search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    பணத்தகராறில் மிரட்டல் விடுத்ததால் லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு தாமரை என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தசாமிக்கு செக்குமேட்டில் 75 சென்ட் நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை விற்க கோவிந்தசாமி முடிவு செய்தார். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான எம்.ஜி. என்ற ஜெய்சங்கரிடம் ரூ.7 லட்சம் விலை பேசினார்.

    முன் பணம் ரூ.2½ லட்சம் பெற்று கொண்டார். மீதித் தொகையை 3 மாதத்திற்குள் கொடுத்து நிலத்தை கிரயம் செய்வதாக அ.தி.மு.க. பிரமுகர் கூறினார். கடைசி வரை மீதி பணத்தை தந்து அவர் நிலத்தை கிரயம் செய்யவில்லை.

    இதனால், காலக்கெடு முடிந்ததையடுத்து வேறு நபருக்கு கோவிந்தசாமி தனது நிலத்தை விற்றுவிட்டார். இதனால் அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆத்திரமடைந்தார். முன் பணமாக கொடுத்த ரூ.2½ லட்சத்தை திருப்பி கேட்டு நச்சரித்தார். பணத்தை கோவிந்தசாமி தராததால் அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டல் விடுத்தார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும், வாணியம்பாடி தாலுகா போலீசிலும் கோவிந்தசாமி மீது அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர். கோவிந்தசாமி வரும் 20-ந் தேதிக்குள் 2½ லட்சம் ரூபாயையும் கொடுப்பதாக எழுதி கொடுத்தார்.

    இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆதரவாளர்களுடன் மீண்டும் கோவிந்தசாமியை அழைத்து மிரட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி தனது பைக்கில் பெட்ரோலை பிடித்து, உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கட்டப்பஞ்சாயத்து பேசி மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓடி விட்டனர். அப்பகுதி மக்கள், கோவிந்தசாமி உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவிந்தசாமி மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலங்காயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டியில், வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்த மர்ம கும்பல், தடுக்க வந்த கணவரை குக்கர் மூடியால் தாக்கிவிட்டு ஓடி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி - சேலம் சாலையில் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் சரவணன் (வயது 63). இவருடைய மனைவி உமாதேவி. இவர்களது மகன்கள் வெளியூரில் வேலை செய்து வருவதால், கணவன், மனைவி இருவர் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் சாப்பிட்டு முடித்து விட்டு, தட்டை கழுவுவதற்காக வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமிகள் 4 பேர் திடீரென வீட்டுக்குள் புகுந்து உள்ளனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலி, 1¼ பவுன் தாலி மற்றும் 1½ பவுன் வளையலை “கட்டிங் பிளேயர் ” மூலம் வெட்டி எடுத்து, பறித்துள்ளனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் சத்தம் போட்டார். பின்னர் அவர் மர்ம ஆசாமிகளை தடுக்க வந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் அங்கிருந்த குக்கர் மேல் மூடியை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்து உள்ளனர். இதில் அவர் அலறி துடித்தார். இதையடுத்து மர்ம ஆசாமிகள் நகையுடன் அங்கிருந்து ஓடிவிட்டனர். மர்ம ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த சரவணன் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவன், மனைவி மட்டுமே தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டருகே பதுங்கி இருந்து வீட்டுக்குள் புகுந்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த கும்பல் யார் என விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    மீஞ்சூர் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    தென்காசியை சேர்ந்தவர் சாமுவேல், லாரி டிரைவர்.இவர் கடந்த 1-ந் தேதி மீஞ்சூரில் இருந்து கும்மிடிபூண்டிக்கு லாரியில் நிலக்கரி ஏற்றி வந்தார். பொன்னேரி நெல் காஸ்ட் கம்பெனி அருகில் வந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் லாரியை வழிமறித்து டிரைவர் சாமுவேல், கிளீனர் இம்மானு வேலை தாக்கி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து டிரைவர் சாமுவேல் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்த அருண், பொன்னேரியை சேர்ந்த ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சவுதி அரேபிய இளவரசருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. #AlQaedaWarning #Saudicrownprince #MohammedbinSalman

    துபாய்:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

    பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

    சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டில் பொழுதுபோக்கு நகரம் ஒன்றையும் உருவாக்க இருக்கிறார். இந்த நகரம் குட்டி நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா போல இருக்கும் என்று கூறப்படுகிறது.
     
    இந்நிலையில், சவுதி அரேபியாவின் இந்த முடிவுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் பெண்களுக்கு தேவையில்லாத சுதந்திரம் கொடுக்கிறார், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தி இஸ்லாமிய நாட்டை நாசம் செய்கிறார். அவர் உடனே தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சவுதி இளவரசர் பின் சல்மானுக்கு அல்கொய்தா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. #AlQaedaWarning #Saudicrownprince #MohammedbinSalman
    உள் நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும் என ஐ.நா. அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மிரட்டல் விடுத்துள்ளார். #Philippines #Duterte
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே, சர்வாதிகார போக்கு உடையவர். தன்னை எதிர்க்க கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொதுவெளியில் நேரடியாக மிரட்டல் விடுக்கும் மனோபாவம் கொண்டவர்.

    அங்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த மரியா லூர்தஸ் செரினோ, அதிபர் ரோட்ரிகோ துதர்தேவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    இதனால் அவரை தன்னுடைய எதிரி என்று கூறிய ரோட்ரிகோ துதர்தே, அவரை தலைமை நீதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஓட்டெடுப்பு நடத்தி மரியா லூர்தஸ் செரினோவை பதவி நீக்கம் செய்தனர். இது குறித்து வேதனை தெரிவித்த பிலிப்பைன்சுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மூத்த அதிகாரியான கார்சி-சயான் “ரோட்ரிகோ துதர்தே, மரியா லூர்தஸ் செரினோவுக்கு எதிராக பொதுவெளியில் மிரட்டல்கள் விடுத்ததே, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம்” என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் ரோட்ரிகோ துதர்தே, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, தன் மீது கார்சி-சயான் முன்வைத்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், “அவரிடம் (கார்சி-சயான்) சொல்லுங்கள், என் நாட்டின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று, இல்லையென்றால் அவர் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்” என கூறினார்.

    மேலும், “அவர் ஒன்றும் சிறப்பான நபர் இல்லை. அவருடைய பதவியை நான் அங்கீகரிக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.   #Philippines #Duterte #tamilnews 
    ஆலிவலம் அருகே வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே ஆலிவலம் காவல் சரகம் செட்டியமூலை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் துர்கா (வயது 35). இவர் தனது எல்லைக்குட்பட்ட குளங்களில் நீர் நிலைகளை ஆராய நேற்று சென்றார். அப்போது அதே பகுதி எல்லையம்மன் கோவில் குளத்தில் ஆய்வு செய்துவிட்டு குளத்தை புகைப்படம் எடுக்க முயன்றார்.

    அப்போது குளத்தில் அதே ஊரை சேர்ந்த வீரமணி என்பவர் குளித்துக்கொண்டிருந்ததை கண்ட துர்கா அவரை கரையேறுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி துர்க்காவை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆலிவலம் போலீசில் துர்கா அரசு பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் கொடுத்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தார்.

    கனடாவில், முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
    கனடாவில் கடந்த ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளது தெரியவந்து உள்ளது.

    கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சா எமர்சன்  (33).  இவர் அமெரிக்க துணை நடிகை ஆவார். அவரிடம் விசாரணை நடத்திய போது  தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

    அவர் உருவாக்கிய பிரச்சினைகளால் அவசர அழைப்புகளுக்கு இணங்க செயல்பட்ட போலீசார், மருத்துவ குழுக்கள் என அரசுக்கு 200,000 டாலர்கள் செலவு ஏற்பட்டது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவள் மன நலம் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்குப் பின்னர் மன நலக் காப்பக சிகிச்சையும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டையில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை ஒழித்து விடுவதாக மிரட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    சிப்காட்டை அடுத்த அவரக்கரை அருகே உள்ள பாலாற்றில் இருந்து நேற்று அதிகாலை புளியங்கண்ணுவை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 28) என்பவர் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தார்.

    ராணிப்பேட்டை ஒத்தவாடை தெரு அருகே வந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்துப்பணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மணல் கடத்தி வந்த லாரியை மடக்கினார்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதியை அசிங்கமாக பேசி ஒழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து கருணாநிதி ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். ராணிப்பேட்டை போலீசார் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி டிரைவர் ரஞ்சித்குமாரை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேசை தேடி வருகின்றனர்.#tamilnews
    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு கடந்த 2 நாட்களில் வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு கடந்த 2 நாட்களில் வாட்ஸ் அப்பில் ஒரே மாதிரியான குறுந்தகவல் வந்தது.

    அதில், எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் உடனடியாக இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் சிறப்பு தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் எம்.எல்.ஏ.க்களின் வாட்ஸ் அப்புக்கு வந்த மிரட்டல் குறுந்தகவல்கள் அனைத்தும் துபாயில் இருந்து வந்தாக கண்டறியப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தற்போது போலீசார் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளனர். 
    ×