search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97076"

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீடு மற்றும் ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #iphone


    ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 9, ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ் மாடல்களை செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இவற்றில் ஐபோன் 9 மாடல் ஆப்பிளின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும் என்றும், இதில் ஐபோன் X போன்ற 6.1 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன். ஃபேஸ் ஐடி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 11 மற்றும் 11 பிளஸ் மாடல்கள் ஐபோன் X2 மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப், 7nm A11 சிப்செட், புத்தம் புதிய யு.எஸ்.பி.-சி சார்ஜர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் 2018 ஆப்பிளின் விலை குறைந்த மாடலாக ஐபோன் 9 இருக்கும் என கூறப்படுகிறது. 



    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி 2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும் இந்த அம்சங்கள் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட்9 அம்சங்களை போன்றே இருக்கிறது.

    புதிய OLED மாடல்கள் பட்ஜெட் ரக மாடல்களை விட விலை அதிகமாக இருக்கும் என்றும் பட்ஜெட் ரக 6.1 இன்ச் ஐபோன் விலை 699 முதல் 749 டாலர்கள் முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. ஐபோன் X 2018 மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களின் விலை முறையே 899 முதல் 949 மற்றும் 999 டாலர்கள் முதல் துவங்கும் என தெரிகிறது.

    2018 ஐபோன்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் விற்பனை துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டில் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #Apple #iPhone


    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை 6.1 இன்ச், 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் மற்றும் 5.8 இன்ச் ஐபோன் என மூன்று அளவுகளில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 6.1 இன்ச் மாடலின் விலை 550 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், 6.1 இன்ச் எல்.சி.டி. மாடலின் விலை 699 முதல் 749 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஐபோன்களின் விற்பனை குறைந்ததாலேயே இந்த ஆண்டு மாடல்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி காரணமாக குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.



    மேலும் மூன்று ஐபோன்களிலும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்டலாம் என்றும் பட்ஜெட் விலை ஐபோன் மாடல் அதிகம் உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் 5.8 இன்ச் மாடலின் விலை 899 முதல் 949 டாலர்கள் என்றும், 6.5 இன்ச் மாடலின் துவக்க விலை 999 டாலர்கள் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    தற்போதைய ஐபோன் X விலை 999 டாலர்கள் முதல் துவங்குகிறது. 2018 OLED ஐபோன் மாடல்களில் 512 ஜிபி வேரியன்ட் மற்றும் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் கட்டண குறைப்பு சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புகைப்படம் நன்றி - TrendForce
    ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவிருக்கும் ஐபோன்களில் ஒரு மாடல் இந்தியாவில் வெளியாகாது என கூறப்படுகிறது. #Apple #iPhone


    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிடும் ஐபோன்களில் ஒரு மாடலில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் ஸ்டான்ட்பை வசதியுடன் வரும் ஐபோன் மூலம் பயனர்கள் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும்.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் டூயல் சிம் ஐபோன் மாடலை சீனாவில் மட்டும் தான் வெளியிடும் என கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் தகவல்களின் படி, டூயல் சிம் ஸ்லாட் கொண்ட விலை குறைந்த 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் சீனாவில் மட்டும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    செப்டம்பர் வெளியீட்டுக்கான புதிய ஐபோன்கள் ஃபாக்ஸ்கானில் நடைபெறுவதாகவும், இந்த ஆண்டு நான்கு பிரத்யேக மாடல் நம்பர்களில் (801, 802, 803, மற்றும் 804) உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் 801 மற்றும் 802 மாடல்களில் முறையே 5.8 மற்றும் 6.5 இன்ச் ஐபோன்கள் என்றும் மற்ற இரண்டு மாடல்கள் 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன்கள் என்றும்; ஒன்றில் ஒற்றை சிம் வசதியும், மற்றொரு மாடலில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.



    சீனாவில் டூயல் சிம் ஸ்லாட் பயன்பாடு அதிகமாக இருப்பதாலும், சீன போட்டியை எதிர்கொள்ளும் விதமாகவும் புதிய ஐபோன் வெளியீடு அமைந்துள்ளது. ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்சு 6.1 இன்ச் ஐபோன் மாடல்களை இந்த ஆண்டு வெளியிடும் என தெரிவித்திருந்தார்.

    இவற்றில் டூயல் சிம் வேரியன்ட் வழக்கமான ஒற்றை சிம் வேரியன்ட்-ஐ விட விலை அதிகமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார், எனினும் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் வெளியிடப்படும் என்பது குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

    கியோ வெளியிட்ட தகவல்களின் படி டூயல் சிம் ஸ்லாட் கொண்ட 6.1 இன்ச் ஐபோனின் விலை 650 டாலர்களில் இருந்து 750 டலார்கள் என்றும், வழக்கமான ஒற்றை சிம் வெர்ஷன் விலை 550 டாலர்களில் இருந்து 550 டலார்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Apple #iPhone
    ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததையொட்டி, அந்நிறுவன ஊழியர்களுக்கு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடிதம் எழுதியிருக்கிறார். #TimCook


    உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் கோடி) கடந்ததற்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

    புதிய மைல்கல் சாதனையையொட்டி ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் எழுதியிருக்கும் கடிதத்தில்,

    “இன்று ஆப்பிள் நிறுவனம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்துள்ளது. வியாழக்கிழமை பங்குச் சந்தை நிறைவின் போது ஆப்பிள் பங்குகளின் விலை 207.39 டாலர்களாக இருந்தது, அதன்படி ஆப்பிள் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களாக உள்ளது. நாம் பெருமை கொள்ள பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன, இது நம் வெற்றியின் மிக முக்கிய அங்கம் கிடையாது. ஆப்பிள் நிறுவன புதுமை, நம் சாதனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை, நம் மதிப்புகளுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதற்கான வெளிப்பாடாக நிதிநிலை அறிக்கைகள் இருக்கின்றன.”

    “மிகப்பெரும் சவால்களையும் மனித ஆற்றலின் திறன் மூலம் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தான் ஸ்டீவ் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார். உலகை மாற்ற வித்தியாசமாக நினைப்பவர்களே அவற்றை செய்து முடிக்கின்றனர். இன்றைய உலகில், நம் இலக்கு இதுவரை இருந்ததில், மிகமுக்கியமான ஒன்று ஆகும். நம் சாதனங்கள் சுவாரஸ்யம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

    இதுபோன்ற சூழ்நிலைகளில் ஸ்டீவ் செய்ததை போன்றே, நாம் ஆப்பிள் நிறுவனத்தின் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கில், நமது பணியை ஒன்றிணைந்து சிறப்பாக செய்ய வேண்டும்.”

    இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #TimCook #Appletrillion
    ஆப்பிள் நிறுவன பங்குகள் 207.05 டாலர்கள் அளவில் அதகரித்ததைத் தொடர்ந்து ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Appletrillion


    ஆப்பிள் இன்க் நிறுவன மதிப்பு முதல் முறையாக ஒரு லட்சம் கோடி டாலர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது. 

    கடந்த பத்து ஆண்டுகளில் ஐபோன் விற்பனை மூலம் இத்தகைய இலக்கை எட்டியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பங்குகள் 2.8 சதவிகிதம் அதிகரித்து 207.05 டாலர்களில் நிறைவுற்றது. அந்நிறுவனத்தின் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் ஆப்பிள் பங்குகள் அதிகரிக்க துவங்கின.

    அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஒரு லட்சம் கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,87,05,50,00,00,000.00) மதிப்பிடப்பட்ட முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. 

    2007-ம் ஆண்டு முதல் ஐபோன் விற்பனை துவங்கிய போது, ஆப்பிள் நிறுவன பங்குகள் சுமார் 1,100% அதிகரித்தது. கடந்த ஆண்டு மும்மடங்கு அதிகரித்தது. 1980-ம் ஆண்டு பங்குச் சந்தையில் இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை ஆப்பிள் பங்குகள் மதிப்பு 50,000% அதிகரித்து இருக்கிறது.



    1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் காரேஜில் துவங்கிய ஆப்பிள் நிறுவனம், துவக்க காலத்தில் தனது மேக் கம்ப்யூட்டர்களுக்கு பிரபலமாக அறியப்பட்டது. அதன் பின் ஆப்பிள் ஐபோன்கள் அந்நிறுவன பொருளாதாரத்தை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2011-ம் ஆண்டு மரணித்ததைத் தொடர்ந்து டிம் குக் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று நிறுவனத்தின் லாபத்தை இருமடங்கு அதிகரிக்க செய்தார். 2006-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் 2000 கோடி டாலர்கள் வருவாயும், லாபமாக 200 கோடி டாலர்களை பெற்றது.

    கடந்த ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவன விற்பனை 11 மடங்கு 22,900 கோடி டாலர்களாக அதிகரித்து, இதன் மொத்த வருவாய் இருமடங்கு அதிகரித்து 4840 கோடி டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பொது வெளியில் அறிவிக்கப்பட்ட, அமெரிக்காவின் அதிக லாபம் பெறும் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. #Appletrillion #Apple
    ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு விற்பனை அறிக்கையில் சந்தை எதிர்பார்ப்புகளை தவற விட்டிருந்தாலும், கணிசமான லாபம் ஈட்டியிருக்கிறது. #AppleEarnings


    ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டு விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட அளவு ஐபோன் விற்பனை இல்லை என்றாலும், அதிக விலை கொண்ட மாடல்களால் ஆப்பிள் லாபம் அதிகளவு பாதிக்கப்படவில்லை. 

    ஜூன் மாதம் வரையிலான காலாண்டு நிலவரப்படி ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 4.13 கோடி ஐபோன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட வெறும் 1% மட்டுமே அதிகம் ஆகும். சராசரியாக ஐபோன் விற்பனை கட்டணம் எதிர்பார்க்கப்பட்ட 694 டாலர்களை விட அதிகமாக இருந்தது. அந்த வகையில் ஐபோன் சராசரி விற்பனை விலை 724 டாலர்களாக இருந்தன.

    இந்த காலாண்டிலும் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் X இருந்தது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மாடலை 999 டாலர்கள் விலையில் அறிமுகம் செய்தது. அதிக விலை காரணமாக ஆப்பிள் லாபத்தை இந்த மாடல் அதிகம் பாதிக்காமல் பார்த்து கொண்டது. 



    இதுதவிர ஆப்பிள் சேவைகளான ஆப் ஸ்டோர், ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் பே உள்ளிட்டவை ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் 31% வரை அதிகரிக்க காரணங்களாக இருந்தன. ஒட்டுமொத்தமாக ஆப்பிள் நிறுவன வருவாய் இதே கட்டத்தில் கடந்த ஆண்டை விட 17% வரை அதிகரித்துள்ளது. அதன்படி ஜப்பானை தவிர மற்ற பகுதிகளில் இருமடங்கு வளர்ச்சியை ஆப்பிள் பதிவு செய்துள்ளது.

    ஆப்பிள் நிறுவன வளர்ச்சி 2017 இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது 32% அதிகரித்து 1150 கோடி டாலர்கள் லாபம் பெற்றுள்ளது. நியூ யார்க் பங்கு சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகள் 3% அதிகரித்தது. ஆப்பிள் இந்த காலாண்டு வளர்ச்சி காரணமாக ஆப்பிள் உலகின் அதிக மதிப்பு கொண்ட முதல் நிறுவனமாகி இருக்கிறது, இத்துடன் சந்தையில் ஆப்பிள் நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது.

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலகட்டத்தில் 15% வளர்ச்சியை பதிவு செய்து உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளராக உயர்ந்து இருக்கிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் உலக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலிடத்தில் சாம்சங் நிறுவனம் இருந்தது. #AppleEarnings #iPhoneX
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadpro


    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று புதிய ஐபோன்களுடன், புதிய ஆப்பிள் வாட்ச், விலை குறைந்த மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் விரைவில் வெளியாக இருக்கும் ஐபேட் ப்ரோ மாடல்களில் சற்றே சிறியதாகவும், ஸ்மார்ட் கனெக்டர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, ஹெட்போன் ஜாக் இல்லாமல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் 10.5 இன்ச் டிஸ்ப்ளே, அளவுகளில் 247.5மில்லிமீட்டர் உயரம், 178.7மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6மில்லிமீட்டர் தடிமனாக இருக்கிறது. இது தற்போதைய மாடலில் இருப்பதை விட சிறியதாகும். 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை பொருத்த வரை 280மில்லிமீட்டர் உயரம், 215மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6.4 மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய வடிவமைப்புகளின் படி ஐபேட் மெல்லிய பெசல்களுடன் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதில் ஹோம் பட்டன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சாதனத்தில் ட்ரூடெப்த் கேமரா சிஸ்டம் மூலம் ஃபேஸ் ஐடி வசதி வழங்கப்படலாம். இதேபோன்று புதிய ஐபேட் மாடலில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படாது என கூறப்படுகிறது.



    ஐபோன்களில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு பெரிய பேட்டரி, டாப்டிக் இன்ஜின் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இதேபோன்று ஐபேட் மாடலில் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்க இடவசதியில்லாத நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் டைமன்ட் கட் முன்புறம் மற்றும் பின்பக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோன்று புதிய ஐபேட் மாடல்களில் ஸ்மார்ட் கனெக்டர் பக்கவாட்டில் இருந்து லைட்னிங் போர்ட் அருகே கீ்ழ்பக்கமாக மாற்றப்படுகிறது. இதனால் சற்றே செங்குத்தான கீபோர்டு இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் ஃபேஸ் ஐடி அம்சம் தான் என்றும், இது செங்குத்தான நிலையில் மட்டுமே வேலை செய்யும், எனினும் ஐபேட் ப்ரோ மாடல்களில் ஃபேஸ் ஐடி கிடைமட்டமாக வேலை செய்யும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான அம்சம் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #ipadpro #Apple
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருக்கும் 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் மாடல் எதிர்பார்ப்பதை விட தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Apple #iPhone



    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோனினை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இதன் விற்பனை அக்டோபர் மாதத்தில் துவங்கலாம் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மோர்கன் ஸ்டேன்லி தெரிவித்திருக்கிறார்.

    வித்தியாசமான பேக்லைட் சிஸ்டம் பொருத்துவது சார்ந்த உற்பத்தி கோளாறு காரணமாக விற்பனை தாமதமாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார். புதிய பேக்லைட் சிஸ்டம் கிட்டத்தட்ட பெசல்-லெஸ் வடிவமைப்பை வழங்கலாம் என தெரிகிறது. எல்சிடி ஐபோன் தயாரிப்பு தாமதமாவது குறித்து ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகின. 

    எனினும் மற்றொரு வல்லுநரான மிங் சி கியோ புதிய ஐபோன் விற்பனை செப்டம்பர் மாதத்திலேயே துவங்கலாம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். விற்பனை தாமதமாகும் நிலையில், இந்த காலாண்டில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் குறைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

    புதிய 6.1 இன்ச் ஐபோன் பிளாக், வைட், புளு மற்றும் ஆரஞ்சு என பல்வேறு நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 இன்ச் ஐபோன் மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என்றும், நாட்ச் ரக வடிவமைப்பு வழங்கப்பட்டு, 3D டச் அம்சம் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்த வரை மிங் சி கியோ வெளியிட்டிருக்கும் தகவல்களில் டூயல் சிம் ஐபோன் மாடலின் விலை 650 முதல் 750 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44,616 முதல் ரூ.51,480) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், ஒற்றை சிம் கொண்ட வேரியன்ட் 550 முதல் 650 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37,752 முதல் ரூ.44,616) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Apple #iPhone
    இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோரை அச்சுறுத்தும் புதிய விதிமுறையை டிராய் விதித்து இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple



    ஆப்பிள் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடையே நிலவி வரும் போட்டி மேலும் சூடுபிடித்து இருக்கிறது. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

    இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின்  தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.என்.டி. (DND) என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி டி.என்.டி. 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் அனுமதிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை கோருவதால் டிராய் உருவாக்கியிருக்கும் செயலி பயனருக்கு தனியுரிமை பிரச்சனையை ஏற்படுத்தலாம் என ஆப்பிள் கருதுகிறது.



    ஐபோன் பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு ஆப்பிள் நிறுவனம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதன் காரணமாக பயனரின் தகவல் மற்றும் விவரங்களை சேகரிக்க கோரும் செயலிகளிடையே கடுமையான கட்டுப்பாடுகளை ஆப்பிள் விதித்து வருகிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்கும் கூகுள் நிறுவனம் இதுபோன்ற விதிமுறைகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை

    ஆன்ட்ராய்டு பயனர்கள் டி.என்.டி. செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளே ஸ்டோரில் இந்த செயலிக்கு பயனர்கள் மோசமான விமர்சனங்களையே வழங்கியிருக்கின்றனர். இந்த செயலியை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்வது குறித்து டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

    இந்த அறிக்கையில், நாட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும் தங்களது மொபைல் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். என எவ்வித இயங்குதளம் கொண்டிருந்தாலும் டி.என்.டி. 2.0 செயலியை நிச்சயம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை மொபைல் போன் நிறுவனங்கள் அன்றி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியதாகும்.



    "டிராய் விதிமுறைகளின் படி ஒவ்வொரு சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள், தங்களது ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற செயலிகளை இயக்க தேவையான அனுமதியை வழங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "விதிமுறைகளின் படி இதுபோன்ற செயலிகளை அனுமதிக்காத சாதனங்களில் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி சாதனங்களை தங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-இல் இருந்து நீக்க முடியும்."

    அந்த வகையில், டி.என்.டி. 2.0 செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் அனுமதிக்காத பட்சத்தில் நாட்டில் விற்பனையாகும் ஐபோன்கள் அனைத்திற்கும் 3ஜி, 4ஜி மற்றும் அடிப்படை டெலிகாம் நெட்வொர்க் சேவையை இழக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

    டிராய் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் விவகாரத்தை பொருத்த வரை இரண்டு தரப்புமே ஒரே விஷயத்துக்கு போராடி வருகின்றன. இரண்டு தரப்பும் தனது பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவே நினைக்கின்றன. மொபைல் போன்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை டிராய் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது, ஆப்பிள் நிறுவனமும் இதே நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.



    எனினும் ஆப்பிள் தனது பயனரின் தனியுரிமை எவ்வித காரணங்களாலும் பறிக்கப்பட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐபோனில் பயனரின் தனியுரிமை தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எவ்வித செயலியாக இருந்தாலும், அது அரசாங்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், பயனரின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க ஆப்பிள் தயாராக இல்லை. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை குறைக்க பல்வேறு ஸ்மார்ட் வழிமுறைகள் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இதனால் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் ஐபோனில் ஸ்பேம் அழைப்புகள் குறைக்கப்படுவதை விளக்கி, டிராய் செயலியை அனுமதிப்பதில் இருந்து விலக்கு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #telecommunications #Apple
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களில் பயன்படுத்த OLED மற்றும் எல்.சி.டி. ரக டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனத்திடம் வாங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #applenews



    ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே வழங்கும் நிறுவனம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் எல்.ஜி. நிறுவனத்திடம் OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் ஐபோன் மாடல்களில் வழங்க சாம்சங் நிறுவனத்தை அதிகம் நம்ப வேண்டாம் என்ற முடிவினை ஆப்பிள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எலஜி நிறுவனம் 30 முதல் 40 லட்சம் OLED டிஸ்ப்ளேக்களையும், சுமார் இரண்டு கோடி எல்.சி.டி. டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த வகையில் 2018 விலை உயர்ந்த ஐபோன் மற்றும் விலை குறைந்த ஐபோன் மாடல்களுக்கும் எல்ஜி நிறுவனம் டிஸ்ப்ளேக்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிஜிடைம்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் மற்றும் எல்ஜி நிறுவனத்திடையேயான ஒப்பந்தத்தில் இந்த ஆண்டு மட்டும் 30 மட்டும் 40 லட்சம் OLED டிஸ்ப்ளேக்களை உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    ஐபோன் X பிளஸ் வேரியன்ட் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபோன்களுக்கு சாம்சங் டிஸ்ப்ளேக்களை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபோன்களில் வழங்க இரண்டாவது விநியோகஸ்தரை ஆப்பிள் எதிர்பார்த்த நிலையில். இந்த ஆண்டு ஐபோன்களுக்கு சாம்சங் நிறுவனம் 7 கோடி OLED பேனல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் மூன்று வேரியன்ட் ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 5.8 இன்ச் அளவில் மேம்படுத்தப்பட்ட ஐபோன் X மற்றும் 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் வேரியன்ட் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #iphonexplus #applenews

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் 2018 ஐபோன்கள் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். #applenews



    ஆப்பிள் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். 

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் 11-இன்ச் ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி, பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச், ஏர்பவர் உள்ளிட்ட சாதனங்களை உருவாக்கி வருவதாக மிங் சி கியோ தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட சாதனங்களுடன் 5.8 இன்ச் OLED, புதிய 6.5 இன்ச் OLED, 6.1 இன்ச் எல்சிடி மாடல்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

    மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடல் ஐபோன் X போன்றே ஃபேஸ் ஐடி, ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேக் மினி அப்டேட் குறித்து அதிக தகவல்களை வழங்காத பட்சத்திலும், புதிய பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    கோப்பு படம்

    மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களிலும் புதிய பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த நோட்புக் மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடல் மேக்புக் ஏர் இன்றி 12 இன்ச் மேக்புக் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேக்புக் ஏர் சாதனத்துக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் மேக்புக் மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் சாதனத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் இரண்டு 2018 மாடல்களை உருவாக்கி வருவதாகவும், இவற்றில் ஒரு மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் மேம்படுத்தப்பட்ட இதய துடிப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இரண்டில் ஒரு மாடல் 1.57 இன்ச் (39.9 மில்லிமீட்டர்) மற்றொரு மாடலில் 1.778 இன்ச் (45.2 மில்லிமீட்டர்) டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிகம் எதிர்பார்க்கப்படும் ஏர்பாட் மற்றும் ஏர்பவர் சாதனங்கள் 2018 மூன்றாவது காலாண்டு வாக்கில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய சாதனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், இவை செப்டம்பர் மாத ஹார்டுவேர் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் புதிய நிறங்களில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே என மூன்று வித நிறங்களில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன் மாடல்கள்: இரண்டாம் தலைமுறை ஐபோன் X, விலை குறைந்த ஐபோன் X தோற்றத்தில் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட 6.1 இன்ச் ஐபோன் மற்றும் ஐபோன் X பிளஸ் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கியோ வெளியிட்டிருக்கும் புதிய தகவல்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களிலும், 6.1 இன்ச் ஐபோன் ரெட், புளு, ஆரஞ்சு, கிரே மற்றும் வைட் உள்ளிட்ட நிறங்களில் வெளியிடப்படலாம் என தெரிவித்து இருக்கிறார். 



    இதன் ரெட் நிறம் 2018 ஐபோன் X பிராடக்ட் ரெட் (PRODUCT RED) வெர்ஷனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதே போன்று ஐபோன் 8 மாடலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் X ரெட் வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கோல்டு நிற ஐபோன் X ப்ரோடோடைப் இணையத்தில் கசிந்திருந்தது.

    குறைந்த விலை, பெரிய டிஸ்ப்ளே, டூயல்-சிம் டூயல்-ஸ்டான்ட்பை மற்றும் பிளாக், வைட் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கலாம் என்ற காரணங்களால் ஐபோன் X மாடலை விட 6.5 இன்ச் OLED ஐபோன் மாடலுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என மிங் சி கியோ வெளியி்ட்டிருக்கும் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. 

    ஐபோன் 8 சீரிஸ்-ஐ விட புதிய 6.1 இன்ச் எல்சிடி ஐபோன் விற்பனை அதிகமாக இருக்கும் என்றும் இதற்கு ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி மற்றும் கிரே, வைட், புளு, ரெட் மற்றும் ஆரஞ்சு என ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கலாம் என மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார்.

    புகைப்படம்: நன்றி 9to5mac
    ×