search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபம்"

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி சன்னதி கொடிமரம் அருகில் மற்றும் 6 இடங்களில் அணையா தீபம் வைக்கப்பட்டுள்ளது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கற்பூரம், விளக்கேற்ற வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு பதில் அணையா தீபம் ஏற்றி பாதுகாக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது.

    அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி சன்னதி கொடிமரம் அருகில், அம்மன் சன்னதி கொடிமரம் அருகில், கால பைரவர் சன்னதி, துர்க்கையம்மன் கோவில், சோமாசிபாடி முருகர் கோவில், அடிஅண்ணாமலை கோவில் ஆகிய 6 இடங்களில் அணையா தீபம் வைக்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக சினிமா நடிகர் அம்சவர்தன் ரூ.3 லட்சம் மதிப்பில் 6 அணையா தீபங்களை நன்கொடையாக கோவிலுக்கு வழங்கி, அதனை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். அப்போது கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    இந்த அணையா தீபத்தில் பக்தர்கள் எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் நிறையும் வகையில் கலன்கள் வைத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எளிதில் கருகாத திரி போடப்பட்டு உள்ளது. தீபம் அணையாமல் இருக்க காற்று சென்று வர துவாரம் அமைக்கப்பட்டு உள்ளது. 
    விளக்கு ஏற்றுவது இறைவழிபாட்டின் ஒரு பகுதி என்பதால்தான், வீட்டிலும், கோவில்களிலும் கூட இறைவனை பலரும் விளக்கேற்றியே வழிபடுகிறார்கள்.
    காலையும், மாலையும் வீட்டில் விளக்கு ஏற்றுவது ஐஸ்வரியத்தை வழங்கும் என்பது ஐதீகம். ‘விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது’ என்பது பழமொழி. விளக்கு ஏற்றுவது இறைவழிபாட்டின் ஒரு பகுதி என்பதால்தான், வீட்டிலும், கோவில்களிலும் கூட இறைவனை பலரும் விளக்கேற்றியே வழிபடுகிறார்கள்.

    தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே களை இழந்தது போல் தோன்றும்.

    நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை பெறுகிறது.

    நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது. சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

    நெய் தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30 மணிக்கு ஏற்றுவதே நமது மரபு. இதை ‘கருக்கல் நேரம்’ என்பார்கள்.

    சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பு இருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். ஆகையால்தான் அந்த நேரத்தில் விளக்கேற்றுவது நல்லது. 
    அந்தி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.
    வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முக தீபம் ஏற்றவேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியரின் கோரிக்கைகள் நிறைவேறும்.

    அந்த விளக்கைத் துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும் லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.

    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அந்தி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.
    திசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும். எந்த திசை நடப்பவர்கள் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    அனைத்து திசை நடப்பவர்களும் முதலில் ஆனைமுகனை வழிபட வேண்டும். அதன்பிறகு...

    சூரியதிசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

    சந்திரதிசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மைதரும்.

    செவ்வாய் திசை நடப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவது முன்னேற்றம் தரும்.

    புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

    வியாழதிசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்திதரும்.

    சுக்ரதிசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

    சனிதிசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

    ராகுதிசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேதுதிசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட்டு வரவும்.

    இவை நீங்கலாக செவ்வாய்திசை சனிபுத்தி நடப்பவர்களும், வியாழதிசை சுக்ரபுத்தி நடப்பவர்களும் இதுபோல பகை கிரக திசாபுத்தி ஆதிக்கம் நடை பெறும் பொழுது, வைரவர் வழிபாடு, வராஹி வழிபாடு, பிரதோஷ வழிபாடுகள் நன்மையைத் தரும்.

    மேற்கண்டவாறு திசைக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற இயலும். 
    ×