search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா"

    நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ், ஐநா இல்லத்தை டெல்லியில் இன்று திறந்து வைத்தார். #UN #AntonioGuterres #Delhi #UNHouse
    புதுடெல்லி:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 21 கடலோரப் பகுதி நாடுகள் IORA என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான கருத்தரங்கம் நாளை புதுடெல்லியில் நடைபெறுகிறது.

    சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மற்றும் பிறநாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக நான்கு நாள் பயணமாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் இந்தியா வந்துள்ளார்.



    இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ், டெல்லியில் ஐ.நா. இல்லத்தை இன்று திறந்து வைத்தார்.

    இந்தியாவின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டையும் அக்டோபர் மூன்றாம் தேதி அன்ட்டோனியோ குட்டரஸ் துவக்கி வைக்க உள்ளார். #UN #AntonioGuterres #Delhi #UNHouse
    ஐ.நா.வில் உரையாற்ற அமெரிக்கா சென்ற இலங்கை அதிபருக்கு எதிராக கொட்டும் மழையில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #SrilankaPresident #MaithripalaSirisena
    நியூயார்க்:

    ஐ.நா. பொது சபைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்ற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமெரிக்கா சென்றுள்ளார்.

    அங்கு அவருக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது கடைசி 2 வாரங்களும், 5 முறை ராணுவ மந்திரி பொறுப்பிலும் அதிபர் சிறிசேனா இருந்தார். அவரது உத்தரவின் பேரில் தான் 70ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என இலங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே இவர் ஒரு சந்தேகத்துக்குரிய போர் குற்றவாளி என்பதை ஐ.நா. பொதுசபை உறுப்பினர்களுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன் கூட்டியே தெரிவித்து இருந்தது. மேலும் போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை ராணுவத்தை விடுவிக்க புதிய யோசனை வைத்திருப்பதாக சிறிசேனா கூறியிருந்தார்.

    மேற்கண்ட காரணங்களுக்காக அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #SrilankaPresident #MaithripalaSirisena
    ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் ஏமன் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் 84 பேர் உயிரிழந்தனர். #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
    சனா:

    ஏமன் நாட்டில் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

    ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.  இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

    அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில், செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா நகரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 24 மணிநேரமாக நடத்திய தாக்குதல்களில் 73 ஹவுத்தி போராளிகள் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்களும் உயிரிழந்தனர்

    பல போராளிகளும் 17 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர் என ஏமன் நாட்டு ஊடகங்கள் இன்றிரவு செய்தி வெளியிட்டுள்ளன. #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
    ஜெனிவா நகரில் நடைபெற்ற ஏமன் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் மறுத்து விட்டதால் ஐ.நா.சபையின் இந்த முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது. #YemenPeaceTalks #HouthiPeaceTalks
    ஜெனிவா:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

    இந்நிலையில், ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தையில் ஏமன் வெளியுறவுத்துறை மந்திரி காலேத் அல்-யாமனி பங்கேற்றார்.

    போர் கைதிகளாக பிடிபட்டுள்ள ஹவுத்தி போராளிகளை விடுதலை செய்வது, மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை அனுமதிப்பது. குறிப்பாக, டாயிஸ் நகரில் அரசு படைகளால் சுற்றிவளைத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள ஹவுத்தி போராளிகளை விடுவிப்பது, சனா நகரில் உள்ள விமான நிலையத்தை மீண்டும் திறப்பது ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஏமன் அரசு அதிகாரிகளிடம் கிரிஃபித்ஸ் வலியுறுத்தினார். 

    இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

    பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஜெனிவாவுவுக்கு வரும் எங்கள் விமானத்தை சவுதி தலைமையிலான பன்னாட்டு படைகள் வழிமறித்து சோதனையிட கூடாது. 

    உள்நாட்டு போரில் படுகாயமடைந்த எங்களது இயக்கத்தை சேர்ந்தவர்களை அந்த விமானத்தில் மேல்சிகிச்சைக்காக ஓமன் நாட்டுக்கு அழைத்து செல்வதை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி தற்போதைய நிலவரப்படி தோல்வியில் முடிந்துள்ளது.

    எனினும், ஏமன் தலைநகர் சனா அல்லது ஓமன் நாட்டு தலைநகரான மஸ்கட் நகரில் ஹவுத்தி தலைவர்களை விரைவில் சந்தித்துப் பேச முயற்சி செய்து வருவதாக ஐ.நா. சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #YemenPeaceTalks  #HouthiPeaceTalks
    தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியபோது, அங்குள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது.
    ஜெனிவா:

    தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த சண்டையின்போது போர் விதிமீறல்கள் நடைபெறுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    அந்த அறிக்கையில், தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அரசுப் படைகள் மற்றும் அதன் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தியதில் 232 பேர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலின்போது 120 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் கற்பழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யூனைட்டி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை நடைபெற்ற இந்த அட்டூழியங்களுக்கு மூன்று ராணுவ கமாண்டர்களே பொறுப்பாளிகள் என ஐ.நா. விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் 7400 பேர் அமெரிக்க அரசிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USRefugess #AsylumSeekers
    நியூயார்க்:

    போர்கள், வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக பொதுமக்கள் தங்கள் நாடுகளை விட்டு இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

    இந்நிலையில், உலகின் பலவேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள அகதிகள் தொடர்பாக ஐ.நா. அகதிகள் முகமை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு (2017) இறுதி நிலவரப்படி மொத்தம் 68.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும்  16.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இவ்வாறு இடம்பெயர்ந்து சென்றவர்களில் அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்த அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் சால்வடோர் நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த நாட்டைச் சேர்ந்த 49500 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களில் கடந்த ஆண்டு மட்டும் 7400 பேர் அமெரிக்க அரசிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தியாவில் கடந்த ஆண்டு நிலவரப்படி மொத்தம் 197,146 அகதிகள் உள்ளனர். அவர்களில் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள 10519 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. இந்தியாவில் இருந்து சென்றவர்களில் 40391 பேர் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் கோரி உள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USRefugess #AsylumSeekers

    அணு குண்டு மற்றும் அணு ஆயுதங்களை தடை செய்யும் உலக நாடுகளின் முயற்சியில் வடகொரியாவும் இணையும் என ஐக்கிய நாடுகளின் சபைக்கான வடகொரியா தூதர் இன்று உறுதியளித்துள்ளார். #NorthKorea #nucleartest
    ஜெனிவா:

    ஜெனிவா நகரில் இன்று போர் ஆயுதங்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் வடகொரியா நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதர் ஹான் டாய் சாங் பங்கேற்று பேசினார்.

    'அணு குண்டு மற்றும் அணு ஆயுதங்களின் சோதனைகளை கைவிடுவதும் இதன் தொடர்ச்சியாக தயாரிப்புகளை நிறுத்துவதும் உலகளாவிய அளவில் போர் ஆயுதங்களை ஒழிப்பதில் முக்கிய பங்களிப்பாகும். அவ்வகையில், முற்றிலுமாக அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் சர்வதேச நாடுகளின் முயற்சியில் வடகொரியாவும் இணையும்' என அவர் குறிப்பிட்டார். #NorthKorea #nucleartest
    ×