என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 97176
நீங்கள் தேடியது "slug 97176"
வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். மணத்தக்காளி கீரை துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மணத்தக்காளி கீரை - 1 கப்
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி
பூண்டு - 6 பற்கள்
சின்ன வெங்காயம் - 10
மிளகு - 6
தேங்காய் துருவல் - கால் கப்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
அடி கனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காய தூள் போட்டு பொரிய விடவும்.
அடுத்து அதில் ஒரு காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
அடுத்து மிளகு, பூண்டு பற்கள், பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
அதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரையை போட்டு நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் தேங்காய் துருவல், புளி, தேவையான அளவு உப்பு, சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
மணத்தக்காளி கீரை துவையல் தயார்.
மணத்தக்காளி கீரை - 1 கப்
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி
பூண்டு - 6 பற்கள்
சின்ன வெங்காயம் - 10
மிளகு - 6
தேங்காய் துருவல் - கால் கப்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
அடி கனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காய தூள் போட்டு பொரிய விடவும்.
அடுத்து அதில் ஒரு காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
அடுத்து மிளகு, பூண்டு பற்கள், பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.
அதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரையை போட்டு நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.
ஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் தேங்காய் துருவல், புளி, தேவையான அளவு உப்பு, சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
மணத்தக்காளி கீரை துவையல் தயார்.
இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து தென் இந்திய உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சர்க்கரைநோய்க்கு மருந்தாகவும், சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் சக்தியும் கொண்டது வாழைத்தண்டு. இன்று இதனை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - சிறிய துண்டு,
தேங்காய் - 1 பத்தை,
தனியா - கால் டீஸ்பூன்,
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - இரண்டு,
பூண்டு - நாலு பல்,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - சிறிதளவு,
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.
கடைசியில் கடுகு தாளித்து கொட்டி அரைத்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைத்தண்டு - சிறிய துண்டு,
தேங்காய் - 1 பத்தை,
தனியா - கால் டீஸ்பூன்,
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - இரண்டு,
பூண்டு - நாலு பல்,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - சிறிதளவு,
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.
கடைசியில் கடுகு தாளித்து கொட்டி அரைத்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த செட்டிநாடு மிளகாய் சட்னி சூப்பரான இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 2
வரமிளகாய் - 5
பூண்டு - 3
புளி - 1 இன்ச்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு :
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!
புளிக்கு பதிலாக தக்காளியையும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காயம் - 2
வரமிளகாய் - 5
பூண்டு - 3
புளி - 1 இன்ச்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு :
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!
புளிக்கு பதிலாக தக்காளியையும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நீரிழிவு நோய்க்கும், சிறுநீரக கல்லுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து. வாழைப்பூ மாதவிடாய் பிரச்சனைக்கும் சிறந்த மருந்து. இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - ஒன்று
புளி - எலுமிச்சையளவு
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 3
தேங்காய் - ஒரு கைப்பிடி
எண்ணெய் - வதக்க
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை
செய்முறை :
வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.
வதக்கிய வாழைப்பூவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து தாளித்து துவையலில் கொட்டி கிளறி பரிமாறவும்.
சுவையான வாழைப்புத் துவையல் ரெடி.
இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். தயிர்சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாம்..
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைப்பூ - ஒன்று
புளி - எலுமிச்சையளவு
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 3
தேங்காய் - ஒரு கைப்பிடி
எண்ணெய் - வதக்க
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை
செய்முறை :
வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.
வதக்கிய வாழைப்பூவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து தாளித்து துவையலில் கொட்டி கிளறி பரிமாறவும்.
சுவையான வாழைப்புத் துவையல் ரெடி.
இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். தயிர்சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாம்..
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அஜீரண கோளாறு, வயிற்று பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பிரண்டை தொக்கை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இன்று இந்த தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
புளி - நெல்லிக்காய் அளவு,
பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து ஓரங்களில் இருக்கும் நாரை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்த பின்னர் பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்).
வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறிய பின்னர் இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
புளி - நெல்லிக்காய் அளவு,
பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து ஓரங்களில் இருக்கும் நாரை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு போட்டு சிவக்க வறுத்த பின்னர் பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்).
வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறிய பின்னர் இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இஞ்சி துவையலை செய்து சாப்பிடலாம். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
இஞ்சி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம்பருப்பு - 1 ½ மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 4 ஈர்க்கு
பெருங்காயம், புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து அதில் இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
அடுத்து தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்,
ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இஞ்சி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம்பருப்பு - 1 ½ மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 4 ஈர்க்கு
பெருங்காயம், புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை :
இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து அதில் இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
அடுத்து தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்,
ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X