search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    திருமங்கலத்தில் மணல் எடுப்பதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் பகுதியில் சிலர் ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து வந்தனர். இதனை ராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 49) உள்பட 10 பேர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மணல் எடுத்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். கிருஷ்ண மூர்த்தியும் வீட்டிற்குச் சென்று விட்டார்.

    மறுநாள் காலை அவர் வீட்டில் இருந்தபோது அலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அம்சு பாண்டி (31), தனுஷ்கோடி மகன் ராஜேஷ் (31) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் மணல் எடுப்பதை ஏன் தடுக்கிறாய்? என கேட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக திருமங்கலம் தாலுகா போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அம்சு பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    சீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதி சங்கர் நகரை சேர்ந்தவர் லெட்சுமிகாந்தன் மகன் ரமேஷ்பாபு(46) அ.தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் காரில் அமர்ந்திருந்தபோது மர்மகும்பலால் நாட்டுவெடிகுண்டுகள் வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி புதுத்துறை கிராமம், தென்பாதி தெருவைச் சேர்ந்த பார்த்திபன்(32) உள்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்திபன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து பார்த்திபன் சீர்காழி பகுதியில் உள்ள மணல் குவாரி நடத்தும் உரிமையாளர்கள், ஒப்பந்த காரர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுத்துறை பார்த்திபன் பேசுவதாக கூறி பல லட்சம் உடனடியாக தரவேண்டும். இல்லையென்றால் ரமேஷ் பாபுவை கொன்றதுபோல் படுகொலை செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் தான் அனுப்பும் நபர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்ப வேண்டும் எனவும் பார்த்திபன் கூறி வந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக சீர்காழி நகர் பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் பார்த்திபனுக்கு ஆதரவாக மர்மநபர்கள் பணம் கேட்டு சென்றுள்ளனர். இதனால் சீர்காழியை சேர்ந்த பல தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் போனை எடுப்பதற்கே அச்சம் அடைந்து வந்தனர்.

    இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சில பிரமுகர்கள் நாகை எஸ்.பி. விஜயக்குமாரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்அடிப்படையில் நாகை எஸ்.பி உத்தரவின்பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்இன்ஸ்பெக்டர் ராஜா,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அகோரமூர்த்தி, இளங்கோவன், அருள்குமார் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரனையில் சீர்காழியை அடுத்த திருவாலி மெயின் ரோட்டைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் அன்புமாயவன்(26), அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் செல்வபருதி(23) ஆகிய இருவரும் தொழிலதிபர்களிடம் நேரில் சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அன்புமாயவன், செல்வபருதி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். பார்த்திபன் மீது நாகை மாவட்டம், சேலம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தேனி அருகே பள்ளியில் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தேனி:

    தேனி அருகே பெரியகுளம் ஏ.வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு கண்காணப்பு பணியில் ஆசிரியர் மணிகண்டன் ஈடுபட்டிருந்தார். அப்போது மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இரு பிரிவினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் பள்ளியில் புகுந்து மாணவர்கள் கோவிந்தராஜ், சுந்தரேசன் ஆகியோரை தாக்கி உள்ளனர்.

    இதனை ஆசிரியர் மணிகண்டன் தட்டி கேட்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைய கூடாது என அவர்களை எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி சென்றுள்ளனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தில் அந்த 2 வாலிபர்கள் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரேவந்த் (வயது23), செங்குளத்துப்பட்டியை சேர்ந்த காசிபாண்டியன் (20) என தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 51).

    இவர் வேலாண்டிபாளையத்தில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். வீரகேரளத்தை சேர்ந்த பத்மநாபன்(42) என்பவர் அடிக்கடி கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து கடன் பெற்ற வகையில் சரவணகுமார் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர் நாகராஜ்(43) ஆகியோருடன் நெருங்கி பழகினார்.

    இதனடிப்படையில் பத்மநாபனுக்கு சரவணகுமார் கடனுதவி செய்தார். ஆனால் பத்மநாபன் ஒழுங்காக பணத்தை திருப்பி கொடுக்காததால் உதவி செய்வதை சரவணகுமார் நிறுத்தினார். எனவே அவர் மீது பத்மநாபனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சரவணகுமாரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அவரை கடத்தி மிரட்டினால் எளிதில் பணம் கொடுத்து விடுவார் என்றும் பத்மநாபனிடம் நாகராஜ் ஆசைகாட்டினார். அதன்படி சரவணகுமாரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டிய பத்மநாபன் தனது நண்பரான ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் விஷ்ணுகுமாரின் உதவியை நாடினார். அவர் தனது கூட்டாளிகளான பாலன், கணபதியை சேர்ந்த அய்யப்பன், போத்தனூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் இந்த திட்டத்துக்கு சேர்த்துக் கொண்டார்.

    அதன்படி கடந்த 27.07.2016 அன்று சாய்பாபாகாலனியில் நடந்து சென்ற சரவணகுமாரை பத்மநாபன் உள்பட 6 பேரும் சேர்ந்து காரில் கடத்திக் கொண்டு ஆனைக்கட்டிக்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் தங்க வைத்து சரவணகுமாரை ஒரு பெண்ணுடன் சேர்த்து படம் எடுத்துள்ளனர். அந்த படத்தை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டினர். பயந்து போன சரவணகுமார் என்னிடம் ரூ.25 லட்சம் தான் உள்ளது எனக் கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார். இதனால் அவரை விடுவித்தனர்.

    அதன்பின்னரும் பத்மநாபன் அடிக்கடி சரவணகுமாரிடம் பணம் கேட்டார். தரமறுத்தால் பெண்ணுடன் சேர்த்து எடுக்கப்பட்ட உனது ஆபாச படத்தை வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதனால் சரவணகுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 7 மணி அளவில் கருணாநிதி நகர் பகுதியில் சரவணகுமார் சென்ற போது அவரை பத்மநாபன் வழி மறித்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் மனமுடைந்த சரவணகுமார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார், கார்த்திகேயன், அய்யப்பன், பாலா ஆகிய 6 பேர் மீதும் கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பாலா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திகேயன், அய்யப்பன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    ராயபுரம் அருகே வாலிபரை அரிவாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ராயபுரம், ஆட்டுத்தொட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நேற்று மாலை 5 மணியளவில் மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றார்.

    அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென ராஜேசை தாக்கி அரிவாளை காட்டி மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்துவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர்.

    இது குறித்து வடக்கு கடற்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.

    இந்த நிலையில் காசிமேடு தாண்டவராயன் தெருவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், தலைமை காவலர் பழனியாண்டவர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரதீப், மணிகண்டன், தண்டையார்பேட்டை விக்னேஷ் என்பதும் மண்ணடியில் ராஜேஷ் என்பவரை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிய ½ மணி நேரத்தில் அவர்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    கைதான 3 பேரும் மோட்டார் சைக்கிளை பறித்து செல்லும் காட்சியை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதுவும் போலீசாருக்கு கைகொடுத்தது.

    மோட்டார் சைக்கிளை பறித்து தப்பியவர்களை அரை மணி நேரத்தில் மடக்கி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், போலீஸ்காரர் பழனியாண்டவரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

    உளுந்தூர்பேட்டையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சிலர், அங்கு புத்தாண்டு பண்டிகையையொட்டி மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    இதை கண்டித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தியை, அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சாதிக்(வயது 22), பரசுராமன்(27) செல்வராஜ்(20), மணிகண்டன்(26) நமச்சிவாயம்(35), தெய்வசிகாமணி(24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருப்பதி அருகே நக்சலைட் என கூறி தொழிலதிபர்களை பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த பீலேரு பகுதியை சேர்ந்தவர் போய கொண்டப்பா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பாபு (45), ரவி (42). சகோதரர்களான இருவரும் பீலேரு பகுதியில் சிமெண்டு மற்றும் ஸ்டீல் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த 27-ந் தேதி பாபு, ரவி ஆகியோருக்கு போய கொண்டப்பா செல்போனில் தொடர்பு கொண்டு நான் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவன். எனவே எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லை என்றால் உங்களுடைய வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து குடும்பத்துடன் காலி செய்து விடுவேன், இது குறித்து போலீசுக்கு சொல்ல கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.

    மேலும் ரூ.10 லட்சத்தை பையில் வைத்து பீலேரு-சித்தூர் ரெயில்வே கேட் அருகே வைத்துவிட்டு சென்று விடவேண்டும் என கூறியுள்ளார்.

    இதையடுத்து பாபு, ரவி இருவரும் பீலேரு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சோமசேகரிடம் புகார் அளித்தனர்.

    போலீசாரின் அறிவுரையின் பேரில் பையில் சிறிதளவு பணத்தை வைத்து நேற்று ரெயில்வே கேட் அருகே வைத்துள்ளனர். அப்போது பணத்தை எடுக்க வந்த போய கொண்டப்பாவை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கிரிக்கெட் போட்டியின் போது பணம் வைத்து பெட் கட்டியதால் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் கடன் தொல்லை காரணமாக பணம் கேட்டு மிரட்டியதாகவும், தான் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவன் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து போய கொண்டப்பாவை பீலேரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிலர் எங்களுக்கு மிரட்டல் விடுவதால் பா.ம.க.வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காடுவெட்டி குரு தாயார் கல்யாணி அம்மாள் தெரிவித்துள்ளார். #kaduvettiguru #pmk

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி, வி.ஜி.கே.மணிகண்டன் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள், மகன் கனலரசன், தங்கை செல்வி, மருமகன் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக காடுவெட்டியின் தாயார் கல்யாணி அம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயிலாடுதுறையில் நடைபெறுகிற படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளோம். குருவின் மறைவுக்கு பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டித்தருகிறேன் என்று சொன்னார்கள். எங்களுக்கு உள்ள ரூ.1½ கோடி கடனை அடைத்து விட்டு மணிமண்டபம் கட்டுங்கள் என்று சொன்னோம். ஆனால் கடனை அடைக்காமல், ஆட்களை வைத்து எங்களை தாக்கி விட்டனர். எனது மருமகளை எங்களிடமிருந்து பிரித்துவிட்டனர். ஊரில் சிலர் எங்களை மிரட்டி வருகின்றனர். இப்போது கட்சிக்கும் (பா.ம.க.) எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. கட்சியுடனான தொடர்பு எனது மகனுடன் முடிந்துவிட்டது. கட்சியில் சேர்ந்ததால் தான் எனது மகன் உயிருக்கே ஆபத்து வந்தது. சரியான வைத்தியம் செய்திருந்தால் குருவை காப்பாற்றி இருக்கலாம். மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவு செய்து சிகிச்சை அளித்தார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #kaduvettiguru #pmk

    சின்னமனூர் அருகே பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பால் பிரபு (வயது 33). இவருக்கும் சகாய ஜான்சிராணி (31) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    சகாய ஜான்சிராணி சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிந்து வருகிறார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் சகாய ஜான்சிராணி தனது 2 குழந்தைகளுடன் கடந்த 10 மாதமாக தனியாக வசித்து வருகிறார்.

    சகாய ஜான்சிராணி சின்னமனூரில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்பால் பிரபு சம்பவத்தன்று தனது மனைவியிடம் வந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டினார்.

    அவர் மறுக்கவே வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றார். இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான்பால் பிரபுவை கைது செய்தனர்.

    போடி அருகே மணல் திருட்டை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஆற்றங்கரை பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் தினசரி ரோந்து மேற்கொண்டு மணல் திருடும் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுத்தாலும் மணல் கடத்தலை தடுக்க முடிவதில்லை.

    கொட்டக்குடி ஆறு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது அனுமதியின்றி 2 டிராக்டர்களில் மணல் அள்ளி வந்ததை கண்டறிந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி டிராக்டரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் மணல் திருட்டு குறித்து ஆய்வுக்கு சென்ற தாசில்தார் ஆர்த்தியை ஒரு கும்பல் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து 6 மாட்டு வண்டிகளில் மணல் திருடி வந்ததை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிமாறன். இவர் சம்பவத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் மணிமாறனை தகாத வார்த்தைகளால் திட்டி லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கண்டமனூர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அல்லிநகரம் பாண்டிக்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (49) என்பது தெரிய வந்தது.

    குடிபோதையில் அதிக வேகத்தில் லாரியை ஓட்டியதும், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சூளைமேடு திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் அஸ்வக் மொகைதீன். போஸ்டர் ஒட்டும் தொழிலாளி. இவர் நள்ளிரவு நெல்சன் மாணிக்கம் சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அஸ்வக்கிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், வினோத் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. பல்வேறு இடங்களில் அவர்கள் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், கத்தி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×