search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96985"

    மும்பையில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் ரூ.39 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் வெளிநாட்டை சேர்ந்த 4 பேர் போலீசார் கைது செய்தனர். #Mumbai #DrugSmuggling
    மும்பை:

    மும்பை அந்தேரி பகுதியில் வெளிநாட்டிற்கு கூரியர் நிறுவனத்தின் மூலம் போதைப்பொருள் கடத்த உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பெரிய பார்சலுடன் நடந்து சென்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதை பிரித்து சோதனையிட்டபோது, ஜன்னலுக்கு பயன்படுத்தும் திரைச்சீலைகள் இருந்தன. அவற்றில் பெரிய வளையங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த வளையங்களை உடைத்து பார்த்தபோது அதில் 6 கிலோ 492 கிராம் எடையுள்ள ‘கோகைன்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் கார்ல பிண்டே (வயது 35), நைஜீரியாவை சேர்ந்த நீரஸ் ஒகோவா (35), சைமன் (32), மைக்கேல் ஓவ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.38 கோடியே 95 லட்சம் என அவர்கள் தெரிவித்தனர்.
    கல்வி, வேலைவாய்ப்பில் குஜ்ஜார் இன மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு ராஜஸ்தானில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது. #Gujjarsdharna #dharnaonrailtracks
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  

    இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ம் ஆண்டில் அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.



    இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தின்மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் நேற்றும் நேற்று முன்தினமும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் 3 ரெயில்கள் வெவ்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஒரு ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் போராட்டத்தால் சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    குறிப்பாக, இன்று பிற்பகல் தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இப்பகுதியில் அசம்பாவிதம் மேலும் அதிகரிக்காத வகையில் கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். #Gujjarsdharna #dharnaonrailtracks  
    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #GujjarsProtest #GujjarsQuota
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2017ல் மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

    இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் ரெயில்  மறியல் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும்போது, ஏன் எங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாது? என குஜ்ஜார்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    டெல்லி-மும்பை பிரதான ரெயில் பாதையில், சவாய் மதோபூர் மாவட்டம் மக்சுதன்புரா என்ற இடத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் தண்டவாளத்தில் அணிவகுத்துச் சென்று, பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரெயில்கள், சேர வேண்டிய இடங்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டன. 7 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டது.



    இன்றும் ரெயில் மறியல் போராட்டம் நீடிக்கிறது. போராட்டக்காரர்கள் தண்டவாளத்தை மறித்து கூடாரங்கள் அமைத்து, அதற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் காரணமாக இன்றும் மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. அவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். #GujjarsProtest #GujjarsQuota
    லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பான கோரிக்கையை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்றதால் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டதை இன்று கைவிட்டார். #AnnaHazare #DevendraFadnavis #AnnaHazarefast
    மும்பை:

    தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
     
    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். 

    உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.



    இதற்கிடையே, 7-வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று சந்தித்தார். அப்போது, வரும் சட்டசபை தொடரில் லோக்பாலுக்கான புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என முதல் மந்திரி பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார்.

    அவருடன் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே ஆகியோரும் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவிடம் வலியுறுத்தினர். 

    இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசு தரப்பில் பட்னாவிஸ் அளித்த வாக்குறுதியை ஏற்று அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். #DevendraFadnavis #AnnaHazare #AnnaHazarefast

    மும்பையில் பப்ஜி கேமுக்கு அடிமையான வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #MumbaiPUBGgame #youthSuicide
    மும்பை:

    மும்பையில் நேரு நகரில் உள்ள குர்லா பகுதியில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர், பெற்றோரிடம் பப்ஜி கேம் விளையாடுவதற்காக  ரூ.37000 மதிப்புடைய விலை உயர்ந்த செல்போன் ஒன்றைக் கேட்டுள்ளார். இதனை பெற்றோர் வாங்கித்தர மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இதனையடுத்து பெற்றோருக்கும் வாலிபருக்கும் இடையே நடைபெற்ற கடும் வாக்குவாதத்தினை தொடர்ந்து பெற்றோர் ரூ.20,000-க்குள் செல்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து அந்த வாலிபர் வீட்டின் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில், கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் விளையாட்டினால் பல குழந்தைகள் தேர்வுகளில் கவனம் செலுத்துவது குறைந்து வருகிறது எனவும், இதனை தடை செய்ய வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு 11 வயதுடைய மாணவன், தனது தாயின் உதவியோடு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #MumbaiPUBGgame #youthSuicide   

    லோக்பால் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் நாளை காலை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
    மும்பை:

    காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கியதை தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.

    அப்போது பேசிய அவர், இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி போராட்டம் நடத்துவேன் என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, லோக்பாலை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே லோக்பாலை வலியுறுத்தி மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியும் லோக்பால் சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தாமதப்படுத்தி வருகிறார். ஊழலுக்கு எதிரான மசோதாவை கொண்டு வரவேண்டும் என மோடி எண்ணியிருந்தால் அதற்காக 5 ஆண்டுகள் காத்திருக்க மாட்டார்.

    எனவே, லோக்பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி எனது சொந்த கிராமமான ரலேகான் சிந்தியில் நாளை காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.

    எனது உண்ணாவிரதம் எந்த கட்சியையும் எதிர்த்தோ மற்றும் தனிப்பட்ட நபரை எதிர்த்தோ நடத்தப்படுவதில்லை. நாட்டின் நலனுக்காகவே உண்ணாவிரதம்  இருக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
    பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் என சிவசேனா தெரிவித்துள்ளது. #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
    மும்பை:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.

    தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். 
     
    பிரியங்காவுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள்  என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷா கயாண்டே கூறுகையில், பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி குணங்கள் தென்படுகிறது. எனவே, வரும் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியின் முகத்தை காண்பார்கள் என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
    தலைமறைவாக உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #ZakirNaik #ED
    மும்பை:

    வங்கதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி வங்கதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.
     
    அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.

    தற்போது மலேசியாவில் உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று உத்தரவிட்டது. #ZakirNaik #ED
    மும்பையில் டான்ஸ் பார்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு நடன அழகிகளும், டான்ஸ் பார் உரிமையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #DanceBars #SC
    புதுடெல்லி:

    மும்பையில் நட்சத்திர ஓட்டல்கள் தவிர சிறிய மது பார்களில் நடனம் அனுமதிக்கப்படுகிறது.

    டான்ஸ் பார்களில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாகவும், பெண்களை சித்ரவதை செய்வதாகவும் கூறி மராட்டிய அரசு டான்ஸ் பார்களுக்கு தடை விதித்தது.

    அதன்பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் டான்ஸ் பார்களுக்கு அரசு அனுமதி அளித்தது. டான்ஸ் பார்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்பட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது.

    இதை எதிர்த்து டான்ஸ் பார் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், டான்ஸ் பார்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி அனுமதி அளித்தது.

    டான்ஸ் பார்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்ற மராட்டிய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். நடனம் ஆடும் பெண்கள் மீது பணத்தை வாரி இறைக்க கூடாது, நடனமாடும் மேடையும், மது அருந்தும் மேடையும் அருகருகே இருக்க கூடாது போன்ற நிபந்தனைகள் விதித்து உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு நடன அழகிகளும், டான்ஸ் பார் உரிமையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #DanceBars #SC
    லோக்பாலை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
    மும்பை:

    காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்.

    இதற்கிடையே, லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கியதை தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.

    அப்போது பேசிய அவர், இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி போராட்டம் நடத்துவேன் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், லோக்பாலை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், லோக்பாலை வலியுறுத்தி மகாராஷ்டிராவின் ராலேகான் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கவுள்ளேன்.

    நீங்கள் நாட்டை ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்துக்கு கொண்டு செல்கிறீர்கள். காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.

    நாட்டு மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறீர்கள். இதை கண்டித்து எனது கிராமமான ரலேகான் சித்தியில் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரி, ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு எங்கே கொட்டிக் கிடக்கிறது? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. #Shivsena #GeneralCategoryQuota #PMModi
    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கிடையே, மராட்டிய மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள சோலாப்பூர் நகரில் சோலாப்பூர்-உஸ்மானாபாத் இடையேயான 98 கி.மீ. தூர நான்கு வழிச்சாலையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசுகையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்று சாதனை என்று பெருமிதத்துடன் கூறினார். 



    இந்நிலையில், இதுதொடர்பாக சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் பகுதியில் பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

    அதில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரி, ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு எங்கே கொட்டிக் கிடக்கிறது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு விளையாடுகிறது என தெரிவித்துள்ளது. #Shivsena #GeneralCategoryQuota #PMModi
    மும்பை நகரில் புத்தாண்டு இரவின்போது ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் ரோந்துப் பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். #NewYearCelebrations #Eveteasing #MumbaiPolice
    மும்பை:

    நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறும்.

    இந்நிலையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 

    இதுதொடர்பாக, மும்பை துணை கமிஷனர் மஞ்சுநாத் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    பெண்களை ஈவ் டீசிங் செய்வது மற்றும் பாலியல் பலாத்காரங்கள் ஆகியவை நடக்காமல் கண்காணிப்பதற்காக மும்பை நகருக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சிறப்பு போலீசார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். #NewYearCelebrations #Eveteasing #MumbaiPolice
    ×