டரின் விலை ரூ.55,977 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் வரை விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் சுசுகி அக்சஸ் 125 அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. எளிய வடிவமைப்புடன் சுசுகி அக்சஸ் 125 ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 



    இத்துடன் அலாய் வீல்கள், அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஒன்-புஷ் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முன்பக்க பாக்கெட், சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 5.6 லிட்டர் எரிபொருள் கொள்ளலவு கொண்டிருக்கும் சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டர் லிட்டருக்கு 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என தெரிவித்துள்ளது. 

    2019 சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் முந்தைய மாடலில் உள்ளதை போன்று 125 சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.4 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் சுசுகி சமீபத்தில் அறிமுகம் செய்த பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஏ.பி.எஸ், எஸ்.ஆர். 125 சி.பி.எஸ்., பியாஜியோ வெஸ்பா 150 ஏ.பி.எஸ்., 125 சி.பி.எஸ். ஸ்கூட்டர்கள் வெளியானது. #aprilia



    இந்தியாவில் ஏப்ரல் 1, 2019 முதல் இருசக்கர வாகனங்களில் புதிய பாதுகாப்பு வழிமுறைகள் அமலாக இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது வாகனங்களில் ஏ.பி.எஸ். வசதியை சேர்ப்பதில் மும்முரமாக இயங்கி வருகின்றன.

    அந்த வரிசையில் அப்ரிலியா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட எஸ்.ஆர். 150 மற்றும் பியாஜியோ தனது வெஸ்பா 150 ஏ.பி.எஸ். ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் பியாஜியோ நிறுவனம் வெஸ்பா 125 மாடலில் காம்பி பிரேக் சிஸ்டம் எனப்படும் சி.பி.எஸ். வசதியை வழங்கி இருக்கிறது.

    எஸ்.ஆர். 150 விலை ரூ.80,850, கார்பன் ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.82,550 என்றும் எஸ்.ஆர்.150 ரேஸ் வேரியன்ட் விலை ரூ.89,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பியாஜியோ வெஸ்பா வி.எக்ஸ்.எல். விலை ரூ.98,310, எஸ்.எக்ஸ்.எல். விலை ரூ.1.02 லட்சம், எஸ்.எக்ஸ்.எல். 150 ரெட் எடிஷன் விலை ரூ.1.03 லட்சம், எலிகன்ட் ஏ.பி.எஸ். விலை ரூ.1.08 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    அப்ரிலியா மற்றும் பியாஜியோ சி.பி.எஸ். வசதி கொண்ட ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் வெளியிட்டுள்ளன. அதன்படி அப்ரிலியா 125 சி.பி.எஸ். விலை ரூ.69,250, வெஸ்பா வி.எக்ஸ்.எல்.125 சி.பி.எஸ். விலை ரூ.88,250, வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். 125 சி.பி.எஸ். விலை ரூ.91,450, வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல். 125 ரெட் எடிஷன் விலை ரூ.92,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். அம்சங்கள் தவிர புதிய ஸ்கூட்டர்களில் எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை. எனினும் புதிய ஸ்கூட்டர்களில் சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதி புதிய ஸ்டிக்கர்களின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் நான்கு கோடிகளை கடந்துள்ளது. #Honda #motorcycle #scooters



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் அதிவேகமாக நான்கு கோடிகளை கடந்துள்ளது. 

    ஸ்கூட்டர்களுக்கான அதிக வரவேற்பு பெற்று வருவதைத் தொடர்ந்து ஹோன்டா நிறுவனம் இந்த மைல்கல் கடக்க 18 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஹோன்டா நிறுவன வாகனங்கள் விற்பனை இரண்டு கோடிகளை கடந்துள்ளது.

    முன்னதாக 11 ஆண்டுகளில் ஒரு கோடி வாகனங்களையும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஒரு கோடி யூனிட்கள் விற்பனையை பதிவு செய்தது. ஹோன்டா நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் மாடலாக 2001 ஆம் ஆண்டு ஹோன்டா ஆக்டிவா வெளியானது.



    அறிமுகமாகி பல ஆண்டுகளை கடந்தும் ஹோன்டாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஆக்டிவா மாடல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹோன்டா சி.பி. ஷைன் மாடல் உலகில் அதிகம் விற்பனையாகும் 125சிசி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருப்பதாக ஹோன்டா தெரிவித்துள்ளது.

    உலகம் முழுக்க இதுவரை சுமார் 70 லட்சம் ஹோன்டா சி.பி. ஷைன் யூனிட்கள் இதுவரை விற்பனையாகி இருக்கிறது. ஹோன்டா சி.பி. யுனிகார்ன் 159 இதே காலத்தில் அறிமுகமாகி இன்றுவரை பிரபலமான மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு வாக்கில் ஹோன்டா நிறுவனம் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக இருக்கிறது.

    "குறுகிய காலக்கட்டத்தில் ஹோன்டா பிரான்டு இத்தகைய மைல்கல் பெற்று இருப்பதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம். துவக்கம் முதல் ஹோன்டா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் வகையில் அதிக தரமுள்ள புதுமையான பொருட்களை வழங்கும் நோக்கம் கொண்டுள்ளது" என ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மினோரு காடோ தெரிவித்தார்.
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. #Honda #scooters



    இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா இருக்கிறது. ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் மட்டும் சுமார் 2.5 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இத்தனை ஸ்கூட்டர்களை ஒரே நிறுவனம் விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

    ஹோன்டா நிறுவனம் இந்த மைல்கல் விற்பனையை 17 ஆண்டுகளில் கடந்து இருக்கிறது. முன்னதாக ஒரு கோடி ஸ்கூட்டர் விற்பனையை ஹோன்டா 13 ஆண்டுகளில் கடந்த நிலையில், அடுத்த ஐம்பது லட்சம் விற்பனையை வெறும் நான்கே ஆண்டுகளில் கடந்து இருக்கிறது.

    ஸ்கூட்டர்களுக்கான சந்தையை உருவாக்குவதோடு, இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்க ஹோன்டா ஆக்டிவா இந்தியர்களின் பயணத்தை மாற்றியமைத்தது. எங்கள் பிரான்டு மீது 2.5 கோடி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.



    இந்தியாவில் ஹோன்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை 18 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அறிமுகமான சமயத்தில் ஸ்கூட்டர் சந்தை 10 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்சமயம் 32 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு இரண்டாவது ஸ்கூட்டராக ஹோன்டா மாடல் இருக்கிறது.

    இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஹோன்டா நிறுவனம் 57 சதவிகித பங்குகளை பெற்றுள்ளது. இன்றும் 125சிசி பிரிவில் ஹோன்டா ஆக்டிவா அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Destini125



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டெஸ்டினி 125 மாடலின் துவக்க விலை ரூ.54,650 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹீரோ நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டர் பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. ஹீரோ டெஸ்டினி 125 LX மற்றும் VX என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட்டான LX விலை ரூ.54,650 என்றும் டாப் என்ட் VX வேரியன்ட் விலை ரூ.57,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டெஸ்டினி 125 ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர் குரோம் இன்சர்ட், முன்பக்க அப்ரான், சைடு குரோம் கார்னிஷ், ஸ்டைலிஷ் கேஸ்ட் வீல்ஸ், பாடி கலர் மிரர், டூயல்-டோன் சீட் போன்ற பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



    ஹீரோ டெஸ்டினி 125 நோபிள் ரெட் (VX வேரியன்ட் மட்டும்) , செஸ்ட்நட் பிரான்ஸ், பேந்தர் பிளாக் மற்றும் பியல் வைட் சில்வர் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் i3S வசதி வழங்கப்பட்டுள்ளதால், அதிக மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹீரோ டெஸ்டினி 125 பெற்றிருக்கிறது. இத்துடன் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு ஸ்டான்ட் இன்டிகேட்டர், ரிமோட் கீ ஓப்பனிங் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. 

    டாப் என்ட் வேரியன்ட்டான VX மாடலில் மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் பூட் லைட் போன்ற கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்பக்கம் சிங்கிள் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹீரோ டெஸ்டினி 125 மாடலில் புதிய 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், எனர்ஜி பூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 பி.ஹெச்.பி. @6,750 ஆர்.பி.எம். பவர், 10.2 என்.எம். டார்கியூ @5,000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
    இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பேட்டரி வாகனங்களை வாங்க பலரும் முன்வருகின்றனர். #BatteryBike
    பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதுதான் ஒரே தீர்வு என்கிற ரீதியில் அரசு, பேட்டரி வாகனங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளது.

    சுற்றுப் புறச்சூழலை பாதுகாக்கவும் இத்தகைய வாகனங்கள் பெருமளவு உதவும் என்பதால் அரசு இதற்கு மானியமும் வழங்குகிறது. நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களும், இப்போது பேட்டரியில் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ரூ.10 செலவில், 70 கி.மீ. தூரம் ஓடுகின்றன என்றபோது, இத்தகைய பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பற்றி அறிவது அவசியமாகிறது.

    எதிர்காலத்தில் பேட்டரி வாகனங்கள்தான் என்ற நிலை உருவாகும் சூழல் வெகு தூரத்தில் இல்லை. எனவே இப்போது சந்தைக்கு வந்துள்ள பேட்டரி இரு சக்கர வாகனங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியில் இவை எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் சிறந்த பேட்டரி வாகனத்தை வாங்க முடியும்.


    ஏதெர் 450

    பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புதிய தயாரிப்புதான் இந்த பேட்டரி ஸ்கூட்டர். இந்த நிறுவனம் தனியாருடன் கூட்டு சேர்ந்து சார்ஜிங் மையத்தையும் பெங்களூருவில் நிறுவி வருகிறது. இது 3.9 விநாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டும். இதன் முன்பகுதியில் 7 அங்குல தொடு திரை வசதி கொண்ட டேஷ் போர்டு உள்ளது.

    இது வாகனம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும். பேட்டரிக்கு 3 ஆண்டு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. விலை ரூ. 1.24 லட்சம். இதில் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும்.

    ஹீரோ என்.ஒய்.எக்ஸ். இ5

    இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ ஆகும். இந்த ஸ்கூட்டரிலும் லித்தியம் அயன் ரக பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பிரஷ் இல்லாத டி.சி. ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், பின்புற இருக்கையை மடித்துவிட்டு அதில் லோடு ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

    பின் இருக்கையை மடித்து ஓட்டுபவர் முதுகுப்பகுதியில் சாய்ந்து கொள்ளலாம். இதன் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.50,490. ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும்.

    ஒகினாவா பிரைஸ்

    இந்தியன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினாவா இரண்டு பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. பிரைஸ் மற்றும் ரிட்ஜ் என்ற பெயரில் இவை அறிமுகம் ஆகியுள்ளன. இதில் ஒரு கி.மீ. தூரம் பயணிக்க 10 காசு மட்டுமே செலவாகும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மூன்று கண்கவர் வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

    பிரைஸ் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், நடுப்பகுதியில் லாக் செய்யும் வசதி, திருடு போவதை எச்சரிக்கும் அலாரம், பொத்தானை அழுத்தி ஸ்டார்ட் செய்யும் வசதி, ஸ்கூட்டர் இருக்குமிடம் அறியும் வசதிகள் உள்ளன.

    மேலும் மொபைல் சார்ஜ் செய்வதற்கான போர்ட், தள்ளிச் செல்லும்போது உதவும் முன்புற, பின்புறம் சுழலும் வசதி, பகல் நேரங்களில் ஒளிரும் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ. 59,889. அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ. ஆகும். பேட்டரி சார்ஜ் செய்தால் 170 கி.மீ. முதல் 200 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 6 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகும். #BatteryBike 
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #scooter



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜூப்பிட்டர் கிரான்ட்: டிரம் மற்றும் டிஸ்க் என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.55,936 மற்றும் ரூ.59,648 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    டாப்-என்ட் மாடலான கிரான்ட் வேரியன்ட் பல்வேறு புகிய அம்சங்கள் மற்றும் அப்டேட்களை கொண்டுள்ளது. ஜூப்பிட்டர் கிரான்ட் மாடல் ஸ்டார்லைட் புளு என புதிய நிறத்தில் கிடைக்கிறது.

    டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிரான்ட் மாடலின் புதிய அம்சங்கள்: எல்.இ.டி. ஹெட்லைட்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய சீட் கவர்கள், டிஸ்க் பிரேக் வேரியன்ட்டில் டைமன்ட்-கட் அலாய் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்டான்டர்டு வேரியன்ட்டில் உள்ளதை போன்றே இடம்பெற்றிருக்கிறது.



    கூடுதல் அ்மசங்கள் தவிர புதிய ஸ்கூட்டரின் மெக்கானிக்கல் அம்சங்கள் மாற்றப்படவில்லை. அந்த வகையில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிரான்ட் மாடலில் 109சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 8 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டரில் 12-இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 30 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷனஅ வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் இரண்டு சக்கரங்களிலும் 130 எம்.எம். டிரம் பிரேக்களும், விரும்புவோர் பொருத்திக் கொள்ள 220 எம்.எம். முன்பக்க டிஸ்க் கிடைக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் இந்திய விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. #Jupiter



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஜூப்பிட்டர் கிரான்ட் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. 

    ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் ஸ்கூட்டர் டி.வி.எஸ். விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் பல்வேறு புதிய அம்சங்கள், முற்றிலும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் வெளிப்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி முன்பக்கம் கிரான்ட் பேட்ஜிங் மற்றும் புதிய நிறம் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் கால்வைக்கும் பகுதி மற்றும் கால் வைக்கும் பெடல்களில் பெய்க் கலர் பூசப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: GaadiWaadi.com

    பிரீமியம் தோற்றம் பெற ஏதுவாக ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் மாடலில் டான் லெதர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்க மட்கார்டு க்ரோம் ஸ்ட்ரிப் செய்யப்பட்டுள்ளது. இது ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஜூப்பிட்டர் கிரான்ட் மாடலில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    ஜூப்பிட்டர் கிரான்ட் எடிஷன் மாடலில் 109.7சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் சி.வி.டி. கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 56 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்றுள்ளது.
    ×