search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97314"

    அரிசி மாவில் ப.மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து செய்யும் அக்கி ரொட்டி கர்நாடகாவில் மிகவும் பிரபலம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - கால் கிலோ,
    தேங்காய் - ஒரு மூடி,
    கொத்தமல்லி -  ஒரு கட்டு,
    பச்சை மிளகாய் - 4,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை :  

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

    ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.

    விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

    ஹோட்டலில் சிலோன் பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    மைதா மாவு - ஒரு கப்,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,
    உப்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.

    பூரணத்துக்கு:

    காய்கறி கலவை - கால் கப்,
    பன்னீர் - 200 கிராம்,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 4,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    பூண்டு - 6 பல்,
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டை, லவங்கம், ஏலக்காய்தூள் பொடித்தது - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, நெய், ஆப்பசோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளுங்கள்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பன்னீர், கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பொடித்த மசாலாதூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் நிறைய பூரணத்தை நிரப்புங்கள்.

    பின்னர் மாவு தொட்டு முக்கோண வடிவத்தில் திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு  வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சத்தான சிலோன் பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த கீரையில் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொன்னாங்கண்ணிக்கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    சப்பாத்தி மாவு - 2 கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பொன்னாங்கண்ணிக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், ப.மிளகாய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பிசைந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தது திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான சுவையான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சப்பாத்தி, நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இது இரண்டையும் சேர்த்து சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    நூடுல்ஸ் - ஒரு கப்,
    பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்,
    பால் - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
    தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    பிறகு நூடுல்ஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

    பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும்.

    தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான சப்பாத்தி  நூடுல்ஸ் ரோல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியில் சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 1 கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வரகு அரிசியை மாவாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து இறக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த வரகு மாவை போட்டு அதில் கொதிக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறவும்.

    சற்று சூடு ஆறியதும் கைகளில் எண்ணெய் தேய்த்து கொண்டு மாவை கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பிசைத்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இந்த சப்பாத்திக்கு எண்ணெய் தேவையில்லை.

    சூப்பரான சத்தான வரகு அரிசி சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 250 கிராம்,
    உப்பு - தேவைக்கு,
    ஓட்ஸ் - 100 கிராம்,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    துருவிய பீட்ரூட் - 1 டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    எண்ணெய் - 30 மி.லி.,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கம்பு, பாலக்கீரை உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும். வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும். டயட் செய்பவர்களுக்கு இது ரொம்ப ருசியான சத்தான உணவு.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்
    ப. மிளகாய் - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    கரகரப்பாக திரித்த மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது அரை கப்
    நெய் - ஒரு தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

    கம்பு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரை, தேங்காய் துருவல், உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும்.

    ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது பட்டர் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க வேகவைத்து லேசாக நெய் தடவி இறக்கவும்.

    நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.

    சுவையான கம்பு பாலக் ரொட்டி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான  பொருட்கள் :

    சப்பாத்தி - 5
    முட்டை - 4
    கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1  
    பெ.வெங்காயம் - 3  
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

    அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

    ருசியான முட்டை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மதியம் பள்ளிக்கு கொடுத்தனுப்ப சுவையான வித்தியாசமான உணவு செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    சீரகம் - கால் டீஸ்பூன்
    கோதுமை மாவு - 2 கப்
    மஞ்சள் தூள் -  கால் சிட்டிகை,
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
    கேரட் - 1
    குடைமிளகாய் - 1
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    உருளைக்கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    இப்போது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக தேய்த்து தோசை கல்லில் போட்டு நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.

    சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரோல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரைகளில் பெரும் பகுதி நீர்ச்சத்து இருக்கும். இன்று முளைக்கீரையை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைக்கீரை  - 1 கட்டு
    இஞ்சி - 1/4 அங்குலம்
    எள், ஓமம் - தலா அரை டீஸ்பூன்
    கோதுமை மாவு - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :
     
    முளைக்கீரையை சுத்தம் செய்து மண் போக அலம்பி பொடியாக நறுக்கவும்.

    பச்சை மிளகாய், இஞ்சியை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

    கோதுமை மாவில் நறுக்கிய கீரை, அரைத்த விழுது, உப்பு, எள், ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை ஈரத்துணியில் சுற்றி 1/2 மணி நேரம் வைக்கவும்.

    பின்பு எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி தோசை தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

    இதற்குப் புதினா சட்னி, தேங்காய்ச் சட்னி, தால், குருமா பொருத்தமாக இருக்கும்.

    முளைக்கீரை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த மிளகு ரொட்டியை இரவு நேர உணவாக உட்கொள்ளும்போது எளிதில் ஜீரணமாகும். இன்று இந்த ரொட்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    உப்பு தேவையான அளவு.



    செய்முறை:

    ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

    பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

    சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    சூப்பரான மிளகு ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு சூப்பரான உணவு சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாக்லேட் பார் துருவியது - 1 கப்,
    மைதா - 2 கப்,
    பொடித்த சர்க்கரை - 2  டீஸ்பூன்,
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன், சர்க்கரை, உப்பு, வெண்ணெய் சேர்த்து சற்று தளர பிசைந்து எண்ணெய் தடவி ஈர துணி போட்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.

    பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சாக்லேட் துருவல் வைத்து மூடி, மெதுவாக பரோட்டாவாக திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் நெய் விட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.

    விரும்பினால் மேலே சாக்லேட் சாஸ் ஊற்றி பரிமாறலாம். மைதாவிற்கு பதில் கோதுமை மாவிலும் செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×