search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் திலகர் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகன் அஜித்குமார் ( வயது 21), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

    இதற்கு மாணவி மறுக்கவே நண்பர்களாக பழகுவோம் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நண்பர்களாக இருவரும் பேசி வந்துள்ளனர். இருவரும் வாட்ஸ்அப்களில் தினமும் கருத்துக்களை பரிமாறி வந்துள்ளனர்.

    இதற்கிடையே அஜித்குமார் மாணவி மீது ஒரு தலை காதல் கொண்டுள்ளார். மாணவி தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் முகப்பில் வைத்துள்ளார். அதனை பதிவிறக்கம் செய்த அஜித்குமார், மாணவியின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படத்துடன் இணைத்து செல்போனில் வைத்திருந்தார்.

    இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்ததோடு இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அஜித்குமார் தன்னை காதலிக்காவிட்டால், உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக அஜித்குமாரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி மகிழேந்தி விசாரித்தார். இதில் அஜித்குமார் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

    அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது பெண் ஒருவர் தனது குழந்தையின் கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SanDiegoChurch
    சான்டியாகோ:

    ஈஸ்டர் பண்டிகை நாளான நேற்று இலங்கையில் உள்ள 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில குண்டுகள் வெடித்ததில் 290 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இதனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்த நிலையில், அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஈஸ்டரையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஒரு பெண் தனது 5 வயது மகள் மற்றும் 10 மாத கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார்.

    அப்போது அந்த பெண் 10 மாத குழந்தையின் கையில் துப்பாக்கியை கொடுத்து விளையாட வைத்தார். அக்குழந்தை துப்பாக்கியை காட்டி சுடுவதுபோல் அங்குமிங்கும் வீசிக் கொண்டிருந்தது.

    இதைப் பார்த்ததும் பிரார்த்தனையில கலந்து கொள்ள வந்தவர்கள் பதட்டமும், பீதியும் அடைந்தனர். சிலர் அந்த பெண்ணிடம் நெருங்கி சென்று அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றனர்.

    உடனே அந்த பெண் துப்பாக்கியை காட்டி “எனது அருகே வராதீர்கள். மீறினால் சுட்டு விடுவேன். இந்த தேவாலயத்தை தகர்த்து விடுவேன்” என மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தேவாலயத்தை விட்டு வெளியேறி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த போலீசார் அப்பெண்ணையும், குழந்தையையும் பிடித்து விசாரித்தனர்.

    அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அந்த துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்படவில்லை. போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேவாலயத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #SanDiegoChurch
    பாகூர் அருகே கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் புறாக்குளம் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது29). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் சங்கரை வெட்டினார்.

    இதுதொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை நடத்தி ஆறுமுகம் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக்கூடாது என சங்கரை மிரட்ட ஆறுமுகம் எண்ணினார்.

    அதன்படி நேற்று சங்கரிடம் ஆறுமுகம் மீண்டும் தகராறு செய்துள்ளார். மேலும் தடியால் தாக்கி கோர்ட்டில் சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சங்கரை ஆறுமுகம் மிரட்டினார்.

    இதுகுறித்து சங்கர் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி வழக்குபதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.

    சேலம் அம்மாப்பேட்டையில் பிளஸ்-2 மாணவியிடம் தன்னை காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் பாரதி நகரைச் சேர்ந்த அஜித் குமார் (வயது 22) என்பவர் மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். மேலும் மாணவியை பின்தொடர்ந்து சென்று அவர் தொந்தரவு கொடுத்து வந்தார்.

    இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினர். ஆனால் அப்போதும் மாணவியின் வீட்டிற்கு சென்று அஜித்குமார் பெண் கேட்டார். வயது குறைவாக இருப்பதால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று அவரது பெற்றோர் மறுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தன்னை காதலிக்காவிட்டால் உன் மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன மாணவியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி அஜித்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்.

    பின்னர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
    பெருமாநல்லூர் அருகே ஊழியரை அரிவாளால் மிரட்டி வாலிபர்கள் பெட்ரோல் நிரப்பிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    திருப்பூர்:

    கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டி வீரம்பாளையத்தில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு இந்த பெட்ரோல் பங்கில் 2 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் அங்கிருந்த ஊழியரிடம் ரூ. 600-க்கு பெட்ரோல் நிரப்பும் படி கூறினார்கள். அதன்படி ஊழியர் பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அதற்கான பணத்தை கேட்டார்.அப்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்த வாலிபர் திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் பெட்ரோல் பங்க் ஊழியரை எங்களிடமே பணம் கேட்கிறாயா? என மிரட்டினார். மேலும் அரிவாளால் வெட்டவும் ஓங்கினார். இதனால் பயந்து போன பெட்ரோல் பங்க் ஊழியர் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் இரு வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த காட்சி பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இது குறித்து பெருமாநல்லூர் போலீசாரிடம் கேட்ட போது, பெட்ரோல் பங்கில் நடைபெற்ற சம்பவம் சமூக வலை தளங்களில் தான் பரவி வருகிறது.

    இது குறித்து எங்களிடம் புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #tamilnews
    தர்மபுரி அருகே மனைவியை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி நெடுமாறன் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் உமா (வயது 35). பி.இ. பொறியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்கிற கருணாநிதி என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கருணாநிதி ரியல் எஸ்டேட் தொழிலும், சினிமா துறையில் பைனான்ஸ் வழங்கும் தொழிலும் செய்து வருகிறார். கருணாநிதி-உமா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக உமா தனது கணவரை பிரிந்து தர்மபுரியில் உள்ள தனது தாயார் வீட்டில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    கருத்து வேறுபாடு காரணமாக கருணாநிதியும், உமாவும் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த வழக்கு தர்மபுரி நீதிமன்றத்தில் நடத்து வருவதாக தெரிகிறது.

    வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய 2 நாட்களில் கருணாநிதி தர்மபுரிக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார்.

    நேற்று முன்தினம் வழக்கம்போல் குழந்தைகளை பார்க்க கருணாநிதி தர்மபுரி நெடுமாறன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    அப்போது கருணாநிதி தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து, சுட்டு விடுவதாக உமாவை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன உமா கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கருணாநிதியை பிடித்து வைத்து கொண்டு தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனே அங்கு விரைந்து கருணாநிதியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கருணாநிதியிடம் இருந்தது ரப்பர் குண்டு போட்டு சுடப்படும் ஏர்கன் என்று அழைக்கப்படும் கை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இந்த துப்பாக்கியை அவர் கோவையில் உள்ள ஒரு கடையில் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த துப்பாக்கியை தர்மபுரி டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பைனான்ஸ் அதிபர் கருணாநிதியை கைது செய்து தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்தி ரேட்டு உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். #PollachiAbuseCase
    நாகப்பட்டினம்:

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

    நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது23). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    சுந்தர் அந்த கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும் ஆழியூரை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் அவர்களை காதலர்களாக மாற்றி உள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் காதலன் சுந்தரின் நடவடிக்கையில் இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சுந்தரிடமிருந்து விலகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் இளம்பெண்ணை மீண்டும் தன்னுடன் பழக வைக்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.

    இதையடுத்து சுந்தர் மீண்டும் தனது காதலியான அந்த இளம்பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக மயக்குவது போல் பேசி நட்பை நீட்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடித்துள்ளார்.

    இந்நிலையில் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி அழைத்துள்ளார். காதலன் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் சுந்தருடன் வர சம்மதித்துள்ளார்.

    இதையடுத்து தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். அப்போது குளிர்பானம் வாங்கி வந்த சுந்தர் அதை காதலியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த குளிர்பானத்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். தான் குளிர்பானத்தில் கலந்து கொடுத்த மயக்க மருந்தால் காதலி மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுந்தர் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தாயா எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி மிரட்டியதோடு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டலால் அதிர்ச்சியும், தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்து அவமானமும் அடைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வாலிபர் சுந்தர் கூறியதாக தெரியவருகிறது. பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ள நிலையில் இளம்பெண்ணை ஆபாச படமெடுத்து வாலிபர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PollachiAbuseCase
    லாலாப்பேட்டையில் பணம் கேட்டு மிரட்டி சாலை ஒப்பந்தகாரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    லாலாபேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாபேட்டை அடுத்த பிள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). சாலை ஒப்பந்த பணி செய்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சிலம்பு செல்வன் (57).

    இவர் கடந்த 23-ம் தேதி கொம்பாடிபட்டி சாலையில் பணி செய்து கொண்டு இருந்த செல்வராஜிடம் தனக்கும் கமிசன் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். அதற்குசெல்வராஜ் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பு செல்வன் செல்வராஜை தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குபதிவு செய்து சிலம்பு செல்வனை கைது செய்தனர்.
    கேரளாவை சேர்ந்த இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய கன்னியாகுமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் லைஜுன் (வயது 27).

    இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள செங்கனூர் பகுதிக்கு சென்று கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் செல்போன் நம்பர் கிடைத்தது.

    இதன்மூலம் அவர் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி பழகி வந்தார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது வாட்ஸ் அப்பில் வைத்திருந்த போட்டோவை எடுத்து அதை மார்பிங் மூலம் லைஜுன் ஆபாச படமாக மாற்றி உள்ளார்.

    பிறகு அந்த போட்டோவை அந்த இளம்பெண்ணுக்கு செல்போனில் அனுப்பி தனக்கு பணம் தராவிட்டால் அதை மற்றவர்களுக்கு பரப்பி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறி அழுதார்.

    மேலும் வாலிபர் மிரட்டல் பற்றி செங்கனூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து லைஜுன் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை சோதனை செய்தபோது அதில் ஏராளமான தமிழ் பெண்கள், கேரள பெண்களின் மார்பிங் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அவர் வேறு பெண்களையும் இதுபோல மிரட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக இன்று வந்த தொலைபேசி மிரட்டலின் எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #hijackcall #AirIndiahijacka #BCAS
    மும்பை:

    மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய (இயக்கங்கள்) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபரிடம் இருந்து இன்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்க வேண்டும்.

    விமான நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு வரும் வாகனங்களை (கார்குண்டு தாக்குதல்களை தடுக்கும் வகையில்) தீவிரமான சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்க வேண்டும்.



    விமான நிலையத்தின் வெளி நுழைவு வாயில் தொடங்கி அத்தனை பகுதிகளிலும் அதிகப்படுத்தப்பட்ட சோதனைக்கு பின்னரே பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சரக்குகளை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
     
    விமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம், உணவு விடுதிகள், அங்காடிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும்.

    கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

    மேலும். சூழ்நிலைக்கேற்ப அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றரிக்கை மூலம் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விமான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின்படி விமான கடத்தல்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும், உயிருடன் பிடிபடும் குற்றவாளிகளுக்கு விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #hijackcall #AirIndiahijacka #BCAS #CISFtightensecurity 
    உத்தரப்பிரதேசம் அருகே காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. #KalindiExpress
    கான்பூர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்-பிவானி இடையே ஓடும் காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.10 மணிக்கு பாரஜ் பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ரெயிலின் மேல் கூரையில் உள்ள பிளைவுட் சேதம் அடைந்தது.

    கழிவறையில் வெடித்ததால் பயணிகள் காயமின்றி தப்பினர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது பட்டாசை விட சற்று சக்தி வாய்ந்தது என தெரிவித்தனர். இதனால் பயணிகள் தப்பினர்.

    குண்டு வெடித்ததும் புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பெயரில் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் வந்தது.

    சம்பவ இடத்துக்கு பயங்கரவாத தடுப்பு படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறிது நேர தாமதத்துக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் ரெயில் புறப்பட்டுச் சென்றது. #KalindiExpress
    நம்பியூர் அருகே அரசு ஆஸ்பத்திரி மருத்தாளுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே மலையப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் ஏதிரே உள்ள ரோட்டில் செல்லப்பன் மற்றும் அவரது 7 வயது குழந்தை காரில் சென்றனர்.

    அப்போது எதிர்பாரத விதமாக கார் விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் காயம் அடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றனர்.

    அப்போது அங்கு மருந்தாளுனராக பணிபுரிபவர் தீனதயாளன் (வயது 27). மருத்துவர் இல்லை மீட்டிங் சம்மந்தமாக நம்பியூர் சென்று உள்ளார் என கூறினார். நான் முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அனுப்பி வைக்கின்றேன் என கூறினார்.

    இதற்கு செல்லப்பன் தீனதயாளனை தாகத வார்த்தையால் பேசினாராம். மேலும் கையால் தாக்கி, கல்லை வீசி கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

    மேலும் அவர் கல் வீசியதில் மருத்துவமனையில் சுவரில் மாட்டி இருந்த கண்ணாடி உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டல் விடுத்த செல்லப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தீனதயாளன் கொடுத்த புகாரின் பேரில் வரப்பாளையம் போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×